Thursday, April 23, 2015

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்,பகுதி 2

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010

மகம்:

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம்:

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம்:

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.


அஸ்தம்:

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை:

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி:

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால் 
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.


விசாகம்:

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம்:

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

கேட்டை:

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்,பகுதி 1

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010

அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

பரணி:
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே. 

கார்த்திகை/கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி:

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால் 
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம்:

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாதிரை/ஆதிரை:

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம்:

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.


பூசம்:

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம்:

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே.

சம்மர் கோர்ஸ்களில் எதைத் தேர்ந்தெடுப்பது?


பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்!) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு  சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா? இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது  குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)

இப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.(சிரிப்பு வருகிறதா? நிஜம்தான்.)
ஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம்? ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா?தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்பவரே!

 நன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.

வேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.

தட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.

கூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா  பயில்வது அவசியம்.

தவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.

முதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில்  இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.

அதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;

கணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;
என் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;

சாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;

நமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)

ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்!!!

உங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.

இந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது!!!

(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே!)

தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்




உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 


சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.
3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.

ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.
ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.

ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008

மன்மத ஆண்டின் (14.4.15 முதல் 13.4.16 வரை) மைத்ர முகூர்த்த நாட்கள்!!!



ஜோதிடம் ஒரு மஹாசமுத்திரம்! அதில் ஒரு சிறு துளியில் ஆராய்ந்து கண்டறிந்த உண்மையை உங்களுக்கு வழங்குவதில்  பெருமைப்படுகிறேன்.

நாம் வாழ்ந்துவரும் கலியுகத்தில் நம் ஒவ்வொருவரும் கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருவது நிதர்சனம்;கடனைத் தீர்க்க ஒரு சுலபமான ஜோதிடப் பரிகாரம் இதோ:

நீங்கள் ஒருவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;அந்தக் கடனை அடைக்க கீழே தரப்பட்டிருக்கும் நேரப்பட்டியலில் உள்ள நேரங்களில் அசலில் ஒரு பகுதியை தொடர்ந்து தருவதன் மூலமாக அதன்பிறகு,அந்தக் கடன் வெகுவிரைவில் தீர்ந்துவிடும்;(இந்த நேரத்தில் வட்டி தரக் கூடாது)இந்த நேரத்திற்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்;மைத்ர முகூர்த்தத்தைக் கணிக்க அடியேனுக்கு காலப்பிரகாசிகை என்ற நூல் உதவியது;தஞ்சாவூர் சரபோஜி மஹால் நூலகம் வெளியிடாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது;ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்குத் தீனி போடும் நூல்களில் இதுவும் ஒன்று.

19.4.15 ஞயிறு காலை 6.20 முதல் காலை 8.20 வரை

5.5.15 செவ்வாய் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை

16.5.15 சனி அதிகாலை 4.04 முதல் 6.04 வரை

2.6.15 செவ்வாய் மாலை 5.00 முதல் 7.00 வரை

13.6.15 சனி விடிகாலை 2.15 முதல் 4.15 வரை

29.6.15 திங்கள் மதியம் 2.56 முதல் மாலை 4.56 வரை

9.7.15 வியாழன் இரவு 12.30 முதல் 2.30 வரை

26.7.15 ஞாயிறு மதியம் 1.30 முதல் 3.30 வரை

6.8.15 வியாழன் இரவு 11.00 முதல் 12.51 வரை

23.8.15 சண்டே மதியம் 12.15 முதல் 2.15 வரை

2.9.15 புதன் இரவு 9.04 முதல் 11.04 வரை

19.9.15 சனி காலை 10.04 முதல் 12.04 வரை

29.9.15 செவ்வாய் இரவு 7.34 முதல் 9.34 வரை

10.10.15 சனி காலை 6.34 முதல் 8.34 வரை

10.10.15 சனி மதியம் 12.34 முதல் 2.34 வரை

10.10.15 மாலை 6.34 முதல் 8.34 வரை

16.10.15 வெள்ளி காலை 8.04 முதல் 10.04 வரை

17.10.15 சனி காலை 8.08 முதல் 10.08 வரை

27.10.15 செவ்வாய் மாலை 5.34 முதல் 7.34 வரை

13.11.15 வெள்ளி காலை 6.24 முதல் 8.24 வரை

23.11.15 திங்கள் மதியம் 3.30 முதல் மாலை 5.30 வரை

10.12.15 வியாழன் காலை 6.00 முதல் 6.30 வரை

21.12.15 திங்கள் மதியம் 1.45 முதல் 3.45 வரை

6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை

7.1.16 வியாழன் காலை 4.40 முதல் 6.40 வரை

17.1.16 ஞாயிறு மதியம் 12.00 முதல் 2.00 வரை

2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை

6.2.16 சனி காலை 6.00 முதல் 6.30 வரை

6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை

6.2.16 சனி மாலை 4.30 முதல் 6.30 வரை

6.2.16 சனி இரவு 10.30 முதல் 12.30 வரை

13.2.16 சனி காலை 10.43 முதல் 12.00 வரை

20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை

20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை

20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை

29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை

1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 11.22 வரை

12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை

28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை

8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை

இந்த நேரங்கள் தமிழ்நாடு,இலங்கை மற்றும் தென் மாநிலங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்;அயல் நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடன் வாங்கியிருந்தால் இந்திய நேரத்தைப் பயன்படுத்தவேண்டும்;இந்தியாவில் வாழ்பவர்கள்(மேலே கூறப்பட்டிருக்கும் மாநில மக்களுக்கு மட்டும்) அயல்நாடுகளில் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி அசல் பணபரிவர்த்தனையைச் செய்தால் கடன் படிப்படியாகத் தீரும்;வங்கிக்கடன் களுக்கும் இந்த மைத்ரமுகூர்த்தம் பொருந்தும்;

கந்துவட்டிக்குப் பொருந்தாது;
கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை:கவனக்குறைவு என்பதும் நமது கர்மவினையால் உருவாகும் ஆளுமைத்திறன் குறைபாடே!


கை.வீரமுனி,ஜோதிட ஆராய்ச்சியாளர் மற்றும் 27 வருட ஜோதிடர்.

நம் ஒவ்வொருவரையும் ஜீனியஸ் ஆக்கும் புத்தக வாசிப்பு. . .பாகம்1



உங்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி அடியேனுக்கு உண்டு;ஏனெனில்,கடந்த 27 ஆண்டுகளாக பொது மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது ஜாதகங்களைப் பார்த்து பலன் சொல்லி,அவர்களின் கஷ்டங்கள் தீர ஜோதிட ஆலோசனை சொல்லி பலர் நல்ல நிலையை எட்டியிருக்கின்றனர்;அடிக்கடி சந்தித்து ஜோதிட ஆலோசனை பெறுபவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனையும்,ஆன்மீக வழிகாட்டுதலும் செய்வது வழக்கம்;

சுமாராக ஆயிரம் குடும்பத்தினருக்கு ஜோதிட ஆலோசனை கூறி அவர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தாலும் அடியேனை இப்பூமிக்கு அனுப்பிய இறைவன்,ஒரு பொறுப்புள்ள ஜோதிடராக மட்டும் உருவாக்கவில்லை;அனுபவம் மிக்க ஆலோசகராகவும்,சிலபல அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,ஆன்மீகவாதிகள்,கூட்டுக்குடும்பத்தார்களுக்கு அந்தரங்க மந்திரியாகவும் உருவாக்கியிருக்கிறார்;அப்படி உருவாகக் காரணம் புத்தகவாசிப்பு என்ற பழக்கம் தான்!

ஜோதிடர்தான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதில்லை;

இந்த பாரத நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும்,

தனது குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும்

அடுத்த பத்தாண்டுகளில் ஒரு தலைசிறந்த பணியாளராகவோ,அல்லது தலைசிறந்த தொழிலதிபராகவோ ஆக விரும்பும் ஒவ்வொருவரும்

சமூகசேவையில் பிரபலமடைய விரும்பும் ஒவ்வொருவரும்
நமது பாரத நாட்டின் பெருமைகளை அறிய விரும்பும் ஒவ்வொருவரும்

உலகத்திலேயே தலைசிறந்த வலைப்பூ நடத்திட விரும்பும் ஒவ்வொருவரும்

நமது தமிழ் மொழி,இந்து தர்மம்,ஜோதிடம்,சித்தமருத்துவம்,ஆயுர்வேத மருத்துவம்,வாஸ்து,ஆலய வாஸ்து,தேசபக்தி,இறைவனைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள்,ஜோதிடத்தில் ரகசியங்களைக் கண்டறிய விரும்புவோர்,சமஸ்க்ருத மொழியின் பெருமைகளை உலகம் முழுக்கப் பரப்ப விரும்புவோர்,வரலாறு படைக்க விரும்புவோர்,பலதுறை வித்தகராக இருக்க விரும்புவோர் ஒவ்வொருவரும்

உங்கள் குழந்தை 21 வயதைத் தொடும் போது மற்ற குழந்தைகளை விடவும் மேதையாக இருக்க விரும்பும் ஒவ்வொருவருமே

புத்தகவாசிப்பை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்;அடியேனது புத்தகவாசிப்புப் பழக்கம் பற்றியும்,அடியேனை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்த புத்தகங்களைப் பற்றியும் குறிப்பிடவிரும்புகிறேன்.

1987 ஆம் ஆண்டில் தினசரி செய்தித்தாள்கள் வாசிக்கத் துவங்கினேன்;அதுதான் புத்தகவாசிப்பின் ஆரம்ப முனை;அப்போது அடியேன் எட்டாம் வகுப்பு படித்த ஒரு சராசரி மாணவன்;ஒரு போதும் பத்து ரேங்க்குக்குள் வந்ததில்லை;அப்போதைய தினகரனில் வந்த ஒரு பெட்டிச் செய்தி அடியேனை ஆச்சரியப்பட வைத்தது;

திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமம்;அங்கே ஒரு விவசாயி மார்கழி மாதத்தில் ஒரு நாளில் அதிகாலை 5 மணிக்கு தனது விவசாயப் பண்ணைக்குச் சென்றிருக்கிறார்;அவரை ஒரு பாம்பு கடித்துவிட்டது;அப்படி கடித்த பாம்பு சில நிமிடங்களில் இறந்துவிட்டது;இதுதான் அந்தச் செய்தி;
கடந்த 25 ஆண்டுகளாக அந்த விவசாயி(அதாவது 1962 முதல் 1987 வரை) தினமும் வேப்பமரத்தில் இருந்து வேப்பங்கொழுந்துகளைப் பறித்து,ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்குச் சாப்பிடுவாராம்;அதுவும் ஒரு நாள் கூட இப்படிச் சாப்பிடாமல் இருந்ததில்லை;காலையில் பல் துலக்கியதும் அவர் சாப்பிடுவது இதை மட்டும் தான்;

இந்தச் செய்தியை வாசிக்கும் நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன்;1987 முதல் இன்று 2015 வரை இந்தச் செய்தி தொடர்பாக பலரிடம் சந்தேகம் கேட்டிருக்கிறேன்;இதுவரை அவர்கள் சொன்னக் கருத்துக்களை ஒரு 100 பக்க புத்தகமாகவே வெளியிடலாம்;நீங்கள் இது தொடர்பாக அறிய உங்கள் நட்பு வட்டத்தில் கேட்டு விசாரித்துக் கொள்ளுங்கள்;

1988 ஆம் ஆண்டில் நான் வாசித்த முதல் நாவல்:-
ஏழை படும் பாடு;எழுதியவர் கவியோகி சுத்தானந்தபாரதியார்;இது பிரெஞ்ச் மொழியிலலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்;இந்த நாவலை எனது பாட்டிவீட்டு மாடிப்படியில் அமர்ந்து நான்கு மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன்;ப்ரெஞ்ச் புரட்சியின் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு காதல் புதினம்.இதை வாசித்து முடித்ததும் எனக்குள் காதல் உணர்வு உண்டானது;ஆமாம்! யாரையாவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது;

1989,1990,1991 மூன்று ஆண்டுகளில் பள்ளி ஆசிரியர்களின் பிரம்படியும்,மிரட்டலும் எனக்குள் இருந்த துணிச்சலை கொன்றுவிட்டது;1991 இல் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக அஷ்டமத்துச்சனியின் பிடியில் இருந்ததை உணர்ந்தேன்;அது என்ன அஷ்டமத்துச்சனி? இந்தக் கேள்விக்குரிய முழுமையான விடையை அறிந்து கொள்ள எனக்கு பத்து ஆண்டுகள் ஆயின;ஏனெனில்,நான் வாழ்ந்த அடிமட்ட சமுதாயத்தில் சிந்திக்கும் திறன் உள்ளவர்களை கிறுக்கன் என்றார்கள்;கூர்மையாக கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்லாமல் பொறாமை என்ற முகமூடியால் என்னைத் தாக்கினார்கள்;1991 முதல் ஜோதிடம் பார்க்கத் துவங்கினேன்;அப்படிப் பார்க்கத் துவங்கும் முன்பு எவரிடமும் ஜோதிடம் கற்றுக் கொள்ளவில்லை;2006 ஆம் ஆண்டில் சந்தித்த ஒரு அருள்வாக்கு சொல்பவர் மூலமாக “நான் போன பிறவியிலேயே ஜோதிடராக இருந்தேன்” என்பதை அறிய முடிந்தது;

1991 முதல் 1994 வரை சென்னயில் இளங்கலை பொருளாதாரம் பயிலும் பாக்கியம் பெற்றேன்;எங்கள் ஊரில் வாழ்ந்து வந்த அய்யாப்பிள்ளை(இது அவர் பெயர்:) என்ற பிரபல ஜோதிடரிடம் எனது அப்பா எனது ஜாதகத்தைக் காட்டினார்;அவர் நிச்சயமாக உன் மகன் கடலோரம் சென்று பட்டப்படிப்பு படிப்பான் என்று சொல்லியிருக்கிறார்;அதன் பிறகே தைரியமாக என்னை சென்னையில் பட்டப்படிப்பு படிக்க கொண்டுவந்து விட்டார்;அய்யாப்பிள்ளையிடம் ஜோதிடம் பார்க்க தமிழ்நாடு முழுவதும் இருந்து காரில் பலர் வருவார்களாம்;அவர் அவ்வளவு பிரபலம்;அவரிடம் ஜோதிடமும் சிலர் கற்றுள்ளனர்;
17 ஆண்டுகளாக வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்று வந்த என்னால் முதல் வருடம் வரை சென்னையில் தாக்குப் பிடிக்கமுடியவில்லை;ஏனெனில்,எப்பப் பார்த்தாலும் அம்மா,அப்பா நினைவு வந்து கொண்டே இருந்தது;அந்த நினைவுகளை மறக்க இரண்டு காரியங்கள் செய்து சமாளித்தேன்;ஒன்று தினமும் அம்மா,அப்பாவுக்கு இன்லாண்டு லட்டர் எழுதுவது;இரண்டு கல்லூரி நேரம் போக மீதி நேரம் முழுக்க கல்லூரி நூலகத்திலேயே இருந்து பழமையான நூல்களை வாசிப்பது;

மூன்று ஆண்டுகளில் சுமாராக 2000 நூல்களை வாசித்துவிட்டேன்;அதில் என்னை சுமாராக மூன்று மாதங்கள் வரை தூங்கவிடாமல் செய்த புத்தகம் ஒன்றே ஒன்றுதான்;அந்த புத்தகத்தை விவேகானந்த கேந்திரம் 1960 வாக்கில் வெளியிட்டிருந்தது;அந்த புத்தகத்தின் பெயர்:ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல்; சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களின் தொகுப்பு;தொகுத்தவர் ஏக்நாத் ரானடே ;அது எப்படி ஏக்நாத் ரானடே என்பவர் தமிழ்நாட்டிற்கு வந்து சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களைத் தொகுத்தார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது;கல்லூரிப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,வகுப்புத் தோழர்கள் என சகலரிடமும் இந்த சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்;பலருக்கு பதில் தெரியவில்லை;ஒரே ஒருவருக்குத் தெரிந்திருந்தது;அவர்தான் வி.பா.பிரபாகர்;முதலாம் ஆண்டு பயாலஜி படிக்கும் மாணவர்; அப்போது நான் இரண்டாம் ஆண்டு மாணவர்;இவரது அறிமுகம் எனது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது;அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்னை,எனது சிந்தனையை,எனது வாழ்க்கையை அடியோடு மாற்றியவர் இவர்;
அவர் 40 பக்கங்கள் கொண்ட சிறு,சிறு கையேடுகளைத் தந்து என்னை வாசிக்க வைப்பார்;அந்த கையேடுகளின் பெயர்கள் இன்றும் நினைவில் இருக்கிறது;

1.ஆரிய மாயை,திராவிட மாயை ஒரு கட்டுக்கதை
2.நான் ஏன் நாத்திகனானேன்?=ஈ வே.ரா.,
3.ஓம் சக்தியும்,அணு சக்தியும்
4.ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடரை வாசிக்கச் சொன்னார்;அதுதான் வந்தார்கள்;வென்றார்கள்
மேலும் சில புத்தகங்களை அவர் பரிந்துரைத்தாலும் அவைகளில் பலவற்றை இன்று வரை வாசிக்கமுடியவில்லை;ஏனெனில்,இன்றுவரையிலும் பல புத்தகங்கள் கிடைக்கவில்லை;

மீண்டும் சந்திப்போம். . .

இன்று உலக புத்தக தினம்!!!
எனவே புத்தகம் வாசிப்பதை ஒரு அனிச்சை செயலாக்குவோம்;மேதை ஆவோம்;

இப்படிக்கு உங்கள் கை.வீரமுனி.