Monday, June 19, 2017

எட்டுவிதமான அருளாற்றல்களை அருளும் அருள்நிறை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்,பள்ளிக்கரணை,சென்னை!!!


உலக வரலாற்றில் பாரத நாட்டின் பங்களிப்பு மிக அதிகம்;பாரத நாட்டின் ஆத்மபலத்தை அதிகரித்து வருவது நமது தமிழ்நாடு மாநிலம் தான்! தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை பாரதத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக அறிவிக்கலாம்;புது டெல்லியை அரசியல் தலைநகரமாகவும்,கொல்கொத்தாவை பழைய தலைநகராகவும்,மும்பையை பொருளாதாரத் தலைநகரமாகவும்,சென்னையை பண்பாட்டு தலைநகரமாகவும் அறிவிக்கலாம்;

சென்னையில் மட்டும் 20,000 சிவாலயங்கள் இருக்கின்றன;இதில் சுமார் 800 சிவாலயங்கள் மட்டுமே பக்தர்களால் வழிபடப்பட்டு வருகின்றன;இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு,சென்னையானது ஒரு தீவாக உருமாறும்;அதன் பிறகு,மீதி 19,200 சிவாலயங்களும் படிப்படியாக வெளிப்படும்;

இந்த ஆலயங்களின் தெய்வீக சக்தி வெளிப்பாட்டினால் பாரத நாடு உலக வல்லரசு நாடாக மாறிவிடும்;அப்போது சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான ஆன்மீக அதிசயங்கள் வெளிப்படும்;


1999 ஆம் ஆண்டுவரை இந்த பள்ளிக்கரணை சிவாலயமான அருள்நிறை சாந்த நாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்திருந்தது;வெளியூரில் வாழ்ந்த சிவனடியார்கள் ஆதிபுரீஸ்வரரின் அருமை பெருமைகளை உணர்ந்து ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்தார்கள்;(யார் பாழடைந்த சிவாலயத்தை புனர்நிர்மாணம் செய்கின்றார்களோ,அவர்களுக்கு அரசாங்கத்திலும்,அரசியலிலும்  உயர்பதவிகள் தேடி வரும் என்பது அகத்தீச ரகசியம்)


யாருக்கு இப்பிறவி இறுதிப்பிறவியோ அவர்கள் இங்கே ஒரே ஒருமுறையாவது வருவார்கள்;வருகை தந்த அன்றே,மூலவரான ஆதிபுரீஸ்வரர் முன்பாக 1008 முறை ஓம் நமச்சிவாய என்று ஜபிப்பார்கள்:  அன்னை சாந்த நாயகியின் முன்பாக தம்மை அறியாமலேயே கண்ணீர் விடுவார்கள்;அந்தக் கணத்தில் அன்னையின் அருட்காட்சி கிட்டும்;கூடவே,இங்கே அருள் பாலித்துவரும் ஸ்ரீசரபேஸ்வரர் சன்னதி முன்பாக அவரது காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜபிப்பார்கள்;


ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்;  என்பதுதான் ஸ்ரீசரபேஸ்வரரின் காயத்ரி மந்திரம் ஆகும்;


யார் தினமும் அவரவர் வீட்டில் காலையில் 27 முறையும்,இரவில் 27 முறையும் இந்த ஸ்ரீசரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருகின்றார்களோ,அவர்களை இப்பிறவி முழுவதும் யாராலும் வெல்ல முடியாது;வாழ்நாளின் முடிவில் அவர்களது உயிர் பிரிந்ததும்,அவர்களது ஆத்மா திருக்கையிலாயம் நோக்கிப் பயணிக்கும்;



குறைந்தது 12 ஆண்டுகள் வரை தினமும் காலையில் 27 முறையும்,இரவில் 27 முறையும் இப்படி ஸ்ரீசரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை ஒரு நாள் விடாமல் ஜபித்திருக்க வேண்டும்; இந்த 12 ஆண்டுகள் வரை மட்டுமாவது அசைவம்,மது,சபலம் மூன்றையும் கைவிட்டு இருக்க வேண்டும்;


இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி முன்பாக 33 முறை ஸ்ரீதுர்கை சித்தர் ஐயா அவர்கள் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் ஜபிக்கலாம்;இப்படி ஒரு நாளுக்கு 33 முறை வீதம் 300 நாட்கள் வரை ஒரு நாள் விடாமல் யார் ஜபித்து நிறைவு செய்கின்றார்களோ அவர்களுக்கு இப்பிறவி முழுவதும் வறுமை இராது;மகத்தான செல்வ வளத்தை பெறுவார்கள்;


900 நாட்கள் வரை தினமும் 33 முறை ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகத்தை ஜபித்து விட்டால்,அவருக்கும் அவரது மூன்றாவது தலைமுறை வரையிலும் பெரும் செல்வந்தராகிவிடுவார்கள் என்பது உண்மை;


இங்கே ஸ்ரீபதஞ்சலி மற்றும் ஸ்ரீவியாக்ரபாதர் சன்னதிகள் அமைந்திருக்கின்றன;யோகாவை தொழிலாகச் செய்து வருபவர்கள் வியாழக்கிழமை வருகை தந்து இவர்கள் முன்பாக சில நிமிடங்கள் வரை ப்ராணயாமம் செய்து வரவேண்டும்;12 வியாழக்கிழமைகள் தொடர்ந்து இரவு 8 முதல் 9 மணி வரை இப்படிச் செய்து வந்தால் யோகத் தொழிலில் பெரும் புகழையும்,செல்வத்தையும் பெறுவார்கள்;

வாசியோகம் செய்து வருபவர்கள் ஸ்ரீவியாக்ரபாதரை தினமும் தரிசித்து வழிபட்டு வந்தால் வாசியோகம் சித்திக்கும்;


இங்கே அன்னை ஸ்ரீராஜராஜேஸ்வரி,ஸ்ரீராஜாமாதங்கி,ஸ்ரீவராகி சன்னதிகள் இருக்கின்றன;ஸ்ரீவித்யா உபாசகர்கள் இங்கே வருகை தந்து அன்னைகளை துதித்து வருவதன் மூலமாக ஸ்ரீசக்கர அருளைப் பெறுவார்கள்;


ராகு,கேது தோஷம் நீக்கும் பரிகாரக் கோவிலாகத் தான் இந்த பள்ளிக்கரணை அருள்நிறை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் ஆலயம் பிரபலம் ஆகியிருக்கின்றது;


பயோடெக்,மைக்ரோ பயாலஜி,வெஹிகிள் டிசைனிங்,ஃபேஷன் டிசைனிங்,அணு ஆராய்ச்சி,மரபணு ஆராய்ச்சி மற்றும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் செய்பவர்கள் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் தவிப்பவர்கள் 16 திங்கட்கிழமைகள் மாலை 4.30 முதல் 6 மணி வரை வருகை தரவேண்டும்;இந்த நேரம் முழுவதும் சிவாய நம என்று ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;17 வது திங்கட்கிழமைக்குள் தமது ஆய்வுக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவார்கள் என்பது சிவசத்தியம்!!!


ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்கள் இங்கே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வருகை தந்து அன்னை மஹாவராகியை பின்வரும் 12 பெயர்களால் ஜபிக்க வேண்டும்;ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் ஜபித்து வருவதன் மூலமாக நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா
வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த 12 பெயர்களும் சர்வசக்தி வாய்ந்த மஹாவராகி மந்திரங்கள் ஆகும்;ராகு மஹாதிசை முடியும் வரையிலும் அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு ஜபித்து வர நிம்மதியான (அவமானம்,தோல்வி,துயரங்கள் இல்லாத) வாழ்க்கையைப் பெறுவார்கள்;


திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு வாரம் ஒருமுறை வீதம் 22 வாரங்கள் வருகை தந்து வழிபட்டால் வளமான,அட்டகாசமான புண்ணியப் பலன்களைப் பெறுவார்கள்:


கேது மஹாதிசை நடப்பில் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு வருகைதந்து அஷ்ட கணபதி மந்திரம் ஜபித்து வரவேண்டும்;கோவிலுக்குள் அடிக்கடி உழவாரப் பணி செய்துவரவேண்டும்;

அசுபதி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகா திருப்புமுனை தரும் ஆலயமாக இந்த ஆலயம் திகழுகின்றது;


உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளன்று இங்கே இருக்கும் அருள் நிறை ஆதிபுரீஸ்வரருக்கும்,  அருள் நிறை சாந்த நாயகிக்கும் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக நீண்டகாலமாக இருந்து வந்த வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment