
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Tuesday, September 13, 2011
திருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்கள்
முற்பிறவி அல்லது/மற்றும் முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த சில/பல தவறுகளால் ஏற்பட்ட தோஷங்கள்,இந்த பிறவியில் நுண்ணறிவு,உடனே புரிந்துகொள்ளும் திறன்,புத்திரபாக்கியம் அல்லது திருமணத்தடை அல்லது ஏதாவது ஒரு குறை பின்வரும் நாட்களுக்குள் பிறந்தவர்களுக்கு இருக்கும்.
11.3.1973 முதல் 2.9.1973 வரை
24.10.1973 முதல் 27.12.1973 வரை
22.2.1985 முதல் 17.4.1985 வரை
13.5.1985 முதல் 25.12.1985வரை
5.2.1997 முதல் 24.3.1997 வரை
12.8.1997 முதல் 29.11.1997வரை
20.1.2009 முதல் 5.3.2009 வரை
இந்த நாட்களுக்குள் பிறந்தவர்கள்,மாதம் ஒரு வியாழக்கிழமை வீதம் ஒராண்டுக்கு(52 வியாழக்கிழமைகள்) அல்லது திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில் 24 முறை(அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு) திரு அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்.
கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படி கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்;கிரிவலப்பாதையின் தூரமான 14 கிலோமீட்டர்கள் முழுவதும் யாரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்;
கிரிவலத்தின் போது அன்னதானம் சாதுக்களுக்கும்,பழதானம் பசுக்களுக்கும் செய்ய வேண்டும்.கிரிவலம் முடிந்த பின்னர்,திரு அண்ணாமலையாரையும்,உண்ணாமுலையம்மாளையும் வழிபட வேண்டும்.(முடிந்தால் கிரிவலம் முடியும் வரையிலும் விரதம் இருப்பது இன்னும் நல்லது)இப்படி ஒவ்வொரு தடவையும் செய்து வந்தால்,அவர்களின் நீண்டநாள் பிரச்னைகள்/ஏக்கங்கள்/துயரங்கள் கண்டிப்பாகத் தீரும்.
ஓம்சிவசிவஓம்
Monday, September 12, 2011
ஒராண்டி அம்மன் கோவில் பொன்மொழிகள்
பேராசை என்பது மனிதனை மெல்ல தின்னும் உள் அக்னி
கடவுள் நல்ல நோக்கங்களை நிறைவேற்றுவார்.பேராசைகளை அல்ல.
சொற்கள் வெறும் நீர்குமிழ்கள் .செயல்கள்தான் தங்க துளிகள்.
மேற்கண்ட மூன்று பொன்மொழிகளும் சென்னை வேளச்சேரி ஒராண்டி அம்மன் கோவில் சுற்று சுவர்களில் கண்டவை.நல்லா இருக்கா?
கடவுள் நல்ல நோக்கங்களை நிறைவேற்றுவார்.பேராசைகளை அல்ல.
சொற்கள் வெறும் நீர்குமிழ்கள் .செயல்கள்தான் தங்க துளிகள்.
மேற்கண்ட மூன்று பொன்மொழிகளும் சென்னை வேளச்சேரி ஒராண்டி அம்மன் கோவில் சுற்று சுவர்களில் கண்டவை.நல்லா இருக்கா?
Subscribe to:
Posts (Atom)











