Saturday, March 5, 2011

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி

திண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.




விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.



வெற்றி குறித்து சுஜிதா கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள

"ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்' என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன்.இவ்வாறு மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார்.
thanks:www.dinamalar.com

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பத்திர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, 77 வயதான முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு. பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மகா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெரு பத்திர காளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில், கையால் அப்பம் சுட்டு வழிபாடு நடத்துவது, கடந்த 48 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
thanks:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=199071

நேற்று (மாசி அமாவாசை 4.3.11)ஓம்சிவசிவஓம் ஜபித்தீர்களா?




ஒரே நாளில் நாம் நமது பிரச்னைகள் தீர வேண்டும் என ஆசைப்படுகிறோம்.ஆனால்,நமக்கு வரும் பிரச்னைகள்,நாம் முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள்,பொறாமை,திமிரின் விளைவுகளே! எனவே, ஒரே நாளில் நமது பிரச்னைகள் தீராது.

எப்படி எறும்புகள் ஒரு பாறையின் மீது நடந்து,நடந்து அந்த பாறை தேய்கிறதோ,அதேபோல்,நாம் தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது பிரச்னைகள் படிப்படியாக மட்டுமே தீரும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

உதாரணமாக,நாம் செய்திருக்கும் முற்பிறவிக் கர்மங்களின் விளைவு 450 கோடி டன் என வைத்துக்கொள்வோம்.இதன் விளைவாக,37 வயது வரை நமக்கு திருமணம் ஆகாமலிருக்கும்;அல்லது 100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தாலும் குடும்பமே கோர்ட்,கேஸ்,என சுமார் 14 ஆண்டுகள் அலைய வேண்டியிருக்கும்;அல்லது தொழில் பார்த்து 1 கோடி ரூபாய் கடன் உருவாகும்;அல்லது திருமணமாகி ஓரிரு குழந்தைகள் பிறந்து அவைகளுக்கு 10 வயதாகும் முன்பே,கணவன் ஓரிடம்,மனைவி ஓரிடம்,குழந்தைகள் ஓரிடம் என தனித்தனியே சுமார் 7 ஆண்டுகள் வரையிலும் வாழ வேண்டியிருக்கும்;அல்லது உங்களது முற்பிறவிகர்மாவைப் பொறுத்து கர்ம நோய் அல்லது கடன் அல்லது எதிரி அல்லது அரசாங்க விரோதம் என ஏதாவது ஒரு தொல்லை நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.

கொஞ்சம் சீக்கிரமாக தீருவதற்காகத் தான்,தமிழ்மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,சிவராத்திரி,பிரதோஷம் முதலான நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்படி வலியுறுத்துகிறோம்.

நேற்று மாசி மாத அமாவாசை,வெள்ளிக்கிழமை,ராகுவின் நட்சத்திரமாகிய சதயம் இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருந்தது.4.3.11 மாசி அமாவாசையாகிய நேற்று நீங்கள் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்திருந்தால்,நீங்கள் எவ்வளவு தடவை ஓம்சிவசிவஒம் ஜபித்தீர்களோ,அந்த எண்ணிக்கை பெருக்கல் ஆயிரம் கோடி மடங்காக பெருகியிருக்கும்.

ஜோதிட அறிவியலின் படி,ஒவ்வொரு தமிழ்மாதமும் சூரியன் அடுத்த ராசியில் நுழைந்திருப்பார்.அப்படி நுழைந்த நாளில் அந்த ராசியில் நமது ஆத்மாக்காரனாகிய சூரியனின் பலம் பலமடங்கு அதிகமாக செயல்படும்.

அமாவாசையன்று ஆத்மாக்காரன் எனப்படும் சூரியனும்,மனக்காரன் எனப்படும் சந்திரனும் ஒன்று சேரும் நாள்.இந்த நாளில்,நாம் ஒருமுறை ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் பல கோடிமடங்கு ஜபித்தமைக்கான பலனைத் தரும்.இந்த நாளில்,நாம் முடிந்தவரையிலும் காலையில் ஒரு மணிநேரமும்,மாலையில் ஒரு மணி நேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிப்பது நன்று.

பவுர்ணமி நாளன்று சூரியனுக்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் நிற்கும்.சூரியனும் சந்திரனும் முழு சக்தியைப் பெறுவர்.எனவே,இந்த நாளிலும் நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மிகுந்த உற்சாகத்தோடு பல மடங்காக அதிகரிக்கும்.ஏனெனில்,மனக்காரனகிய சந்திரன் முழுபலத்தோடு இருப்பதால்,நாம் தெளிவான மனநிலையோடு இருப்போம்.

சூரியக் கிரகணம்,சந்திரக்கிரகணம் அதிக பட்சமாக இரண்டு மணிநேரமும் குறைந்த பட்சமாக 7 நிமிடமும் நாம் வாழும் பகுதியில் தெரியும்.அந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்துப்பாருங்கள்.உங்களை அறியாமலேயே வேகமாக ஓம்சிவசிவஓம் ஜபிப்பீர்கள்.இந்த கிரகண நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஒரு முறை ஜபித்தாலோ ஆயிரம் கோடி தடவை ஜபித்தமைக்கான பலன்கள் நமக்குக் கிடைக்கும்.



கலிகாலத்தில் பூஜைகள்,யாகங்கள் இவற்றினை செய்யும் போது பல மனிதர்களின் ஆதரவோடு செயல்பட வேண்டியிருக்கும்.அப்படிப்பட்ட சூழலில் அந்த பல மனிதர்களில் ஒரு சிலராவது உள்ளன்போடு,அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செயல்பட முடியாத நிலை இருக்கும்.எனவே,அவை ஓரளவுக்கு மேலாக நன்மைகளை ஒரே தடவையில் தருவதில்லை.(இது எனது சொந்தக் கருத்து அல்ல;ஆன்மீகப்பெரியவர்களின் கூற்று)

மந்திர ஜபத்துக்கும்,இறை நாமத்தை ஜபிப்பதற்குமே உடனடி பலன் கிடைக்கும் என கீதையில் துவங்கி,திருமூலர் வரை ஏராளமானவர்கள் விவரித்துள்ளனர்.எனவே, தினமும் ஒரு மணிநேரமும் முக்கிய நாட்களில் இரண்டு மணிநேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கவும்.

இப்படி நல்ல நாட்களில் அதிகமான நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக நமது முற்பிறவிகர்மாவின் அளவு 450 கோடி டன் என்பது 50 கோடி டன் என்ற அளவுக்கு குறைய நாம் குறைந்தது ஒராண்டு வரையாவது தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.

இந்த 450 கோடி டன் என்பது சும்மா உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு அளவீடு மட்டுமே!



பாவம் என்றால் என்ன?

பிறரை மனதால்,உடலால் நோகடிப்பது;ஏமாற்றுவது;வெறுப்பேற்றுவது;காயப்படுத்துவது;

இதுவே விரிவாக கருடபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.கலிகாலத்தில் காமம் அல்லது பணம் அல்லது சொத்து சார்ந்த பாவங்களைத் தான் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது.

Thursday, March 3, 2011

தனியார் வங்கியில் உங்கள் பணம் உள்ளதா? .. உஷார்... சிட்டி பேங்க் 400 கோடி மோசடி




மிகப் பெரிய அளவிலான ஒரு வங்கி மோசடி ஹரியானா மாநிலம் குர்கான் இல் நடந்துள்ளது. அங்குள்ள சிட்டி பாங்க்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், வங்கிக் கணக்குகளிலிரு்து ரூ. 400 கோடியை தனது பெயருக்கு மாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.





மொத்தம் 20 கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அவர் இந்த மோசடியைச் செய்துள்ளார். இதுதொடர்பாக சிட்டி வங்கி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிட்டி வங்கி செய்தித் தொடர்பாளர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், கர்கான் கிளையில் சில கணக்குகளில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து புகார் வந்ததும் நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். அதில்தான் இந்த நிதி மோசடி குறித்த விவரம் தெரிய வந்தது.



சிவராஜ் பாட்டீல் என்ற ஊழியர்தான் இதைச் செய்ததாக கண்டுபிடித்துள்ளோம். பல்வேறு வாடிக்கையாளர்களை அணுகி கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பதாக கூறி முதலீடு செய்ய வைத்து அந்தப் பணத்தையெல்லாம் இவர் சுருட்டியுள்ளார். அநத்ப் பணத்தை எடுத்து வேறு சில கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

இப்படியாக 20 வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை சுருட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.



சிட்டி வங்கியின் அறிவிப்புகள் என்று கூறி மோசடியான திட்ட அறிவிப்புகளை இவரே அச்சிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து முதலீடு செய்யத் தூண்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் செபியின் நோட்டீஸைப் போல போலியான ஒன்றையும் தயாரித்து இவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் கறந்துள்ளார்.

தற்போது இந்த வழக்கை குர்கான் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 420, 467, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது



thanks:http://www.livingextra.com/http://www.livingextra.com/









.

































.

























விமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு

விமானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்துயா.


அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.



உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.

1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)



அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?ஆதாரம்:vedic world heritage,volume VII



அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.



இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.

வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!

Tuesday, March 1, 2011

தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்



ஏமாற்றமும்,பித்தலாட்டமும் நிறைந்த இந்தக் காலத்தில் தெய்வ நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை மென்மையாக வெளிப்படுத்தும் விதமாக சீடன் படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா மற்றும் அதன் குழுவினரை ஆன்மீகக்கடல் வலைப்பூ பாராட்டுகிறது.
இந்து தர்மத்தை கொச்சைபடுத்தும் படமாக வெளிவந்துள்ள நடுநிசி நாய்கள் படத்தை இயக்கிய கவுதம் மேனனின் சீக்கு பிடித்த சிந்தனையை ஆன்மீகக்கடல் வன்மையாகக் கண்டிக்கிறது.(ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பதை ஏசுநாதர் சொன்னதை வாசிக்கவில்லையா கவுதம் வாசுதேவ் மேனன்?)

உடல்நலம் பெற தண்ணீர் சிகிச்சை




மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர்(சுமார் ஆறு டம்ளர்கள்)அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.



தலைவலி,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,கீல்வாதம்,மூட்டுவலி,சாதாரண பக்கவாதம்,ஊளைச்சதை,காதில் இரைச்சல்,இருதய வேகமான துடிப்பு,மயக்கம்,இருமல்,ஆஸ்துமா,சளி தொல்லை,மூளைக்காய்ச்சல்,கல்லீரல் சார்ந்த நோய்கள்,சிறுநீரகக் குழாய் நோய்கள்,பித்தக் கோளாறுகள்,வாயுக்கோளாறுகள்,வயிற்றுப்பொருமல்,இரத்தக் கடுப்பு,மூலம்,மலச்சிக்கல்,பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்,ஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென் பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது),அளவற்ற வெள்ளைப்படுதல்,கருப்பை புற்றுநோய்,மார்புப் புற்றுநோய்,தொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும்.

எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது?

காலையில் எழுந்தவுடன்(பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும்.இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும்.1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று.இதை நமது முன்னோர்கள் உஷா பானம் என்று பெயரிட்டுள்ளனர்.குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.

காலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர்,ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ,பிஸ்கட்,பழங்கள்,தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர்,படுக்கைக்குச் செல்லும் முன்பாக,நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள்(மது மற்றும் போதை வஸ்துக்கள்)உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.எனவே,இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று.தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால்,இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.

ஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா?

சில நாட்கள் சிரமம் தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம்.ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும்.அதுவும் நன்மைக்கே!

சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்?

சரியான முறையில்(மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது.தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால்,குடலை வலுவாக்குகிறது.மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச்செய்கிறது.இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன.குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால்,தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது.இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால்,உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும்.

நீண்ட ஆய்வுக்குப் பிறகு,பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

மலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.

வயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.

சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.

இரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும்,புற்று நோய் நான்கு மாதங்களிலும்,க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.



இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:

மூட்டுவாதம்,வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை,மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்,இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும்.ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.



மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.

படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி,டீ,நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.

இதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.