Sunday, May 12, 2013

அட்சய த்ருதியை(13/5/13 திங்கள்) அன்று நாம் செய்ய வேண்டியது என்னென்ன?







ஒவ்வொரு தமிழ் வருடமும் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரிதியையே அட்சய த்ருதியை என்று அழைக்கப்படுகிறது.அட்சய என்றால் “முடிவில்லாமல் வளர்ந்து வரும்” என்று அர்த்தம்.இதை இன்றைய வணிகர்கள் வர்த்தகமயமாக்கிவிட்டனர்.இந்த திருதியையை நமது முன்னோர்கள் தமது தபோபலத்தால் கண்டறிந்தது எதற்குத் தெரியுமா? கலியுகத்தில் வாழும் மக்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்காகத்தான்!


இந்த நன்னாளில் நாம் செய்யும் ஒரு சிறு புண்ணியச் செயலும் நமது தலைவிதியில் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடும்.ஆமாம்! நீங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து,பல சில காரணங்களால் அடிக்கடி பல சில வாரங்கள்/மாதங்கள் ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அது பற்றி சிறிதும் கவலையில்லை;அவ்வாறு ஜபிக்க முடியாதவர்கள் இந்த நன்னாளில்(13/5/13 திங்கள்) காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது குரு ஓரை காலங்களான காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை அல்லது மதியம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை அல்லது இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரையிலான நேரத்தில் =
மேலே கூறிய நேரங்களில் உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைச் செய்யலாம்;


மிக மிக மிக முக்கியமானது எதுவெனில்,13/5/13 திங்கட்கிழமை காலை ஏழு மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அன்னதானம் அல்லது பழங்களுடன் கொஞ்சம் இனிப்புகளும் வழங்குவதே அட்சய திருதியை அன்று நாம் செய்யும் மகத்தான புண்ணியம் ஆகும்.மாநகரங்கள்,தொலைதூர நாடுகளில் வசிப்பவர்கள் அனாதை இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.


செய்வோமா?
ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. அதன் உண்மையான கருத்தை பதிவு செய்து அக கண்ணை திறந்தீர்கள் .நன்றி.

    ReplyDelete
  2. ayya ,ungal pathvu miga arumaiyaga irukirathu.
    en 6 natkala puthiya pathuvu ehthuvum illai

    ReplyDelete