எல்லோரும் செல்வந்தர் ஆவது எப்படி?
தனி மனிதரின் நிலை உயர்த்தப்பட்டால், அம்மனிதன் பணிபுரியும் நிறுவனத்தின் நிலை உயரும்.
இவ்வாறு நிறுவனங்களின் நிலை உயர்த்தப்பட்டால், நிறுவனங்களின் தாய்நாடு உயரும்.இது சுவாமி விவேகானந்தர் சொன்னது.
தனி மனிதன் செல்வந்தனாக உயர இங்கே யாம் அறிந்த வழிமுறைகளைக் கூற உள்ளோம்.
1.குபேர காயத்ரி மந்திரம் தினமும் ஜபிக்கவும்.
2.லட்சுமி குபேர வழிபாடு வீட்டில் அல்லது அலுவலகத்தில்(உங்கள் நிறுவனமாக இருந்தால்) மாதம் ஒரு வெள்ளியன்று செய்யவும்.(எப்படிச் செய்வது எனக் கேட்கிறீர்களா? இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவின் பழைய தலைப்புக்களில் லட்சுமிபூஜை செய்வது எப்படி? என்பதைத் தேடவும்)
3.காஞ்சிபுரத்தில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது.
4.நாகப்பட்டிணத்தின் மையப்பகுதியில் குமரன் கோவிலில் குபேரனுக்கு தனி சன்னதி இருக்கிறது.
5.வீட்டில் குபேரன் படம் வைத்தும் வழிபடலாம்.
அ) தொழிலில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருப்பவர்களும், தொழில் தொடங்க இருப்பவரும் மேலே கூறியுள்ள குபேரன் கோவிலுக்கு வந்து சிறந்த முறையில் லட்டு நிவேதனம், பிரார்த்தனை அர்ச்சனை செய்து கொண்டு செல்வது அவசியம்.
ஆ) பூச நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய நாட்களில் (25.3.2009 காலை மணி 6.50 முதல் அன்று முழுக்க.22.4.2010 மதியம் 1.10வரை) குபேரன் சன்னதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் பூரணமாகச் செய்து சுவர்ணார்ச்சனை 108 அல்லது 1008 கணக்கில் செய்து வரவும்.
இ)செல்வ நிலை தாழாமலிருக்கவும்(சிலரது ஜாதகத்தில் 7 வருடம் அல்லது 22 வருடம் பல கோடிக்கு அதிபதியாக இருப்பர்.திடீரென பரம ஏழையாகிவிடுவர்), திடீர் தன வரவுக்கும் பவுர்ணமி தோறும் குபேரனுக்கு மூல மந்திர அர்ச்சனை செய்து வழிபடலாம்.
ஈ) வணிகம் நன்றாக விருத்தி அடையவேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் நல்ல நேரத்தில்(காலை 10 முதல் 10.25க்குள்) குபேரனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களால் குபேரனை அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.
உ) உடனடியாக பிரார்த்தனை நிறைவேற நெய்தீபம்
ஊ)குடியிருப்புகள், தெருக்கள், கோவில்களில் குபேரனுக்கு தனி சன்னதியை உருவாக்குங்கள்.அல்லது ஊர் தோறும் குபேரனுக்கு என்று தனி கோவில் கட்டுங்கள்.
ஏற்றி வரவும்.
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Showing posts with label பணக்காரனாவது எப்படி?குபேரன். Show all posts
Showing posts with label பணக்காரனாவது எப்படி?குபேரன். Show all posts
Subscribe to:
Posts (Atom)