Wednesday, January 28, 2009

நிம்மதி தரும் நவபிருந்தாவனம்,ஆந்திரமாநிலம்



தமிழ்நாட்டில் நாகர்கோவில் டூ மும்பை எக்ஸ்பிரஸில் மந்திராலயம் செல்ல பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.மந்திராலயம் இறங்கினால் அங்கு மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளன.அங்கிருந்து 6மணி நேரம் பேருந்து பயணம் சென்றால் நவபிருந்தாவனம் சென்றடையலாம்.துங்கபத்ரா நதிக்கரையில் நவபிருந்தாவனம் அமைந்துள்ளது.இங்கு 9 மகான்கள் ஜீவ சமாதியடைந்துள்ளனர். இந்த இடம் ஒவ்வொரு யுகத்திலும் சில வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடமாக உள்ளது.அது பற்றி விரைவில் முழுத்தகவல்களுடன்!

ஒருமுறை சென்று வந்த சில வாரங்களில் உங்களது நீண்ட கால பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன.இந்த அனுபவம் பல ஆயிரம் தமிழ்மக்களுக்கு கிடைத்துள்ளது.

இன்னும் சுலப வழி என்னவென்றால் இந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வையுங்கள்.தினமும் இந்த புகைப்படத்திற்கு தனியாக நெய்தீபம் ஏற்றி வாருங்கள்.45 நாட்கள் இப்படி செய்து வந்தால் மள மளவென உங்கள் பிரச்னைகள் தீர்வதை உணரலாம்.
உங்கள் பிரச்னைகள் தீர்ந்தால்,இந்த புகைப்படத்தை 10 நகல்கள் எடுங்கள்.உங்கள் வார்த்தைகளுக்கு யார் மதிப்பு தருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நவபிருந்தாவனம் புகைப்படம் தருக!
எல்லோரும் நிம்மதியாக வாழ்வோம்.இலங்கைத்தமிழர்களும்,மலேசியத்தமிழர்களும்,காஷ்மீர் பண்டிட்களும் நிம்மதியாக வாழ நவபிருந்தாவனத்து மகான்களை பிரார்த்திப்போம்.
திருச்சிமுதல் ஓசூர் வரை வாழும் வட தமிழகத்து மக்கள் பெரும்பாலானோர் டூரிஸ்டாக நவபிருந்தாவனம்,அஹோபில மடம், மந்திராலயம் சென்று வருகின்றனர்.இம்மூன்றும் மிக புனிதமான ஆலங்களாக முக்கோணதூரத்தில் அமைந்துள்ளது.
மந்திராலயம் ஸ்ரீஇராகவேந்திரர் மகானுடைய ஜீவ சமாதியாகும்.

No comments:

Post a Comment