Showing posts with label MAYAN CALENDAR. Show all posts
Showing posts with label MAYAN CALENDAR. Show all posts

Wednesday, December 19, 2012

பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும் பிரபஞ்சமும் நமது பூமியும்!!!





பல கோடி ஆண்டுகளாக பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது;சூரியன் நமது காலக்ஸியான பால்வழிமண்டலம் எனப்படும் மில்கிவேயை(Milky Way)ச் சுற்றி வருகிறது;பால்வழிமண்டலம் கன்னிராசி மண்டலத்தைச் சுற்றிவருகிறது;இதுவரையிலும் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்கள்:

உலகின் மிக பிரம்மாண்டமான விண்வெளி மற்றும் பிரபஞ்ச ஆராய்ச்சி அமைப்பான நாசா அமெரிக்காவுக்குச் சொந்தமானது;அமெரிக்க ராணுவத்தை விட வலிமையும்,சக்தியும்,செல்வ வளமும் கொண்டது;இங்கே ஏராளமான விஞ்ஞானிகள் இருபத்துநான்கு மணி நேரமும் விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர்;இவர்களின் ஆராய்ச்சியால் தான் நாம் வாழ்ந்து வரும் சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை நாம் கண்டறியமுடிந்தது;(இவர்கள் விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்த உண்மைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களாகிய ஆர்ய பட்டர்,பாஸ்கராச்சாரியார்,அபிராமி பட்டர்,சித்தர்களில் ஒரு சிலர் கண்டறிந்து பாடல்களாக எழுதியிருக்கின்றனர்;அதில் ஒன்றுதான் திருமந்திரமும்,காகபுஜண்டர் சித்தரின் பாடல்களும்!!!)


மாயன் காலண்டர் 21.12.2012 அன்றோடு முடிவதை நாசா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை;இதில் ஏதாவது உண்மை இருக்கலாம் என்று கருதி,பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்து வெளியிட்டிருக்கிறது;அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி நாம் வாழும் பூமியும்,சூரியனும்,சந்திரனும்,பால்வழிமண்டலமும் ஒழுங்கற்ற நிலையிலிருந்து ஒழுங்கு நிலைக்கு வர இருக்கிறது;இந்த ஒழுங்கு நிலையானது வரும் டிசம்பர் 23,24,25-2012 என்ற ஏற்பட இருக்கிறது!!!


 இதன் படி உலகத்தில் பருவநிலை மாற்றங்கள் திகைப்பூட்டும் விதமாக ஏற்பட இருக்கிறது;வட துருவம்  தென் துருவமாக மாற இருக்கிறது;பூமியின் புவியீர்ப்பு விசையில் மாற்றம் உண்டாகும்;மனித குல வரலாற்றில் மட்டுமல்ல;பிரபஞ்ச வரலாற்றிலும் இது மிகப் பிரம்மாண்டமான மாற்றமாக இருக்கும் என்று நாசா ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறது;இந்த மாற்றத்தால் தனுசு ராசி மண்டலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது;மேலும் விபரமறிய நாசாவின் இந்த இணைப்பைச் சொடுக்கவும்;ஆங்கிலத்தில்  இருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவின் படி டிசம்பர் 23,24,25 இந்த மூன்று நாட்களும் யாரும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கிறது.செய்வோமா?


ஓம்சிவசிவஓம்