Showing posts with label மரணபயம். Show all posts
Showing posts with label மரணபயம். Show all posts

Friday, August 14, 2009

மரண பயம் நீக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம்


மரண பயத்தை நீக்கும் மந்திரம்:உங்களுக்காக

தற்போதைய இயந்திர கதியான வாழ்வில் எல்லாவற்றிலும் வேகம்! சில நேரம் விவேகமில்லாத வேகம் விபத்தில் முடிந்துவிடுகின்றது. வெளியில் சென்றவர் வீடு திரும்புவார் என்பது நிச்சயமற்ற நிலையாக உள்ளது. மரண பயத்தைப் போக்கும் சக்தி சிவனுக்கு உண்டு.

கீழ்க்காணும் மந்திரத்தை தினசரி சொல்வதன்/ஜபிப்பதன் மூலமாக மரண பயத்தை வெல்லலாம்.

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய
நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய
மகாதேவாதே நமக

(விளக்கம்:மரணத்தை வென்றவரே! ருத்ரனே! விஷத்தை உண்டும், மரணத்தை அண்டவிடாதவரே, அம்ருதத்தை உடையவரே! சர்வமும் ஆனவரே! மகாதேவனே உன்னை வணங்குகிறேன்)