Showing posts with label அமிர்தவர்ஷிணி. Show all posts
Showing posts with label அமிர்தவர்ஷிணி. Show all posts

Saturday, October 3, 2009

ராகங்களும் அவற்றின் மருத்துவகுணங்களும்





இந்துக்களின் இசைஞானத்தின் வரம்பு மனிதகுலம் மொத்தத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.ஏனெனில்,ஒலியின் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பே ராகங்கள் ஆகும்.வீணை,மிருதங்கம்,புல்லாங்குழல்,தபேலா,வயலின் முதலான இசைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதே மன நிம்மதிக்கும்,மனிதகுல அமைதிக்கும்தான்.இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியத்துவங்கியுள்ளதால்தான், இந்தியாவின் தனியார் இசைப்பயிற்சிக் குருகுலங்களில் வெளிநாட்டு மாணவ மாணவிகள் நிரம்பி வழிகின்றனர்.


உதாரணமாக, கலாக்ஷேத்திராவில் ரஷ்யா,சீனா,செக்கோஸ்லோவோக்கியா, அமெரிக்கா,பிரான்ஸ்,ஸ்பெயின்,தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் இந்துக்கலைகளில் நுண்கலைகள் எனப் போற்றப்படும் பரதநாட்டியம்,வீணைப்பயிற்சி, ராகப்பயிற்சி,கர்நாடக இசை என இந்துநுண்கலைகளில் அளவற்ற ஈடுபட்டுடன் கற்றுக்கொண்டு வருகின்றனர்.


ராகங்களின் மெல்லிய அதிர்வு மற்றும் பாடல்களின் ஒலிவித்தியாசம் நமது உடல் நரம்புகளில் ஊடுருவி ஒலி அதிர்வுகளுக்கு ஏற்றபடி மென்மை அல்லது கடினமடைகின்றன.நரம்புத்துடிப்பைப் பொறுத்து நமது சுவாசமுறை மாறுபடத்துவங்குகின்றது.இந்த மாறுபாடு ரத்த ஓட்டத்தினையும் நன்மைதரும் விதமாக பாதிக்கிறது.இந்தச் செயல்பாடுகள் மூளையின் செயல்பாட்டையே மெல்லியதாக ஆக்குகின்றது.


அம்மாவின் தாலாட்டு குழந்தையின் மனதை மென்மையாக்கி மூளையில் அமைதியை நிலைநாட்டுகின்றது.இதனால் குழந்தை தூங்கிவிடுகின்றது.அம்மாவின் தாலாட்டுப்பாடல் அம்மாவின் மனதையும் அர்ப்பணிப்புடன் இனிமையை உருவாக்குகின்றது.
அதேசமயம்,ஒப்பாரி மனதில் சோகத்தை உருவாக்குகின்றது.
(இவற்றில் பெரும்பாலானவற்றை உலகமயமாக்கல் மற்றும் ஆங்கில மயமாக்கலால் பெரும்பாலனவற்றை இழந்துவிட்டோம்.)


நிம்மதியாகத் தூங்கிட நீலாம்பரி ராகம் உதவி செய்கிறது.ஒரு குறிப்பிட்ட ராகம் ஒன்று நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ராகத்தைப் பாடினால் பாடுபவரே தீப்பிடித்து எரிந்து போவாராம்.அப்படி எரிந்து போன இசை மேதைகள் இந்தியாவில் ஏராளம்.இன்று அந்த சூட்சுமம் யாருக்கும் தெரியுமா?
அமிர்தவர்ஷினி ராகம் மழையைக் கொண்டுவருகின்றது.இப்படி கொண்டுவருவதை பிரபல சங்கீத மேதைகளான முத்துச்சாமி தீட்சிதர், செம்மாங்குடி பாலமுரளிகிருஷ்ணா, குன்னக்குடி வைத்தியநாதன் பல முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பாக நிரூபித்துள்ளனர்.

வருணஜபம் செய்தாலும், திருப்பாவையின் ஒரு பாடலான ‘ஆழி மழைக்கண்ணா’ என்ற பாடல் பாடினாலும்(முழுப்பாடல் நமது ஆன்மீகக்கடலில் இருக்கின்றது) மழை வருகின்றது.இம்மூன்றின் உச்சரிப்பு மற்றும் ஒலி ஒத்திசைவும் பாடப்படும் இடத்தில் மழைமேகங்களை கூடச்செய்து மழைபொழியச் செய்கின்றது.
இம்மூன்றிலும் இப்பேர்ப்பட்ட சூட்சும சக்திகள் நிறைந்திருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியல் விஞ்ஞானிகள்(Indologists) நிரூபித்துள்ளனர்.

தமிழர்களின் மரபுச்செல்வங்களான தேவாரம், திருவாசகம்,நாலாயிரத்திவ்விய பிரபந்தம்,சவுந்தரிய லஹரி இவை அனைத்தும் மனித மனத்தையும்,இறைவனின் மனத்தையும் உருக்கும் வலிமை மிக்கவை.ஒலிவிஞ்ஞானம் என்ற Fonotics அறிவியலில் மேற்குநாடுகள் இன்று கத்துக்குட்டிகள்; நாமோ மேதைகள்.

எனவே,இந்தப் பெருமைகளை நாம் நமது குழந்தைகளின் மனதில் பதியச்செய்வோம்.
மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்குவோம்.