Showing posts with label உணவுப் பழமொழி. Show all posts
Showing posts with label உணவுப் பழமொழி. Show all posts

Saturday, October 20, 2012

அனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு!!!



ஒருவேளை உண்பவன் யோகி(துறவியாக வாழ்பவர்!)
இருவேளை உண்பவன் போகி(நம்மைப் போன்ற குடும்பஸ்தர்!!)
மூன்று வேளை உண்பவன் ரோகி(நோயாளி!!!) மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிடுபவர்கள் ஏதாவது ஒரு நோயின் தாக்கத்துக்கு ஆளாவர்கள் என்பது இதன் விளக்கம்.

காலை   =இஞ்சி
கடும்பகல்=சுக்கு
மாலை   =கடுக்காய் என்று ஒரு மண்டலம்(சுமார் 48 நாட்கள்) தின்றால் கோலை ஊன்றி குறுகி நடந்தவர்,கோலைவிட்டு குலாவி நடப்பாரே!
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சின வைத்தியமில்லை;இதையே வேறுவிதமாகவும் சொல்வார்கள்=சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை;சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;
வில்வப்பழம் தின்பார் பித்தம்போக;பனம்பழம் தின்பார் பசிபோக!!
கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?
**************************************************************************  ஏழைக்கு ஏற்றது எள்ளுருண்டை!
பணக்காரனுக்கு ஏற்றது பருப்புருண்டை!!
இளைத்தவனுக்கு எள்ளு;கொழுத்தவனுக்கு கொள்ளு!!!
நன்றி:அவள் விகடன் பக்கம்16,வெளியீடு 11.9.12