Monday, January 12, 2009

உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் பத்திரகாளியம்மன்,ஸ்ரீவில்லிபுத்தூர்

உங்களது எல்லா பிரச்னைகளையும் போக்கும் பத்திரகாளி
கலி என்றால் துன்பம் என்று பொருள்.கலியுகம் என்றால் துன்பயுகம் என்றுதான் அர்த்தம்.பிறக்காத குழந்தையும்,இறந்து போன மனிதனும் தான் நிம்மதியாக வாழ்பவர்கள்.அவர்களை விட நிம்மதியாக வாழ்ந்து வருபவர்கள் தான் பத்திரகாளியை வழிபடுபவர்கள்.

இந்தியா,தமிழ்நாடு மாநிலம்,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் ஊருக்குள் உள்ளது முதலியார்பட்டித்தெரு.அங்கே,மக்கள் வசிப்பிடத்துக்கு நடுவே அமைந்துள்ளது ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில்!
முதலியார்பட்டித் தெரு நெசவாளர்கள் வாழும் பகுதியாகும்.அங்கே சில நூற்றாண்டுகளாக அமர்ந்து கேட்ட வரம் த்ருபவள் பத்திரகாளி!!


உங்களுக்கு தீராத கடன் அல்லது நோய் அல்லது செலவு அல்லது எதிரிகள் உள்ளதா?இவை அனைத்தும் தீர வேண்டுமா?
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.இந்த பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தினமும் நேரில் வந்து வழிபடுங்கள்.வழிபட்டபின்னர் நேராக உங்களது வீட்டிற்குச் செல்லுங்கள்.இப்படி ஒருவருடம் வந்து வழிபடவும்.உங்களது சகல பிரச்னைகளும் தீரும்.
நீங்கள் முதல் நாள் இங்கு வந்து பத்திரகாளியை வழிபட்டுவிட்டுப் போனதும்-24 மணிநேரத்திற்குள் ஒரு அதிசய சம்பவம் உங்களது வாழ்வில் நடக்கும்.அது எப்படி நடந்தது ? என்று உங்களது பகுத்தறிவால் புலனாய்வு செய்து பாருங்கள்.விடை கிடைக்காது.இந்த பத்திரகாளியை வழிபட்டதால் தான் அந்த அதிசயம் நடந்தது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.
சரி! விருதுநகர் மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு தினமும் வரமுடியும்.மற்ற மாவட்டங்கள்,மாநிலங்கள்,நாடுகளைச் சேர்ந்தவர்களால் எப்படி தினமும் வர முடியும்?
அவர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் போதும்.
ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10.30 மணிக்கு பவுர்ணமி பூஜை துவங்கி நள்ளிரவு 1.20க்கு நிறைவடைகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருட சிவராத்திரியன்றும் கொதிக்கும் நெய்யில் ஒரு 60 வயது பாட்டி வெறும் கையால் பணியாரம் சுட்டுவருகிறார்.கடந்த 30 வருடங்களாக இந்தக் காரியத்தைச் செய்து வருகிறார்.அந்த பாட்டியின் கையில் சிறு மாற்றம் கூட இருப்பதில்லை.கரண்டியைப் பயன்படுத்துவதில்லை.ஒரு முறை நேரில் வந்து பார்க்கவும்.
இந்த பத்திரகாளி நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம்:அவற்றில் சில..
சாதரணமாக தொழில் செய்து வந்த ஒரு நபர் இங்கு தினமும் ஒரு முறை வீதம் 4 வருடங்கள் வந்து வழிபட்டார்.இப்போது அவரது தொழில் சொத்து மதிப்பு சில கோடிகள்....

8 வருடமாக டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு நடையாய் நடந்த ஒருவர் இந்த பத்திரகாளியை சில மாதங்கள் தினமும் வழிபட்டுக் கொண்டே வந்தார்.
ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லாத விதத்தில் டைவர்ஸ் கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது.

பிறவியிலிருந்தே மனநிலை சரியில்லாமல் இருந்த ஒரு 21 வயது இளைஞன் இந்த கோவிலுக்கு 2 வருடமாக அழைத்து வரப்பட்டான்.தற்போது சராசரி மனிதனாகி விட்டான்.தற்போது அவன் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டான்.

ஒரு டெய்லர் அவர்,14 வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறார்.மிக சாதாரண நிலையிலிருந்தவர்.கடைக்கு இடம் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்.இது வரை 20 முறை தனது டெய்லர் கடையை மாற்றியிருப்பார்.தற்போது,ஊருக்கு இதயப் பகுதியில்-நிரந்தரமான கடை அவருக்கு அமைந்துவிட்டது.சிலருக்கு நிரந்தரவேலை தருமளவிற்கு வளர்ந்து விட்டார்.
இருந்தபோதிலும், இன்றும் அந்த டெய்லர் ஒரு நாள் விடாமல் பத்திரகாளியை வழிபட்டபின்பே தனது
கடையைத் திறக்கிறார்.
இரண்டு பெண்குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒரு 33 வயது
இளைஞ்ர்.மனைவி,பெற்றோர்,உறவினர் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்.ஒரே காரணம்-அந்த இளைஞரின்
முன்கோபம்,நிரந்தர வேலையின்மை.,
4 வருடங்களாக தினமும் பத்திரகாளியை வழிபட்டு வருகிறார்.இன்று அவருக்கு நிரந்தரத் தொழில் அமைந்துவிட்டது.அவரது மனைவி பொறுப்பற்று இருந்ததால் அந்த மனைவி தானாகவே பிரிந்து போய்விட்டாள்.
ஆக,நிம்மதியும்,செல்வவளமும் 101% காரண்டி.

1 comment:

  1. SRINIKETHAN IS MY NAME. I AM FROM Sri Lanka, Jaffna. S.Srinikethan@gmail.com Is My MailID.

    Can u plz send me Pathrakali's Kayathiri Mantra?

    ReplyDelete