Tuesday, March 10, 2009

ஆன்மீகம் நமக்கு அவசியமா? ஏன்? எதற்கு?

ஆன்மீகம் நமக்கு அவசியமா?ஏன்? எதற்கு?

இந்த கேள்வி கேட்பது மிகச் சுலபமானது.ஆனால் பதிலோ மிக விரிவானது.
இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவில் செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான் என்ற கட்டுரையை வாசித்திருப்பீர்கள்.இதெல்லாம் நிஜமா? என சந்தேகம் கூடப்பட்டிருப்பீர்கள்.இதே தகவலை அமெரிக்கா அல்லது ஆங்கில நாடு வெளியிட்டிருந்தால் நாம் காலரைத் தூக்கிக் கொண்டாடியிருப்போம்.இல்லையா? இந்த சம்பவம் நிஜமாக இருந்தும் கூட ஏன் அமெரிக்கா இதைப் பிரபலப்படுத்தவில்லை?
ஏனென்றால்,இந்த அதிசயம் இந்து மதத்தின் பெருமைகளில் ஒன்றாக உள்ளது.கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா எப்படி இதை ஒப்புக்கொள்ளும்?!

ஒரு மாறுதலுக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவில் அமெரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.சனிபகவான் கிறிஸ்தவமதத்திற்குச் சொந்தம் என்று வைத்துக்கொண்டால்,கதையே வேறு.மாதம் 1000 கோடி டாலர்கள் செலவழித்து சனிபகவான் கோவிலை பிரபலப்படுத்தியிருப்பர்.இஸ்லாமிய நாடுகளில் இந்த விஷயத்தை-அதிசயத்தை பிரபலப்படுத்தியே இஸ்லாம் மத மக்கள் தொகையை 99% அளவிற்கு கிறிஸ்தவத்திற்கு மாற்றத்துவங்கியிருப்பர்.ஒசாமா பின்லேடன் சனிபகவான் கோவிலைத் தாக்க தனி பயங்கரவாதக்குழுக்களை அனுப்பி.. ..
சரி! இந்துக்களாகிய நாம் ஏன் இந்த விஷயத்தைக் கொண்டாடுவதில்லை.இந்த விஷயம் பிரபலமடையாமல் தி.மு.க., கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் மிகக் கவனமாக பார்த்து-இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.அப்படி பிரபலப்படுத்த விட்டால்,இந்துத்துவக் கட்சியான பா.ஜ.க.வளர்ந்துவிடுமே!
அரசியல் வேறு,நமது பெருமைமிகு பண்பாடு வேறு என்பதை இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை.பிறகு,எப்படி இந்துக்களாகிய நமக்கு நமது பெருமை தெரியும்?
ஒரு சாதாரண இந்த அதிசய சம்பவத்திற்கே இப்படி என்றால் சேது சமுத்திரத்திட்டம்,அயோத்தி ராமர் கோவில் பிரச்னை,அமர்நாத் பனிலிங்கம் சார்ந்த பிரச்னை,சபரிமலை தந்திரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு,திருப்பதி கோவிலில் கிறிஸ்தவ (ஆந்திர முதல்வர் சாமுவேல் ராஜ சேகர ரெட்டி)செய்யும் சேட்டைகள் 100 பக்கம் எழுதலாம்.தினமும் ஒரு பிரச்னையைப்பற்றி பார்க்கலாம்.

1 comment:

  1. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    தவம் செய்ய வேண்டும்!!!

    தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

    தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    video
    ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
    http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

    ReplyDelete