Thursday, November 15, 2018

கால பைரவரின் பிறந்த நாளைக்(30.11.2018 வெள்ளி) கொண்டாடுவோம்!!!



உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் என்று அனைத்தையும் ஈஸ்வரனின் ஆணைப்படி,ஈசனின் பெயரால் நம்மை ஆட்சி புரிந்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான்!

கால தேவனாக இருப்பவர் இவரே! நவக்கிரகங்களின் தலைவரும் இவரே! 64 வித அவதாரங்களாக இவர் அவதரித்து,மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள்,விண் உலகத்தில் வாழ்ந்து வரும் தேவர்கள்,தேவ இனங்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,கந்தர்வர்கள் என்று அனைவரது வாழ்க்கையையும் சூட்சுமமாகத் தீர்மானிப்பது மஹாகால பைரவப் பெருமான் தான்!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பல ஆயிரம் யுகங்களுக்கு முன்பு ஈசனின் படைப்பாக உருவானவர் தான் மஹாகால பைரவர்!

அப்படி உருவான நாள் தான் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ஆகும்;

இந்த விளம்பி வருடம்,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளானது 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கின்றது;

29.11.2018 வியாழக்கிழமை அன்று இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரையிலான நேரம் வரை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது;

கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;கி பி 2018 என்பது முழுமையற்ற,தெளிவில்லாத கிரிகோரியன் (கிறிஸ்தவ) காலண்டர் ஆகும்;இந்து தேசமான நமது பாரதத்தில் கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட தவறான காலண்டர் முறை தான் அது;


கடந்த 4 பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொன்டிருக்கின்றோம்;இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது;நம் ஒவ்வொருவருக்கும் பல ஆயிரக்கணக்கான முற்பிறவி கர்மவினைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது;இதில்,இப்பிறவியில் செய்த,செய்து கொன்டிருக்கும்,செய்ய இருக்கும் கர்மவினைகளும் பாவங்களாகவும்,புண்ணியங்களாகவும் நமது ஆத்மாவில் சேர இருக்கின்றன;

யார் ஒரே பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடைய அனைத்து முற்பிறவிகளின் கர்மாக்களும்,இப்பிறவி கர்மச்சுமைகளும் அழிக்கப்படுகின்றன;அவர்கள் இனி ஒரு போதும் இந்த பூமியில் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 

அல்லது

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ(மூலமந்திரம்) என்ற மந்திரத்தை 

அல்லது

ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் பைரவப் ப்ரசோதயாத் என்ற காயத்ரி மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜபிக்க வேண்டும்; 

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 30 ஆண்டுகள் வரையிலும் ஜபித்து வருவதால்,கால பைரவப் பெருமானின் அருள் கிடைக்கும்;

அட்டவீரட்டானங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிட்டும்;


காசியில் இருக்கும் 64 பைரவர்களையும் நேரில் தரிசனம் செய்யும் பெரும் புண்ணியம் கிட்டும்;64 பைரவர் சன்னதிகளும் கங்கைக் கரையோரத்தில் அமைந்திருக்கின்றன;


உங்கள் வீட்டில் அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் பைரவர் சன்னதியில் அல்லது பழமையான விஷ்ணு ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார் சன்னதியில் பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;


கால பைரவப் பெருமானின் பிறந்த நாளான 30.11.2018 வெள்ளிக்கிழமை முழுவதும் பைரவ மந்திரம் ஜபிப்பதால்,பைரவரின் அருள் கிட்டும்;


பைரவ மந்திரம் ஜபிக்கத் தேவையான சுய கட்டுப்பாடுகள்;
1.அசைவம் ஒரு போதும் சாப்பிடக் கூடாது;முட்டைவகைகள்,புரோட்டாவும் அசைவமே!
2.மது ஒரு போதும் அருந்தக் கூடாது;
3.பைரவ ஜபம் ரகசிய வழிபாட்டு முறைகளில் ஒன்று;எனவே,பைரவ ஜபம் செய்து வருவதை எவ்வளவு நெருங்கிய நட்பு வட்டத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம்;வெளிப்படுத்தியதால்,பலருக்கு தொடர்ந்து பைரவ ஜபம் செய்ய முடியாமல் போய்விட்டது;


அட்ட வீரட்டானங்கள்:

முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்;
1.திருக்கண்டியூர்
2.திருக்கோவிலூர்
3.வழுவூர்
4.திருப்பரசலூர்
5.திருக்கடவூர் & திருக்கடவூர் மயானம்
6.திருவிற்குடி
7.குறுக்கை
8.திருவதிகை
இந்த ஆலயங்களில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளி அன்று ஒரு மணி நேரம் வரை பைரவ மந்திரம் ஜபிப்பது நன்று;


திரு அண்ணாமலையில் வசிப்பவர்கள் கால பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம் அல்லது இந்த திதி ஆரம்பித்த நேரம் முதல் முடியும் நேரம் வரை கிரிவலம் செல்லலாம்;அப்படி கிரிவலம் செல்லும் போது பைரவ மந்திரம் ஒன்றை ஜபிப்பது நன்று;

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ



No comments:

Post a Comment