Tuesday, November 27, 2018

வளங்களை அருளும் பைரவ மந்திரங்கள்!



வறுமை நீங்கி செல்வ வளம் பெருகிட:
கண்டிப்பாக அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,இம்மந்திர ஜபம் பலன் கிடைப்பது கடினம்;

250 கிராம் அல்லது 500 கிராம் கொண்ட தங்கக் காசு வைத்திருப்பவர்கள்,அதில் சுத்தமான சந்தனத்தை தங்கக் காசின் மீது வைக்கவும்;அந்த சந்தனத்தின் மீது குங்குமம் வைக்கவும்;
இந்த தங்கக் காசினை பைரவரின் பாதம் அருகில் வைத்து பின்வரும் மந்திரத்தை 1008 முறை ஜபிக்கவும்;

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணப்ரதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்

மறுநாள் ஜபிக்கும் முன்பு,தங்கக் காசின் மீது இருக்கும் சந்தனம்,குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கவும்;


வீட்டில் ஜபிக்க விரும்புவோர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவின் முன்பாக இந்த தங்கக் காசினை வைக்கவும்;முதல் நாள் வைத்த சந்தனம்,குங்குமத்தை அடுத்த நாள் முழுமையாக எடுத்து நெற்றியில் அணிய வேண்டும்;

தங்கக் காசு இல்லாதவர்கள்,மேலே கூறிய வழிமுறையைப் பின்பற்ற வேண்டியதில்லை;அவர்களுக்கு எளிமையான வழிமுறை இதோ:


இம்மந்திரத்தை மட்டும் வீட்டில் தினமும் 1008 முறை ஜபித்து வரலாம்;ஆனால்,ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி நாள்,தேய்பிறை அஷ்டமி நாள்,வெள்ளிக்கிழமைகளில் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து 1008 முறை இம்மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

முதல் 48 நாட்கள் ப்ரம்மச்சார்யத்தைக் கடைபிடித்தால்(எந்த ஒரு ரொமான்ஸ் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது=படம் கூட பார்க்காமல் இருப்பது அவசியம்) அளவற்ற செல்வ வளத்தை படிப்படியாகத் தரும்;


தினமும் 1008 முறை மந்திரம் ஜபிப்பவர்களுக்கு முதல் நாளில் இருந்தே உடல் வெப்பம் அடையும்;சூடான உணவில் நெய் சேர்த்து தினமும் சாப்பிட வேண்டும்;அல்லது தினமும் ஒருமுறையாவது இளநீர் அருந்தி வர வேண்டும்; மோர் மற்றும் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்;

நல்ல வேலை கிடைக்க:

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;ஏதாவது ஒரு நாள் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் கால பைரவர் சன்னதிக்குச் சென்று அவரது பாதத்தை நோக்கியவாறு வேலை கிடைத்தால் அன்னதானம் செய்வதாக வேண்டிக் கொண்டு பின் வரும் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கவும்;ஒரு நாளுக்கு 1008 முறை ஜபித்து வர வேண்டும்;


ஓம் ஹ்ரீம் க்லீம் க்லூம் மஹா பைரவாய நமஹ


வேலை கிடைத்த பின்னர்,வேண்டிய படி ஏதாவது ஒரு நாள் அன்னதானம் செய்ய வேண்டும்;இம்மந்திரத்தை ஜபிக்க ஏற்ற நேரம் காலை 5.30 முதல் 6.30க்குள்!

வழக்கு மற்றும் பிரச்சினைகள் தீர:

அசைவம் ,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;ஒரு மண்டலம் வரையாவது(48 நாட்கள் அல்லது 90 நாட்கள்) ப்ரம்மச்சாரியம் (ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது கட்டாயம்;படம் கூட பார்க்காமல் இருப்பது அவசியமாகும்)


கலப்படம் இல்லாத விபூதி 100 கிராம் வாங்கி ஒரு தட்டில் நிரப்பவும்;அதை வீட்டில் பூஜை அறையில் வைக்கவும்;சந்தன பத்தி ஏற்றி வைக்கவும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்கவும்;பின் வரும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிக்கவும்;ஜபித்து முடிந்ததும்,அந்த விபூதியை எடுத்து நெற்றி நிறைய பூசிவிட்டு உங்கள் கடமைகளைச் செய்ய ஆரம்பிக்கவும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய க்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ விக்ன நிவாரணாய,சத்ரு மித்ரு வசீகராய மம வசம் குரு குரு சுவாஹா


நோய்கள் தீர:

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;கண்டிப்பாக  ப்ரம்மச்சார்யம் பின்பற்ற வேண்டும்;(ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது;படம் கண்டிப்பாக பார்க்கக்கூடாது;)


ஒரு சாண் அளவுடைய எட்டிக்குச்சியை கையில் வைத்தவாறு பின்வரும் மந்திரத்தை ஒரு நாளுக்கு 108 முறை வீதம்,ஒன்பது நாட்கள் வரை ஜபிக்க வேண்டும்;ஒன்பதாவது நாள் ஜபித்து முடித்த பின்னர்,கால பைரவர் சன்னதி முன்பாக இதை வைத்து உங்கள் பெயர்,நட்சத்திரம் சொல்லி நீங்களோ அல்லது மற்றவரோ அர்ச்சனை செய்துவிட்டு,உங்கள் இடுப்பில் கட்டி வைக்க வேண்டும்;இப்படிச் செய்வதால்,தீராத நோய்களும் படிப்படியாகத் தீரத் துவங்கும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ;சர்வ ஆபத்துத் தாரணாய,சர்வ வியாதி சம்ஹாராஹ,மஹ பராக்கிரமாயா வா வா சுவாஹா

திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைய:

யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவர் மட்டுமே  இதைச் செய்ய வேண்டும்;அவர் சார்பாக வேறு எவர் செய்தாலும் பலன் கிட்டாது;

கண்டிப்பாக அசைவம்,மது இவைகளைக் கைவிட்டிருக்க வேண்டும்;கண்டிப்பாக ப்ரம்மச்சார்யத்தை பின்பற்ற வேண்டும்;

(ரொமான்ஸ் நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்;படம் பார்க்கக் கூடாது.சினிமாப் படம் அல்ல)பின் வரும் மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்;ஜபித்து முடித்த பின்னர்,செண்பகப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;செண்பகப் பூ கிடைக்காத பட்சத்தில் முல்லைப்பூக்களால் அர்ச்சனை செய்யலாம்;இரண்டு பூக்களையும் மாறி மாறி அர்ச்சனை செய்யக் கூடாது;ஒரே பூவை 44 நாட்கள் வரை அர்ச்சனை செய்து வர வேண்டும்;


ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் மஹா பைரவாய,அதி சீக்ர விவாக ப்ராப்தி சித்தியர்த்தாயை நம சுவாஹா


தினமும் அர்ச்சனை செய்த பூக்களை ஒரு புதிய மண்பானையில் போட்டு வைக்க வேண்டும்;ஏழாவது நாள் ஆனதும்,அந்த மண்பானையை அருகில் இருக்கும் ஓடும் நீர் உள்ள ஆற்றில் அல்லது கடலில் விட்டு விட வேண்டும்;வாரம் ஒரு நாள் வரும் வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று கால பைரவர் சன்னதிக்குச் சென்று இதே மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்;
இப்படிச் செய்து முடித்தால்,120 நாட்களில் வரன் அமைந்துவிடும்;

 நன்றி:ஓம் ரீங் காகபுஜண்டர் சித்த குரு நம ஸ்வாஹா

No comments:

Post a Comment