Thursday, January 10, 2013

மார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்!!!




பூமியில் ஒரு வருடம் என்பது தேவ உலகத்தில் ஒரு நாளுக்குச் சமம் ஆகும்.தேவ உலகத்தில் அதிகாலை நேரமே,பூமியில் மார்கழி மாதம் ஆகும்.எனவே,மார்கழி மாதம் புனிதம் மிகுந்த,வழிபாட்டுக்கு ஏற்ற மாதமாக ஆகிறது.தவிர,குருவின் சொந்தவீடுகளில் முதல் வீடான தனுசு ராசியில் ரவியாகிய சூரியன் பயணிக்கும் மாதமே மார்கழி ஆகும்.
இந்த மார்கழியன்று முப்பது நாளுமே பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.30 முதல் 6 மணிவரையிலும்,எந்த ஒரு இறைவழிபாடு செய்தாலும் அது விரைவான,சக்திவாய்ந்த பலன்களை தை பிறந்ததும் தரும் என்பது பல லட்சம் இந்துக்களால் நிரூபிக்கப் பட்ட உண்மை ஆகும்.
அப்பேர்ப்பட்ட மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையானது 11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.காலை 4.30 முதல் 6 மணி அல்லது காலை 11.30 முதல் 12 மணி அல்லது இரவு எட்டு மணிக்கு மேல் 10.30க்குள் இந்த நேரங்களில் உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.
இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,இந்த நாளில்  மேற்கூறிய நேரங்கள் ஒன்றில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;
பல நாட்கள்/மாதங்களுக்கு முன்பு ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கி,பல்வேறு சூழ்நிலைகளால் தொடர்ந்து ஜபிக்க இயலாதவர்கள் இன்று மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்து வருபவர்கள்,இன்று மட்டும் அதை நிறுத்திவிட்டு ஓம்சிவசிவஓம் ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்.
சிவனருள் விரைவில் கிடைக்க விரும்புவோர்,இந்த அமாவாசையில் அதாவது வெள்ளிக்கிழமை இரவில் அண்ணாமலைகிரிவலம் செல்வது மிக நன்று.
ஓம்சிவசிவஓம்

Tuesday, January 8, 2013

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1






விவேகானந்தர் பாறை:தடைகள் தகர்ந்தன!!!

சுவாமி விவேகானந்தரின் 100 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 1963 இல் சென்னை ஸ்ரீராமக்ருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமிகள் கன்னியாக்குமரியில் அமைந்திருக்கும் ஸ்ரீபாதப் பாறையில் சுவாமிஜியின் திருவுருவச் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தார்கள்.
ஆனால்,கன்னியாக்குமரியில் இருக்கும் கத்தோலிக்க பாதிரிகள்  இதை தீவிரமாக எதிர்த்தார்கள்;இதற்கு எதிராக கிறிஸ்தவ மீனவர்களை தூண்டிவிட்டார்கள்;அந்தப் பாறையை அவர்கள் செயிண்ட் சேவியர் பாறை என்று அழைத்தார்கள்.அது மட்டுமல்லாமல் அந்தப்பாறையில் ஒரு சிலுவையை நட்டார்கள்;ஆனால்,கன்னியாக்குமரி இந்து மீனவர்கள் ஒருநாள் அந்தச் சிலுவையை அகற்றிவிட்டார்கள்;இதனால்,கிறிஸ்தவ மீனவர்களுக்கும்,இந்துக்களுக்கும் தகராறு உருவானது;



 இது விஷயமாக அன்றைய ஆர்.எஸ்.எஸ்.தலைவராக இருந்த திரு.குருஜிகோல்வல்கர் அவர்களின் வழிகாட்டுதல் படி அகில பாரத அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டது;அதன் செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.ஸின் பொதுச்செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே பொறுப்பேற்றார்.


அப்போது இந்தியாவின் கலாச்சார உறவு அமைச்சராக ஹீமாயூன் கபீர் இருந்தார்;தமிழக முதல்வராக பக்தவச்சலம் இருந்தார்; இந்து கிறிஸ்தவ மோதலால் இந்த இருவருமே கன்னியாக்குமரியில் இருக்கும் ஸ்ரீபாத பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.என்ன கொடுமை? இந்து நாட்டில்  ஒரு மாபெரும் இந்துத் துறவிக்கு நினைவு இடம் அமைக்க எதிர்ப்பு! அந்த சமயத்தில்,காஞ்சி சங்கராச்சாரியார் இந்த நினைவு இல்லம் அமைக்க முழுஆதரவு தெரிவித்தார்;அவரது ஆதரவு விஷயம் தெரிந்ததும்,பக்தவச்சலம் தனது எதிர்ப்பைக் கைவிட்டார்;உடனே,கன்னியாகுமரிக்குச் சென்று அந்த ஸ்ரீபாதபாறை விவேகானந்தர் பாறைதான் என்பதை உறுதிபட தெரிவித்தார்.
ஏக்நாத் ரானடே,தனது அர்ப்பணிப்பு மனப்பான்மையால் ஹீமாயூன் கபீரின் மனத்தையும் மாற்ற வைத்தார்.


தி.மு.க.தலைவர் சி.என்.அண்ணாத்துரையை சந்தித்து அவரையும் விவேகானந்தர் நினைவுச் சின்னக் கமிட்டியின் உறுப்பினராக்கினார்;நினைவுச் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் இருந்தனர்.



ஏக்நாத் ரானடே கன்னியாக்குமரியில் இன்று நாம் காணும் விவேகானந்தர் பாறையில் கோவிலை உருவாக்கிட தனி ஒரு மனிதனாக எப்படியெல்லாம் படாதபாடு பட்டார் என்பதை விவேகானந்த கேந்திரம் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.அதை படித்துவிட்டு,ஒருமுறை கன்னியாக்குமரி விவேகானந்தர் பாறைக்குச் சென்றால்,பிரமித்துப்போவீர்கள்.


ஏக்நாத் ரானடே பட்ட கஷ்டத்துக்கு முன்னால்,நாம் நமது சொந்த வாழ்க்கையில் படும் சிரமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றும்.நம்மில் பலருக்கு அந்த புத்தகத்தை முழுமையாக வாசிக்கக் கூட முடியாது.அவ்வளவு கடினமான போராட்டங்களை சந்தித்திருக்கிறார்.பொதுச் சேவை,ஆன்மீகத்தொண்டு செய்ய விரும்புவோர் கண்டிப்பாக இந்த புத்தகத்தை ஒருமுறையாவது வாசிக்கவேண்டும்;நமது இந்து தர்மத்திற்கு எப்படியெல்லாம் ஆபத்து வந்திருக்கிறது என்பதை அறிய விரும்புவோரும் இதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.


அந்த புத்தகத்தின்பெயர்: விவேகானந்தர் பாறை:நினைவுச் சின்னத்தின் வரலாறு.


ஓம்சிவசிவஓம்

நன்றி:விஜயபாரதம்,பக்கம் 53,11.1.2013

இந்திய ஆன்மிகத்தின் சிறப்பு நரேந்திர மோடி பெருமிதம்

ஆமதாபாத்: "சர்வதேச நாடுகளை உலுக்கும், புவி வெப்பமயமாதல், பயங்கரவாத சம்பவங்கள் ஆகிய பிரச்னைகளுக்கு, இந்திய ஆன்மிகத்தில் தீர்வு உள்ளது,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடந்த, இளைஞர் ஆண்டு விழாவில், அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நரேந்திர மோடி பேசியதாவது: புவி வெப்பமயமாவதால், உலகின், இயற்கை சூழ்நிலை மாறி வருகிறது. இதனால், மனித சமுதாயம், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பயங்கரவாத சம்பவங்களும், உலக நாடுகளுக்கு, பெரும் சவாலாக உள்ளன. இவற்றுக்கு என்ன தீர்வு என, தெரியாமல், உலக மக்கள், கவலையடைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையினரின் திறமையை, உலக நாடுகள் உணர்ந்துள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில், நம் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், சர்வதேச அளவில், சாதனைகளை நிகழ்த்துகின்றனர். ஆனால், நம் ஆன்மிகத்தில் உள்ள மிகச் சிறந்த போதனைகளை, சர்வதேச சமுதாயம், இன்னும் முழுமையாக உணரவில்லை. நம் நாட்டைச் சேர்ந்த மகான்கள், இயற்கையை, தாயாக மதித்தனர். தாயாருக்கான அந்தஸ்தை, இயற்கைக்கு அளித்தனர். அதேபோல், சக மனிதர்களை, நம் உற்றார், உறவினர் போல், கருத வேண்டும் என்றும், மகான்கள், போதித்துள்ளனர். அவர்களின் போதித்த கொள்கையை பின்பற்றினால், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்

Monday, January 7, 2013

இப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டியது:



இந்த பிறவியிலேயே சித்தராக விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களது வேலை அல்லது தொழில் செய்துகொண்டே ஞானத்திருவடி என்ற மாத இதழை ஒவ்வொரு மாதமும் வாசியுங்கள்;அதில் சொல்லப்படும் ஞான வழிமுறைகளைப் பின்பற்றிவாருங்கள்;அதிகபட்சம் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயமாக உங்களை சித்தராக ஆக்கிடும் குருநாதரை சந்திப்பீர்கள்;அவரும் ஒரு சித்தராகவே இருப்பார் என்பதை அந்த கணத்தில் உங்களால் உணர முடியாது;அவரோடு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும் பழக,பழக அவர் ஒரு சித்தர் என்பதை உணருவீர்கள்;


ஒரு சித்தரால் தான் உங்களை சித்தராக்கிட முடியும்.நீங்கள் இந்தப் பிறவியிலேயே சித்தராகிட சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றிட வேண்டும்:


1.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவேண்டும்.

2.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.


வேறு எந்த குறையிருந்தாலும்,ஞானத்திருவடி மாத இதழை தொடர்ந்து வாசிக்க,வாசிக்க அவைகள் நீங்கிவிடும்;நீங்கள் பரிபூரண புண்ணிய ஆத்மாவாகிவிடுவீர்கள்;


ஞானத்திருவடி புத்தகம் ஓராண்டுச் சந்தா:ரூ.120/- மூன்று ஆண்டுச் சந்தா ரூ.350/- வெளிநாடுகளுக்கு எவ்வளவு என்பதை தாங்கள் 04327 255784 என்ற அலுவலக எண்ணிற்கோ அல்லது அதன் பொறுப்பாளரான திரு.கே.ரவிச்சந்திரன் செல் எண்கள்;94883 91565,98420 65708,96551 74078 என்ற எண்களில் ஏதாவது ஒரு எண்ணில் தொடர்பு  கொண்டோ கேட்டறிந்து பணம் அனுப்பலாம்.

காசோலை எனில் Sri Agathiar Sanmaarga Charitable Trust என்ற பெயரிலும்,வரைவோலையை payable at Trichy or Thuraiur என்றும் எடுத்து பதிவு அஞ்சலில் முழு முகவரியை தமிழிலும்,ஆங்கிலத்திலும் தெளிவாக எழுதி அனுப்பி வைக்கவேண்டும்;
ஞானத் திருவடி மாத இதழ்,ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,ஓங்காரக்குடில்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சி மாவட்டம்.


இங்கே அகத்தியரின் ஆசிகளோடு தினமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
நாமும் ஞானத்திருவடி மாத இதழ் வாங்குவோம்;இந்த பிறவியிலேயே சித்தராகிட முயற்சி எடுப்போம்;இனி ஒரு மனிதப் பிறப்பு நாம் எடுக்கலாமா?


ஓம்சிவசிவஓம்

துயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி!!!




தினமும் காலையில் கண்விழித்ததும்,நமது உள்ளங்கையை பார்த்தவாறு இந்த துதியை மனதுக்குள் மூன்று  முறை ஜபிக்க வேண்டும்;அதன்பிறகே,படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.இதன் மூலமாக சித்தர்களின் அருளாசி நம்மை விரைவில் எட்டும் என்பது ஆராய்ச்சி முடிவு ஆகும்.

ஓம் சிவாய அகத்தீசாய நம
ஓம் சிவாய நந்தீசாய நம
ஓம் சிவாய திருமூலதேவாய நம
ஓம் சிவாய கருவூர் தேவாய நம
ஓம் சிவாய பதஞ்சலி தேவாய நம
ஓம் சிவாய இராமலிங்க தேவாய நம


அல்லது பின்வருமாறும் ஜபிக்கலாம்;
சகல நன்மைகளளயும் தரக்கூடிய மேற்கண்ட மகாமந்திரங்களை காலை மாலை முப்பது நிமிடங்கள் வரை நாம் ஜபம் செய்து ஞானிகள் ஆசி பெறுவோம்.


இந்த மந்திர உபதேசம் செய்பவர்:சிவராஜயோகி,பரமானந்த சதாசிவ சற்குரு,தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்!!!


ஓம்சிவசிவஓம்

ஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷி அருளிய அறிவுரை




காப்பான கருவூரார் போக நாதர்
   கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
   முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
   கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
   வாசமுனி கமலமுனி காப்புதானே.
                             பூஜாவிதி ஏழில் கவி எண் இரண்டு.

மாமேரு எனத் திகழும்,இந்த 14 ஞானிகள் அடங்கிய இந்தப் பாடலை தினமும் காலையிலும்,மாலையிலும் படித்து பாராயணம் செய்தும்,தினமும் பூஜை செய்தும்  வந்தால்,மனித வர்க்கம் அடையமுடியாத,அறியமுடியாத,உணரமுடியாத ஒன்றை நாம் ஒவ்வொருவராலும் உணர முடியும்.
அப்படி உணரும் நிலையை நாம் ஒவ்வொருவரும் எட்டிட குறைந்தது ஒரு வருடமும்,அதிக பட்சம் மூன்று வருடமும் தினமும் அதிகாலை அல்லது அந்திமாலையில் இந்த பாடலை பாராயணம் செய்ய வேண்டும்.
நன்றி:சித்தர்களின் தலைவர் அகத்தியர்.                               ஓம்சிவசிவஓம்

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித் தொகுப்பு!!!






ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித் தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரி நாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் ராமதேவர்  திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அவ்வையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கவுசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கவுதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமூலத்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தாச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள்  போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மவுனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு  திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர்  திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்  சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் எண்ணிலாக்  கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி

நிறைவுப்பாடல்:
வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத்  தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதம்(திருமந்திரம் 3047)

மேற்கண்ட 131 சித்தர்கள்,மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்,மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்.சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமை,புத்திரபாக்கியம்,உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகும்;அதே சமயம் மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்;

மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்,பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
நன்றி: ஞானத் திருவடி,சன்மார்க்க உண்மை பத்திரிகை,மாத இதழ்,நந்தன ,மார்கழி,2012.                                                     ஓம்சிவசிவஓம்