Saturday, February 3, 2018

முக்தி தரும் அண்ணாமலை கிரிவலம்..!!!



உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன் என்ற மூன்றுவிதமான கடன்கள் இருக்கின்றன;இவைகளை எப்படி அடைக்க வேண்டும் தெரியுமா?

போன ஐந்து முற்பிறவிகளில் செய்த பாவ கர்மா மற்றும் புண்ணியக் கர்மாவின் தொகுப்பை அனுபவித்துக் கொண்டே தான் அடைக்க வேண்டும்;


ஒவ்வொரு மாதமும் ஷண்ணாவதி தர்ப்பண நாட்கள் என்று வரும்;அந்த நாட்களில் சேஷம்பாடி,திலதைப்பதி,பூவாளூர் போன்ற பித்ரு முக்தி தலங்களில் தர்ப்பணம் அளித்து,ஒருவருக்காவது வயிறார உணவளிக்க வேண்டும்;இதனால் விளையும் அபூர்வமான பலன்கள்,மூதாதையர்களுக்கு பலத்த ஆன்ம சக்திகளை அளித்து,அவர்களுடைய பல நூறு ஆண்டுத் தளைகளை களையக் கூடியது;

ஏன் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்?

நம் முன்னோர்களில் பித்ரு நிலைகளை அடைந்தவர்கள்,
பித்ரு நிலைகளை அடைய இருக்கின்றவர்கள்,
பித்ரு நிலைகளை அடைய முடியாமல் தவிப்பவர்கள்;
பித்ரு நிலைகளை அடைந்து பிறவி எடுக்காதவர்கள்;
பித்ரு நிலைகளை அடைந்தும் வலுத்த கர்மவினைகளால் வாடி,ஆவியாக அலைபவர்கள் என்று பலவிதங்களில் இருக்கின்றார்கள்;

தற்கொலை செய்தவர்களும்,கொலைக்குச் சமமான பாவத்தைச் செய்து ஆவியாகவும்,பேயாகவும்,பிசாசாகவும் அலையும் நமது முன்னோர்கள் பல ஆயிரம் பேர்கள். . . இவர்கள் ஓரறிவு பிறவியாகிய புழு,புல்லாக கூட மாறாமல் தவிப்பவர்களும் உண்டு;

இவர்களுக்கு கதி மோட்சம் தர முயற்சிக்காமல் நாம் இப்பிறவி முழுவதும் வாழ்ந்து வந்தால் நமக்கு அடிக்கடி பொருளாதார நெருக்கடி வரத்தான் செய்யும்;அவ்வப்போது தரித்திரம் நம்முடன் வரவும் செய்யும்;


நாம் ஒவ்வொருவருமே இந்த பூமியில் மனிதப் பிறவி எடுத்து,இதுவரை குறைந்தது 20,000 முறை மனிதனாக வாழ்ந்திருக்கின்றோம்;அதிகபட்சம் 3,00,00,000 முறை  மனிதவாழ்க்கை வாழ்ந்திருக்கின்றோம்;அதன் பிறகுதான் இந்த கட்டுரையை வாசிக்கும் புண்ணியத்தை அகத்திய மகரிஷியின் அருளாலும்,அண்ணாமலையாரின் ஆசிகளாலும் வாசிக்கும் பெரும் பேறு பெற்றிருக்கின்றோம்;

ஆனால்,நமது இப்பிறவியில் நமது முந்தைய 20,000 பிறவிகளில்(அல்லது 3,00,00,000 பிறவிகளில்) செய்த கர்மவினைகளை அனுபவிப்பதில்லை;அதற்குரிய ஆயுளும் நமக்கு இருப்பதில்லை;

எப்போது சிவபெருமானைச் சரணடைகின்றோமோ அப்போது முதல் நமது அனைத்து கர்மவினைகளையும் அனுபவிக்காமலேயே அழித்துவிட முடியும்;சிவனால் மட்டுமே நமது அனைத்து கர்மச் சுமைகளையும் ஏற்று நமக்கு கதி மோட்சம் என்ற முக்தியைத் தர முடியும்;

தமிழ்நாடு மாநிலம்,விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலை தான் நமக்கு முக்தியைத் தரும்;2665 அடி உயரத்தில் இருக்கும் இந்த அருணாச்சலம் என்ற அண்ணாமலையை யார் ஒரே பிறவியில் 1008 முறை கிரிவலம் வருகின்றார்களோ அவர்களுக்கு மீண்டும் இந்த பூமியில் பிறவி கிடையாது;

ஆமாம்!

1008 முறை அண்ணாமலை கிரிவலம் முடித்ததும்,உங்கள் ஜன்ம நட்சத்திர சத்குருவை சந்திப்பீர்கள்:அவர் அருணாச்சலேஸ்வரரின் அருளால் உங்களது அனைத்து முற்பிறவி கர்மச்சுமைகளையும் வெறும் 60 நொடிகளில் எரித்து சாம்பலாக்கிவிடுவார்;அந்த நிமிடம் முதல் உங்களுக்கு சத்குருவின் வழிகாட்டுதல் கிடைக்க ஆரம்பிக்கும்;

இப்பிறவியில் தாங்கள் செய்த புண்ணியத்தின் அளவைப் பொறுத்து உங்களது அடுத்த பிறவி இந்திர லோகம் அல்லது பிரம்ம லோகம் அல்லது சிவலோகத்தில் இருக்கும்;

திருக்கையிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001 வது குருமஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அடிமை நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவேங்கடராம சுவாமி அவர்களின் உபதேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தெய்வீக ரகசியம் இது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் இடியாப்ப சித்தர் நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment