Friday, February 3, 2012

Transcendental Meditation coaching centres in india


Transcendental Meditation coaching centres in india


மகரிஷி மகேஷ்யோகி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நமது இந்து மதத்திற்குச் சொந்தமான ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுக்கப் பரப்பிய இந்துத் துறவி.
இன்றைய தினசரி வாழ்வில் நிம்மதியாக வாழ்வது என்பதே-கோடீஸ்வர வாழ்வாகிவிட்டது.இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும்-திடீர்-திடீரென டென்ஷன் ஆகிவிடுகிறோம்.இதனால் நாம்-நமது உறவுகள்-நமது நிறுவனம் ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்படைந்து விடுகிறது.அப்படி பாதிப்புகள் வராமல் இருக்க தியானம் அவசியமாகிறது.

தியானத்தில் பல வகைகள் உண்டு.உங்களுக்கு எது பொருந்துமோ அந்த தியானம் செய்யுங்கள்.தினமும் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டியது தியானம் செய்வதற்குத் தான்.
ஆழ்நிலை தியானம் தமிழ்நாட்டில் சில இடங்களில் சொல்லித் தருகிறார்கள்.பல்சுவைநாவல்-டிசம்பர் 2008 இதழில்-எழுத்துச்சித்தர் பாலகுமாரன் இந்த இதழில் ஆழ்நிலைதியானத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கியுள்ளார்.ஆழ்நிலை தியானம் கற்றுத் தரும் இடங்கள்:
1.மகரிஷித் தோட்டம்,எண்:28,டாக்டர் குருசாமி சாலை,சேத்துப்பட்டு,சென்னை-31
2.மகரிஷி மகேஷ் யோகி
10,சின்னப்ப முதலி தெரு,
மஞ்சக்குப்பம்,கடலூர்
3.காந்தி மியூசியம்,மதுரை
4.மகரிஷி காம்பவுண்டு
6,த்ருஞானம் காடு,தாதகப்பட்டி,சேலம்
7.www.tm.org=இது மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைதியானப் பயிற்சியகத்தின் தலைமையகமான நெதர்லாந்து நாட்டில் உள்ள அவரது அமைப்பின் இணையதளமுகவரி.

DROPS OF HINDU SPIRITUAL NEWS


DROPS OF HINDU SPIRITUAL NEWS

ஒரு வரி இந்துமத உண்மைகள்:பகுதி-2

அ. சில வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் பால் குடித்தார் அல்லவா?
அதற்கு ஆன்மீகப் பெரியோர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியாவிற்கு வெளியே சுவாமி விவேகானந்தர் பிறந்துள்ளார்.அவர் இந்தியாவை மையமாகக் கொண்டு ஆன்மீகப் பணிசெய்ய உள்ளார்.

ஆ.மறுபிறவி,முன் ஜென்மம்,ஊழ்வினை போன்ற இந்துமத ஆதாரங்களை மேல்நாட்டு ஆய்வாளர்கள் விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அவை அனைத்தும் உண்மை என்று அறிவித்துவிட்டனர்.

FIFTH MAJOR SINS(PANJAMAPAATHAM) WILL EVICT FROM US:PRAY SIVA MAHA MANTHIRAM



FIFTH MAJOR SINS(PANJAMAPAATHAM) WILL EVICT FROM US:PRAY SIVA MAHA MANTHIRAM

பஞ்சமாபாதகங்களால் செய்த பாவங்கள் தீர...

கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பொய் சொல்லுதல்,ஏமாற்றுதல்-இவை அனைத்தும் பஞ்சமா பாதகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இன்றைய கலிகாலத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது சொல்லாமல் வாழ முடியாத அளவிற்கு நமது வாழ்க்கை அமைந்துவிட்டது.இதனால் ஏற்படும் பாவங்கள் தீர கீழ்காணும் சிவ மகாமந்திரத்தை ஒரு சிவன் கோவிலில் பிரதோஷநாளில்-பிரதோஷ நேரத்தில்- கோவிலுக்கு உள்ளே-கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து-108 முறை மனதிற்குள் ஜபிக்கவேண்டும்.
இம்மந்திரம் சிவபுராணத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஓம் ஆம் கவும் சொள(Ohm aam howm sow)-உச்சரிப்பு ஆங்கிலத்தில்

இதே மந்திரத்தை தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் சனிப்பிரதோஷங்களில் ராமேஸ்வரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி அல்லது பழமையான சிவாலயங்களில்-ஜபித்தால் நமது முற்பிறவிப்பாவங்களும் நீங்கும்.நமது முன்னோர்கள் பாவங்களும் நீங்கிவிடும்.இது அநுபவ உண்மை!!

PIONEER INVENTOR OF AIR:MR.DHAL PADAYE-AN INDIAN



PIONEER INVENTOR OF AIR:MR.DHAL PADAYE-AN INDIAN




விமானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்துயா.
அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.

உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.
1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)

அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?ஆதாரம்:vedic world heritage,volume VII

அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.

இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.
வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!

ANCHESTOR'S POOJAI "S POWER



ANCHESTOR'S POOJAI "S POWER

அவர்கள்:1)இறைவன்,2)பித்ரு தேவதைகள்,3)எமதர்மராஜன்,4)பித்ருக்கள்.
பித்ரு பக்திக்கு இணையானது எதுவுமில்லை.பித்ரு பூஜையைப் போல பலன் அளிப்பதும் வேறு எதுவும் இல்லை.
நன்றி;குமுதம் ஜோதிடம்-வார ஜோதிட இதழ் 1.11.2002 பக்கம் 14.
1.பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது கிரகண நேரம் அல்லது தமிழ் வருடப் பிறப்பு அன்று ஒரு மந்திரத்தை கடல் அல்லது ஆற்றில் நீராடி-ஈர உடையுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று ஒரு முறை ஜபித்தால்-
2 கோடி X 100 கோடி முறை ஜபித்ததற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
அதாவது,நாம் உள்பட 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் உடனே தீர்ந்துவிடும்.

2.ஆறுதல் சொல்வதும் ஒரு விதபுண்ணியமே!

3.ஜோதிடர்களில் பிராடுகள் உண்டு.ஒரிஜினல் ஜோதிடர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.தட்சினை கொடுக்குறதைக் குடுங்க என்று சொல்லுவார்.அல்லது 200-300 கேட்பார்.

4.ஜோதிடர்களில் கல்யாண ஜோதிடர் என்றும்,தொழில் விருத்தி ஜோதிடர் என்றும்,மரண ஜோதிடர் என்றும் பெயர் எடுத்தவர்கள் உண்டு.விசாரித்துக் கொள்வது நமது பொறுப்பு

IMPORTENT RESPONSIBLE IS ANCHESTOR'S POOJAI TO EACH AND EVERY MAN AND WOMAN



IMPORTENT RESPONSIBLE IS ANCHESTOR'S POOJAI TO EACH AND EVERY MAN AND WOMAN


பித்ரு பூஜை அசுப காரியம் அல்ல! அவசியம் செய்ய வேண்டிய சுப காரியம்-ஒவ்வொரு மனிதருக்கும்;
கேள்வி:காலம் சென்ற எனது மாமனாருக்கு வருடா வருடம் தவறாமல் திதி கொடுத்து வருகிறார் என் கணவர்.நான் ஒவ்வொரு அமாவாசை அன்றும்,என் மேல் எனது அப்பா போல பாசம் செலுத்திய என் மாமனாருக்காக வீட்டில் அன்னம் வைத்து படையலிட்டு,ஓர் அதிதி(விருந்தாளி)முதலில் உணவளித்துவிட்டு,வ்ஸ்திர தானமும் அளித்து வருகிறேன்.ஒரு சிலர்,சுமங்கலிகள் இவ்வாறு செய்வது தவறு என்று கூறி தடுக்கின்றனர்.என்ன செய்வது?
திருமதி ஜெயலட்சுமி,அடையாறு

பதில்: (திரு.ஏ.எம்.ஆர்.அவர்கள்)பித்ருக்களை பக்தியுடன் பூஜிப்பது பற்றி பலர் பலவிதமாக பேசுவதற்குக் காரணம் பித்ருபூஜை என்பது அசுப காரியம் எனப் பலரும் நினைப்பதுதான்.இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
இறைவனை பூஜிப்பது எந்த அளவிற்கு புனிதமானதோ,எந்த அளவிற்கு அவசியமானதோ அந்த அளவிற்கு புனிதமான கடமை ஆகும்.பித்ரு பூஜை என்பது!
தன் பிள்ளைக்குத் தங்களை திருமணம் செய்து கெஒண்டதன் மூலம் தங்களுக்கு ‘சுமங்கலி’ என்ற அந்தஸ்த்தினை அளித்தவரே அவர்தான்.ஆதலால்,தாங்கள் அமாவாசை அன்று தங்கள் மாமனாரை நினைத்து செய்துவரும் பூஜையை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்.பித்ரு பூஜைக்குப் பிரதியாக நமக்கு ஆசி வழங்கி அனைத்து நன்மைகளையும் அளிப்பவர்கள் நால்வர் எனப் புராதன நூல்களும்,ஸ்ரீமத் மகாபாரதமும்,கருடபுராணமும் விளக்கி உள்ளன.


செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவில்



செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவில்





ஆன்மீகக் கடல்-6 அறிவியல்பூர்வமான இந்து மதம்-1

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை... ?