Friday, April 12, 2013

நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள்=3




கோவில்களில் தினசரிப் பத்திரிகைகள்,வார இதழ்கள்,மாத இதழ்களின் பக்கங்களை சதுரமாக கிழித்து வைத்திருக்கின்றனர்;நாம் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ததும்,பூசாரி தீபாராதனை காட்டுவார்;அப்போது அந்த தீபாராதனை மூலமாக நமது கோரிக்கைகள் மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுளின் திருவடியைப் போய்ச் சேரும்;பிறகு,நம் ஒவ்வொருவரும் பூசாரி/பட்டர்/சிவாச்சாரியார் விபூதி,குங்குமம்,மஞ்சள் காப்பு,சந்தனம் தருவார்;அதை நாம் அங்கே கன கச்சிதமாகக் கிழித்து வைக்கப்பட்டிருக்கும் சதுரகாகிதத்தில் கொட்டி அதை மடித்து வீட்டுக்குக் கொண்டு செல்வோம்;அப்போது அந்த காகிதத்தில் என்ன அச்சடிக்கப்பட்டிருக்குமோ அதை ஒருமுறை மனதால் வாசிப்போம்;அந்த மனதால் வாசிப்பதும் அந்த விபூதி,சந்தனம்,குங்குமம்,மஞ்சள் காப்பில் பதிவாகிவிடும்;இதனாலும் நமது கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகிறது என்பதை நமது ஆன்மீக குரு கண்டுபிடித்திருக்கிறார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நமது பூமிக்கு மேலே குறிப்பிட்ட கி.மீ.உயரத்தில் ஆகாய ஏடு என்று ஒன்று உள்ளது;அங்கே நமது தலைவிதி எழுதப்பட்டுள்ளது;அந்த தலைவிதியை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகள் ஆகும்.இதன்படி ஒவ்வொருவருக்கும் தினமும் சாதனை,வேதனை,அவமானம்,அவமரியாதை,புகழ் என ஏதாவது ஒன்று மாறி மாறி வருகிறது.இதை சில நொடிகளில் மாற்றும் சக்தி நாம் வழிபடும் மகான்களுக்கு உண்டு;அந்த மகான்களின் சீடராக நாம் முற்பிறவிகளில் இருந்தால் இப்பிறவியில் அந்த மகானை மட்டுமே வழிபட்டுக்கொண்டே இருப்போம்;நமது வழிபாடு/பிரார்த்தனை/நாம சங்கீர்த்தனம் அவரைச் சென்றடைந்தால்(இதற்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும்) அவர் நமது தலைவிதியை மாற்றுவார்;ஆனால்,ஓரளவுக்கு மட்டுமே மாற்றுவார்;
கூடவே,தினசரி ஓம்சிவசிவஓம் அல்லது ஸ்ரீகால பைரவர் மந்திர ஜபம்(பைரவ சஷ்டிக் கவசம்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணபைரவரின் போற்றிகள்/கால பைரவரின் பாடல்கள்) செய்தால் அந்த ஆகாய ஏட்டில் இருக்கும் நமது அனைத்து துயரங்களையும்,வர இருக்கும் அவமானங்கள்,துக்கங்கள்,சோதனைகளையும் அழித்துவிட முடியும்.அதற்காகத் தான் ஒவ்வொரு அமாவாசை,பவுர்ணமி,தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,தேய்பிறை அஷ்டமி போன்றவைகளை முன்கூட்டியே குறிப்பிட்டு தொடர்ந்து பதிவுகளை எழுதி வருகிறோம்.இதன்மூலமாக நாம் நிம்மதியாகவும்,நோய்/கடன்/எதிரி/துயரங்களை படிப்படியாக ஆனால் நிரந்தரமாக நீக்கி மகிழ்ச்சியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ முடியும்.ஏனெனில்,அந்த ஆகாய ஏடு நாம் வழிபடும் காலபைரவரின் கையில் இருக்கிறது;காலச் சக்கரத்தின் ஒருபகுதியே அது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ் சினிமாக்களில் நாம் ஒரு காட்சியைப்பார்த்திருப்போம்;கதாநாயகி குளிப்பதை கதாநாயகன் ‘பார்த்துவிடுவான்’;அதனாலேயே,அந்த கதாநாயகியை,கதாநாயகன் திருமணம் செய்து கொள்வான்;இந்த மாதிரியான காட்சியமைப்பு 1990 வரை தான் அதிகம் வந்திருக்கிறது;இப்போது அப்படியில்லை;இந்த காட்சியமைப்பு மூலமாக நமக்கு உணர்த்துவது என்னவெனில், “ஒரு பெண்ணை முழுமையாக பார்க்கும் தகுதி அவளது கணவனுக்கு மட்டுமே உண்டு”.
ஆனால்,மேற்கு நாடுகள்,அதன் மதங்கள்,சித்தாந்தங்கள்,அதன் செயல்பாடுகள் இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை தர்மத்துக்கு எதிராகவே இருக்கிறது.நமது இந்து தர்ம நீதி நூல்கள் நெடுகத் தேடினால்,அவர்கள் சொல்லும் நீதி இதுதான்:ஒரு பெண்ணின் மனதில் ஒருவன் காம இச்சையைத் தூண்டிவிட்டால்,அவனே அவளுக்கு கணவனாக வேண்டும்;ஒரு சமுதாயத்தை/நாட்டை ஒரு குறிபிட்ட குழுவினர் காம இச்சையைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டால் அந்த குழுவினர் மகத்தான அழிவை சந்திப்பார்கள்;இதற்கு பரிகாரமே கிடையாது;

இன்றோ,இணைய சர்வர்களில் ஹோஸ்டிங் செய்யப்படுவது காமவெறியைத் தூண்டும் இணையதளங்களே அதிகம்;இந்த இணையதளங்கள் அனைத்தும் மேல்நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பார்க்கப்படுகின்றன;உலகின் அனைத்து மதங்களையும் அழிக்கவும்,உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவுவதற்கும் உலக வல்லரசுகளின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த செயல்களில் இதுவும் ஒன்று;இதனால்,ஐரோப்பாவும்,அமெரிக்காவும் வெகுவிரைவில் மீளமுடியாத சிக்கல்களைச் சந்திக்கும்;இந்த நூற்றாண்டின் பிற்பாதியில் பரமஏழைநாடுகளாகி விடும்;அவர்களின் மதங்களின் நிலையும் அதோகதிதான்!

எனவே,நமது தாம்பத்தியம் பற்றிய வீடியோ எடுத்து வைத்திருந்தால் அதை உடனே அழித்துவிடுவோம்;அந்த மெமரிக் கார்டையும் ஒடித்துவிடுவது நல்லது.(ரெக்கவரி சாஃப்ட்வேரின் மூலம் அழிப்பதை எடுப்பதே செல்போன்/கணினி சர்வீஸ் மையங்களின் வேலையே!!!)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சினிமா,டிவிக்களில் முன்பெல்லாம் கவர்ச்சி நடிகைகள் மட்டும் அரைகுறை ஆடையணிந்து கவர்ச்சி காட்டினர்;அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்திலிருந்து கதாநாயகியே தன்னை ‘உரித்து’ காட்ட ஆரம்பித்துவிட்டனர்;அதிலும் தொப்புள் தெரிய ஆடை அணிவதை தேசியமயமாக்கியதே இம்மாதிரியான திரைப்படங்களே!
ஒருபோதும் பெண்கள் தொப்புள் தெரிய ஆடை அணியக்கூடாது என்று இந்து தர்மம் தெரிவிக்கிறது.பெண் இனமே மனோரீதியில் பலவீனமான இனம்(இப்போதெல்லாம் அப்படி இல்லை என்பது தனிக்கதை!).கர்ப்பிணிகள் ஒருபோதும் மரண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதும் இந்து தர்மக் கோட்பாடுகளில் ஒன்று ஆகும்.
ஏனெனில்,ஒருவர் இயற்கையான முறையில் இறந்துவிட்டால்,அவர் இறந்த நாளில் இருந்து 16 நாட்கள் வரையிலும் அவரது ஆத்மா/ஆவியானது தனது வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும்.தனது உடலுக்குள் புகுந்துகொள்ள முயலும்;16 ஆம் நாள் தான் தான் ஒரு நீண்ட(ஒரு வருட) பயணம் செய்ய வேண்டிய நிலையை உணரும்;ஆமாம்! 16 ஆம் நாளில் இருந்து அந்த ஆத்மாவை அவரது பூர்வபுண்ணியத்தைப் பொறுத்து எமதூதர்களோ அல்லது சிவ தூதர்களோ அல்லது விஷ்ணு தூதர்களோ வந்து அழைத்துச் செல்வார்கள்.இந்த காலகட்டத்தில்,தொப்புள் தெரிய ஒரு பெண்/கர்ப்பிணி அந்த மரண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தால் அந்த ஆவி/ஆத்மாவானது  அவளது தொப்புள் வழியாக அவளது உடலுக்குள் நுழைந்து விடும்.கர்ப்பிணி எனில்,அவளது கருவுக்குள் நுழைந்து தங்கிவிடும்.இங்கே சில வெளியிடமுடியாத ரகசியங்கள் உண்டு;ஆவியுலக ஆராய்ச்சியாளர்களிடம் இதற்கான முழு பதில்களும் கிடைக்கும்;ஆனால்,நீங்கள் கேள்விப்படுவதை ஒருபோதும் முகநூலிலோ,வலைப்பூவிலோ எழுதிவிடாதீர்கள்;அது தேவரகசியம்!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
போர் அல்லது அடிதடி அல்லது கலவரம் அல்லது தொழிற்சாலை விபத்து அல்லது தற்கொலை மூலமாக இறப்பவர்களின் ஆத்மா இறந்த இடத்திலேயே இருக்கும்.அந்த ஆத்மாவுக்கு முறையான மரணம் வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் வரை அதே இடத்தில் இருக்கும்.அந்த ஆத்மாவுக்கு ஒவ்வொரு வேளையும் பசிக்கும்;ஆனால்,சாப்பிட முடியாது;தாகம் எடுக்கும்;ஆனால் தண்ணீர் குடிக்க முடியாது;நமது ராசிக்கு ராகு அல்லது கேது வரும்போது,இந்ஹ ஆத்மாக்கள் நமது உடலுக்குள் புகுந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும்;இதில் பெரும்பாலும் ஆண்களை பெண் ஆத்மாவும்,பெண்களை ஆண் ஆத்மாவும் பீடிக்கும்;சில சமயம் ஒரு ஆணை ஒன்றும் மேற்பட்ட ஆத்மாக்களும்,ஒரு பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆத்மாக்களும் பிடிப்பதுண்டு;இதை ‘பேய் பிடித்தல்’ என்று கூறுவர்.மாநகரங்களிலும் இது சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது.வாடகைவீடுகளில்/குடியிருப்புகளில் தற்கொலை செய்தால் உரிய பரிகாரம் செய்து அந்த ஆவியை ஹவுஸ் ஓனர்கள் துரத்துவதில்லை;அப்படியே அடுத்து வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிடுவதுண்டு;இதனால்,கன்னிப்பெண்களோ,இளைஞர்களோ அந்த தற்கொலை ஆத்மாக்களிடம் சிக்கிக் கொள்வதுண்டு;அடிக்கடி தற்கொலை எண்ணம் அவ்வாறு பீடித்தவர்களுக்கு வரும்;இவர்களால் வெகுநேரம் ஆளுயரக் கண்ணாடியைப் பார்க்க முடியாது;அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் மனநிலையில் விபரீத எண்ணங்கள் உருவாகும்;அருந்ததி,மாவீரன் போன்ற படங்களில் காட்டப்படும் காட்சியமைப்புகள் தொன்னூறு சதவீதம் உண்மையே! மீதி பத்து சதவீதம் திரைக்கதைக்காக பொய்களைக் கலப்பதுண்டு.
தற்கொலை/கொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு முறைப்படி மரணம் வரும் நாளில் அவர்களைத் தேடி எமதூதர்கள் வந்து அழைத்துச் செல்வர்;அவ்வாறு அழைத்துச் செல்ல குறைந்தது ஓராண்டு அதிகபட்சமாக நாற்பது ஆண்டுகள் ஆகும்.இங்கிருந்து கன்னிராசி மண்டலத்தில் அமைந்திருக்கும் எமலோகத்திற்கு ஒரு வருடம் வரை பயணிப்பார்கள்;அங்கே சென்று,இவர்களது பாவ புண்ணியக் கணக்கு வாசிக்கப்பட்டு,இவர்களுக்கு மறுபிறப்போ,மோட்சமோ வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் ஒதுக்கப்படுவர்;அங்கே கொதிக்கும் அறையில் அல்லது குளிர்ந்த அறையில் அனுப்பி வைக்கப்படுவர்;அவ்வாறு ஒரு பரம்பரையில் ஐந்து பேர்களுக்கு மேல் வந்துவிட்டால் நமது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு மூன்று ,ஐந்து,ஒன்பதாம் இடங்களில் ராகு அல்லது கேது வந்து நிற்கும்.இதுவே பித்ரு தோஷம்!!!
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒருவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது.பித்ரு தோஷத்தை நீக்காவிடில்,நீங்கள் இந்த பித்ரு தோஷத்தை நீக்கும் வரை செய்த அன்னதானம்,கோவில் கட்டுதல்,ரத்ததானம்,கல்வி தானம்,புண்ணியங்கள் எதுவும் உங்களை வந்து சேராது;எல்லோருக்கும் உதவி செய்வீர்கள்;உங்கள் உதவியால் முன்னேறியவர்கள்,உங்களது வளர்ச்சியை தடுப்பார்கள்;நன்றியுணர்ச்சியைக் காட்ட மாட்டார்கள்;நீங்களே ‘நமது நேர்மையே நம்மை சாதிக்க வைக்கும்;நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்’ என்று கற்பனையில் வாழ்ந்து கொண்டே வர வேண்டியதுதான்.பித்ருதோஷம் நீங்கிட நமது மஹாவில்வத்தை  தொடர்பு கொண்டு,ஜோதிட ஆலோசனை பெறுவது நல்லது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஹிப்னாட்டிசம்,மெஸ்மரிசம்,ரெய்கி போன்றவைகளை மேல்நாட்டினர் கண்டுபிடித்ததாக பீற்றிக் கொள்கின்றனர்.அது முழுத் தவறு.மேல்நாட்டினர் இங்கிருந்து திருடிச் சென்ற ஓலைச்சுவடிகளில் இருந்து ‘கண்டுபிடிக்கப்’பட்டவையே அவை;அந்த ஓலைச்சுவடிகளில் அவை நயன சல்லியம்,நயன ஒட்டியம் என்ற தலைப்பில் இருந்திருக்கின்றன.இதே போல் ஏராளமான நமது அறிவுச் செல்வங்களை கிறிஸ்தவ ஆங்கிலேயன் மூன்று கப்பல்களில் திருடிச் சென்றுவிட்டான்;அதே சமயம்,நமது தமிழ் இலக்கியங்கள்,சித்தர் பாடல்கள்,சித்த வைத்தியம்,பிராணயாமம் போன்றவைகளின் முக்கியத்துவத்தையும்,பெருமைகளையும் நாம் அறியாதபடி நமது கல்வித் திட்டத்தை மாற்றியமைத்துவிட்டான்;நமது பண்பாடு தழுவிய பாடத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர நமது மாநில,மத்திய அரசுகளுக்கு நேரமில்லை;ஏனெனில்,பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் கொள்கைகளால் தயார் செய்யப்பட்டவர்களே!!! இதே நிலைதான் பத்திரிகைகளில் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களும்!!!
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment