Wednesday, March 15, 2017

செல்வ வளத்தையும்,செல்வாக்கையும் அள்ளித் தரும் சிவராத்திரி கிரிவலம்!!!


உலகத்தை வீடு அளவுக்கு சுருக்கினால்,அதில் நமது பாரத நாடுதான் பூஜை அறையாக இருக்கும்;அந்த பூஜை அறையில் சுவாமி படங்கள்,விக்கிரகங்கள் இருக்கும் இடமாக நமது தமிழ்நாடு இருக்கும்;பூமியில் அனைத்துவிதமான கடவுளின் திருவிளையாடல்களும் நிகழ்ந்தது நமது தமிழ்நாட்டில் தான்;

நாம் எவரும் ஆகாயத்தில் இருந்து குதித்துவிடவில்லை;ஈசனின் அம்சமாகிய ஒரு ஆண்;சக்தியின் சிறுவடிவமான ஒரு பெண்;இருவரின் இணைப்பால் தான் நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்திருக்கின்றோம்;மனிதப் பிறவி மிகுந்த போராட்டம் மற்றும் புண்ணியச் சேர்க்கையால் தான் நமக்குக்கிடைத்திருக்கின்றது;

இப்பிறவியில் தமது ஆயுளில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு தினமும் நெற்றியில் யார் விபூதி/குங்குமம்/திருநாமம் அணியவில்லையோ அவர்கள் மறுபிறவியில் மரம்/செடி/கொடியாகத்தான் பிறப்பார்கள் என்பது அகத்தியர் கூறும் தேவரகசியம்!

விண்ணுலகில் நமது முன்னோர்கள் கடுமையாக விரதம் இருந்து வரம் பெற்றால் மட்டும் தான் இங்கே நம்மால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும்;இல்லாவிட்டால் ஒருமுறை கூட அண்ணாமலை என்ற ஊருக்குக் கூட செல்ல முடியாது;சதுர்த்தசி திதி வரும் நாளைத்தான் சிவராத்திரி என்று நாம் கொண்டாடுகின்றோம்;

200 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மாதப்  பிறப்பு அன்று கிரிவலம் செல்வதுதான் மரபாக இருந்துவந்தது;தற்போது அண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;நம்மில் பலர் அண்ணாமலையை பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றோம்;இது அறியாமையின் வெளிப்பாடு;எல்லா நாட்களிலும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக அண்ணாமலை கிரிவலம் வந்தது ப்ரபஞ்ச அன்னையான பார்வதி தேவியே! அன்னைக்கு துணையாக சென்றது பார்வதி தேவியின் அருந்தவப் புதல்வனும்,நமது ஆதி முன்னோருமாகிய அகத்தியரும் கிரிவலம் வந்தார்கள்;அப்படி அவர்கள் கிரிவலம் வந்தது ஒரு சிவராத்திரி அன்றுதான்;அதனால் தான் பவுர்ணமி கிரிவலத்தை விடவும் சிவராத்திரி கிரிவலம் மிகவும் சர்வசக்தி வாய்ந்ததாக இருக்கின்றது;

தொடர்ந்து 36 சிவராத்திரி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வந்தாலே போதும்;நமது அனைத்து கர்மவினைகளும் கரைந்து நலமான,வளமான,சக்தி வாய்ந்த வாழ்க்கை இப்பிறவியிலேயே கிட்டிவிடும்;


தொடர்ந்து முடியாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வரலாம்;நமது முயற்சியை நமது கர்மவினைகள் தடுக்கத் தான் செய்யும்;அதனால்,தொடர்ந்து சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செல்ல இயலாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரிகிரிவலத்தை நிறைவு செய்து வளமோடு வாழ்க!


அடுத்த ஓராண்டு சிவராத்திரி நாட்கள் பட்டியலை             ( அண்ணாமலையாரின் ஆசிகளோடும்,அகத்திய மகரிஷியின் அருளாலும்) உங்களுக்கு வழங்குகின்றோம்.

26.3.2017 ஞாயிறு காலை 11.05 முதல் 27.3.2017 திங்கள் காலை 10.03 வரை

24.4.2017 திங்கள் இரவு 10.05 முதல் 25.4.2017 செவ்வாய் இரவு 8.10 வரை

24.5.2017 புதன் காலை 6.44 முதல் நள்ளிரவு 3.46 வரை

22.6.2017 வியாழன் மதியம் 2.05 முதல் 23.6.2017 வெள்ளி காலை 11.36 வரை

21.7.2017 வெள்ளி இரவு 8.54 முதல் 22.7.2017 சனி மாலை 6.36 வரை

19.8.2017 சனிக்கிழமை பின்னிரவு(மறுநாள் விடிகாலை)3.48 முதல் 20.8.2017 ஞாயிறு பின்னிரவு 2.24 வரை

18.9.2017 திங்கள் மதியம் 1.25 முதல் 19.9.2017 செவ்வாய் மதியம் 12.11 வரை

17.10.2017 செவ்வாய் இரவு 12.42 முதல் 18.10.2017 புதன் இரவு 12.26 வரை

16.11.2017 வியாழன் மதியம் 3.07 முதல் 17.11.2017 வெள்ளி மதியம் 3.57 வரை

16.12.2017 சனி காலை 8.16 முதல் 17.12.2017 ஞாயிறு காலை 10.05 வரை

15.1.2018 திங்கள்

13.2.1018 செவ்வாய் இரவு 11.24 முதல் 14.2.2018 புதன் இரவு 1.14 வரை

15.3.2018 வியாழன் மாலை 5.36 முதல் 16.3.2018 வெள்ளி மாலை 6.24 வரை

அருணாச்சலம் என்ற அண்ணாமலையில் சிவராத்திரி கிரிவலம் வரும் போது சில சித்தர்களது தரிசனம் நம் ஒவ்வொருவருக்கும் கிட்டும்;அந்த சித்தர்களது வம்சாவழியில் நாம் பிறந்திருக்கின்றோம் என்று அர்த்தம்;

அண்ணாமலை கிரிவலத்தின்போது உங்களுக்கு கிட்டும் தெய்வீக அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தாதீர்கள்;அது தவறு;

சிவராத்திரி கிரிவலத்தின் போது,அன்னதானம்,ருத்ராட்ச தானம்,ஆடை தானம்,பழதானம்,கோதானம்,சொர்ண தானம்,பழச்சாறு தானம் செய்வது நன்று;இந்த தானங்கள் அனைத்தும் செய்ய முடியாவிட்டாலும்,இதில் ஏதாவது ஒரு தானத்தைச் செய்துவருவது நன்று;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ






No comments:

Post a Comment