Thursday, November 15, 2012

போகரின் ஆசியோடு ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று 15.12.12க்குள் எழுதி அனுப்புவோம்;அகத்தியரின் கோவிலுக்கு நமது எழுத்துக்கள் அஸ்திவாரமாக இருக்கட்டும்!!!


கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.
ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;
இதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது.
பலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த  நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது!!
தினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.
இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனோம்.
15.12.2012 (கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் வரை இப்போது நீட்டித்துள்ளார்கள்) வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது  குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா? நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:(தமிழில்) திரு.கி.முரளிதரன்,டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட், 3,முதல் தளம்,பாரதி பூங்கா வீதி 2,  சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் -11.         (ஆங்கிலத்தில்)K.MURALIDARAN, 

TOTAL OIL INDIA PRIVATE LIMITED,
3,FIRST FLOOR,BHARATHI PARK STREET 2, 



SAIBABA COLONY,COIMBATORE-11 இதுவரையிலும் ஓம் அகத்தீசாய நமஹ என்றோ அல்லது ஓம் அகத்தியாய நமஹ என்றும் எழுதியவர்களுக்கு அகத்தியமகரிஷியின் அருளாசி கிடைத்திருக்கிறது.அந்த அனுபவங்களை கேட்க இந்த யூட்யூப் லிங்கை சொடுக்கவும்.

நந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!




அண்ணாமலை தீபம் ஏற்றப்படும் மாதம் கார்த்திகை மாதம் ஆகும்.சூரியன் என்ற ரவி உச்சமாகும் நட்சத்திரம் கார்த்திகை.இந்த நட்சத்திரம் மேஷம் மற்றும் ரிஷப ராசியில் பரவியிருக்கிறது.இந்த நட்சத்திரத்தில் மதி என்ற சந்திரன் பவுர்ணமியாக பரிணமிப்பது கார்த்திகை மாதத்தில் தான்!!பதினான்கு உலகத்திலும் வாழும் உயிர்களுக்கும் செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் பிறந்ததும் இந்த கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் தான்! (கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்த நாளில் தோன்றினார்!!!)

சூரியன் உச்சமாகும் நட்சத்திரத்தில் சந்திரன் பவுர்ணமியாக காட்சியளிப்பதால்,கார்த்திகை மாதம் வெகுவான சிறப்புள்ள மாதமாகிறது.
இந்த நந்தன வருடத்தின் கார்த்திகை மாதம்,16.11.12 வெள்ளிக்கிழமை அன்று உதயமாகிறது.இந்த நாளில்,
இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள் இன்று காலையில் 4.30 முதல் ஆறு  மணிக்குள் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க இயலாமல் சிலபல காரணங்களால் இடையில் நிறுத்தியவர்கள்,இன்று முதல் மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.

நமது ஆன்மீக குரு அடிக்கடிச் சொல்வது போல, “இல்லறமில்லாமல் துறவறமில்லை” இதற்கு அர்த்தம் என்னவெனில், இல்லறக்கடமைகளை நிறைவு செய்யாமல் துறவறத்துக்கு வரக் கூடாது என்பதே! எனவே,நீங்கள் என்ன வேலை பார்த்தாலும்,எந்தத்தொழில் செய்தாலும்,அந்த கர்மாவை(வேலை/தொழில்) தொடர்ந்து செய்தவாறே தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய இந்தப் பிறவியில் நீங்கள் அடுத்த கட்ட ஆன்மீகப் பதவி உயர்வினை எட்டுவீர்கள் என்பது சர்வ நிச்சயம்.(40 அல்லது 50 வயதுக்குப்பிறகு ஆன்மீகவாதியாகிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடவாது;ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?)

நாம் வாழும் யுகமோ துன்பங்கள் மற்றும் துயரங்களை மட்டுமே தரும் கலியுகம் ! நாம் வாழும் காலமோ அதிகபட்சம் நூறு ஆண்டுகளே!! ஆனால்,கலியுகத்தில் மட்டுமே மந்திர ஜபம் வெகு விரைவாக நம்மை ஆத்மபரிசுத்தம் செய்துவிடும்.
ஒவ்வொரு நாளும் இன்று ஒரு நாள் தான்.வெறும் ஒரு மணி நேரம் தான்! முடியாவிட்டால் வெறும் 15 நிமிடங்கள் தான்.நமது ஆன்மீக முயற்சியில் அடுத்த கட்டத்தை எட்டிட என்று எண்ணுங்கள்.நாளைக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொள்ளலாம் என்று தொடர்ந்து ஓரிரு நாட்கள் தள்ளிப் போட,அதுவே ஜபிக்க முடியாத தடையாகிவிடுகிறது.நாமும் பிறரை விடவும் ஆன்மீக முயற்சியில் பின் தங்கிவிடுகிறோம்.

இந்த ஒரே ஒரு மந்திரஜபத்தை தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடமும் அதிகபட்சம் ஒரு மணி நேரமும் ஜபித்துவர பின்வரும் நன்மைகள் நம்மை 24 மணி நேரமும் பின் தொடர்ந்து கொண்டே வரும்:

1.நம்மைச் சுற்றிலும் பல எதிர்மறை சக்திகள்(பொறாமை,கோபம்,வறுமை,மாந்திரீகத்தினால் நம்மை முடக்கிப் போட விரும்பும் உறவினர்/நட்பு வட்டம்/தொழில் வட்டம்/உடன் பணிபுரிவோர்/பக்கத்துவிட்டார்) இருக்கின்றன.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்தையும்,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்காதபோது,இந்த எதிர்மறை சக்திகள் தடுக்கின்றன;சீர்குலைக்கின்றன;நமது மனதில் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன.(இந்த சூழல் மாநகரங்களில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே இந்த மோசமான சூழ்நிலையில் இருக்கிறது;)இதிலிருந்து தப்பிக்க நாம் தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடம் ஓம்சிவசிவஓம் ஜபித்தே ஆக வேண்டும்.

2.நமது ஒவ்வொரு எண்ணங்களுக்கும் சக்தி உண்டு.எண்ணங்களில் நமக்கு மகிழ்ச்சி தரும் விதமாக உருவாகி,அவை நமது வளர்ச்சியைத் தடை செய்யும் எண்ணங்களும் உண்டு.(விகாரமான எண்ணங்கள்,பொறாமை எண்ணங்கள்,நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைப்பது,நம்மைப் பற்றி மிகவும் உயர்வாக நினைப்பது,பிறரின் புகழ்ச்சியால் நமது வழக்கமான கடமைகளை மறந்துவிடுவது,பிறரின் மட்டம் தட்டும் சுபாவத்தால் நாம் நிலை தடுமாறுதல்,நமது ஆரோக்கியம் அல்லது எதிர்காலம் பற்றிய பயம் கலந்த எண்ணங்கள்)இந்த எண்ணங்களைச் சீராக்கி,நம்மை ஆக்கபூர்வமாக மாற்றும் சக்தி தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு உண்டாகும்.இதை எதிர்கால விஞ்ஞானம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும்.

3.நமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு,சம்பள உயர்வு,புகழ்,பெருமைகள் போன்றவை சரியான நேரத்தில் கிடைக்க ஒரு நாள் கூட விடாமல் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.


4.மழைக்காலம்,கடுமையான குளிர்காலம்,உடல்நலக்கோளாறு,மன அதிர்ச்சிகள்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,மனக் குழப்பம் என்று ஏதாவது ஒரு காரணத்தினால் தொடர்ந்து ஜபிக்க முடியாத போது நமது முன்னேற்றத்தை நாமே தடுத்துவிடுகிறோம்.நாம் எப்போது ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து முடிக்கிறோமோ,அப்போது நமது மன உறுதி அதிகரித்துவிடும்.நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் வலிமையிழக்கத் துவங்கும்.நமது ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் இன்னும் அதிகமாக செயல்படத்துவங்கும்.நமது தனிப்பட்ட திறமைகள் இன்னும் கூர்மையாகி,மகத்தான சாதனைகள் செய்யத் துவங்குகிறோம்.(ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் வேகமாக ஒப்பிப்பது போல ஜபிக்கக் கூடாது;ஒரு லட்சம் தடவை ஜபித்து முடிக்க வேண்டுமே? என்று பதட்டப்படக் கூடாது;ஆகா,நமது எல்லாப் பிரச்னைகளும் தீர ஒரு லட்சம் தடவை ஜபித்தாலே போதுமே என்று பேராசைப் படக் கூடாது;எத்தனையோ பேர்கள் ஒரு லட்சம் தடவை ஜபித்து முடித்திருப்பார்களே,நாம் எப்போது அவ்வாறு முடிப்பது என்று அவநம்பிக்கை இழக்கக் கூடாது;நிதானமாக,நிறுத்தி ஜபித்தாலே போதுமானது;தானாகவே அந்த ஒரு  லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜப அளவைக் கடக்கும்போது அந்த சாதனை நமக்கு ஒரு சாதனையாகவே தெரியாது;ஒரு கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்ற பக்குவ மனநிலையை நாம் எட்டிட வேண்டும்)

5.இரண்டு லட்சம் தடவைகள் ஓம்சிவசிவஓம் ஜபித்து முடிக்கும்போது,நாம் என்ன நினைக்கிறோமோ,அது மட்டுமே நமது தினசரி வாழ்க்கையில் நிகழுகின்றது என்பது ஆச்சரியமான உண்மை ஆகும்.

6.பலருக்கு விஸ்வரூபமாக வர வேண்டிய பிரச்னைகள்,அவர்களால் சமாளிக்கும் விதமாக சாதாரணமாக மாறியிருக்கின்றன.பலர் அவர்களுடைய முன்னோர்களாகிய சித்தர்கள்,மகான்களை தரிசித்திருக்கிறார்கள்.பலர் மிகவும் மகிழ்ச்சியாக,இன்னும் அதிகமான சம்பளத்துடன்,இன்னும் நிறைவான மனநிலையுடன்,சிறிதும் எதிர்பாராத ஆச்சரியங்களுடன் தினசரி வாழ்ந்து வருகிறார்கள்.இதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை;ஒவ்வொரு அனுபவங்களையும் ஒவ்வொரு குறும்படமாக எடுத்து வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.


முயலுவோமா?


ஓம்சிவசிவஓம்

Friday, November 9, 2012

ஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழா!!!



ஜோ என்றால் மனம் என்று பொருள்! திடம் என்றால் திடப்படுத்துதல் என்று அர்த்தம்!! ஜோதிடம் என்றால் மனத்தைத் திடப்படுத்துதல் என்ற விளக்கத்தை தன்னுள் வைத்தே இந்த தெய்வீகக்கலை தோன்றியது.கடந்த சில பிறவிகளில் மனிதப் பிறவி எடுத்து,பிறருக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து வருபவர்களே இந்தப் பிறவியில் பிறருக்கு ஆன்மீகரீதியாக வழிகாட்டுவார்கள்;அப்படி வழிகாட்டுவதற்காக இறைவனாகிய ஸ்ரீகால பைரவர் அருளால் பிறப்பவர்களே ஜோதிடர்கள் ஆவர்.

ஸ்ரீகால பைரவரின் சுவாசமே வாக்கியக் கணிதம்,திருக்கணிதம் என்று காலக் கணக்காக விரிவடைகிறது.ஸ்ரீகால பைரவரைச் சரணடையாத வரை எந்த ஒரு மனிதனுக்கும் கதி மோட்சமில்லை;உயர்ந்த பிறப்புமில்லை;


ஜோதிடம் தெரிந்த நாமே இவ்வளவு கஷ்டப்படுகிறோமே? இந்த கலியுகத்தில் இதைப் பற்றி அடிப்படை ஞானம் கூட இல்லாத கோடிக்கணக்கான தமிழ் சகோதரர்களும்,சகோதரிகளும் என்ன பாடுபடுவார்கள்? என்ற எண்ணத்தில் உருவானதே ஆன்மீகக்கடல் ஆகும்.


கடந்த ஓராண்டில் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகக்கடல் அறக்கட்டளை மூலமாக மூன்று ஆன்மீகப் பயிற்சி வகுப்புகளை தமிழ்நாட்டில்  நடத்தினோம்;இதில் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் கலந்து கொண்டார்கள்.   இதன்மூலமாக நமது ஆன்மீக குரு  அவர்களின் தீட்சைகளால் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசிய வழிமுறைகள் அறிந்தனர்;(உதாரணமாக,நமது குல தெய்வத்திடம் நாம் நேரடியாகப் பேசும் முறை,கடுமையான கர்மவினைகளைத் தீர்க்கும் வழிமுறை,முன்னோர்களின் சாபங்களைத் தீர்க்கும் சுயபரிகாரங்கள்)சராசரி மனிதர்களாகிய நாம் சித்தராக மாறுவதற்குரிய ரகசியங்கள் இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் வெளிப்படுத்தப்பட்டன;அடுத்த மூன்று ஆண்டுகளில் 24 ஆன்மீகப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு நகரங்களில் நடத்திட திட்டமிட்டிருக்கிறோம்.



1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 சித்தர்களும் ஒரே நேரத்தில் கழுகுமலைக்கு(தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு டிசம்பர் மாத பவுர்ணமியன்று) வருகை தருகிறார்கள்;அப்படி வருகை தந்து கழுகாசலமூர்த்தியாகிய முருகக் கடவுளை வழிபடுகிறார்கள்;வழிபட்டு கழுகுமலையை கிரிவலம் வருகிறார்கள்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு 2011 ஆம் ஆண்டில் அறிவித்தார் நமது ஆன்மீக குரு!


24.12.2011 அன்று நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் கழுகுமலை கிரிவலம் சென்றோம்;இந்த தெய்வீக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்குமே சித்தர்களின் தரிசனம் கிடைத்தன;அவரவர்களின் முன்னோர்களாக எந்த சித்தர் இருக்கிறாரோ அந்த சித்தரின் தரிசனம் கிடைத்தது என்பது ஆச்சரியமூட்டும் உண்மை ஆகும்.எதேச்சையாக கேள்விப்பட்டு இந்த கிரிவலத்தில் கலந்து கொண்ட கழுகுமலை அம்மையார் ஒருவருக்கும் போகர் மகரிஷியின் தரிசனமும் ஆசியும் கிடைத்தது.(இந்த வருடமும்,அடுத்த வருடமான 2013 லும் டிசம்பர் மாதம் வரும் பவுர்ணமியன்று இந்த 18 சித்தர்களின் வருகை இருக்கிறது.அனைவரும் வருக!!! நமது முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசியைப் பெறுக!!!)



20.2.12 அன்று சிவராத்திரி நாள் அமைந்தது;இந்த நாளில் தமிழ்நாட்டில் இருக்கும் ஜீவசமாதிகளிலேயே அளவற்ற அருளாற்றல் தரும் பாம்புக்கோவில்சந்தை மாதவானந்த சுவாமிகளின் ஜீவ ஐக்கியத்தில் அடுத்த பொது நிகழ்ச்சி ஏற்பாடானது;எதிர்வரும் பேரழிவுகள்,பூகம்பங்களிலிருந்து மனிதகுலத்தை  பாதுகாத்திட கூட்டுப்பிரார்த்தனையும்,அன்னதானமும் ஏற்பாடாகியிருந்தது.இந்த பொது நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைத்து ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கும் நமது ஆன்மீக குரு  ஸ்பரிச தீட்சை அளித்தார்.இந்த தீட்சையைப் பெற்றவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவதன் மூலமாக இவர்களின் ஆன்மீக பலம் அதிகரித்தது.அடுத்து வந்த மாதங்களில் இந்த தீட்சை பெற்றவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது இதை உணர முடிந்தது.



சித்திரை மாதத்து பவுர்ணமி 6.5.12 ஞாயிற்றுக்கிழமையன்று வந்தது.இந்த நாளில் நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் சதுரகிரிக்கு பயணம் செய்தோம்.சதுரகிரி மலைப்பயணத்தின் போது 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டும் காட்சியளிக்கும் ஒரு சித்தரின் தரிசனம்,நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் ஒருசிலருக்கு மட்டும் கிடைத்தது.சதுரகிரி மலைப்பாதையில் நவதானியங்களும்,டயமண்டு கல்கண்டுகளும் சுமார் நூறு கிலோ அளவுக்குத் தூவப்பட்டன.



25.3.12 அன்று திரு அண்ணாமலையில் தெய்வீக விபூதி தயாரிக்கும் பயிற்சி என்ற தலைப்பில் நமது ஆன்மீக குரு  அவர்கள் பல ஆன்மீக ரகசியங்களைப் போதித்தார்.இந்த வகுப்பில் வெளிப்படுத்தப்பட்ட எளிய தெய்வீக ரகசியங்களால் பலருக்கு முன்னோர்களுடைய சாபங்கள் தீர்ந்தன;சில இல்லத்தரசிகள் தமது குலதெய்வத்துடன் வெள்ளிக்கிழமை தோறும் நேரடியாகப் பேசத் துவங்கினர்.பலருடைய கடன்கள்,கர்மவினைகள் தீர்ந்தன.இலவசமாக புருவ அஞ்சனம் அனைவருக்கும் இந்த வகுப்பின் மூலமாக வழங்கப்பட்டது.ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் வேண்டுகோளுக்கிணங்க, தெய்வீக விபூதி தயாரிக்கும் பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் மே மாதம் நடத்தப்பட்டது.


1.7.12 அன்று நமது ஆத்ம பலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பு இராஜபாளையத்தில் நடத்தப்பட்டது.இந்த பயிற்சி வகுப்பில் 14 விதமான தெய்வீக வழிபாட்டு மற்றும் முன்னோர்கள் அருளைப் பெறும் டெக்னிக்குகள் நமது ஆன்மீக குரு ரால் போதிக்கப்பட்டது.


தவிர,தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஜீவசமாதிகளின் முகவரிகள்,அபூர்வமான நவக்கிரக வழிபாட்டுமுறைகள்,திருநங்கைகளுக்கான பரிகார முறைகள்,ஸ்ரீகால பைரவர் வழிபாடு நடைபெறும் தமிழ்நாட்டு ஆலயங்கள்,ஸ்ரீசொர்ண பைரவர் கோவில்கள்/சன்னதிகள் இருக்கும் தமிழ்நாட்டு நகரங்கள்,மறைக்கப்பட்டிருந்த பல சிவ மற்றும் பைரவ ரகசியங்கள் அனைத்தும் நமது தமிழ்பேசும் மக்களின் நலன்களுக்காக வெளிப்படுத்தியிருக்கிறார் நமது ஆன்மீக குரு  அவர்கள்!!!


இந்த ஆண்டில் இதுவரையிலும் சுமார் 30 சிவாலயங்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் வழிமுறைகள் துண்டறிக்கைகளாக விநியோகித்திருக்கிறோம்.இந்த தெய்வீகச் சேவையில் ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் பங்கேற்றுள்ளனர்.கோவை,சென்னை,சேலம்,திருப்பூர்,ஈரோடு,       தஞ்சாவூர்,மதுரை,சதுரகிரி,நாமக்கல்,கரூர்,திருச்சி மற்றும் சில வெளிநாடுகளிலும் இதற்கு ஆதரவு அளிக்கத் துவங்கியுள்ளனர்.ஓம்சிவசிவஓம் ஜபித்து அதனால் கிடைத்த அருளாசிகளைப் பற்றி வந்திருக்கும் மின் அஞ்சல்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 400 இருக்கிறது.


அதே போல,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டினையும்,ஸ்ரீகால பைரவர் வழிபாட்டினையும் மிகப் பரந்த அளவில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.ஸ்ரீசொர்ண  பைரவர் வழிபாட்டினாலும்,ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டினாலும் பலருடைய கடன்கள் தீர்ந்திருக்கின்றன;நிரந்தரமான வேலை கிடைத்திருக்கிறது;பல இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு திருமணம் அமைந்திருக்கிறது.பலருக்கு புத்திர தோஷம் நீங்கி,மழலைச் செல்வம் கிடைத்திருக்கின்றன.



ஜீவசமாதி வழிபாடு செய்ததன் மூலமாக பலருடைய பொருளாதார நெருக்கடி நீங்கியிருக்கிறது.சாதாரண வேலை பார்த்து வருபவர்களுக்குக் கூட சேமிக்கும் அளவுக்கு பண வருவாய் அதிகரித்திருக்கிறது.இதனால்,மேலும் ஜீவசமாதி வழிபாடு தொடர்புடைய ஆராய்ச்சிகளைச் செய்யத் துவங்கியிருக்கிறோம்.


மின் அஞ்சல் மூலமாகவும்,நேரடியாகவும் ஜோதிட கட்டணம் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிவருகிறோம்.இந்த ஜோதிடக் கட்டணத்தின் பெரும்பகுதியை ஆன்மீகக்கடல் அறக்கட்டளை மூலமாக ஒரு நிரந்தரமான அமைப்பு உருவாக்கிட பூர்வாங்க வேலைகளுக்கு செலவழிக்கத் துவங்கியிருக்கிறோம்.



தமிழ்நாட்டில் திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி அமைந்திருக்கிறது.இதுதான் தமிழ்நாட்டின் தெற்குக் கடைசியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி ஆகும்.ஆனால்,இதற்குத் தெற்கே சுமார் மூன்று கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.எனவே,தென் தமிழ்நாட்டில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் ஆலயம் கட்டும் திட்டம் பரிசீலினையில் இருக்கிறது.


தவிர,நமது வழக்கமான இலக்குகளான ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க வேண்டும்;அந்த ஒரு கோடிப் பேர்களும் தலா ஒரு  லட்சம் தடவைக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டும்.


ஒரு கோடித் தமிழர்கள் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை தத்தம் வீடுகளில் பின்பற்ற வேண்டும்.இந்த இரண்டு இலக்குகளை நோக்கி நமது ஆன்மீகக்கடல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இதனால்,வெகு விரைவில் சித்தர்களின் அருளாட்சி நமது இந்தியாவில் துவங்கிவிடும்;இந்தியா செல்வச் செழிப்பு மிக்க நாடாக உயர்ந்துவிடும்;வறுமை அடியோடு நீங்கி,ஒவ்வொருவருமே கடன் இல்லாதவர்களாக மாறவிடுவார்கள்.வருகிறீர்களா இந்த உன்னத லட்சியத்தில் தோள் கொடுக்க???!!!


ஓம்சிவசிவஓம்




ஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6


6.5.12 ஞாயிறு அன்று சித்திரா பவுர்ணமி நாளில்,சித்தர்களின் வீடு என்று அறியப்படும் சதுரகிரியில் நவதானியங்கள் தூவப்பட்டன;சதுரகிரி மலைப் பயணத்தின் போது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் ஒரு சித்தரின் தரிசனம் நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் ஒரு சிலருக்கு கிட்டியது.அவருடைய ஆசி,நமது  குழுவினருக்கு கிட்டியது.

ஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5



20.2.12சிவராத்திரி அன்று பாம்புக்கோவில் சந்தை மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்தில் நமது வாசகர்களுக்கு தீட்சை அளிக்கப்பட்டது.

Wednesday, November 7, 2012

மனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்மம்!!!


ஒரு முனிவரின் மீது ஒருவர் எச்சிலை துப்பி விடுகிறார். கோபத்தில் அந்தமுனிவர் அவரை பார்த்து "அடேய் மூடனே! என்னை மதிக்காமல் என் மீது உமிழ்ந்து_விட்டாய். நீ பன்றியாக மாறி போவாய் என நான் உன்னை சபிக்கிறேன்" என சாபம் கொடுத்தார். சாபம்பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்தவருக்கு ஒரு பயம் வந்தது.

அவர் தனது குழந்தைகளிடம் வந்தார். தனது மூத்த புதல்வனை பார்த்து சொன்னார், "மகனே! நான்செய்த ஒரு தவறால் பன்றியாக மாறும் சாபத்தை ஒருமுனிவர் எனக்கு தந்து விட்டார். பன்றியான பிறகு நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்கு தெரியலை. அதை நினைகும்போது பயமாக உள்ளது . அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நான் பன்றியாக மாறிய உடனே காட்டுக்கு சென்று விடுவேன். நான் எங்கேருந்தாலும் நீ தேடி வந்து என்னை கொன்று விடு! ஒரு பன்றியாக என்னால் வாழ முடியாது" என தெரிவித்தார் .

சிலநாட்களில் அவர் பன்றியாகி காட்டுக்குள் போய்விட்டார். தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மகன் தந்தையை தேடி காட்டுக்குள் குளம் குட்டைகளிலேல்லாம் தேடி அலைகிறான் . எங்கேயாவது பன்றி கூட்டங்களைப் பார்த்து விட்டால் உடனே அதன் அருகிலேபோய் "அப்பா" என அழைப்பான். அவைகள் மிரண்டு ஓடி விடும். இவனுக்கு தன் தந்தையை மனித ரூபத்தில் தெரியுமேதவிர‌ பன்றி ரூபத்தில் தெரியாதே! எனவே தேடிக்கொண்டே இருந்தான்.

இப்படியாக இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. கடைசியாக ஒருகுளத்தங்கரை அருகிலே போய் நின்று அப்பா என கூப்பிட்டான். உடனே ஒருபன்றி வந்து நின்றது. அதன் பின்னாலேயே இன்னொரு பன்றியும் ஓடி வந்தது. குட்டிகளும் ஓடிவந்தன . பன்றி ரூபத்தில் இருந்த_தந்தை கேட்டார் "மகனே வந்து விட்டாயா?!" , "ஆமாம் தந்தையே, நீங்கள் பன்றியான உடனேயே உங்களை கொன்று விட சொன்னீர்களே! அதனால்தான் காடெல்லாம்தேடி உங்களை இப் பொழுது கண்டு பிடித்திருக்கிறேன். உங்களது கோரிக்கையை நிறைவேற்றட்டுமா?" என கேட்டான் மகன்.

அதற்கு தந்தை_அவசரமாக "வேண்டாம் மகனே வேண்டாம்! என்னை அவசரப்பட்டு கொன்றுவிடதே . நான் இங்கேயே_வாழ்ந்து இந்த இடத்திற்கேற்ப்ப ஒருதுணையையும் சேர்த்து 3 குட்டிகளையும் பெற்றாகிவிட்டது. இப்பொழுது இதுவே_எனக்கு போதுமானதாகி விட்டது. எனவேஇங்கேயே என்னை விட்டு விடு" என கேட்டுக்கொண்டார் .

இந்தக்கதை மூலமாக உபநிஷத்தில் சொல்லபடும் தர்மம் என்னவெனில் எங்கேபோய் இருக்கிறாயோ அதுவே போதுமானது என இருக்கும் இடத்திற்க் கேற்ப்ப வாழப்பழகி கொள்வது பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பதாகும்.

"ரோம் நாட்டில் வாழும் போது ரோமானியனாக இரு" என ஆங்கிலத்தில் ஒருவாசகம் உண்டு . இதுதான் அது. சிலருக்கு தலையனை_இல்லாமல் தூக்கம்வராது. யார் வீட்டுக்கு போனாலும் படுக்கும்போது நல்ல தலையனைவேண்டும் என பிடிவாதம் பிடிப்பார்கள். உறவு கார‌ர்களிடம் ஒரு தலையனைக்காக முகம்சுளித்து சலித்து கொள்வார்கள். இப்படி இருக்கும் இடத்திற்க்கு தகுந்தார்போல் சின்ன சின்ன விஷயத்தைக்கூட மாற்றிக்கொள்ள மனம் இல்லாதவர்கள் யாருடனும் சகஜமாக ஒத்துப்போக மாட்டார்கள்.

இன்ன சுவையில்தான் சாப்பிடுவேன், இன்ன மாதிரி இடத்தில்தான் தங்குவேன் , இன்ன மாதிரி மனிதர்களை பார்த்தால்தான் சிரிப்பேன் என சின்ன சின்ன விஷயங்களில் பலவிதமாக மனிதர்கள் தங்களை தாங்களே ஒருவிலங்கில் பினைத்து கொள்கிறார்கள். இவர்கள் தங்கள்_வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள்.

இதுபோன்ற மன விலங்குகளை உடைத்து எரிந்துவிட்டு மிகவும் திறந்தமனதுடன் வாழ்பவர்கள் எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். இதுவே உபநிஷத்தில் அழகான_கதையின் மூலம் இந்துதர்மத்தில் விளக்கப்படுகிறது.

நம்மவர்கள் இந்துதர்மத்தை கேலி செய்தும் பழித்தும் பேசி வரும் தருணத்தில்  இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை அமெரிக்காபோன்ற நாடுகளில் வெள்ளையர்கள் இந்து தர்மத்தை பற்றி நிறைய ஆராய்ச்சிசெய்து பல புத்தகங்களை வெளியிட்டுகிறார்கள். அவர்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டிலே மதரீதியாக சொல்லி கொடுக்கப்படாத சில‌ விஷயங்கள் இந்துதர்மத்திலே மிக அழகாகவும் மிக ஆழமாகவும் மனதில்பதியும் வகையில் சொல்லி கொடுக்கப்படுகிறது.

அதாவது, மன கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றும் நிம்மதி என ஒருவிஷயத்தை இந்துதர்மம் அழகாக போதிக்கிறது. எப்படி வேண்டுமானாலு ம் வாழலாம் என எங்கள் கலாச்சாரத்தினால் இங்கே ஒவ்வொரு தனிமனிதரும் சுயநிம்மதி என்பதை வாழ்க்கையில் உணராமலே மரித்துப்போய் விடுகிறார்கள். இந்துவாக வாழும் ஒவ்வொருவரும் நிம்மதியாக_வாழ்வது என்பதை மிகஅருமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.

இப்படி நமது மனதை மிக எளிமையாக பக்குவபடுத்த இந்து தர்மத்தை விட வெறெதுவும் இருக்கமுடியாது. மனிதன் ஒருசாபத்தால் பன்றியாக முடியுமா என கருப்புச் சட்டை முட்டாளை போல் கேள்வி கேட்காமல் இந்தக்கதை சொல்லி கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளுவதே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இதைபோன்ற கதைகளை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் எதிர் காலத்தில் மிக பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதனாலேயே சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
நன்றி சுபவனம்

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்!!!


தண்டாயுதபாணி கடவுளின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி மதம் இன்றி பல்வேறு மதப்பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகின்றனர். பழனியின் பெருமையைப் பற்றிக் கல்விமான் ஒருவர் கூறினார் ......
அபாராமான பழங்காலத்துப் பொருட்கள் பழக்க வழக்கங்கள் சரித்திரம் புராணக் கதைகள் வீர காவியங்கள் மாபெரும் முனிவர்களின் கதைகள் இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு அமைந்துள்ள இடமே பழனி மலை தமிழ்நாட்டு கிழக்குப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ள அப்படிப்பட்ட பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டவராக வீற்று இருக்கின்றார்.

புராதானக் காலத் துவக்கத்தில் இருந்தே சித்தர்களும் முனிவர்களும் பழனி மலை மீது தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் புனிதத்தன்மை அடைந்தது. பல மன்னர்களும் கொடையாளிகளும் அந்த ஆலயத்திற்கு பல வகையிலும் தங்களுடைய ஆதரவை வழங்கி உள்ளனர். தமிழக முன்னணிப் பாடகர்கள் பலர் தண்டாயுதபாணியின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய தமிழ் பாடல்ப் பாடி உள்ளனர்.

துடித்துக் கொண்டே இருக்கும் தெய்வீக நிலையில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகளை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இந்துக்கள் தொடர்ந்து கடைபிடித்தவண்ணம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அனு தினமும் அங்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களே அதற்குச் சாட்சி ஆவார்கள். ஆறு படை வீடுகளில் மணிபுரக்கம் என்ற மூன்றாவது தெய்வீக நிலையை ஒருவர் எட்டியதும் அந்த நிலையில் இருந்து பரிபூரண ஆன்மீக நிலையை அவர்கள் அடையத் துவங்கி விடுகின்றனர்.

பழனியில் குடி கொண்டுள்ள அந்த தெய்வம் உலகத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் இழுக்கின்றது. பழமையில் ஊறிப் போன பல முஸ்லிம் மதத்தினரும் கூட இங்கு வந்து அவரை வணங்குகின்றனர்.முருகனை பழனி பாத்ஷா என அன்புடன் அழைத்து அவரை வணங்குகின்றனர்.ஆத்ம ஞானம் பெற அங்கு வரும் பக்தர்களுக்கு தெய்வீக ஒளி வெள்ளத்தைக் காட்டியவண்ணம் பழனி ஆண்டவர் அவர்களை வழி நடத்திக் கொண்டு செல்கின்றார்.

தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் ஒப்பிடும் பொழுது அவற்றில் இருந்து பலவற்றிலும் வேறுபட்டு உள்ளது தொரியும். முதலாவது அந்த ஆலயத்தில் உள்ள பிரதான தெய்வத்தை மூலவர் என அழைக்கின்றனர்.

சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வ உருவங்களை கறுங்கல் பாறைகளில் செதுக்குவார்கள். அதற்குக் காரணம் அதில் உள்ள அதிக இழுவிசை சக்தியே. கறுங்கல் பாறைகள் பெரும் பலம் உடையவை. அது மட்டும் அல்லாது இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர் காற்று நெருப்பு மற்றும் ஈதர் போன்றவையும் அதற்குள் இருக்கின்றது. ஆனால் அப்படி இல்லாமல்பழனியில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது.

சமிஸ்கிருதத்தில் நவ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. நவ என்றால் புதியது அல்லது ஒன்பது என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டு. அதுபோலவே பாஷம் என்றால் விஷம் அல்லது தாதுப் பொருட்கள் என்ற இரண்டு அர்த்தம் கொண்டது. பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான போகர் என்று கருத்து தொரிவித்து உள்ளர்.

அங்குள்ள மூலவருடைய சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால்; செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மை கொண்ட பொருட்களும் ஒன்றாகிய பொழுது உடைக்க இயலாத அளவு பலம் பெற்றதாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருந்துத் தன்மை கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமைத்திருப்பதில் இருந்தே சித்த முனிவர் போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல தொலை தூரக் கண்ணோட்டத்தில் பின்னர் வர உள்ள காலங்களில் தோன்ற இருக்கும் முருக  பக்தர்களுடைய உடல் நலனில் அளவுக்கு மீறிய நாட்டம் கொண்டு இருந்தார் எனவும் மிக உயர்வான தெய்வ நிலையை பெற்று இருந்தவர் எனவும் தொரிய வந்தது.

அந்த முனிவருடைய சந்ததியினரைப் பற்றியும் அந்த இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. சித்தர்களுடைய தலைவர் சிவபெருமானுடைய வாகனமான நந்திதேவர். அவருக்கு இருந்த ஏழு சிஷ்யர்களில் திருமூலரும் ஒருவராவார். அந்த  திருமூலருக்கு ஐந்து சிஷ்யர்கள் இருந்தனர். அதில் பிரபலமானவர் கலங்கிகஞ்சமலையான் என்பவர். அந்த கலங்கிகஞ் சமலையான் என்பவருடைய சிஷ்யரே சித்த முனிவரான போகர் ஆகும்.

போகரைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் திருமூலர் எழுதி உள்ள திருமந்திரம் என்ற நூலில் உள்ளன. திருமூலர் சைவ சித்தான்தத்திற்கு தூண் போன்றவர். அவர் சைவ சித்தான்திகளுக்கு தெய்வீக மார்கத்தில் இணைந்து பின் ஆத்ம ஞானத்தைப் பெற்று இறுதியாக தெய்வத்தின் பாதங்களில் இணைந்து விடத்தேவையான மார்கத்தில் செல்ல அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு இருந்தவர். நவபாஷணப் பொருட்களின் கலவையைக் கொண்டு  தயாரித்த முருகன் சிலையை வடிப்பதிலும் வித்தியாசமான முறையை போகர்  கையாண்டுள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் முருகன் சிலைகள் அழகிய இளைஞர் போன்ற தோற்றம் உள்ளதாக அமைக்கப்படும்.

அந்த சிலைகள் அனேகமாக கிழக்கு நோக்கிப் பார்த்த வண்ணம் அமைந்து இருக்கும். ஆனால் பழனியில் உள்ள முருகன் சிலையோ மெல்லியதாகவும் மொட்டைத் தலையுடன் மெல்லிய காவி உடை அணிந்தபடியும் சாமியார் போன்ற தோற்றத்திலும் கையில் தண்டாயுதத்தை ஏந்திக் கொண்டும் மேற்கு நோக்கி பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது. ...... நானே முதிர்ச்சியுற்ற அறிவுப் பழம் ...... என்பதை பறை சாற்றிக் கொண்டு நிற்பது போல அமைந்து உள்ளது அந்த சிலை

அங்கு வரும் பக்தர்கள் பக்தி பெருக்குக் கொண்டு மூலவருக்கு செய்த அபிஷேகங்களினால் அந்த சிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சாரியமான செய்தி ஆகும். அறுநூறு முதல் எழுநூறு எண்ணிக்கையிலான அபிஷேகங்கள் கிருத்திகை தினங்களில் நடைபெறுகின்றது. அத்தனை எண்ணிக்கையிலான அபிஷேகங்கள் செய்த பின்னரும் அவற்றினால் எந்த விதமான சேதமும் அடையாமல் எப்படி நவபாஷணத்தில் செய்த அந்த மூலவர் சிலை அப்படியே உள்ளது என்பதை கற்பனைக் கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

இருந்தாலும் அந்த சிலையை அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்குக் கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில், இப்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து வந்த அபிஷேகப் பொருட்கள் சிலவற்றினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப்பகுதியில் முட்டிக்குக் கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தொரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும் எலும்புகள் தேய்ந்து போன நோயாளியின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவுக்கு அந்த சிலை பழுது அடைந்து விட்டது.

உடலின் பல பாகங்களில் சிறுசிறு பள்ளங்கள் போன்றவைத் தோன்றி சொற சொறப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல தோற்றம் தருகின்றது. சில பகுதிகளில் கூரான பகுதி நீட்டிக் கொண்டு இருப்பது போலவும் உள்ளது. அந்த சிலையின் கால்கள் பலத்தை இழந்து விட்டதால் கனத்தைத் தாங்காமல் எந்த நேரத்திலும் அந்த சிலையின் கால்கள் உடைந்து விடும் என்று கூட ஒரு காலகட்டத்தில் பயந்தனர்.

அந்த நிலைமை முற்றிக் கொண்டு போகத் துவங்க பல பக்தர்களும் மக்களும் பழுதடைந்து கொண்டிருந்த சிலையின் உருவத்தைக் கண்டு பயந்து போய் தமிழக அரசிற்கு பல  விண்ணப்பங்களை அனுப்பினர். அதனால் தமிழக அரசும் கவலை அடைந்து 1983-84 ஆம் ஆண்டுகளில் பழனில் உள்ள அந்த மிகப் பெருமை வாய்ந்த ஆலயத்தில் உள்ள சிலை அதற்கு மேலும் பழுதடைந்து விடாமல் இருக்க வேண்டும் என தீர்மானித்தப் பின் அரசிடம் தினமும் வந்து கொண்டிருந்த பல யோசனைகளைப் பரிசீலித்தது.

அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு சமயத்தில் நினைக்கலாயினர். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது. ஆலயங்களின் அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தபின் முதலில் பிரதிட்சை செய்யப்பட்டிருந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான வேறு ஒரு உருவச் சிலையை அதே இடத்தில் பிரதிட்சை செய்யப்பட்டதாக எந்த ஒரு முன் உதாரண நிகழ்ச்சிகளும் இதுவரைக் கிடையாது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் இதுவரை எந்த ஆலயத்திலும் நடைபெற்றதில்லை.

கற்பாறைகளில் செதுக்கப்பட்ட சிலைகளைக் கூட ஒரு சில ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்ட பொழுது தற்காலிகமாக அதே ஆலயத்திற்குள்ளேயே எங்காவது ஒரு இடத்தில் கொண்டு போய் வைத்திருந்து ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனம செய்த பின்னர் ( வெண்ணையில் சில மூலிகைகளைக் கலந்து பசை போல தயாரித்து சிலை முழுவதற்கும் பூசுவது முதலில் இருந்த இடத்திலேயே சிலையைக் கொண்டு போய் வைத்து விட்டு அதை பிரதிட்சை செய்து விடுவார்கள் என்பதைத் தவிற மூலவர் சிலைகளையே மாற்றி அமைத்ததாக எந்த ஆலயத்திலும் சாரித்திரம் கிடையாது.

அதையும் தவிற பழனியில் ஏற்பட்ட பிரச்சனை வேறு வகையிலும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டு விசேஷ கலவையில் தயாரிக்கப்பட்டு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினருடைய உடல் நலத்தை மனதில் வைத்துக் கொண்டு தெய்வாம்சம் பொருந்திய போகரால் செய்யப்பட்டு உள்ளது. அது செய்யப்பட்ட விதமோ மூலிகைகள் பற்றிய விவரமோ எவருக்குமே தொரியாது.

முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசை போல செய்து அதை சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது அற்புதமான வேறொரு மருத்துவ குணம் கொண்டதாக வியாதிகளைத் தீர்க்கும் முறையில் அமைந்து விடுவதினால் அதன் மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோய்களும் விலகுகின்றன என மக்கள் கருதினர். அதற்கு விஞ்ஞான காரணம் உள்ளது என ஆலயம் வெளியிட்டிருந்த புத்தகத்தில் செய்தி காணப்பட்டது.

ஒரு சாரருடைய கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருளில் லட்சக்கணக்கான கிருமிகள் உள்ளன எனவும் அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதால் அதை பருகும் மக்கள் உடலில் இருக்கும் தீய அணுக்கள் மறைந்து வியாதிகள் விலகுகின்றன. அதனால்தான் அந்த அபிஷேகப் பொருட்கள் பல நாட்களுக்கு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு சித்த மருந்துகளாக பயன்படுத்தப் படுகின்றது. அதனால்தானோ என்னவோ பழனி மலை அடிவாரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல சித்த மருத்துவசால்கள் பரவி இருந்தன என்பது வியப்பை அளிக்கும் செய்தியாக விளங்கவில்லை. பழனி தண்டாயுதபாணியே முதல் மருத்துவராக விளங்குவதால் அந்த மூலவர் சிலையை மாற்றி அமைக்கலாம் என்ற யோசனையை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அந்த சிலை மேலும் பழுது அடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது.

நல்ல கல்விமானும் பெரும் தெய்வ பக்தி கொண்டவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்து அந்த பிரச்சனைக்குத் தீர்வு தரக்கூடிய வகையில் கருத்துக்களைக் தரும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்த குழுக்களில் இருந்தவர்கள் ்-

1. சில பெரிய மடங்களின் மடாதிபதிகள் மத அமைப்புக்களின் தலைவர்கள்
2. புகழ் பெற்ற ஸ்தபதிகள்
3. அகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்
4. பூஜரிகள் பண்டாரங்கள் மற்றும்
5. விஞ்ஞானிகள்
நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகளின் குழுவில் இடம் பெற்றேன். அந்த மூலவருடைய சிலை எந்தப் பொருட்களின் கலவையினால் செய்யப்பட்டு இருந்தது என்பதை சோதனை செய்து கண்டறியும் வேலை எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நாங்கள் உண்மையை கண்டறியும் குழுவில் இருந்ததினால் பண்டாரங்கள் மற்றும் பூஜரிகளுடன் கற்பக்கிரகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை என்னுடைய வாழ்நாளிலேயே கிடைத்த பெரும் பாக்கியமாகவே நினைத்தேன்.

அந்த சிலையின் அருகில் நெருங்கி அதை ஆராய்ந்தோம். சிலையின் முகமோ எந்தவிதமான மாறுதலும் சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலைப்போல சமீபத்தில்தான் நிறுவியதைப் போலவே இருந்ததை கண்டு வியந்து போனோம். பூதக் கண்ணாடி கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்ற ஒரு பொருளாகவே இருந்ததும் தொரிந்தது. அடுத்து கழுத்தப் பகுதிக்கு கீழே இருந்த உடல் பகுதிகளை சோதனை செய்த நாங்கள் திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது தொரிந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் சிலையின் சில உடல் பாகங்கள் கூர்மையான பகுதிகளைப் போல்; நீண்டும் இருக்க இரண்டு கால்களும் மெல்லிய குச்சிகள் ஒரு பீடத்தில் நின்றிருந்தது போல இருந்தது. பலமிழந்து இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலைமையில் சிலை இருந்தது. மூலவரின் முகமோ புத்தம் புதியதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டது போல அந்த பழுதடைந்த நிலைக்கு சிலை ஆளானது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என தொரியவந்தது. அபிஷேகம்தான் சிலை சிதைந்ததிற்கான காரணம் என்றால் முகம் மட்டும் எந்த விதமான பழுதும் அடையாமல் உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்ததினால்; சிலை பழுதடைந்து விட்டது என்ற கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.

அடுத்த செய்தி கர்பக்கிரகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த வந்த தொடர்பு பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்புக்களினால் சில விஷமிகள் அந்த சிலையின் உடலை சிறிதளவுக்கு அவ்வப் பொழுது சுறண்டி அதில் கிடைத்தப் பொருள்கலை அவர்கள் தயாரித்து வைத்திருந்த மருந்துகளில் சிறிதளவு கலந்து கொடுத்திருக்கலாம் எனவும் அதனால்தான் சிலை தேய்ந்து போய் உள்ளது எனவும் பரவலாகக்நம்பப்பட்டு வந்திருந்தது . ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீரென புகழ் பெற்று வளரத் துவங்கின. அந்த சிலை எதோ ஒரு வகையான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளதைப் போலத் தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞானபூர்வமாக நிருபிக்க எங்களால் முடியவில்லை என்பதின் காரணம் எங்களுக்கு அந்த சிலையில் இருந்து அபிஷேக நீருடன் கலந்து வெளிவருவதாக கூறப்படும் எந்த பொடித் தூள்களும் கிடைக்கவில்லை. அந்த சிலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீரில் அந்த சிலையின் நவபாஷணப் பொருள் மீதேறி வருவதால்; இரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக மாறி விடுகின்றது எனவும் அந்த அபிஷேக நீரை பயன் படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன எனவும் எங்களிடம் அங்குள்ளவர்கள் கூறினர்.

ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனையைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் சந்தனத்தைப் பசை போல அரைத்து அந்த சிலை முழுவதும் பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலை மீதே இருக்கும்படி விட்டு விட்டப்பின் மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத் தூள்களை சோதனை செய்யும் கருவியான பெர்கின்-எல்மர் 707 என்ற மிக நவீனமான கருவியில் சில திரவப் பொருட்களை பயன் படுத்தி அளவு காட்டும் பகுதியை துல்லியமாக வரையுறுத்தப் பின் அதன் மூலம் சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் எதுவும் சந்தனப் பசையுடன் கலந்து உள்ளதா என்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சந்தனக் கலவையை சோதனை செய்தோம். ஏன்ன ஆச்சரியம் சிலை மீது தடவப்பட்டிருந்த சந்தனக் கலவையை எடுத்து அந்தக் கருவி மூலம் ஆராய்ந்ததில் அந்த கலவையில் எந்தவிதமான பொடியும் கலந்து வரவில்லை என்றாலும் அது மருத்துவ குணம் கொண்ட கலவையாக மாறி இருந்ததும் தொரிந்தது. பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து பரிசோதித்தும் முடிவு ஒரே மாதிரிதான்; இருந்தது. இரவு முழுவதும் நாங்கள் பூசி இருந்த சந்தனக்
கலவையில் ஏற்பட்டிருந்த இரசாயன மாற்றத்தின் காரணம் என்ன என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு வெளிப்படுத்திய சாதாரண உண்மை என்ன என்றால் நவீன விஞ்ஞானக் கருவிகளால் கூட தெய்வத் தன்மைக் கொண்ட பொருட்களை ஆராய முடியாது. அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயார் செய்து தலைமையாளருக்கு அனுப்பி வைத்தோம்.

அவரும் அதற்குத் தேவையான குறிப்புக்களை இணைத்து அரசின் கவனத்திற்கு அனுப்பினார். அந்த சிலையின் உருவப் பாதுகாப்பைக் கருதி நாங்கள் அந்த சிலைக்கு செய்து வந்த அபிஷேகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி மட்டுமே அபிஷேகங்களை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருந்தோம். அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது பல காலமாக இன்னொரு வதந்தி நிலவிக்கொண்டு இருந்ததையும் அறிய முடிந்தது. அந்த செய்தியின்படி சித்த முனிவர் போகர் பழனியில் தான் செய்து வைத்திருந்த மூலவரின் சிலையைப் போலவே முதலில் மூன்று சிலைகளை செய்து இருந்ததாகவும் அவற்றில் இரண்டு சிலைகளை கிழக்குப் பகுதியில் எங்கேயோ பூமியில் புதைத்து மறைத்து வைத்து உள்ளதாகவும் தக்க சமயத்தில் தெய்வப் பிறவி எடுத்து ஒருவர் அதைக்கண்டு பிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தப்பட்ட சிலை பழுதடைந்த பின் அதை மாற்றி அமைப்பார் எனவும் கூறி உள்ளாராம்.

இதன் மூலம் தெரியவருவது என்ன எனில் இறைவன் நம்மிடம் கொடுத்துள்ள படைப்புக்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களினால் இறைவனுடைய படைப்புக்களை வெற்றி கொள்ள முடியாது. இந்த இடத்தில் சர்.ஐசக் நியூடன் கூறியதை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது. ......

மனித குலத்திற்கு நான் செய்துள்ள சேவை நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ......

முருகனுடைய நவபாஷணச் சிலையில் இருந்து என்ன பொருள் மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீன கருவியால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்ற உண்மையை பெருன்தன்மையுடன் அடக்கமாக வெளிப்படுத்தி உள்ளார் ஒரு விஞ்ஞானி. கவிஞன் கண்ணதாசன் எழுதிய பாடல் இந்த நேரத்தில் நினைவில் நிற்கின்றது. ...... எண்ணிடத்தில் இருந்து கொண்டு அகண்டத்தையே ஆண்டு கொண்டு நம் கற்பனைகளுக்கு அப்பால் இருப்பவரே கடவுள் என்பவர். எவர் அவர் இருப்பதை புரிந்து கொண்டு அவரை உளமாற உணருகின்றனரோ அவர்களுக்கே அவர் காட்சி தருவார் ......
Tags; பழனி முருகன் கோவில், பழனி மலையில், பழனி மலை, முருகனை,
Dr. Prof. M.S. Saravanan, M.Sc., Ph.D., F.M.S., F.G.S. is an an earth scientist and mineralogist and former Director of the Tamil Nadu Department of Geology & Mines and Chairman of Tarnilnadu Minerals Limited. A one-time close associate of Kripananda Variar, he was appointed Head of the Palani Andavar Idol Replacement Committee.