Monday, April 12, 2021

உலகத்திற்கு மறுமலர்ச்சி காலம் 2020 முதல் 2026 வரை

 ஜோதிடப்படியும் உலகம் பிறந்த ஜாதகப்படியும் டிசம்பர் 2019 முதல் மார்ச் 2026 வரையிலான கால கட்டத்தில் உலக அரசியல் மிகுந்த சுயநலம் மிக்க கார்ப்பரேட்களால் இயக்கப்பட்டு வருகின்றது என்பதை தினசரி செய்தித் தாள்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது;


இதன் படி,கொரோனா வைரஸ் பரவல் மற்றும்   உலக நாடுகளின் ஆயுத அரசியல் நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு 2020 முதல் 2026 வரை பல்வேறு துன்பங்களைத் தரும் விதமாக அமையும் என்று தெரிகின்றது;


உலகத்தின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமது பாரத நாட்டினை இதுவரை மக்களை நேசிக்கும் அரசுகள் ஆட்சி செய்யாமல் இருந்ததால்,பல்வேறு விதமான துயரங்களை நாம் 2014 வரை அனுபவித்து வந்தோம்;


திரு.மோடி அவர்களின் ஆட்சி வந்த பின்னர் தான் நம்மை எப்படியெல்லாம் அண்டை நாடுகளும்,உள் நாட்டு அரசியல் கட்சிகளும் சுரண்டினார்கள் என்பதை உணர முடிந்தது;இது பற்றி விரிவான பதிவுகள் பல தகுந்த ஆதாரங்களுடன் முகனூல் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கின்றன;


நாடும்,நாட்டு மக்களும் மிகவும் பரந்த அளவில் இருந்ததால்,ஊழல்,கொள்ளை,மைனாரிட்டியை தாஜா செய்தல், போன்றவைகளால்   நாம் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை பலர் உணரவே இல்லை;


வளரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தொழில் வளர்ச்சி,தனி நபர் வருமானத்தை அதிகரித்தல் போன்றவைகளை 2014 வரை போதுமான அளவுக்கு ஆளும் மத்திய அரசுகள் செய்யாமல் இருந்ததால் தனி நபர் வருமானம் 130 கோடி பேர்களில் 129 கோடி பேர்களுக்கு போதுமான அளவில் இல்லாமல் இருந்தது;


1947 முதல் இன்று வரையிலும் சீரழித்த நமது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு திட்டங்களை நமது மோடி அவர்கள் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகிறார்.அது முழுமையடைந்து விட்டால்,பாரத நாடு உலகத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிடும் .மீண்டும் உலக வல்லரசு நிலையை எட்டிவிடும் என்ற பொறாமையால் கொரோனா கிளப்பி விடப்பட்டது;


2021 மே ,ஜீன் மாதத்தில் இன்னொரு வைரஸ்ஸீம்


2022 பிப்ரவரி,மார்ச்சில் இன்னொரு வைரஸ்ஸீம் உலகம் முழுக்க பரவ இருக்கின்றது என்பதை பல்வேறு ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன;சில பஞ்சாங்கங்களின் கணிப்புகளும் தெரித்துள்ளன;


2026 மார்ச் மாதம் வருவதற்குள் உலக மக்கள் தொகையில் குறைந்தது 18 கோடி பேர்கள் இதனால் மரணம் அடைவார்கள் என்பதையும் மதிப்பிட்டு உள்ளார்கள்;


2020 இல் ஆப்ரிக்க நாடு ஒன்றின் அதிபர் தனது மகனுக்கு வந்த கொரோனா நோய்க்கு நமது தமிழ்நாட்டின் கபசுர குடிநீரை மருந்தாக கொடுத்திருக்கிறார்.அதில் அவன் முழுமையாக குணம் ஆனதால்,தனது நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி நாடு முழுவதும் வினியோகம் செய்ய ஆரம்பித்தார்;

2021 முதல் 2026க்குள் நமது நாட்டின் மூலிகை மருத்துவம்,யோகாதெரபி,இயற்கை மருத்துவம் போன்றவை படிப்படியாக உலக அளவில் முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கும்;


2021 அக்டோபர் முதல் நமது நாட்டில் ஒவ்வொருவருடைய தனி நபர் வருமானம் அதிகரிக்க ஆரம்பிக்கும்;2022 இல் இரட்டிப்பு நிலையை அடைந்துவிடும்;2024 முதல் 2026 க்குள் உலகின் முதல் வல்லரசு நிலையை நாம் அடைந்து விடுவோம்;


2025 முதல் 2026 க்குள் நாம் சற்றும் எதிர்பாராத ஒருவர் நமது நாட்டின் பிரதமர் பொறுப்புக்கு வருவார்;அதன் மூலமாக கிடைக்கும் பரபரப்பினால்,தமிழ்நாட்டில் அரசியல் கலந்து ஆன்மீக புரட்சி ஒன்று உருவாகும்;அந்த புரட்சியானது எல்லா மாநிலங்களையும்,எல்லா நாடுகளையும்,எல்லா கண்டங்களையும் சென்றடையும்;


2025 முதல் 2027 க்குள் இந்து மஹா சமுத்திரத்தில் நமது மோடி அரசு கடலடி ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்ளும்;அதன் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும்;அதன் பிறகு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பெரும்பாலான நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள்;


நமது பாரம்பரியத்தின் பெருமைகளை நாமே அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.உலகம் கார்ப்பரேட் மயம் ஆகிவிட்டதால்,டிவி விளம்பரங்களில் வரும் உணவு பொருட்களை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்;


இயற்கை நலவாழ்வு சங்கங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன;அதில் அவ்வப்போது நடைபெறும் முகாம் மற்றும் கருத்தரங்களுக்கு செல்லுங்கள்;


இயற்கை உணவு,,சிறு தானிய உணவு,பாரம்பரிய உணவு,யோகாசனம், போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்;


நமது வாரிசுகளுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வை உருவாக்குங்கள்.

தொழில் முறை ஜோதிடப் பயிற்சி

 தொழில் முறை ஜோதிடர்களை உருவாக்கும் நோக்கத்துடன் நேரடியாக ஜோதிடம் சொல்லித் தருகின்றோம்;

தமிழ்நாடு மாநிலத்திற்குள் வாழ்ந்து வருபவர்கள் நேரடியாக வருகை தந்து ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்;


நேரில் வந்து கற்றுக் கொள்வதில் 


தினசரி பயிற்சி,


வாரம் ஒரு நாள் பயிற்சி,


மாதம் இரு நாள் பயிற்சி,


மாதம் ஒரு நாள் பயிற்சி 


என்று பல பிரிவுகள் உள்ளன;(வாட்ஸ் அப் மூலமாக கற்றுக் கொள்பவர்களுக்கும் இது பொருந்தும்)


இதில் உங்களுக்கு இயன்றதை தேர்வு செய்து கொள்ளலாம்;


இடம்:விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர்


வேறு மாநிலங்கள்,தொலை தூர தேசங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்;


ஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோர் உங்கள் பிறந்த ஜாதகத்தை Like2Learn Astrology என்று டைப் செய்து +91 9092116990 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்;


ஜோதிடம் கற்றுக் கொள்ள அடிப்படை தகுதி:10 ஆம் வகுப்பு

வயது தகுதி:குறைந்த பட்சம் 15 வயது;அதிகபட்சம் 50 வயது;


பயிற்சி காலம்:நேரடிப் பயிற்சி எனில் 3 மாதங்கள்

                                    வாட்ஸ் அப் மூலமாக எனில் 6 மாதங்கள்


பயிற்று மொழி:தமிழ்


குரு தட்சிணை உண்டு;

Thursday, February 4, 2021

முற்பிறவி கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் அண்ணாமலை கிரிவல நாட்கள் 2021 முதல் 2022 வரை

 

முற்பிறவிகளின் கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் அண்ணாமலை கிரிவல நாட்கள்!!!  2021 டூ 2022

 

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே மனிதப் பிறவி எடுத்துள்ளார்கள்:முற்பிறவிகளின் கர்மவினைகளில் தீய கர்மவினைகளை ஏழரைச்சனி காலத்திலும்,அஷ்டமச்சனி காலத்திலும் அனுபவிக்க வேண்டும்;நல்ல கர்மவினைகளை மற்ற காலங்களிலும் அனுபவிக்க வேண்டும்;

இருப்பினும்,ஈசன் கருணை நிறைந்தவர்! கர்மவினைகளை அனுபவிக்காமலேயே அழிப்பதற்கு பல்வேறு விதமான புண்ணியச் செயல்களை சித்தர் பெருமக்கள் மூலமாக உபதேசம் செய்துள்ளார்;உழவாரப் பணி செய்தல்,அன்னதானம் செய்தல்,முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல்,பாழடைந்த ஆலயங்களை சீரமைத்தல்,ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு மீண்டும் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்தல்,ஆன்மீகப் பிரச்சாரம் செய்தல்,ஆன்மீக நூல்கள் அச்சடித்து வினியோகம் செய்தல்,ஆன்மீக சொற்பொழிவுக்கு மக்களை திரட்டுதல்,மதமாற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தல் அல்லது முயற்சி செய்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது,தேச பக்தியுடன் கூடிய தெய்வ பக்தியை இன்றைய இளைய சமுதாயத்திற்கு போதிக்க பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் என்று பலன் தரும் செயல்களைச் செய்யலாம்;

ஒவ்வொருவருக்கும் தனி மனித ஆன்மீக கடமை,குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை,சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை,முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை என்று இருக்கின்றது;

 

அதில் மிகவும் முக்கியமானது தான் தனி மனித ஆன்மீகக் கடமை ஆகும்;தனது அனைத்து முற்பிறவிகளிலும் செய்த கர்மவினைகளை முழுமையாக கரைக்க குறிப்பிட்ட நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

நம்முடைய முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் நமக்கு இந்த பிறவியில் இருந்தால்,ஒரே ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் நமக்கு கிட்டும்;விழுப்புரம் அருகில் அமைந்திருக்கும் அண்ணாமலை தான் உண்மையான அண்ணாமலை!

 

திரயோதசி திதியும் ஜன்ம நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கிரிவலம் செல்வதால்,நம்முடைய முற்பிறவி கர்மவினைகள் தீர்ந்துவிடும் என்பது சித்தர்களின் ஜோதிட உபதேசம்!

24.4.2021 சனி மாலை 4.18 முதல் நள்ளிரவு 2.01 வரை உத்திரம் (சிம்மம் & கன்னி ராசி) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

24.4.2021 சனி நள்ளிரவு 2.02 முதல் 25.4.2021 ஞாயிறு மதியம் 2.24 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

8.5.2021 சனி இரவு 7.58 முதல் 9.5.2021 ஞாயிறு இரவு 7.18 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

23.5.2021 ஞாயிறு இரவு 12.48 முதல் 24.5.2021 திங்கள் காலை 7.34 வரை சித்திரை (கன்னி & துலாம் ராசி) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

24.5.2021 திங்கள் காலை 7.35 முதல் இரவு 10.27 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

7.6.2021 திங்கள் காலை 11.13 முதல் 8.6.2021 செவ்வாய் காலை 7.32 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

8.6.2021 செவ்வாய் காலை 7.33 முதல் மதியம் 1.08 வரை கார்த்திகை(மேஷம் & ரிஷபம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

22.6.2021 செவ்வாய் காலை 8.02 முதல் மதியம் 12.37 வரை விசாகம் (துலாம் & விருச்சிகம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

22.6.2021 செவ்வாய் மதியம் 12.38 முதல் நள்ளிரவு 3.32 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

6.7.2021 செவ்வாய் நள்ளிரவு 2.36 முதல் 7.7.2021 புதன் இரவு 7.55 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

7.7.2021 புதன் இரவு 7.56 முதல் நள்ளிரவு(மறுநாள் விடிகாலை) 4.26 வரை மிருகசீரிடம் (ரிஷபம் & மிதுனம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

21.7.2021 புதன் மதியம் 2.55 முதல் மாலை 5.37 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;மாலை 5.38 முதல் 22.7.2021 வியாழன் மதியம் 12.39 வரையிலான நேரத்திற்குள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

5.8.2021 வியாழன் மாலை 5.28 முதல் 6.8.2021 வெள்ளி காலை 7.36 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

6.8.2021 வெள்ளி காலை 7.37 முதல் மாலை 6.43 வரையிலான நேரத்திற்குள் புனர்பூசம் (மிதுனம் & கடகம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

19.8.2021 வியாழன் இரவு 10.57 முதல் 20.8.2021 வெள்ளி இரவு 8.41 வரையிலான நேரத்திற்குள் உத்ராடம் (தனுசு & மகரம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

4.9.2021 சனி காலை 7.36 முதல் மாலை 5.54 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்; மாலை 5.55 முதல் 5.9.2021 ஞாயிறு காலை 7.58 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

18.9.2021 சனி காலை 7.42 முதல் 19.9.2021 ஞாயிறு விடிகாலை 4.44 வரை அவிட்டம் (மகரம் & கும்பம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

19.9.2021 ஞாயிறு விடிகாலை 4.45 முதல் காலை 6.50 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் (இரண்டு மணி நேரம் தான்!!!) அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

3.10.2021 ஞாயிறு இரவு 8.40 முதல் பின் இரவு 2.40 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

பின் இரவு 2.41 முதல் 4.10.2021 திங்கள் இரவு 8.04 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

17.10.2021 ஞாயிறு இரவு 7.26 முதல் 18.10.2021 திங்கள் மதியம் 12.52 வரை பூரட்டாதி (கும்பம் & மீனம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

18.10.2021 மதியம் 12.53 முதல் இரவு 7.24 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

2.11.2021 செவ்வாய் காலை 9.55 முதல் 3.11.2021 புதன் காலை 7.25 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

16.11.2021 செவ்வாய் காலை 10.15 முதல் இரவு 10.33 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

இரவு 10.34 முதல் 17.11.2021 புதன் காலை 11.17 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

 

1.12.2021 புதன் இரவு 8.13 முதல் 2.12.2021 வியாழன் மதியம் 2.37 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,மதியம் 2.38 முதல் மாலை 6.12 வரை விசாகம் (துலாம் & விருச்சிகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

15.12.2021 புதன் பின் இரவு 3.50 முதல் 16.12.2021 வியாழன் காலை 9.31 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 9.31 முதல் பின் இரவு 5.44 வரை கார்த்திகை (மேஷம் & ரிஷபம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

31.12.2021 வெள்ளி காலை 7.08 முதல் இரவு 7.36 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 7.37 முதல் நள்ளிரவு 3.41 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

14.1.2022 வெள்ளி இரவு 11.26 முதல் 15.1.2022 சனி இரவு 12.10 வரை மிருகசீரிடம் (ரிஷபம் & மிதுனம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

29.1.2022 சனி மாலை 5.41 முதல் இரவு 12.26 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 12.27 முதல் 30.1.2022 ஞாயிறு மதியம் 3.26 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

13.2.2022 ஞாயிறு இரவு 7.03 முதல் 14.2.2022 திங்கள் மதியம் 12.12 வரை புனர்பூசம் (மிதுனம் & கடகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,மதியம் 12.13 முதல் இரவு 8.44 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

28.2.2022 திங்கள் விடிகாலை சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் சூரியம் உதயம் ஆவதற்குள் திரு ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

15.3.2022 செவ்வாய் மதியம் 12.45 முதல் இரவு 11.10 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 11.11 முதல் 16.3.2022 புதன் மதியம் 1.30 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

29.3.2022 செவ்வாய் மதியம் 2.58 முதல் 30.3.2022 புதன் காலை 11.04 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 11.05 முதல் மதியம் 1.42 வரை பூரட்டாதி (கும்பம் & மீனம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

14.4.2022 வியாழன் விடிகாலை 3.33 முதல் காலை 8.46 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 8.47 முதல் பின் இரவு 3.14 வரை உத்திரம் (சிம்மம் & கன்னி) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

இதில் உங்கள் நட்சத்திரம் மற்றும் ராசி வரவில்லையா? 14.4.2022 க்குப் பிறகு வர இருக்கும் சுபகிருது வருடத்தில் வரலாம்;

உங்கள் முன்னோர்களாகிய பித்ருக்கள் மற்றும் குலதெய்வத்தின் ஆசிகள் உங்களுக்கு மிகுதியாக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் ஒரே ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும் என்பதும் சித்தர் பெருமக்களின் உபதேசம் ஆகும்;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்பிறவியில் நிம்மதியையும்,இப்பிறவிக்குப்பிறகு முக்தியையும் தரும் துவாதசி அன்னதானம்!!!

 

கர்மவினைகளை கரைத்து சர்வ சுபிட்சம் தரும் துவாதசி அன்னதானம் (விகாரி & சார்வரி)


 

1.             

 

நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கவே இங்கே,இந்த பூமியில் பிறவி எடுத்துள்ளோம்;ஆனாலும்,பரமேஸ்வரன் கருணை மிக்கவன்;திருந்த வேண்டும்;மனம் வருந்தவேண்டும் என்று தவியாய் தவிக்கும் உள்ளங்களுக்கு பரிகாரம்,வழிபாடு,ஜபம்,தானம்,பதிகம் பாடுதல்,வாசியோகம் போன்றவைகள் மூலமாக கர்மவினைகளை அனுபவிக்காமல் குறைத்து நிம்மதியாக வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளான்;

 

 

 

 

 

 

துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும்;மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர்,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;

 

 

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்;கிரிவலப் பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்களும்,அனைத்து தெய்வங்களும் உறையும் பசுக்களும் இருக்கின்றன;அக்னிலிங்கம் வரை பசுக்கள் அதிகமாக தென்படுகின்றன;எனவே,கிரிவலம் புறப்படும் போது போதுமான அளவுக்கு அகத்திக்கீரைகள் மற்றும் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்;கிரிவலப்பாதையில் தென்படும் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளையும்,வாழைப்பழங்களையும் தானமாக தர வேண்டும்;நிறைய பிஸ்கட்கள்,பொறைகளை வாங்கிக் கொண்டு செல்வதால் கிரிவலப் பாதை தூரமான 14 கி மீ அளவுக்கு வழியில் தென்படும் பைரவ வாகனத்திற்கு தானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக ஒரே சமயத்தில் பைரவரின் அருளும்,அருணாச்சலேஸ்வரின் ஆசிகளும் நமக்கு கிட்டும்;

 

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்;இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்;

 

அதன் பிறகு,ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்;மூலஸ்தானத்தை நெருங்கும் போது,(நடராஜர் சன்னதியை பார்க்கும் போது) இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்;வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது;

 

 

அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்;அதன் பிறகே,மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும்;பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்;இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அதன் பிறகு,கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு,மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்;இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும்,கிரிவலமும் நிறைவடைகின்றது; 

 

 

நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது;

 

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

 

 

சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;

இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்;வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்;

 

இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்;இரவில் அல்லது மதியம் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்;

 

இதைச் செய்ய விரும்பி,ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;

 

 

   சார்வரி & பிலவ வருடத்திற்கான முழுத் துவாதசி திதி நாட்கள் பட்டியல்:-

 




8.2.2021
திங்கள்

25.3.2021
வியாழன்

8.4.2021
வியாழன் 

8.5.2021 சனி

23.5.2021 ஞாயிறு

6.7.2021 செவ்வாய்

19.8.2021 வியாழன்

3.10.2021 ஞாயிறு

17.10.2021 ஞாயிறு

1.12.2021 புதன்

15.12.2021 புதன்

14.1.2022 வெள்ளி

13.2.2022 ஞாயிறு

27.2.2022 ஞாயிறு

13.4.2022 புதன்

 



மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;

 

முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்;தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

 

 

 

தமது சீவனுக்குள் இருக்கும் சிவனை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற தவிப்பில் வாழ்ந்து வருபவர்களும் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

 

ஓம் அகத்தீசாய நமஹ

 

 

ஓம் அருணாச்சலாய நமஹ

 

 

மைத்ர முகூர்த்த நேரங்கள் 2021 முதல் 2022 வரை

 

உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்!

 

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் என்பதும் கர்மவினையே! கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;

மாரிமுத்து என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை மாரிமுத்துவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;

இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;

மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;

சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(31 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)

சார்வரி & பிலவ வருட (2021 டூ 2022) 

 மைத்ர முகூர்த்தங்க்கள்

24.4.2021 சனி காலை & மாலை 6.20 முதல் 8.20; மதியம் & நள்ளிரவு 12.20 முதல் 2.20 வரை;

 

28.4.2021 புதன் இரவு 7.01 முதல் 9.01 வரை;

 

10.5.2021 திங்கள் அதிகாலை 4.14 முதல் காலை 6.14 வரை;

 

26.5.2021 புதன் மாலை 5.05 முதல் இரவு 7.05 வரை

 

6.6.2021 ஞாயிறு விடிகாலை 3 முதல் 5 வரை;

 

22.6.2021 செவ்வாய் மதியம் 2.10 முதல் மாலை 4.10 வரை;

3.7.2021 சனி இரவு 12.47 முதல் நள்ளிரவு 2.47 வரை;

20.7.2021 செவ்வாய் மதியம் 2.07 முதல் மாலை 4.07 வரை;

30.7.3032 வெள்ளி இரவு 11 முதல் நள்ளிரவு 1 வரை;

16.8.2021 திங்கள் மதியம் 12.01 முதல் 2.01 வரை;

 

27.8.2021 வெள்ளி இரவு 9.20 முதல் 11.20 வரை;

13.9.2021 திங்கள் காலை 10.16 முதல் 11.26 வரை;

23.9.2021 வியாழன் இரவு 8.24 முதல் 10.24 வரை;

10.10.2021 ஞாயிறு காலை 8.36 முதல் 10.36 வரை;

20.10.2021 புதன் மாலை 6.04 முதல் இரவு 8.04 வரை;

6.11.2021 சனி காலை 6.44 முதல் 8.44 வரை

17.11.2021 புதன் மாலை 4.03 முதல் 6.03 வரை;

4.12.2021 சனி விடிகாலை 5.14 முதல் 6.14 வரை;

14.12.2021 செவ்வாய் மதியம் 2.14 முதல் 4.14 வரை;

31.12.2021 வெள்ளி விடிகாலை 3.15 முதல் 5.15 வரை;

10.1.2022 திங்கள் மதியம் 1.10 முதல் 2.18 வரை;

11.1.2022 செவ்வாய் மதியம் 12.22 முதல் 2.22 வரை;

27.1.2022 வியாழன் காலை 11.40 முதல் மதியம் 1.40 வரை;

7.2.2022 திங்கள் காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை;

23.2.2022 புதன் நள்ளிரவு 1.10 முதல் 3.10 வரை;

6.3.2022 ஞாயிறு காலை 9.05 முதல் 11.05 வரை;

22.3.2022 செவ்வாய் இரவு 9.38 முதல் 10.45 வரை;

3.4.2022 ஞாயிறு காலை 6.47 முதல் 8.47 வரை;

 

 

 

 

 

 

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

 

நிரந்தரமாக கடன் தீர வேண்டும் என்று விரும்புவோர் விழுப்புரம் அருகில் அமைந்திருக்கும் அண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்று கிரிவலம் வர வேண்டும்.செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயத்தில் இருந்து புதன் கிழமை காலை சூரிய உதயம் ஆவதற்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் இவ்வாறு கிரிவலம் வருவதால் கடன் நிரந்தரமாக தீர்ந்துவிடும்;தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செல்ல இயலாதவர்கள் மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை என்றும் கூட செல்லலாம்;

 ஓம் அகத்தீசாய நம;

 

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;

 

 

வழிகாட்டும் குருமார்கள் பட்டியல் பாகம் 10

 வழிகாட்டும் குருமார்கள் பட்டியல் பாகம் 10

நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு,வழிகாட்டும் குரு என்று இரண்டு குருவின் அருள் தேவை;
வழிகாட்டும் குரு என்பவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
பின்வரும் பட்டியலைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்;
உங்களின் குரு யார்? என்பதை கண்டுபிடித்த பிறகு,தினமும் காலையில் 15 நிமிடங்கள்,இரவில் தூங்க ஆரம்பிக்கும் முன் 15 நிமிடங்கள் வரை உங்கள் குருவின் பெயரை ஜெபிக்க வேண்டும்.
அசுபதியில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வீட்டில் போட்டோ வைத்து சில நிமிடங்களாவது வழிபட வேண்டும்;
சுவாதியில் ஐக்கியமானவர்கள்:சுந்தரமூர்த்தி (சைவ சமய அடியார்களில் ஒருவர்!)
அல்லது
ஒடுக்கத்தூர் சுவாமிகள் ஜீவசமாதி,அல்சூர் ஏரி அருகில்,பெங்களூர் அவர்களை வழிபடலாம்;இவர் 1915 ஆம் ஆண்டு,தை மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று ஐக்கியமானார்;
மனதில் அடிக்கடி தோன்றும் விகாரமான காம எண்ணங்களை நீக்கும் ஆற்றல் உள்ள மஹான் இவர்;
விகாரமான காம எண்ணங்கள் அடியோடு நீங்க வேண்டும் என்று எண்ணும் மனிதர்கள் யார் வேண்டுமானாலும்,சுவாதி நட்சத்திர தினத்தன்று இந்த மஹானின் ஜீவசமாதிக்கு வர வேண்டும்.
ஒரு மணி நேரம் வரை மனப்பூர்வமாக தியானிக்க வேண்டும்;அவர்கள் அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை;
பல துறவிகளுக்கு ஞானத்தையும்,முக்தியையும் வழங்கிய அற்புதமான சுவாமிகள் இவர்!!!
அல்லது
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் மாநகரில்(தமிழ்நாட்டில் பல ராஜபாளையம் ஊர்கள் இருக்கின்றன) சஞ்சீவிமலை அடிவாரத்தில் சாந்தானந்தா சுவாமிகள் ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;
கோதை மங்கலத்தில் (பழனி அருகில்) மானூர் சுவாமிகள் ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
சத்குரு ஶ்ரீ சண்முகம் சுவாமிகள் சுவாதி நட்ச்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார். செங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கொல்லம் சாலையில் Indian oil bulk எதிரே ஐக்கியம் ஆகியுள்ளார்.
பரணியில் பிறந்தவர்கள் விசாகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை வழிபட வேண்டும்;
ஸ்ரீதர் சுவாமிகள்,மம்சாபுரம் பேரூராட்சி,
,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ;(சித்திரை மாதத்தில் வரும் விசாகம்)
திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் தாலுகா,மன்னார்கோவில் பகுதியில் ஶ்ரீ குழந்தை முத்தானந்த சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
ராமநாதபுரம் பகுதியில் உள்ள பெரிய பட்டனம் ஏரியாவில் இருக்கும் லட்சுமிபுரம் கிராமத்தில் ஶ்ரீ தாயுமான சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
காரைக்குடி கோட்டையூர் பகுதியில் ஶ்ரீ எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
திசயன்விளை யில் ஶ்ரீலஶ்ரீ தம்பான் சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
திண்டுக்கல் அருகே வடமதுரை ஊரின் அருகில் உள்ள கே. புதுப்பட்டியில் ஶ்ரீ கள்ளியாடி பிரம்மம் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் அடிபணிய வேண்டும்;
காஞ்சிப் பெரியவா,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இவரது ஜீவசமாதி இருக்கின்றது;(மார்கழி மாதத்தில் வரும் அனுஷம் அன்று ஜீவசமாதி ஆனார்)
அல்லது
நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுகா,விஜயாபதி என்ற கடலோர கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் தவம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷியை அடிக்கடி வந்து(அனுஷம் நாளன்று) ஜபிக்க வேண்டும்;
அல்லது
பூண்டி மகான் ஐயா அவர்களின் ஜீவசமாதி சென்னை கலசப்பாக்கம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது;இவர் அனுஷம் அன்று ஐக்கியமானவர்! இவரது வரலாறு மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது;
அல்லது
ஆவுடையப்பர் ஐயா அவர்கள் மார்கழி மாத அனுஷம் அன்று திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்.இன்றைய திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய மூவர் ஜீவசமாதிக்கும் பின்புறம்(தெற்கு பக்கம்) இவரது ஜீவசமாதி இருக்கிறது;
ரோகிணியில் பிறந்தவர்கள்,கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்,திருப்பரங்குன்றம்;(புரட்டாசி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்)
வியாசர் ஆடி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்;
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவர்களில் ஒருவரை தினமும் வழிபட வேண்டும்;
ஆனி மாதத்தின் மூலம் அன்று அருணகிரிநாதர் அண்ணாமலையில் ஐக்கியமானார்;
ஐப்பசி மாத மூலம் அன்று கசவனம்பட்டி சுவாமிகளும்
அதே ஐப்பசி மாத மூலம் அன்று மணவாளமாமுனிகளும்
மார்கழி மாத மூலம் அன்று மூக்குப்பொடி சுவாமிகள் அண்ணாமலையிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூராடம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும்,யாகோபு சித்தர் மெக்காவிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
உத்திராடம் நட்சத்திரத்தில் கொங்கண சித்தர் திருப்பதியில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
சென்னை திருவொற்றியூர் நகரில் பட்டினத்தார் சுவாமிகள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார்;
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஒரு திருவோண நாளன்று மாயம்மாள்,சேலத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
சித்திரை மாத ஓணம் அன்று அம்மணி அம்மாள் சித்தர் பழனி கிரிவலப் பாதையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;விஜய பைரவர் கோவிலுக்கு அருகில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;
வைகாசி மாத ஓணம் அன்று சாக்கடை சித்தர் பழனியில் ஐக்கியமாகி இருக்கின்றார்;
நடுவப்பட்டி சுவாமிகள் என்ற ஶ்ரீ சற்குரு நாதர் சுவாமிகள் திருவோணம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.சிவகாசி அருகே அமைந்துள்ளது.
மாசி மாதத்தில் வரும் ஓணம் அன்று சத்குரு ஶ்ரீ மலையாள சுவாமிகள் ஜீவசமாதி செங்கோட்டை டூ கொல்லம் செல்லும் வழியில் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அவிட்டம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அவிட்டம் அன்று மாதவானந்த சுவாமிகள்,பாம்புக் கோவில் சந்தையிலும் (சங்கரன் கோவில் அருகில்) ஐக்கியமாகி உள்ளார்கள்;ராஜபாளையம் டூ தென்காசி ரயில் மார்க்கத்தில் இருக்கின்றது;ரயில் நிலையம்:பாம்புக்கோவில் சந்தை
அல்லது
கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஊர் பசுவந்தனை;இங்கே ஒரு ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் அன்று சங்கு சுவாமிகள் ஜீவ ஐக்கியமாகி இருக்கிறார்;
அல்லது
தகரம் தட்டி சுவாமிகள் என்ற மெட்டுக்குண்டு சுவாமிகள் அவிட்டம் நட்சத்திரத்தில் ஐக்கியமாகி உள்ளார். விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை இடையே மெட்டுக்குண்டு கிராமம் அமைந்து உள்ளது.
அல்லது
லட்சுமி அம்மாள் அவிட்டம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.இடம்:-senkottai பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் கொல்லம் செல்லும் சாலையில் Indian oil petrol station எதிரே அமைந்துள்ளது.
திருச்சி பகுதியில் கீழ தேவ தானம் கிராமத்தில் குருசாமி நகரில் ஶ்ரீ மலையாள மெளனகுரு சுவாமிகள் அவிட்டம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சதயம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன கெளபாலரை தினமும் வழிபட வேண்டும்;
அல்லது
மதுரை அழகர்கோவிலில் இருந்து சத்திரப்பட்டி(ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பெயரில் ஊர்/கிராமம் இருக்கிறது) செல்லும் வழியில் இருக்கும் ஏரியா சிங்கப்பூர் நகர்;இங்கே சதயம் நட்சத்திரத்தன்று முனீஸ்வர சுவாமிகள் ஐக்கியமாகி இருக்கிறார்.
அல்லது
சிவ பழனி ஞானிகள் விருத்தாச்சலம் என்ற ஊரில் உள்ள பழனிநாதன் சிவன்கோயில் வடமேற்கே1954 ஆம் ஆண்டு வந்த ஒரு சதய நட்சத்திர நாளன்று ஜீவ சமாதி ஆகி உள்ளார்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூரட்டாதி அன்று ஜீவசமாதி ஆனவர் சிவப் பிரபாகர்;கேரளா மாநிலம் ஓமலூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இவர் 723 ஆண்டுகள் வாழ்ந்தவர்;பாம்பாட்டி சித்தரின் முதல் சீடர்!!!
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன டமருகரை தினமும் வழிபட வேண்டும்;
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் பின்புறம் இருக்கும் மூவர் சமாதியில் ஒரு மகான் ரேவதியில் ஜீவசமாதி ஆகியுள்ளார்;
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அசுபதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அசுபதியில் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் அருகில் இருக்கும் மூவர் சமாதியில் ஒருவர் ஐக்கியமாகி இருக்கின்றார்;
ஐப்பசி மாதம் வரும் அசுபதி அன்று திருமூலர் சிதம்பரம் கோவிலுக்குள் ஐக்கியமாகி இருக்கின்றார்;
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பரணியில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாதம் வரும் பரணி அன்று போகர் பழனியிலும்,
பங்குனி மாதம் வரும் பரணி அன்று சங்கரானந்தர் சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்(ஸ்ரீவி.சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிர்ப்புறம் இருக்கும் சாலியர் சமுதாய இடுகாட்டுக்கு அருகில் ஐக்கியமாகி இருக்கின்றார்.)
புரட்டாசி மாதத்தின் பரணி அன்று சத்ரு சம்ஹாரமூர்த்தி அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்;
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத கார்த்திகை அன்று குருசாமி,ராஜபாளையத்திலும்(அம்பலபுளி பஜார் என்ற பகுதியில் இருக்கும் ப்ரம்மாண்டமான ஆலயம்)
ஆவணி மாத கார்த்திகை அன்று ரோமரிஷி எறும்பீஸ்வரர் கோவில் வளாகத்திலும்
சித்திரை மாத கார்த்திகை அன்று சித்த ராஜசுவாமிகளும் ஐக்கியமாகி உள்ளார்கள்;
ஆடி மாத கார்த்திகை அன்று இலஞ்சி அருகில் அமைந்திருக்கும் ஜீவநல்லூர் என்ற ஊரில் திரு.கண்ணப்பசுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
இங்கே சென்று சிவசிவ மந்திரம் 1 மணி நேரம் வரை ஜபித்து வந்தால்,வீண் பழியில் இருந்தும்,நாக தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்;இது அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்;
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணியில் ஜிவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத ரோகிணி அன்று மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;
ஶ்ரீ சங்கரய்யா தேவர் சுவாமிகள் ரோகிணி நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.இடம்:- செங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் Indian oil petrol station எதிரில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
ஆடி மாதம் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் வாராகி சித்தர் ஶ்ரீ முத்து வடுக நாதர் சிங்கம்புணரி ஊரில் ஜீவசமாதி ஆகி உள்ளார்.
சங்கரன்கோவில் ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் பீடத்தில் ஶ்ரீ சித்த ராஜசுவாமிகள் சித்திரை மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மிருகசீரிட நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத மிருகசீரிடத்தில் பாம்பாட்டி சித்தர் சங்கரன் கோவிலில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
குட்லாம்பட்டி டில் இருக்கும் ஶ்ரீ ரமணகிரி சுவாமிகள் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவாதிரையில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
புரட்டாசி மாத திருவாதிரை அன்று இடைக்காடர் அண்ணாமலையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
பகவான் பாட்டி புரட்டாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் அமைந்திருக்கும் ஒரு சுடுகாட்டில் ஜீவ சமாதி ஆனார்கள்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
மாசி மாத புனர்பூசம் அன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
புரட்டாசி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று வள்ளியம்மை திருச்செந்தூர் கடற்கரையில் தனது குருவாகிய ஆவுடையப்பர் ஜீவசமாதிக்கு அருகிலேயே ஐக்கியமாகி இருக்கிறார்.
அல்லது
மார்கழி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று சேஷாத்திரி சுவாமிகள் அண்ணாமலையில் ஐக்கியமாகி இருக்கிறார்;
அல்லது
ஸ்ரீமத் லிங்குசுவாமிகள்,சின்னாளப்பட்டி,திண்டுக்கல் அருகில் ஒரு புனர்பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமாகி இருக்கின்றார்;
அல்லது
தாத்தா சுவாமிகள் விருத்தாச்சலம் என்ற ஊரில் உள்ள பழனி நாதன் சிவன்கோயில் வடமேற்கே( ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் ) புனர்பூச நட்சத்திரத்தன்று ஜீவ சமாதி ஆனார்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாத பூசம் அன்று வல்லநாட்டு சுவாமிகளும்
ஆவணி மாத பூசம் அன்று யூகிமுனியும்
தைப்பூசம் அன்று ராமலிங்க அடிகளாரும் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்கள்;
அல்லது
சேர்மன் அருணாச்சல சுவாமிகள் ஜீவசமாதிக்குச் சென்று வரலாம்;இவர் 27.7.1908 அன்று காலை 11 மணி க்கு ஆடி அமாவாசை அன்று பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமானார்;
இவரது ஜீவசமாதி திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் தென் திருப்பேரை செல்ல வேண்டும்;அங்கிருந்து விசாரித்து சென்றால்,ஏரல் நகரில் தாமிரபரணி நதிக்கரையில் இவரது ஜீவசமாதியைச் சென்றடையலாம்; அல்லது
அருள்மிகு காளிமுத்து சுவாமிகள் சுமார் 60 ஆண்டுகளாக சதுரகிரி மலையில் அன்னதானம் செய்து வந்தார்கள். அவர்கள் ஒரு பூச நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆனார்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ராமச்சந்திராபுரம் கிராமம் எல்லைக்கு உட்பட்ட காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தில் காளிமுத்து சுவாமிகள் அவர்களின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
நற்பவி
1.யாழ்ப்பாணம்
*ஸ்ரீ கதிர்வேல் சித்தர்*
(ஜீவசமாதி)
ஜீவன் முக்தி:01.02.1904,பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியம்.
முகவரி:
ஸ்ரீ கதிர்வேல் சித்தர் பீடம்,
நெ.36,3வது குறுக்கு தெரு,
பிருந்தாவனம்,
சித்தன் குடி(சித்தர்கள் குடியிருந்த இடம்)
புதுச்சேரி.
2.யோகி
*ஸ்ரீ ராமகிருஷ்ண சுவாமிகள்* (எ)
*மண்ணுருட்டி சித்தர்*,(ஜீவசமாதி)
பூசம் நட்ச்திரத்தில் ஐக்கியம்.
ஜீவன் முக்தி:16.01.1965,
முகவரி:
ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் சித்தர் பீடம்,
தென்னஞ்சாலை,
சுப்ராயபிள்ளை
தோட்டம், புதுச்சேரி
3.அருட்குரு
*ஸ்ரீ தேங்காய் சித்தர்*,(ஜீவசமாதி)
பூசம் நட்ச்திரத்தில் ஐக்கியம்.
ஜீவன் முக்தி:
சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்,
முகவரி:ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் சித்தர் பீடம்,G.N.பாளையம்,
அரும்பார்த்தபுரம்
ரெயில்வே கேட் அருகில், புதுச்சேரி.
*சிவ சடைசுவாமிகள்*
ஸ்ரீ பொதிகை மலையான் சித்தர் குடும்பத்தினர்,
குயவர்பாளையம்,
புதுச்சேரி-13
செல்:9500332291
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத ஆயில்யம் அன்று கோரக்கர்,வடக்குப் பொய்கை நல்லூரிலும்
மாசி மாத ஆயில்யம் அன்று இன்னொரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்திலும்
இன்னொரு ஆயில்யம் அன்று மிஸ்டிக் செல்வம் அவர்கள் தூத்துக்குடி அருகிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்கள்;
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
முனியாண்டி சுவாமிகள்,மூவர் சமாதி,சாலியர் சமுதாய இடுகாடு அருகில்,ஸ்ரீவில்லிபுத்தூரிலில் சித்திரை மாத மகம் அன்று ஜீவசமாதி ஆனார்;இவர் ஜீவசமாதி ஆன இடத்தில் ஒரு ஆலமரம் வளர்ந்து வருகின்றது;
அல்லது
திருச்செந்தூர் கடற்கரையில் பங்குனி மாதத்தின் மகம் அன்று ஐயம்பட்டி சங்கரசுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று அவரது தம்பியான யாழ்ப்பாணம் சுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று சூழைவா சுவாமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள்:திருச்செந்தூரில் இருக்கும் ஐயா வைகுண்டர் கோவிலுக்கு அருகில் இந்த மூவர் சமாதி அமைந்திருக்கிறது;
அல்லது
சிவராஜயோகி சுவாமிகளை வழிபடலாம்;இவரது ஜீவசமாதி கரிவலம் வந்த நல்லூர் அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது;இவர் 1945 ஆம் ஆண்டு மாசி மாதம் வரும் மகம் அன்று ஐக்கியமாகி இருக்கிறார்;இங்கே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரம் நட்சத்திரத்தில்ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி பூரம் அன்று சண்டிகேஸ்வரரும்;
ஸ்ரீஜெயராம சுவாமிகள் ஆவணி மாத பூரம் அன்று திருத்தணி வட்டம்,ஆற்காடுகுப்பம் என்ற கிராமத்தில் ஐக்கியம் ஆனார்;
மாசி பூரம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும் ஐக்கியமாகி உள்ளார்கள்;
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
காகபுஜண்டர் உத்திரம் நாளன்றும்;
ஒரு புரட்டாசி மாத உத்திரம் நட்சத்திர தினத்தன்று,அருள்மிகு குமராண்டி சுவாமிகள் ராஜபாளையம் நகரில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;இவரது ஜீவசமாதி பார்க் ஸ்டாப் அருகில் ஒரு தெருவின் முனையில் அமைந்திருக்கின்றது;
புரட்டாசி மாத உத்திரம் அன்று சிவப்பிரகாசம் சுவாமிகள்,முதலியார் பட்டித் தெரு,சிவகாசி சாலை,ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அஸ்தம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை மாத மாத அஸ்தம் அன்று கரூவூர் சித்தர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஜீவசமாதி ஆனார்;
சத்குரு சுவாமிகள் பழனிமலை அடிவாரத்தில் ஒரு அஸ்தம் நட்சத்திரத்தன்று ஐக்கியமாகி இருக்கின்றார்;
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சித்திரை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை நட்சத்திரத்தில் புண்ணாக்கீஸர்,திருவாரூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
விருதுநகர் மாவட்டம்,ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் ஊரனிப்பட்டி தெருவில் அருள்மிகு பொன்னாயிரம் சுவாமிகள் சித்திரை நட்ச்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
இது முதன்மைப் பட்டியல் தான்;இதில் சில தவறுகள் இருக்கலாம்;சரியான தகவல்கள் உங்களிடம் இருந்தால் தெரிவியுங்கள்.
உங்கள் ஊரில் ஐக்கியமான மகானின் பெயர்;முகவரி,ஜீவசமாதி ஆன நட்சத்திரத்தை ஆதாரத்தோடு தெரிவித்தால்,அடுத்த பட்டியலில் இணைத்துவிடுவோம்;
உங்கள் வழிகாட்டும் குருவின் படத்தை அல்லது பிறந்த ஜாதகத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள்;
ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,உங்கள் வழிகாட்டும் குருவின் ஜீவசமாதி ஆன நட்சத்திர தினத்தன்று ஜீவசமாதி ஆன இடத்திற்குச் சென்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்துவாருங்கள்;அப்போது அவருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்;
இதில்
சண்டிகேஸ்வரர்,
டமருகர்,
கெள்பாலர்,
வியாசர்,
சுந்தரர் =இவர்களுடைய ஜீவசமாதி பூமியில் கிடையாது;
உங்கள் ஊர் சிவாலயம் அல்லது வசிக்கும் ஊரின் சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகமும் அன்னதானமும் செய்ய வேண்டும்;
வளமோடும் நலமோடும் வாழ்க!!!
எல்லாப் புகழும் அருணாச்சலேஸ்வரருக்கே அர்ப்பணம்!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ