Monday, February 15, 2016

பணக்கஷ்டம்,வர்த்தக வீழ்ச்சியைத் தீர்த்து எழுச்சியைத் தரும் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுகாம்பாள் சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரர்!!!


மாசி மகத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திர நாளில் இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு தேனுபுரீஸ்வரருக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்;(பாக்கெட் பால் கண்டிப்பாக தவிர்க்கவும்)அதுவும் கறந்த பாலை இளஞ்சூடு ஆறுவதற்குள் அபிஷேகம் செய்ய வேண்டும்;இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் இதை நடைமுறைப்படுத்துவது கடினமே! இருப்பினும் முயற்சி செய்யவும்;

அபிஷேகம் செய்த பின்னர்,மீதி வாங்கி வைத்திருக்கும் பாலை இங்கே அந்த சமயத்தில் வரும் சிறுவர்,சிறுமியர்க்கு தானம் செய்ய வேண்டும்;இப்படி தொடர்ந்து 12 மகம் நட்சத்திர நாளில் குரு ஒரையில் அல்லது சந்திர ஒரையில் செய்து வரவேண்டும்;இதன் மூலமாக,தொழிலில் பெருத்த நஷ்டம் அடைந்தவர்கள் படிப்படியாக மீண்டு பழைய நிலையை எட்டுவர்;மிகுந்த கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு எதிர்பாராத உதவிகள் கிட்டிட ஸ்ரீதேனுபுரீஸ்வரர் அருள்புரிவார்;

மகம் நட்சத்திர நாளில் இப்படி காராம்பசுவின் பாலால் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்,அதற்குப் பதிலாக தசமி திதி வரும் நாளில் செய்யலாம்;தொடர்ந்து 12 தசமி(தேய்பிறை தசமி திதியில் மட்டும்) நாட்களில் குரு ஒரை அல்லது சந்திர ஒரையில் செய்ய வேண்டும்;

அதுவும் இயலாதவர்கள் ரோகிணி நட்சத்திரம் நிற்கும் நாட்களில் இந்த அபிஷேகம் செய்யலாம்;12 ரோகிணி நட்சத்திர நாட்களில் தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக காரியத்தடைகள் விலகும்;தொழிலில் வளர்ச்சி உருவாகும்;தீராத மற்றும் நீண்டகாலக் கடன் தீர வழிகள் திறக்கும்;

இங்கே ஒரே ஒரு சிவலிங்கத்திற்குச் செய்யப்படும் அபிஷேகமானது,ஒரு கோடி சிவலிங்கத்திற்குச் செய்யப்படும் அபிஷேகமாக மாறுகின்றது;

ஆதிசிவனுக்கு முதன் முதலில் வாகனமாக நந்தி ஆனது பிரபஞ்சத்திலேயே இங்கேதான்;

தேனுபுரீஸ்வரர் என்ற பெயரில் சென்னை மாடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் ஆலயம் அமைந்திருக்கின்றது;இதே போல,கும்பகோணம் பட்டீஸ்வரத்திலும் இதே பெயரில் ஈசன் அருள்பாலித்து வருகிறார்;

எங்கெல்லாம் தேனுபுரீஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் அருள் பாலித்து வருகிறாரோ,அங்கெல்லாம் ஐஸ்வர்ய அருட்கடாட்ச சக்தி நிரம்பியிருக்கிறது;இந்த ஐஸ்வர்ய அருளைப் பெற விரும்புவோர்,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்;

தினமும் ஒரு மணி நேரம் வீட்டில் சிவ வழிபாடு செய்து வரவேண்டும்;

அல்லது 

தினமும் சிவாலயம் செல்ல வேண்டும்;

அல்லது 

தினமும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் வீட்டில் சிவசிவ என்று 1008 நாட்கள் ஜபித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்;

இதில் ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால் ஈசனின் அருட்கடாட்சம் சுலபமாகக் கிட்டும்;



ஓம் அகத்தீசாய நமஹ

ஒழுங்கீனத்தைச் சீரமைக்கும் ஈசன் மயிலாப்பூர் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமல்லீஸ்வரர்!


கலியுகத்தில் மனிதனை இயக்குவது மனமே! நல்ல புத்தி இருந்தால்தான் மனம் நல்வழிக்கு வரும்;மனம் நல்வழிபட்டால் உடல் நற்காரியங்களை மட்டுமே செய்யும்;ஈனவே,நாம் வாழ்ந்து வரும் இக்கலியுகத்தில் நற்காரியங்களை ஆற்றுவது பூர்வவினைகளையும்,மனதையும்,உள்ளத்தையும் பொறுத்தது;லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் அல்லது எட்டாமிடத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள்,எப்போதும் பிறருக்கு கெடுதி செய்வதையே தனது சுபாவமாகக் கொண்டவர்கள்;ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள்;இவர்களது அகங்காரம் வானளாவி நிற்கும் தன்மையுடையது;இருப்பினும்,இதில் இருந்து மீள சிவபக்தி,பைரவ பக்தி,வராகி பக்தி இம்மூன்றில் ஏதாவது ஒரு பக்தி இருந்தால் கடைத்தேற முடியும்;

கண்ணால் கண்டதை எல்லாம் கண்டு,மனத்தால் ஆடுகின்ற சராசரி கலியுக மனிதன் தவறான செய்கைகளுக்கு ஆட்பட்டுவிடுகின்றனா;இதனால் தான் புகை,மது,முறையற்ற காம இச்சைகள் போன்ற தீய மனதுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்;

மனிதன் தீய எண்ணங்கள்,தீய சக்திகள்,தீய ஒழுக்கங்களுக்கு ஆளாகாமல் எப்போதும் ஆன்ம நறுமணத்துடன் துலங்குவதற்கு மனதில் உள்ள இறை நாம பூக்களானது வாடாமல்லியாகப் பூத்துக் குலுங்க வேண்டும்;

நறுமணம் என்பது எப்போதும் இறைமனத்துடன் ஒன்றுதலாகும்;இதனால் தான் இறைவழிபாட்டில் மந்திர ஒலி மணத்தோடு நறுமணப் பூக்களும்,ஊதுபத்தி மற்றும் தூபங்கள்,சாம்பிராணி,குங்கிலியம்,அத்தர்,ஜவ்வாது,புனுகு,
கோரோசனை,கஸ்தூரி போன்றவையும் பங்குபெறும்;

எத்தகைய உடல்,மன,உள்ளத்திறனை,ஆரோக்கியத்தைப் பெற்றாலும் நறுமணத்தோடு,நல்ல மனத்தோடு எப்போதும் இறை நினைவோடு வாழ்வதற்கு உதவுவதே ஸ்ரீமல்லீஸ்வர ஆலய வழிபாடாகும்;

கணவன்,மனைவி,குழந்தைகள் நல் ஒழுக்கத்துடன் வாழ விரும்புவோர்(கணவனுக்காக மனைவியும்,மனைவிக்காக கணவனும்,சகோதரனுக்காக சகோதரியும்,சகோதரிக்காக சகோதரனும்,மகன்/ளுக்காக பெற்றோர்களும்) பின்வரும் வழிபாடு செய்து வரவேண்டும்;

தொடர்ந்து முடியாவிட்டாலும்,6 திங்கட்கிழமைகளில் இங்கே அபிஷேகம்,ஆராதனைகள் செய்து மணம் நிறைந்த உணவுகளை படையல் இட வேண்டும்;உரியவர்களின் பெயரை அர்ச்சனை செய்துவிட்டு,படையலை தாமரை இலையில் வைத்து இங்கே வரும் சிவபக்தர்களுக்குத் தானம் தரவேண்டும்;
இப்படிச் செய்வதன் மூலமாக வழிமாறிச் சென்றவர்கள் நிச்சயமாகத் திருந்தி வாழத் துவங்குவர்;

திங்கட்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்த நாளில்(6.6.16 திங்கள் மதியம் 12.45 முதல் திருவாதிரை நட்சத்திரம் அன்று முழுவதும் இருக்கிறது;4.7.16 திங்களும் அமாவாசையும்,திருவாதிரையும் இணைந்து வருகிறது;3.4.17 அன்றும் வருகிறது) செய்வது சிறப்பு;

திங்கட்கிழமையும் அமாவாசையும் (4.7.16)சேர்ந்து வரும் நாளில் செய்யலாம்;

திங்கட்கிழமையும் சிவராத்திரியும் இணைந்திருக்கும் நாளில்(7.3.16 மகாசிவராத்திரி; 18.7.16; 1.8.16;28.11.16 மதியம் 2.52 வரை சிவராத்திரி;12.12.16 காலை 10.44 முதல் ஆரம்பமாகி மறுநாள் வரை இருக்கிறது;10.4.17 காலை 10.48 வரை இருக்கிறது) செய்வது இன்னும் மிகுந்த புண்ணியத்தையும்,சிவ அருளையும் அள்ளித் தரும்;

ஓம் அகத்தீசாய நமஹ


தற்கொலை மற்றும் விரக்தி எண்ணங்களை நீக்கும் கணபதி வழிபாடு!!!


கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே இன்றைய காலகட்டத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறோம்; கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நல்ல செயல்களால் இன்று வருமானம்,சுகம்,வீடு,வாகனம்,வசதிகள்,பெற்றோர்கள்,குடும்பம் அமைகின்றது;

கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த திமிர்த்தனங்களால் இன்று அவமானப்படுகிறோம்;கடன் படுகிறோம்;நாம் தந்த கடன் நமக்குத் திரும்பவருவதில்லை;ஒழுக்கமாக வாழ்ந்து ஒழுக்கங்கெட்டவன்/ள் என்று அவப்பெயர் பரவுகிறது;
இவைகளால் நாம் செத்துவிடலாமா? என்று கூட கவலைப்படுவதுண்டு;அல்லது அடிக்கடி நாமெல்லாம் இந்த பூமியில் யாருக்குமே தேவையில்லையோ? என்ற விரக்தி வருவதுண்டு;

இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்கள் பின்வரும் அகத்திய உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும்;

16 தேய்பிறை சதுர்த்தி நாட்களில் உங்கள் ஊரில் இருக்கும் தெருவில் இருக்கும் விநாயகருக்கு வறுத்த முந்திரிப்பருப்பை நைவேத்தியமாக படைக்க வேண்டும்;யார் விரக்தியாக இருக்கிறார்களோ,அவர்களின் மூன்று கைப்பிடி அளவுக்கு வறுத்த முந்திரிப் பருப்பை நைவேத்தியமாகப் படைத்துவிட்டு,பின்வரும் கணபதி மந்திரத்தை 30 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

ஓம் மஹா கணபதி நமஹ

நேரில் எம்மை சந்திப்பவர்களுக்கு இதைவிடவும் தெய்வீகத் தன்மை நிறைந்த,சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரத்தை உபதேசம் செய்ய இயலும்;

பிரபலமான விநாயகர் ஆலயமாக இருந்தால் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம்;அருகம்புல் மாலை வாங்கி அணிவிக்கலாம்;நிறைவாக நைவேத்தியத்தை அங்கே வருபவர்களுக்குப் பிரசாதமாக பகிர்ந்து தரவேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக விரக்தி மனப்பான்மை படிப்படியாக அகலும்;


நிறைவாக(முடிந்தால் மட்டும்) விநாயகர் பிறந்த இடமான வழுவூர் வீரட்டேஸ்வர் ஆலயத்திற்கு 16 வது தேய்பிறை சதுர்த்தி திதி வரும் நாளில் இதே மாதிரி நைவேத்தியம் வைத்து வழிபடலாம்;16 வது தேய்பிறை சதுர்த்தி திதிக்குத்தான் இங்கே செல்ல வேண்டும் என்றில்லை;11 வது தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 16 வது தேய்பிறை சதுர்த்திக்குள் ஏதாவது ஒரு சதுர்த்திக்குச் செல்லலாம்;

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 வது கி.மீ.தொலைவில் ஒரு பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது;அங்கிருந்து 2 கி.மீ.சென்றால் வழுவூர் வீரட்டானம்(அட்டவீரட்டானங்களில் ஆறாவது வீரட்டானம்) வரும்;சபரிமலை ஐயப்பன் பிறந்ததும் இங்கேதான்;ஓம் வராகி சிவசக்தி ஓம் மந்திரம் உதயமானதும் இங்கே தான்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

நமது லட்சியங்களை நிறைவேற்றித் தரும் சோடேச சிவதரிசனம்!!!


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்பது கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது பாரத தேசம் முழுவதும் தினமும் போற்றப்படும் போற்றியாகும்;

இராமாயண காலத்தில் ஸ்ரீராமபிரான் வனவாசகாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனது தந்தையாகிய தசரதருக்கு தர்ப்பணம் கொடுத்திருக்கிறார்;அப்படி தர்ப்பணம் கொடுத்த ஆலயங்களில் பெரும்பாலான ஆலயங்கள் நமது தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன;
அவைகளில் முக்கியமானது மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் அமைந்திருக்கும் உள்ளடங்கிய கிராமக் கோவில் கொறுக்கை ஆகும்;

இங்கேதான் மன்மதனை ஈசன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து சாம்பாலாக்கினார்;கொறுக்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் ஒரு தென்னந்தோப்பில் இன்றும் அந்த சாம்பல் மேடு அமைந்திருக்கிறது;கடந்த மூன்று பிறவிகள் முழுவதும் சிவவழிபாடு அல்லது பைரவ வழிபாடு செய்துள்ளவர்களால் மட்டுமே இந்த இடத்தைச் சென்றடைய முடியும்;

தமிழ்நாடு,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கபூர்,பர்மா என்ற மியான்மர்,பங்களாதேஷ் இவைகளில் ஏராளமான சிவாலயங்கள் இன்றும் தெய்வீக அருளாற்றல் நிரம்பி சிவக் கதிர்வீச்சை பரப்பிக் கொண்டே இருக்கின்றன;நாம் வாழும் ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தின் மூலமாகவே நமது நீண்ட கால லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்;

அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் மட்டுமே,நமது வழிபாடு,பூஜை,மந்திரஜபம் பலன் தரும்;சைவம் என்பது சமயம் மட்டும் அல்ல;உண்ணும் முறையும் கூட!
அசைவம் சாப்பிடுவதால்,நமக்குக் கிடைக்க வேண்டிய வரமானது நமது சூட்சும உடலுக்குள் நுழையாமல் வெளியிலேயே தங்கிவிடுகிறது.அப்புறம்,எந்த ஜோசியரும் சொன்னது பலிக்கலை;எத்தனையோ பரிகாரம் செஞ்சும் என் கஷ்டம் தீரலை;என்று புலம்ப வேண்டியதுதான்;

நாம் வாழ்ந்து வரும் ஊரில் திங்கட்கிழமையன்று மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்;கோவிலுக்குள் நுழைந்தது முதல் கோவிலை விட்டு வெளியே வரும் வரை ஓம் ரீங் சிவசிவ என்று ஜபிக்க வேண்டும்;இப்படி தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் செய்யவேண்டும்;16 திங்கட்கிழமைகளும் ஒரே சிவாலயம் சென்று இப்படி மந்திரம் ஜபிக்க வேண்டும்;அடுத்த 90 நாட்களில் நமது லட்சியம் நிறைவேறத் துவங்கும்;

எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.இங்கே எங்கள் ஊரை தனது அருட்பார்வையால் நிர்வாகித்து வருபவர் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி! ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தெற்கு எல்லையில் அருள்மிகு மடவார்வளாகம் ஆலயம் அமைந்திருக்கின்றது;நாங்கள் இங்கே தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் வருகை தந்தோம்;கோவிலின் வாசலில் கால் வைத்தது முதல் கோவிலை விட்டு வெளியேறும் வரை ஓம் ரீங் வைத்தியநாதா,வைத்தியநாதா என்று ஜபித்தவாறு கோவிலை வலம் வந்தோம்;16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே வெளியூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு,சிவகடாட்சம் பெற முயற்சித்தோம்;அருள்மிகு வைத்தியநாதசுவாமியின் அருளும்,மூலஸ்தானத்தினுள் அமைந்திருக்கும் மனோன்மணியின் ஆசியும் எங்கள் அனைவருக்கும் கிட்டியது;

ஒம் ரீங் என்ற வார்த்தைக்குப் பின்னால் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஈசனின் பெயரை இரண்டுமுறை ஜபிப்பதன் மூலமாக நமது ஆழ்மனதின் மூலமாக ஈசனின் பாதத்தை மனதால் தொடுவதாக அர்த்தம்;

ஓம் ரீங் சிவசிவ


Tuesday, February 9, 2016

உங்கள் கடனைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தநேரம்!!!


கலியுகத்தில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது நிம்மதியின்மை=இவைகளில் ஏதாவது ஒன்றில் சிக்க வேண்டும் என்பது பூர்வகர்மவிதியாகும்;தகுந்த குருவை கண்டறிந்து அவரைச் சரணடைந்தாலோ அல்லது தினமும்/வாரம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகவோ இவைகளில் இருந்து சிக்காமல் வாழவும் முடியும்.

ஒருபோதும் பிறருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொந்தரவு தராமல் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கல்கள் வராது;அப்படி இருக்கப் பழகுவது கொஞ்சம் சிரமம் தான்;

2009 ஆம் வருடம் முதல் வருடம் தோறும் மைத்ரமுகூர்த்தம் நேரத்தை கணித்து வெளியிட்டுவருகிறோம்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டும்;அப்படி ஒருமுறை செய்தால் நமதுகடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்தக் கடன் தீர்ந்துவிடும்;

உதாரணமாக மாரிமுத்து என்பவரிடம் நீங்கள் ரூ.1,00,000/-கடன் வாங்கி இருக்கிறீர்கள்;கடன் வாங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன;இப்போது என்ன நினைப்பீர்கள்? இந்த 6 ஆண்டுகளாக நாம் கொடுத்த வட்டித்தொகையை நினைத்து பிரமித்துப் போவீர்கள்;ஆனால்,கடனை அடைக்க வழியே தெரியாது;இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ரூ.1000/-அளவுக்காவது பணத்தைக் கொண்டு போய் மாரிமுத்துவிடம் கொடுத்து,இந்தப் பணத்தை அசலில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்;என்று வேண்ட வேண்டும்;அவரும் அவரது வரவு செலவு ஏட்டில் வரவு வைக்க வேண்டும்;அப்படி ஒரே ஒரு முறை செய்தாலே அதன் பிறகு மீதி ரூ.99,000/-கடன் வெகு விரைவில் தீர்ந்துவிடும்;

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஏராளமானவர்களின் கடன் கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பயன்படுத்தியதால் தீர்ந்தது.இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் இந்தியாவின் தென் மாநிலங்கள்,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,அந்தமான் தீவுகள் வரை வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அயல்நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடனை தீர்க்க விரும்பினால்,இந்திய நேரத்தில் அயல்நாட்டில் இருந்து பணத்தை அனுப்பலாம்;
வங்கிக் கடன் வாங்கியிருப்பவர்களும் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;
கந்துவட்டி வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது;

16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை
27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை
13.2.15 வெள்ளி இரவு 12.00 முதல் 2.00 வரை
23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை
23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை
8.4.15  புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை
19.4.15 ஞாயிறு காலை 6.20 முதல் 8.20 வரை
5.5.15 செவ்வாய் மாலை 6.30 முதல் 8.30 வரை
16.5.15 சனி காலை 4.04 முதல் 6.04 வரை
2.6.15 செவ்வாய் மாலை 5.00 முதல் 7.00 வரை
13.6.15 சனி விடிகாலை 2.15 முதல் 4.15 வரை
29.6.15 திங்கள் மதியம் 2.56 முதல் 4.56 வரை
9.7.15 வியாழன் இரவு 12.30 முதல் 2.30 வரை
26.7.15 ஞாயிறு மதியம் 1.30 முதல் 3.30 வரை
6.8.15 வியாழன் இரவு 11.00 முதல் 12.51 வரை
23.8.15 ஞாயிறு மதியம் 12.15 முதல் 2.15 வரை
2.9.15 புதன் இரவு 9.04 முதல் 11.04 வரை
19.9.15 சனி காலை 10.04 முதல் 12.04 வரை
29.9.15 செவ்வாய் இரவு 7.34 முதல் 9.34 வரை
10.10.15 சனி காலை 6.34 முதல் 8.34 வரை
10.10.15 சனி மதியம் 12.34 முதல் 2.34 வரை
10.10.15 சனி மாலை 6.34 முதல் 8.34 வரை
16.10.15 வெள்ளி காலை 8.04 முதல் 10.04 வரை
17.10.15 சனி காலை 8.08 முதல் 10.08 வரை
27.10.15 செவ்வாய்மாலை 5.34 முதல் 7.34 வரை
13.11.15 வெள்ளி காலை 6.24 முதல் 8.24 வரை
23.11.15 திங்கள் மதியம் 3.30 முதல் மாலை 5.30 வரை
10.12.15 வியாழன் காலை 6.00 முதல் 6.30 வரை
21.12.15 திங்கள் மதியம் 1.45 முதல் 3.45 வரை
6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12.00 முதல் 2.00 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
6.2.16 சனி காலை 6.00 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி மாலை 4.30 முதல் 6.30 வரை
6.2.16 சனி இரவு 10.30 முதல் 12.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12.00 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 11.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை

இந்த நேரத்தின் மைய  பாகத்தைப் பயன்படுத்துவது நன்று.


இப்படிக்கு ஜோதிடமுனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.9092116990 & 9364231011

அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!


நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;

க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5116 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;
அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;

நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.

இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

Monday, February 8, 2016

யாருக்கெல்லாம் வராகி வழிபாடு சுலபமாகக் கைகூடும்?


மனதால் பிறருக்கு தீங்கு நினைக்காமல்,தான் உண்டு;தன்னுடைய வேலை/தொழில் உண்டு என்று இருப்பவர்களுக்கு


திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கு


தற்போது ராகு மஹாதிசை நடப்பில் உள்ளவர்களுக்கு


பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கு


பஞ்சமி திதியில் பிறந்துள்ளவர்களுக்கு


இனி ஒரு பிறவியே வேண்டாம்;என்று மனம் வெறுத்துள்ளவர்களுக்கு


ராகுவுடன் எந்தக் கிரகமாகவது இணைந்து அந்தக் கிரகத்தின் திசை நடப்பில் உள்ளவர்களுக்கு


நிம்மதியாக வாழ விரும்புவோர்களுக்கு


அன்னை அரசாலை(வராகி)யின் வழிபாடு சுலபமாகக் கைகூடும்;
ஆமாம்!

பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் (காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும்) ஜபித்து வந்தால் போதும்;மூன்றாவது நாளில் இருந்தே உங்களுக்கு அன்னை அரசாலை(வராகி)யின் அருட்பாதுகாப்பு கிட்டிவிடும்;

4 ஆம் நாளில் இருந்து,கூடவே இருந்து பழகி நமக்கு துரோகம் செய்தவர்கள் படிப்படியாக நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்;

7 ஆம் நாளில் இருந்து,நாம் அறியாமையால் கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படும் நல்ல ஆத்மாக்கள் நம்மோடு பழக ஆரம்பிப்பார்கள்;எதிர்பாராத உதவிகள் செய்ய ஆரம்பிப்பார்கள்;

30 ஆம் நாளில் இருந்து எதெற்கெடுத்தாலும் புலம்புவதும்,பயப்படுவதும் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடும்;

60 ஆம் நாளில் இருந்து நமது வராகி மந்திர ஜபத்தின் பலன் நமது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசமாக பாதுகாக்கத் துவங்கும்;

நமது குடும்ப உறுப்பினர்கள் நம்மோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும் சரி;அல்லது தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்குச் சென்று வந்தாலும் சரி;அல்லது நாம் ஒரு ஊரிலும் நமது குடும்பத்தார் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்து வந்தாலும் சரி;அவர்களுக்கு சூட்சுமமான பாதுகாப்பை அன்னை அரசாலை(வராகி) வழங்குவாள்;இப்படி வழங்கும் பாதுகாப்பை எந்த ஒருவராலும் வழங்க முடியாது;

எனவே,பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் ஜபிக்கத் துவங்குங்கள்;

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்,அருகில் இருக்கும் பழமையான ஆலயத்தில் மூலவர்,அம்பாள்/தாயார் சன்னதியின் முன்பாக 30 நிமிடத்துக்குக் குறையாமல் ஜபிக்கவும்;

60 நாட்கள் இப்படி தினமும் இருமுறை ஜபித்தப் பின்னர்,வராகி பரணி என்ற வராகி மாலை என்ற வராகி அந்தாதியை ஜபிக்கத் துவங்கலாம்;

அசைவம் தவிர்த்துவிட்டு,ஜபிக்க ஆரம்பிப்பது அவசியம்;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளை ஒருமுறை ஜபித்தாலே,வராகி பரணியை ஒருமுறை பாடியமைக்கான பலன் கிட்டும்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்