Showing posts with label ஐதீகம். Show all posts
Showing posts with label ஐதீகம். Show all posts

Friday, August 14, 2009

அரசமரத்தின் ஆன்மீகப் பின்னணி

ஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கிறார்கள்?

மார்கழி மாதத்தில் அதிகாலையில் குழந்தைபாக்யம் இல்லாத பெண்கள் தினமும் அரசமரத்தைச் சுற்றி வந்தால் நிச்சயமாக குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம்.எப்படி? என்பதை மேல்நாடுகள் ஆராய்ந்துவிட்டன.

குளிர்கால வைகறைப் பொழுதில் ஆலமரம் அளவற்ற ஆக்சிஜன் வெளியிடுகிறது.அதே சமயம் ஓசோன் காற்று தரைமுழுக்கப்படருகிறது.ஆக்சிஜன்+ ஓசோன்+ ஆலமரத்து விழுதுகளின் ஈரத்தன்மை இணைந்து செலினியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. இந்த செலினியம் டை ஆக்சைடு கருப்பை சார்ந்த கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உடையதாம்.

ஆக, இந்து தர்ம ஐதீகம் என்பது உலகின் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத் தீர்வு என்பதற்கு இதுவும் ஒரு சான்று.நன்றி:தினமலர்.1994,பிப்ரவரி1.