Monday, May 21, 2018

அதிவேகமாக செல்வ வளம் தரும் ஸ்ரீசொர்ண வாராஹி வழிபாடு!


உலகின் குருவாக நமது பாரத நாடு இருந்து வருகின்றது;வெகு விரைவில் உலகின் வழிகாட்டியாகவும்,முதன்மை வல்லரசு நாடாகவும் மாற இருக்கின்றது;

நாம் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியில் பெரும் செல்வ வளம் அடைய தடையாக இருப்பது மூன்று:
1.குலதெய்வ வழிபாட்டினை அடிக்கடி செய்யாமல் இருப்பது
2.நமது ஜனன ஜாதகப்படி நமது கர்மவினைகளை அழிக்கும் வழிமுறையை கண்டறியாமல் இருப்பது;ஒருவேளை கண்டறிந்தாலும் அதை(உரிய பரிகாரங்கள்) செயல்படுத்தாமல் இருப்பது;
3.அண்ணாமலையில் துவாதசி திதி அன்று அன்னதானம் செய்யாமல் இருப்பது;

இவைகளில் ஏதாவது ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்ட குறைகள் இருப்பவர்கள் காலம் பூராவும் பண பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்;

நமது கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் தெய்வீக சக்திகள்;1.மஹாகால பைரவப் பெருமான்
       2.மஹாவராகி
       3.ஸ்ரீசரபேஸ்வரர்
       4.இவர்கள் மூவரையும் தோற்றுவித்த அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார்

இவர்களில் ஒருவர் அல்லது இருவரை தினமும் ஜபித்து வருவதன் மூலமாக மூன்றே ஆண்டுகளில் நமது கர்மச்சுமைகள் நீங்கி வளமோடும்,நலமோடும் வாழ முடியும்;அப்படி வாழ்ந்து வருபவர்கள் இன்றும் நமது ஊரில் ஒரு சிலர் இருக்கின்றார்கள்;


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை மஹா கால பைரவரையோ அல்லது மஹாவராகியையோ ஜபித்து வருவதன் மூலமாக இப்பிறவியில் அதிக கஷ்டங்கள்,சோதனைகள்,துயரங்கள்,சோகங்கள் இல்லாமல் வாழ முடியும்;அந்த மூன்று ஆண்டுகளும் அசைவம்,மது,போதைப் பொருட்களை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்;


இங்கே செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண வராகி வழிபாட்டினை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;அன்னை ஸ்ரீ மஹாவராகியின் அருளாசியோடும்,அனுமதியோடும் இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


செல்வ வளத்தை குறுகிய காலத்தில் அள்ளித் தரும் தெய்வீக சக்திகள் இருக்கின்றன;

ஹேரம்ப கணபதி,

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண கணபதி,

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்;

ஸ்ரீ சொர்ண துர்கை என்று ஏராளமான தெய்வீக சக்திகள் இருக்கின்றன;முறைப்படி குருவருளால் இந்த தெய்வீக சக்திகளில் ஒன்றை மட்டும் உபாசனை செய்து இப்பிறவி முழுவதும் செல்வச் செழிப்போடு வாழலாம்;


இந்த தெய்வீக சக்திகளை நமது இருப்பிடத்திற்கு கொண்டு வரும் பூஜை முறைகள் இன்றைய கால கட்டத்தில் புத்தகங்களிலும்,இணையத்திலும் பலரால் எழுதப்பட்டிருக்கின்றன;

எழுதியவர்களை நேரில் சந்தித்து முறைப்படி பூஜை முறைகளை அறிந்த பின்னர்,இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே பலன் தரும்;


ஸ்ரீ சொர்ண வராகியின் அருளால் பெரும் செல்வ வளம் உண்டாக;


ஒரு வாழை இலையில் பச்சரிசி ஒரு படி எடுத்து வாழை இலை முழுவதும் பரப்ப வேண்டும்;அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய்கள் மூன்றினை(ஆறு முறிகள்) அதில் வைக்க வேண்டும்;முறிகளில் மஞ்சள்,குங்குமம் வைத்து அதில் சுத்தமான பசு நெய் ஊற்றவேண்டும்;(ஜெர்ஸிப்பசுவின் நெய்யையோ அல்லது எருமை நெய்யையோ ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது)
     தாமரை தண்டு திரியினால் தீபம் ஏற்ற வேண்டும்;சிகப்புத் தாமரை தண்டுத்திரியும்,வெள்ளைத் தாமரைத் தண்டுத் திரியும் கிடைக்கும்;எதுவாக இருந்தாலும் சரி;


இன்னொரு முறையும் உண்டு;அது என்னவெனில்,ஒரு வாழை இலையில் நெல் பரப்பி வைக்க வேண்டும்;நெல் ஒரு படி அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்;பரப்பி வைக்கப்பட்ட நெல் சமதளமாக பரப்பப் பட்டு இருக்க வேண்டும்;அதன் மீது,இன்னொரு வாழை இலையை விரித்து வைக்க வேண்டும்;சிறிய அல்லது மிகச் சிறிய வாழையிலையை பயன்படுத்தக் கூடாது;இரண்டாவது வாழை இலையின் மீது கோதுமையை ஒரு படி அளவுக்கு எடுத்து அதன் மீது பரப்பி சமதளமாக வைக்க வேண்டும்;


இரண்டாவது வாழை இலையின் ஓரங்களில் 27 மண் விளக்கால் ஆன தீபத்தை வைக்க வேண்டும்;அதில் தாமரை தண்டு திரியில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;ஒவ்வொரு மண் விளக்கு தீபத்தின் அருகிலும் ஒவ்வொரு சிகப்பு நிற மலர் ஒன்றை வைக்க வேண்டும்;சிகப்பு நிற மலர் காய்ந்து போயிருக்கக்கூடாது;புதிய மலரை மட்டும் வைக்க வேண்டும்;


 ஸ்ரீசொர்ண வராகி மந்திரம் ஒன்று உள்ளது;இணையத்திலும் இருக்கலாம்;அதை குருமுகமாக கேட்டு அறிந்து ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;புத்தகம்/இணையம் பார்த்து மனப்பாடம் செய்து முயற்சித்தவர்களுக்கு பலன் கிட்டவில்லை;


குரு அருள் இருந்தால்  தானே அன்னையின் அருள் கிட்டும்?


ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 4.30 முதல் 6 மணிக்குள் இவ்வழிபாட்டினை ஆரம்பிக்க வேண்டும்;இந்த 90 நிமிடங்களுக்குள் 108 முறை ஸ்ரீசொர்ண வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

அன்று முதல் ஒன்பது வாரங்களுக்கு,அதாவது 63 நாட்களுக்கு உரிய தொடர் முயற்சி இது;

1வது ஞாயிறு காலை 4.30க்குத் துவங்கி மறு நாள் முதல் ஒவ்வொரு நாளும் காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் 108 முறையும்;மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் 108 முறையும்,இரவு 8 மணி முதல் 9 மணி வரை 108 முறையும் ஸ்ரீ சொர்ண வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

ஒவ்வொரு நாளும் இப்படி மூன்று வேளைகளும் 108 முறை வீதம் ஒன்பது வாரங்களுக்கு தொடர்ந்து ஜபித்து வர வேண்டும்;

1ம் ஞாயிறு அன்று செவ்வரளி மாலையையும்
2ம் ஞாயிறு அன்று எலுமிச்சம் பழ மாலையையும்(புள்ளிகள் இல்லாமலும்,கனியாததையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்)எலுமிச்சை பழங்களை ஊசியில் கோர்க்கக் கூடாது;
3ம் ஞாயிறு அன்று துளசி மாலையையும்
4ம் ஞாயிறு அன்று வில்வ மாலையையும்
5ம் ஞாயிறு அன்று வெற்றிலை மாலையையும்
6ம் ஞாயிறு அன்று மரிக்கொழுந்து மாலையையும்
7ம் ஞாயிறு அன்று சிகப்பு நிற ரோஜா மாலையையும்
8ம் ஞாயிறு சம்பங்கி மாலையையும்
9ம் ஞாயிறு விரலி மஞ்சள் மாலையையும் அணிவிக்க வேண்டும்;
ஞாயிறு அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் அணிவித்துவிட்டு,மறு நாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் மாலைகளை எடுத்துவிடவும் வேண்டும்;


அதே போல பின்வரும் வரிசைப்படி,ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நைவேத்தியம் படையல் இட வேண்டும்;

1ம் ஞாயிறு அன்று சர்க்கரைப் பொங்கலையும்
2ம் ஞாயிறு அன்று எலுமிச்சை சாதத்தையும்
3ம் ஞாயிறு அன்று வெண்பொங்கலையும்(இதில் பாசிப்பருப்பினை அதிகம் சேர்த்திருக்க வேண்டும்)
4ம் ஞாயிறு அன்று புளியோதரையையும்(மிளகு சேர்த்திருக்க வேண்டும்)
5ம் ஞாயிறு அன்று பனங்கிழங்கு சாதத்தையும்(அல்லது வேறு கிழங்குகளில் எதுவாகவும் இருக்கலாம்)
6ம் ஞாயிறு அன்று தயிர்ச் சாதத்தையும்
7ம் ஞாயிறு அன்று வெண் மொச்சை சுண்டலையும்
8ம் ஞாயிறு அன்று கருப்பு உளுந்து வடையையும்
9ம் ஞாயிறு அன்று சீனிக்கிழங்கு என்ற சர்க்கரை வள்ளிக்கிழங்கினை வேக வைத்து எடுக்க வேண்டும்;எடுத்த பின்னர் சுத்தமான(கலப்படம் இல்லாத) தேனை சேர்க்க வேண்டும்;

இரவு முழுவதும் படையல் இட்டுவிட்டு,மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடவேண்டும்;

முற்பிறவிகளில் அன்னை மஹாவராகியை மட்டும் பூஜித்தவர்களுக்கு சிலபல அதிசயங்களை உணரலாம்;நைவேத்தியம் காணாமல் போயிருக்கும்;வெகு சிலருக்கு அன்னை மஹாவராகி கனவில் வந்து பேசுவாள்;


ஆன்மீக பூமியான நமது பாரத நாட்டில் பலவிதமான ரகசிய வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன;இன்றும் அரிதாக வெகு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன;



அன்னை மஹாவராகியின் திருவுள்ளம் யாருக்கு இருக்கின்றதோ,அவர்களுக்கு மட்டுமே இந்த செல்வ வளம் குவியும் முறை தேடி வரும்;

அன்னையின் கருணை இருந்தால் மட்டுமே இந்த வழிபாட்டுக்கு உரிய மந்திரம் கிடைக்கும்;

அன்னையின் ஆசிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஒன்பது வார முயற்சிகள் தங்கு தடையில்லாமல் ஜெயம் ஆகும்;

Wednesday, May 16, 2018

இந்துக்களின் பக்தியால் அழிந்துவரும் துஷ்டர்களின் உலகளாவிய ஆதிக்கம்!!!


உலகத்தில் வாழ்ந்து வரும் 700 கோடி மனிதர்களுக்கும் எதிரி இலுமுனாட்டிகள் மட்டுமே!

யார் இந்த இலுமுனாட்டிகள்?

400 ஆண்டுகளுக்கு முன்பு 12 பேர்கள் அமெரிக்காவில் ஒன்றாக பேசி முடிவு செய்தார்கள்;இந்த உலகத்தையும்,உலக மக்களையும் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று;


அப்படி தமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு மந்திரம்,தந்திரம்,மாந்திரீகம்,அரசியல் என்று எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தலாம் என்றும் தீர்மானித்தார்கள்;

உலகத்தில் மனிதர்கள் செய்யும் தொழில்களை 13 பெரும் பிரிவுகளாக பிரித்தார்கள்;இன்று உலகத்தில் இருக்கும் எல்லா வல்லரசு நாடுகளும்,எல்லா உளவு அமைப்புகளும்,எல்லா அரசாங்கங்களும் இவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இயங்கிவருகின்றன;உலக வல்லரசு அமெரிக்கா உள்பட!


இன்று இலுமுனாட்டிகளின் மொத்த ஜனத்தொகை 6000 பேர்கள் ஆகும்;இவர்கள் லண்டன் அருகில் இன்னர் சிட்டி என்ற ரகசிய நகரத்தில் இருந்து உலகை இயக்கி வருகின்றார்கள்;


மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே இருக்கின்றன;
மனிதர்களை பணவெறி பிடித்தவர்களாகவும்,காமவெறி பிடித்தவர்களாகவும்,அதிகார வெறி பிடித்தவர்களாகவும் மாற்றும் போக்கினை உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு மாநிலத்திலும் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இந்த இலுமுனாட்டிகள்;


உண்மை,நேர்மை,விசுவாசம் போன்ற நற்குணங்களை பாரத தேசத்தில் இருந்து படிப்படியாக கடந்த 300 ஆண்டுகளாக இவர்கள் தான் அழித்துவருகின்றார்கள்;இருந்த போதிலும்,இன்றைய 2018 லும் கூட பணத்தாசைப் படாத மனிதர்கள் இன்றும் நமது நாட்டில் மட்டுமே பிறந்துவருகின்றார்கள்;பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் ஆண் அல்லது பெண் பணத்தாசை இல்லாமல் வாழ்ந்து வருவது சாதாரணம்;ஆனால், அடுத்த வேளை உணவுக்கு வேலை செய்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலையிலும் கூட எனது நாடு,எனது பண்பாடு,எனது மக்கள் என்ற தன்னலமற்ற தியாகிகள் தொடர்ந்து பிறப்பது நமது பாரத நாட்டில் மட்டுமே!


இதுதான் இலுமுனாட்டிகளுக்குப் பிடிக்கவில்லை;இலுமுனாட்டிகளின் பரிசோதனை தேசங்களாக சிங்கப்பூர்,ஹாங்காங்,துபாய் போன்றவைகள் இருந்து வருகின்றன;இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் ஆன்மீகத் தேடல் உருவாகாது;சிங்கப்பூரில் பிறந்தவர்களுக்கு பாரத நாட்டின் பண்பாட்டின் ஆளுமை அவ்வளவு சுலபத்தில் பிடிக்காது;ஹாங்காங்கில் பிறந்தவர்களுக்கு சீனாவின் ஆன்மீக திறன் மீது எளிதாக நம்பிக்கை வராது;துபாய்யில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சவுதி அரேபியாவின் ஆன்மீகத் தேடல் மீது ஈர்ப்பு வராது;


இலுமுனாட்டிகளாக உருவானவர்கள் யூதர்கள்;200 ஆண்டுகளுக்கு முன்பு சில சீனர்களையும் இலுமுனாட்டிகள் தமது குழுவில் இணைத்துக் கொண்டார்கள்;இன்றைய கால கட்டத்தில் பலநாடுகளில்,பல அரசியல் குழப்பங்களுக்கு மறைமுகக் காரணம் இலுமுனாட்டிகளே;


உலகத்தின் அனைத்து நாடுகளின் அரசியல்,அரசாங்கம்,வர்த்தகம் என்று எல்லாத்துறைகளிலும் அமெரிக்காவின் தலையீடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றது;அமெரிக்காவை மையமாகக் கொண்டே உலக அரசியல் இயங்கிவருகின்றது;அமெரிக்காவை வெள்ளை மாளிகை கட்டுப்படுத்துகின்றது;வெள்ளை மாளிகையை இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட யூதர்களும்,இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியர்களும் கட்டுப்படுத்திவருகின்றார்கள்;

இவர்கள் இன்றைய ஒட்டு மொத்த உலகத்தையும் கட்டுப்படுத்த உதவியது பாரத நாட்டின் வேதங்கள்,உபநிஷத்துக்கள் மற்றும் கருமார்க்கங்கள் மட்டுமே;அடுத்தபடியாக செவ்விந்தியர்களின் மாந்திரீக முறைகளுமே;

சுமாராக 6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக வரைபடம் வேறுவிதமாக இருந்தது;ஆப்ரிக்கக் கண்டத்தில் இப்போது இருக்கும் சகாரா பாலைவனம்,சகாரா பெருங்கடலாக இருந்தது;அமெரிக்காவுக்கும்,ஐரோப்பாவுக்கும் இடையே ஒரு பெரிய கண்டம் இருந்தது;அதற்கு அட்லாண்டிக் கண்டம் என்றூ பெயர்;தொடர்ந்து நிகழ்ந்த பூகம்பங்களும்,சுனாமிகளும் உலக வரைபடத்தை மாற்றிவிட்டன;

சுமாராக 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்றைய இலங்கைக்கு தெற்கு எல்லையில் இருந்து அண்டார்டிகாவரையிலும்,கிழக்கே ஆஸ்திரேலியாவில் இருந்து மேற்கே மடகாஸ்கர் தீவு வரையிலும் குமரிக்கண்டம் என்ற லெமூரியாக் கண்டம் இருந்தது;வெறும் 200 ஆண்டுகளுக்குள் உண்டான ஆறு சுனாமிகள் குமரிக் கண்டத்தை இந்து மஹாசமுத்திரமாக மாற்றிவிட்டன;


இன்றைய காலகட்டத்தில் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் சமுதாயத்தை ஆன்மீக பூமியாகத் திகழும் பாரதத்திலேயே உருவாக்கி வருவது இலுமுனாட்டிகளின் செயல்பாடுகள் தான்;இவர்களது கண்டுபடிப்புகளான இணையம்,செல்போன்,ஸ்மார்ட்போன் போன்றவைகளால் மக்களிடையே பக்தி குறைந்து பணவெறி அதிகரிக்கத்துவங்கி  இருக்கின்றது;


இருந்த போதிலும் இலுமுனாட்டிகள் பற்றி உலக அளவில் விழிப்புணர்ச்சியை முதன் முதலில் உருவாக்கியவர் ஒரு தமிழரே;அவர் தான் ஹீலர் பாஸ்கர்! ஆன்மீகத் தேடலில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியதும் அவருக்கு இந்த உலகம் முழுவதையும் கட்டுப்படுத்திவரும் மனிதர்கள் யார் என்பது தெரிந்தது;அவர் தனது இணையதளத்தில் உலக அரசியல் என்ற தலைப்பில் 6 மணி நேரம் பேசியிருக்கின்றார்;அதை முழுமையாக கேட்டால் நமக்கும் பயம் வரும்;அது தேவையற்ற பயம் என்பதை நாம் உணர்வதே இல்லை;


ஒரு அரபு மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் ஜபித்து வந்தால் அது அப்பகுதி மக்களுக்கு மட்டுமே நன்மைகளை தரும்;
அதேசமயம்,ஒரு சமஸ்க்ருத மந்திரம் அல்லது தமிழ் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் எழுதினாலோ அல்லது ஜபித்துவந்தலோ அது இந்த உலகம் முழுவதற்கும் நன்மைகளை தரத் துவங்கும்;ஜபிப்பவர்களுக்கும் நன்மைகளை தரத் துவங்கும்;உலகத்திலேயே மந்திர மொழியாக இருப்பது தமிழ் மொழிதான்;தமிழ்மொழியும் சமஸ்க்ருத மொழியும் ஒரே சமயத்தில் சித்தர்களால் இந்த உலகத்திற்கு கொண்டுவரப்பட்டவை;


தமிழ் மொழியை முருகக் கடவுளிடம் இருந்து பூமிக்கு கொண்டு வந்து மனிதர்களிடையே பரப்பியவர் அகத்தியர் ஆவார்;அதே போல,சமஸ்க்ருதத்தை பூமியில் பரப்பியவர் பாணினி ஆவார்;
தமிழ் மந்திர மொழி;சமஸ்க்ருதம் மந்திரங்களைக் கொண்ட மொழி;


நீங்கள் தினமும் 1200 முறை ஸ்ரீராமஜெயம் என்று எழுதினாலோ அல்லது ஜபித்துவந்தாலோ அம்மந்திரம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்;கூடவே,இந்த பூமியில் மனித குலத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களின் தீய செயல்பாடுகளை முடக்கிவிடும்;


நீங்கள் தினமும் ஓம் நமச்சிவாய என்றோ அல்லது சிவாய நம என்றோ தினமும் எழுதினாலோ ஜபித்தாலோ அந்த மந்திர ஜபம் உங்கள் குடும்ப நலனை பாதுகாக்கும்;கூடவே இந்த பூமியில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் சூட்சுமப் பாதுகாப்பை வழங்கும்;


இதை இலுமுனாட்டிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை;1700 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்களில் இலுமுனாட்டிகளும் இருந்தார்கள்;அவர்களின் பலவிதமான ஆராய்ச்சிகளால் பாரத நாடுதான் உலகின் ஆன்மீக பொக்கிஷம் என்பதை உணர்ந்தார்கள்:தமது உலகத்தை ஆட்சி செய்யும் லட்சியத்திற்கு குறுக்காக வர இருப்பது இந்தியர்கள் தான் என்பதையும் அப்போதே உணர்ந்தார்கள்:1947 இல் நாம் சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் சரபோஜி மஹால் நூலகத்தில் இருந்து பெரும்பாலான ஓலைச்சுவடிகளை இரண்டு கப்பல்கள் மூலம் எடுத்துச் சென்றர்கள்;யாருடைய அனுமதியையும் பெறாமலேயே!

அதில் இந்த உலகத்தினை வசப்படுத்தும் கலைகள் பற்றிய படைப்புகள் அனைத்தும் இருந்தன;கிபி 2100,கிபி 2200,கிபி 2300 என்று கிபி 3000,கிபி 10000 வரை இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை ஜோதிட ரீதியாக கணித்து வைத்திருப்பதைக் கண்டு மிரண்டு போனார்கள்:


இலுமுனாட்டிகளைப் பற்றி சிலபல தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன;சில திரைப்படங்கள் வெளிவர இலுமுனாட்டிகளும் காரணமாக இருந்துள்ளார்கள்:

ஏழாம் அறிவு

போகர்(ஓருமையில் பெயர் வைத்துள்ளார்கள் பாவிகள்)

தனி ஒருவன்(இலுமுனாட்டிகளைப் பற்றிய அப்பட்டமான திரைப்படம்)

திருட்டுப்பயலே 2

இரும்புத் திரை

எதிர்வரும் காலத்தில் இந்துக்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடையாமல் இருக்க இதுவரை செய்துள்ள துரோகங்கள்:

1.ஃப்ளூரைடு கலந்த பற்பசைகள்:

இதை தினமும் பயன்படுத்தி பல் துலக்கி வந்தால்,நமது புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம் அழிந்துவிடும்;அப்படி அழிந்துவிட்டால் ஆன்மீகத்தில் எக்காலமும் முன்னேற முடியாது;

 உதாரணமாக,1990 இல் பிறந்த ஒரு குழந்தை 1 ஆண்டுக்கு மேல் ஃப்ளூரைடு கலந்த பற்பசையை பயன்படுத்தினால்,அதன் பீனியல் க்ளான்டு செயலிழந்துவிடும்;அதற்கு 2010 முதல் 2020 க்குள் திருமணம் நடைபெறும்;அதற்கு பிறக்கும் குழந்தைக்கும் பீனியல் க்ளான்டு இராது;பீனியல் கிளான்டுக்கு ஆன்மீகப் பெயர் தான் ஆக்ஞாசக்கரம்;


ஆக்ஞா சக்கரத்தினை தூண்டும் தியான முறையை மன வளக் கலைமன்றம் போதித்து வருகின்றது;ஆக்ஞா சக்கரத்தை இயங்க வைத்துவிட்டால்,அவர்களை யாராலும் மாந்திரீக அடிமையாக்கிட முடியாது;


தீர்வு:கசப்பு அல்லது துவர்ப்புச் சுவை கொண்ட பல்பொடியை மட்டும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்;காதி பவன்களில் கிடைக்கும்;


2.இங்கிலீஷ் மீடியம் பள்ளிகள்:


10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே ஒரு குழந்தையால் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியும்;
இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கின்றது என்ற முட்டாள்த் தனமான கருத்து தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;


10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு பொறுமை ,தன்னடக்கம்,சமுதாய விழாக்களின் முக்கியத்துவம்,சகிப்புத்தன்மை,புரிந்து கொள்ளும் திறன், செய்த தவற்றினை ஒப்புக் கொள்ளும் சுபாவம் இருக்கும்;


10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை இங்கிலீஷ் மீடியம் படித்தவர்கள் க்ரிமினல் புத்தியோடு இருப்பார்கள்;செய்த தவற்றினை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்;மான,அவமானத்திற்கு சிறிதும் அஞ்சமாட்டார்கள்;ஹாலிவுட் அல்லது கிரிக்கெட் மீது அடிமையாக இருப்பார்கள்:வெள்ளைக்கார நாடுகள் மீது மட்டுமே மரியாதை இருக்கும்;


தீர்வு;10 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படிக்க வைப்பது; சுமாராக படித்தாலும் போதும்;


3.மதுப்பழக்கம்:


8 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை (13 வயது முதல் 23 வயது வரை) விளையாட்டுக்கு என்று ஆரம்பிக்கும் மதுப் பழக்கத்தினால் இன்று 30 வயதுக்கு உட்பட்ட விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது;எந்த அரசுக்கும் இதுபற்றிக் கவலை இல்லை;


தீர்வு:தேசபக்தியும்,தெய்வ பக்தியும் நிரம்பிய அரசாங்கம் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும்;தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தால் மட்டுமே இதற்கு தீர்வு உண்டு;


4.ஆன்மீகக் கல்வி இன்மை

இதனால்,பிரதோஷம்,சிவராத்திரி,ஏகாதசி பற்றிய அடிப்படை ஞானம் கூட தமிழ் நாட்டின் எட்டு கோடி தமிழர்களிடம் இல்லாமல் போய்விட்டது;இது மதமாற்றுபவர்களுக்கு சுலபமாகப் போய்விட்டது;


சைவ ஆதீனங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் மற்றும் கார்பரேட் இந்து அமைப்புகள் உலகம் முழுவதும் கிளைகளை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கும் எண்ணம் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்களே ஒழிய,நமது பாரத நாட்டில் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கிட ஆர்வமில்லாமல் இருக்கின்றார்கள்:பெயரளவுக்கு தான் பாரத நாட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகளை கடமைக்கு என்று நடத்திவருகின்றார்கள்:


தீர்வு:அடுத்த 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் தெருவுக்கு ஒரு ஆன்மீக சத்சங்கம் அமைத்து இந்து மத விழிப்புணர்ச்சியை அரசியல் கண்ணோட்டத்துடன் உருவாக்க வேண்டும்;
பள்ளி,கல்லூரிகளில் குருகுலக் கல்வியை கொண்டு வரவேண்டும்;மத மாற்றத்தை தீவிரவாதமாக அறிவிக்கவேண்டும்;


5.பசுவின் பெருமைகளை மறக்கடித்தல்

கோவில்,விவசாயம்,பெண்,பசு இந்த நான்கு அடிப்படைகளை பேணி பராமரித்தாலே போதும்;இந்து தர்மம் மீண்டும் மகோன்னத நிலைக்கு வந்துவிடும்;இன்றைய டிவி,சினிமா,விளம்பரங்கள் பெரும்பாலானவைகள் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்படுபவை;இவைகள் அனைத்தும் கோவில்,பெண்,பசு,விவசாயம் போன்றவைகளை இழிவுபடுத்தும் விதமாகவே உருவாக்கிவருகின்றார்கள்;

1960 முதல் 1990 வரை நாத்திகப்பிரச்சாரமும்,ஹிந்தி எதிர்ப்புப்பிரச்சாரமும் செய்து இந்து மதத்தை பலவீனப்படுத்தினார்கள்;இப்படி பிரச்சாரம் செய்ய சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மாதா மாதம் பணம் கொடுத்து வந்தன;

1960 முதல் 1980 வரை தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு சீர்குலைந்துவிடும் என்று  மருத்துவர்களால் நாடு முழுக்க  வதந்தி பரப்பினார்கள்;
1970 முதல் 1990 வரை குழலூதும் கண்ணன், உக்கிரமான காளி போட்டோக்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்று வதந்தி பரப்பினார்கள்;இவைகள் வீட்டில் இருந்தால் மாந்திரீகம் செயல்படாது;

1990 முதல் 2010 வரை இறந்தவீடுகளில் கர்மகாரியம் செய்யும் போது கழுத்தில் ருத்ராடம் அணிந்திருக்கக் கூடாது என்ற வதந்தியை பரப்பினார்கள்;

2000 முதல் 2040 வரை புதிய புதிய மகான்களுடைய வழிபாட்டை உருவாக்கி,சைவம்,வைஷ்ணவம் இரண்டையும் பலவீனமடையச் செய்யும் வேலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன;

தீர்வு:நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை அடுத்த 50 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்க வேண்டும்;இலுமுனாட்டிகள் உருவாக்கிய ஜெர்ஸிப்பசுவை பாரத நாட்டில் இருந்து மொத்தமாக அழித்துவிட வேண்டும்;

6.உணவே நஞ்சு,நஞ்சே உணவு;

 மைதாவில் செய்யப்படும் உணவுகள் நமது ஜீரண மண்டலத்தை நாசமாக்கக் கூடியவை;பிஸ்ஸா,பர்கர் போன்றவைகளை ஒரு முறை கூட சாப்பிடாமல் இருப்பது அவசியம்;

நமது பாரம்பரிய ஆயுர்வேதம் உண்ணும் உணவைப்பற்றி கூறியிருப்பது என்ன?
எது நாக்குக்கு சுவையில்லாமல் இருக்கின்றதோ அது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்;
எது நாக்குக்கு சுவையை தருகின்றதோ,அது உடல் நலனை சீரழித்துவிடும்;


எனவே,சிறுதானிய உணவுகளை சாப்பிடப் பழக வேண்டும்;இயற்கை நல்வாழ்வு முகாம்களுக்கு அடிக்கடி சென்று ஆரோக்கிய விழிப்புணர்ச்சியைப் பெற வேண்டும்;
டிவியில் வரும் விளம்பரங்களை நம்பவேண்டாம்;டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை ஒரு போதும் சாப்பிட வேண்டாம்;குளிர்பானங்களை உருவாக்கியதே நம்மை நோயாளியாக மாற்றிடவே;


7.டெக்னாலஜியை அளவோடு பயன்படுத்துதல்

இணையம் உலகம் முழுவதும் இருந்த 61,000 நாகரீகங்களை சிதைத்துவிட்டது;எல்லோரது மனதிலும் இருக்கும் காம உணர்ச்சிகளை பேராசை மிக்கதாக மாற்றிவிட்டது;இதனால்,தான் காமக் குற்றங்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன;

தீர்வு:உக்கிர பெண் தெய்வ வழிபாட்டினை எல்லோரும் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும்;மஹாவராகி,அங்காளபரமேஸ்வரி,மஹா காளி ஜபம் தினமும் செய்து வருவதன் மூலமாக எல்லோரும் மன அமைதி பெறலாம்;


8.பாரத பாரம்பரியத்தின் பெருமைகளை இந்தியர்கள் அறியாத விதமாக செய்தல்/தடுத்தல்

மெக்காலே கல்வித்திட்டம்,ஆங்கில வழிக்கல்வி,வெளிநாட்டில் உயர் கல்வி போன்றவைகளால் நமது பாரம்பரியத்தை அறியாத தலைமுறைகளை நாம் உருவாக்கி வருகின்றோம்;இதை அடியோடு மாற்றிட, உங்கள் குழந்தைகளை 13 வயது முதல் 23 வயதுவரை பண்புப் பயிற்சி முகாம்களுக்கு ஆண்டு தோறும் அனுப்பி வைக்க வேண்டும்;

அதுதான் நமது பாரம்பரியத்தின் பெருமைகளை உணர வைக்கும்;
இதைச் செய்யாத பட்சத்தில் லவ் ஜிகாத்,மதமாற்றம்,திடீர் தற்கொலை போன்றவைகளில் ஒன்றில் சிக்கி சின்னாபின்னமாகும் வாய்ப்புக்களே அதிகம்;


$ நிரந்தரத் தீர்வு:

ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரம் மஹாகால பைரவ ஜபம்(ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ)

அல்லது

மஹாவராஹி ஜபம்(ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ)

அல்லது

லக்ஷ்மி நரசிம்ம ஜபம் செய்து வர வேண்டும்;இப்படி மூன்று ஆண்டுகள் ஜபித்து வந்தாலே நிம்மதியான வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்கள் அடைந்துவிடுவார்கள்:


இந்த மூன்று ஆண்டுகள் மட்டும் மது,அசைவம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

தர்மோ ரக்ஷித ரக்ஷிதஹ


தர்மத்தை நாம் காத்தால்,தர்மம் நம்மை காக்கும்;

Tuesday, May 8, 2018

கலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்!!!


உலகம், காலம் என்ற சக்கர இயக்கத்தின் படி,சுழன்று கொண்டிருக்கின்றது;காலமோ நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன;அவை :

17,28,000 ஆண்டுகள் கொண்ட க்ருத யுகம்
12,96,000 ஆண்டுகள் கொண்ட திரோதா யுகம்
8,64,000 ஆண்டுகள் கொண்ட துவாபர யுகம்
4,32,000 ஆண்டுகள் கொண்ட கலியுகம்;
இதில் நாம் கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;எதிர்கால விஞ்ஞானம் இந்த யுகக்கணக்கினை கண்டுபிடிக்கும்;அதன் பிறகு,தற்போது இருக்கும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலண்டர் முறை அழிந்துவிடும்;

நாம் இன்றைய காலகட்டத்தில் பணம் அல்லது அரசியல் அதிகாரத்தினை அடைய ஓடிக் கொண்டிருக்கின்றோம்;நாம் வாழ்ந்து வரும் காலத்திலேயே கொடூரங்களும்,துரோகங்களும்,போலி ஆன்மீக தலைவர்களும் பொதுமக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆன்மீக நம்பிக்கையை சிதைத்து வருகின்றார்கள்;யார் உண்மையான ஆன்மீகவாதி? என்று கண்டுபிடிக்க முடியவில்லை;

வெகு சிலருக்கு மட்டுமே உண்மையான ஆன்மீக குரு கிடைத்து,அவரது வழிகாட்டுதலில் படி நிம்மதியான வாழ்க்கையையும்,ஆன்மீக முன்னேற்றத்தையும் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்;


ஒவ்வொரு மனிதனுக்கும் காரண குரு,காரிய குரு,வித்தை குரு,ஜன்மாந்திர குரு என்ற சத்குரு என்று நான்கு விதமான குரு நாதர்கள் தேவை;
காரண குருவும்,காரிய குருவும் சூட்சுமமாக நம்மை இயக்கிக் கொண்டு இருப்பார்கள்;


வித்தை குரு என்பது நாம் என்ன தொழில் செய்கின்றோமோ அதற்கு உரிய வாத்தியார் தான்;ஒவ்வொரு தொழிலையும் யாரும் சுயமாக கற்றுக்கொள்ள முடியாது;சைக்கிள் ஒட்டுவது முதல் மது பானம் தயாரிப்பது வரை;கோவிலில் பூசெய் செய்வது முதல் வேறு உலகங்களுக்கு சூட்சும உடலுடன் பறந்து சென்று திரும்புவது வரை ஒவ்வொரு வித்தைக்கும் குருவாக இருப்பவரே வித்தை குரு;

இந்த மூன்று குருநாதர்களையும் அடையாளம் காண ஒரு சுலபமான வழியை அகத்திய மகரிஷியும்,அவரது வம்சாவழியில் பிறந்த ஸ்ரீ இடியாப்ப சித்தரும் நமக்கு போதித்துள்ளார்கள்;
அதுதான் அண்ணாமலை கிரிவலம். . .


நமது இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டால் நமது சத்குருவை நம்மால் நேரில் தரிசிக்க முடியும்;அவரை நேரில் சந்தித்து பேசியப் பின்னர்,காரண குரு,காரிய குரு,வித்தைகுரு மூவரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்;


1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கும் ஆத்ம பலம்,பண வளம்,தீவிரமான எண்ணம் மூன்றும் தேவை;இம்மூன்றையும் கிடைக்கச் செய்ய மிகவும் எளிமையானசில  வழிமுறைகளை பின்பற்றி வந்தால் போதும்;


இங்கே தரப்பட்டிருக்கும் வழிமுறைகளை குறைந்தது 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 10 ஆண்டுகள் வரையிலும் விடாப்பிடியாக பின்பற்றி வந்தாலே உங்கள் கர்மவினைகள் தீர்ந்து,அண்ணாமலை கிரிவலம் செல்ல வாய்ப்புகள் தேடி வரும்;


1.தூங்கி எழுந்ததும்,இரு உள்ளங் கைகளையும் பார்த்தவாறு “ஓம் உத்தாதலக மகரிஷிக்கு ஜெய்” என்று 9 முறை ஜபிக்க வேண்டும்;இதனால்,ஈசனது அருள் கிட்டிவிடும்;மூத்த தேவி என்ற மூதேவியின் அனுக்கிரகமும் கிட்டும்;

மூதேவியின் அனுக்கிரகம் கிட்டினால்,மூதேவியின் ஆட்சி நமது வசிப்பிடத்தை விட்டு போய்விடும்;

$குளிக்காமல் சாப்பிட்டால் மூதேவி ஆட்சி வரும்;

$வீட்டுக்குள் நுழைந்ததும் துர்நாற்றம் வீசினால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் குளிக்கும்போது ஆடையில்லாமல் குளித்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் குளிக்கும் போது உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் தூங்கும் போது உள்ளாடை கூட அணியாமல் தூங்கினாலும் மூதேவி ஆட்சி வரும்;

$ தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேலாக ஒரே ஆடையை அணிந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் சுய இன்பம் செய்தால் மூதேவி ஆட்சி வரும்;இதில் முற்பிறவி சாபங்களும் காரணமாக இருந்திருக்கும்;

$ வீட்டில் பொருட்கள்,புத்தகங்கள்,ஆடைகள் அடுக்கி வைக்கப்படாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ இங்கே விவரிக்க முடியாத சில அடாத செயல்களைச் செய்தாலும் மூதேவி ஆட்சி வரும்;

2.மேற்கு நோக்கி பல் துலக்க வேண்டும்;பாம்பு விரல் கொண்டு பல் துலக்க வேண்டும்;பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும்,சில நிமிடங்கள் கண்டிப்பாக பாம்புவிரல்(விரல்களில் நீளமானது) கொண்டு பல் துலக்கியே ஆக வேண்டும்;

$ கிழக்கு அல்லது வேறு எந்த திசையை நோக்கி பல் துலக்கினாலும் சாபம் உண்டு;ஒரு பெரிய புராணக் கதையும் உண்டு;


3.கிழக்கு நோக்கி சாப்பிட்டால் கல்வி வளரும்;
  மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வம் பெருகும்;
  வடக்கு நோக்கி சாப்பிட்டால் நோய் பெருகும்;
 தெற்கு நோக்கி சாப்பிட்டால் தேவையற்ற அவமானங்கள் வரும்;(ஒரு போதும் அழியாத புகழ் வராது)

$ இது நாம் வசிக்கும் வீட்டிற்கு மட்டுமே பொருந்தும்;உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் சாப்பிடும் போது மேற்கு நோக்கி சாப்பிட்டால் அவர்களுடன் பகை வரும்;உணவகங்களில் இந்த விதிமுறை பொருந்தாது;


4.தெற்கு நோக்கி ஆடைகளை துவைத்தாலும் வேண்டாத ஏச்சுகளும்,பேச்சுக்களும் நம்மைத் தேடி வரும்;


5.கண்களில் கறுப்பு மச்சம் உள்ளவர்கள்,நாக்கில் கறுப்பு மச்சம் அல்லது மச்சங்கள் உள்ளவர்கள்,எப்போதும் நெகட்டிவ்வாகப் பேசிக் கொண்டு இருப்பவர்கள்,கூடாத நாட்களில் பிறந்தவர்கள்=இவர்களிடம் ஒரு போதும் பழகக்கூடாது;

6.இப்பிறவியில் ஒரே ஒருமுறை கூட நீங்கள் அண்ணாமலை கிரிவலம் செல்லாமல் வாழ்ந்திருந்தால்,உங்களுடைய முன்னோர்களின் அருளாசி உங்களுக்கு போதுமான அளவு இன்னும் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம்;


7.தினமும் அன்னதானம் ஒரு துறவிக்காவது செய்ய வேண்டும்;
இயலாத பட்சத்தில்,வியாழக்கிழமை தோறும் அன்னதானம் செய்யலாம்;அதுவும் இயலாத பட்சத்தில் அமாவாசை தோறும் அன்னதானம் செய்யலாம்;


8.வறுமையும்,பண நெருக்கடியும் தீர தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகம் 33 முறை வீட்டுப்பூசெய் அறையில் ஜபித்து வர வேண்டும்;தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஜபித்துவர நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள்,சாபங்கள் நீங்கி செல்வ வளம் தேடி வரும்;


9.வாரம் ஒரு நாள் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;அல்லது மாதம் ஒருமுறை குலதெய்வ கோவில் சென்று வழிபடலாம்;அல்லது 90 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சென்று வழிபட்டே ஆக வேண்டும்;குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை செய்து வந்தால் அந்த தெய்வத்தின் அருள் சிறிது மட்டுமே கிட்டும்;


10.மொத்தம் 32 வகையான தானங்கள் செய்ய வேண்டும் என்று வேதங்களும்,சைவ சித்தாந்தங்களும் தெரிவிக்கின்றன; 

இதில் அன்னதானம்,

ஆடை தானம்,(சாதுக்களுக்கு காவி வேட்டியும்,துண்டும்;ஏழைகளுக்கு வேட்டி,சேலை,துண்டு,விரிப்பு)

பழ தானம்,

ருத்ராட்ச தானம்,

பூ தானம்,(கோவில் பூஜைகள்,விழாக்களுக்குத் தேவையான பூக்களை தானம் செய்தல்)

கோ தானம்,(ஒருபோதும் ஜெர்ஸிப் பசுவை தானம் செய்யக் கூடாது;அதனால் சிறிதும் கூட புண்ணியம் கிட்டாது;ஏனெனில்,அது செயற்கையாக இலுமுனாட்டிகளால் உருவாக்கப்பட்ட இனம்)

கன்னிகா தானம்(நம் மகளுக்கு நமதுசெலவில் திருமணம் செய்து வைப்பது/மகள் இல்லாதவர்கள் உறவினரின் மகளுடைய திருமண முயற்சிக்கு நேரடியாக உதவுவது),

எண்ணெய் தானம்,(ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொருவிதமான எண்ணெய்கள் அபிஷேகம் செய்யத் தேவைப்படுகின்றன)

விருட்ச தானம்(கோவிலுக்குள் அல்லது கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் வில்வமரம்,மா மரம்,வன்னி மரம்,வேப்ப மரம் போன்றவைகளை நட்டு மூன்று ஆண்டுகள் வரை பராமரிப்பது),

விஷய தானம்( ஆன்மீக கருத்துகளை பரப்புவது),

சொர்ண தானம்(ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு தாலி செய்து கொடுப்பது அல்லது தெரிந்த கோவிலில் ஐம்பொன் சிலை / தங்கத்தால் சிலை செய்யும் போது தங்கப் பாளம் தானம் செய்வது;தங்க ரதம் செய்ய தங்கப் பாளம் தருவது)

 புண்ணியத்தை தானமாக பெறுவது( வில்லங்கம் இல்லாத உறவினர்களை காசி,கயா,கேதார்நாத்,பத்ரிநாத் போன்ற ஆலயங்களுக்கு நமது சொந்தச் செலவில் அழைத்துச் செல்வது),

தண்ணீர் தானம்

குடை தானம்

காலணிகள் தானம்

வென்னீர் தானம்

பூமி தானம்(விவசாயத்திற்கு இலவசமாக இடம் தானம் செய்தல்,ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்து அதில்,அவர்கள் விரும்பும் விதமாக வீடு கட்டித் தருதல்)

கல்வி தானம்( படிக்கும் ஏழை மாணவ,மாணவிகளுக்கு கட்டணம்,கல்விக் கருவிகள்,சீருடை தயார் செய்துதருதல்)

ஊனமுற்றோர்களுக்கு வாகன தானம்

கண் பார்வைக்குரிய கருவிகள் தானம்

இந்த 19 தவிர இன்னும் 13 தானங்களும் உண்டு;

இவைகள் அனைத்தையும் செய்ய இயலாதவர்கள்,அகத்திய மகரிஷி அருளிய பன்னிரு திருமுறைகளை ஓதி பாடல் பெற்ற ஸ்தலங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் மாதம் தோறும் அன்னதானம் செய்து வர வேண்டும்;இந்த பதிகங்கள் ஆகஸ்டு 2017 இல் நமது மஹாவில்வம் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளன;

இப்படிச் செய்து வந்தால், 32 வகையான தானங்கள் செய்த புண்ணியம் மலையளவு திரண்டு வாழ்க்கையில் சகல சுகபோகங்களும் கிடைக்கும்;அப்படி கிடைக்கும் சுகபோகங்களும் கிட்டியப் பின்னர்,மனம் உடல் சுகத்தைத் தேடி ஓடாமல் நின்றுவிடும்;உள் நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும்;


அப்படி மனம் உள்நோக்கிச் செல்ல ஆரம்பித்தால்,நமது மனம் நமது ஆத்மாவுடன் ஒன்ற ஆரம்பிக்கும்;நான் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்க ஆரம்பிக்கும்;நாம் எங்கிருந்து வந்தோம்? என்ற சூட்சுமம் புரிய ஆரம்பிக்கும்;இதற்குத்தான் ஆத்ம விசாரம் என்று பெயர்;

இதன் அடுத்த நிலைகள் குரு மூலமாக உணரவேண்டியவை ஆகும்;சீடன் தயாராகும் போது குரு தோன்றுவார்;


11.சாட்சி இல்லாத உண்மையை இன்று விளையாட்டுத்னமாக வீடியோ எடுப்பதும்,அதை விளையாட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுவதும் சர்வசாதாரணமாக தமிழ்நாட்டிலேயே டீன் ஏஜ்ஜினர் செய்து வருகின்றார்கள்;இதன் மூலமாக உங்களது பிறவிகளின் எண்ணிக்கையை பல கோடி மடங்கு அதிகப்படுத்திவிடுகின்றீர்கள்;


ஏற்கனவே,நீங்கள் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப இன்னும் 22,000 முறை மனிதப்பிறவிகள் எடுக்க வேண்டும் என்று இருக்கும்;இந்த விளையாட்டுத்தனமான காரியத்தினால் உங்கள் பிறவிகளின் எண்ணிக்கை 3,00,22,000 என்று உயர்ந்துவிடும்;


12.சும்மா இருக்கும் மனதில் பொறாமை,ஏக்கம்,பழிவாங்கும் உணர்ச்சி என்று ஏதாவது உருவாகிக் கொண்டே இருக்கும்;இதைச் சரி செய்யவே ஒவ்வொரு நொடியும் மந்திர ஜபம் செய்யும் படி வலியுறுத்துகின்றோம்; கணபதி மந்திரத்திற்கு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது;கணபதியில் அஷ்ட கணபதி மந்திரத்தை நேரில் வந்து உபதேசம் பெறவும்;


13.கொஞ்சம் பக்குவப்பட்டதும் சிவ மந்திரம் அல்லது மஹா கால பைரவ மந்திரம் அல்லது மஹாவராகி மந்திரம் அல்லது 108 வகையான காளிகளில் ஒரு மந்திரம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


14.மந்திரங்கள் சாபங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன;எனவே,அசைவம்,மது இரண்டையும் 3 ஆண்டுகள் வரை கைவிட வேண்டும்;தினமும் ஒரு மணி நேரம் வரை ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;ஜப எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குள் 1,00,000 ஐ தாண்ட வேண்டும்;

சிவய நம- அம்-உம்- சிம்- கிலீம்- ஸ்ரீம்
ஓம் ரம் மம் யம் ஓம்

இம்மந்திரம் ஸித்தி ஆன பின்னர்,மற்ற மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


15.எண்ணங்களுக்கு வலிமை உண்டு;நல்ல எண்ணங்கள் எப்போதும் மென்மையாகவும்,மெதுவாகவும் செயல்படும்;
தீய மற்றும் ஆக்ரோஷமான எண்ணங்கள் படுவேகமாக செயல்படும்; என்று மனோதத்துவம் தெரிவிக்கின்றது;


எண்ண அலைகள் நீரின் மேல்புறமும்,கோலத்தின் அடியிலும்,கோவில் மூலவரின் பின்புறமும் படிகின்றது;
அதனால் தான் நாம் பிறர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் அருந்த ஆரம்பிக்கும் முன்பு,அந்த தண்ணீரை கொஞ்சம் ஸிங்கில் ஊற்ற வேண்டும்;பிறகு,அருந்த வேண்டும்;இதன் மூலமாக,அவர்களது எண்ணங்களின் தாக்கம் நம்மை சிறிதும் நெருங்காது;
அதே போல,வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தின் மீது குழந்தைகள் விளையாண்டு அழித்துவிட்டால்,கோபப்படவேண்டியதில்லை;அக்குழந்தைகளுக்கும்,கோலம் இட்டவர்களுக்கும்,கோலம் எந்த வீட்டின் வாசலில் இருக்கின்றதோ அங்கேயும் நல்ல எண்ணங்கள் வந்து சேர்ந்துவிடும்;


எந்த கோவிலுக்குச் சென்றாலும் மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது மூலவரின் பின்பக்கத்தை தொட்டு கும்பிட்டு வருவதால் நமது கோரிக்கைகள் நிறைவேறிவிடுகின்றன;


15.ஆடை இல்லாமல் குளிக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கின்றது;இந்த பழக்கத்தை கைவிடாவிட்டால்,40 வயதுக்குப்பிறகு,புத்தி பேதலிக்கும்;புத்தி பேதலித்தால் நாம் என்ன செய்கின்றோம்? என்பதே நமக்குத் தெரியாது;எனவே,இன்று முதல் குளிக்கும் போது ஒரு ஆடையாவது அணிந்து குளிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்;சித்தர் பெருமக்கள் நமக்காக கூறியிருக்கும் முக்கியமான உபதேசம் இது;

16.அசைவம்,மது பழக்கம் இருந்தால் அது நமது கஷ்டங்கள்,வேதனைகள் அதிகப்படுத்திட காரணமாக அமைந்துவிடும்;ஏனெனில்,அசைவம்,மது பழக்கம் உள்ளவர்களை சனிக்கிரகத்தினால் எளிதில் வசப்படுத்திட முடியும்;போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும்;


17.மதமாற்றம் நுண்ணிய பயங்கரவாதம் தான்;ஒருவன் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு போய்விட்டால்,அவனது/அவளது குலதெய்வம் சாபம் உடனே அவர்களை பீடிக்கும்;அடுத்தபடியாக,அவனது/அவளது முன்னோர்களாகிய பித்ருக்களின் சாபமும் அவர்களை பீடிக்கும்;

இதனால்,மதம் மாறிய ஆரம்பத்தில் பணம்,வசதிகள் என்று இருந்தாலும் சாபங்கள் செயல்பட ஆரம்பிக்கும் போது புதிய மதத்தின் தலைவரால் காப்பாற்றிட முடியாது;

2000 ஆண்டுகளுக்கு முன்பு,உலகம் முழுவதும் இந்து மதம் மட்டுமே மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது;மதம் மாறுவதை தடுப்பதும்,மதம் மாறியவர்களை மீண்டும் நமது மதத்திற்கு கொண்டு வருவதும் மிகப் பெரும் புண்ணியம் ஆகும்;

18. “காமம் புகும் முன்பு காயத்ரி மந்திர ஜபம் மனதில் புக வேண்டும்” என்பது சித்தர்களின் உபதேசம்;இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதிகளும் பூணூல் அணிந்திருந்தார்கள்;விவசாயிகள்,கொல்லர்கள்,பறை அடிப்பவர்கள்,நெசவாளர்கள்,க்ஷத்திரியர்கள் என்று அனைவருமே பூணூல் அணிந்து,காயத்ரி மந்திரம் தினமும் ஓதி வந்தார்கள்;

800 ஆண்டு கால இஸ்லாமியப் படையெடுப்பு இதை தகர்த்துவிட்டது;300 ஆண்டு கால கிறிஸ்தவ ஆங்கிலேய படையெடுப்பு நமது பண்பாட்டில் இருந்து பிரித்துவிட்டது;ஆதாரம்;ஓஷொ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள்;

எல்லோரும் தினமும் யோகா அல்லது ப்ராணயாமம் அல்லது சரக்கலை பயிற்சி தினமும் செய்து வர வேண்டும்;


19.குலதெய்வம் கோவில் மற்றும் ஊரில் இருக்கும் பழமையான கோவிலை பராமரிப்பு அல்லது புனர்நிர்மாணத்திற்கு யார் முயற்சி செய்தாலும் நம்மால் ஆன உதவிகள் செய்ய வேண்டும்;இதனால்,நமது ஜாதகத்தின் படி இருக்கும் நீண்ட கால தோஷங்களின் உக்கிரம் 95% அளவுக்கு குறைந்துவிடும்;

20.வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும்;சனிக்கிழமை தோறும் உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;

21.வியாழக்கிழமைகள் தோறும் அன்னதானம் செய்து வந்தால்,மறு பிறவியில் நாடாளும் பதவி தேடி வரும்;பாழடைந்த கோவிலை புனர்நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்தால்,நீண்ட காலம் நாடாளும் பதவியில் இருப்பீர்கள்;

22.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்பதுதான் நமது தமிழ்ப்பண்பாடு;இதுவே இந்துப் பண்பாடாக மாறவும் செய்தது;இதன் உள்ளார்த்தம் என்ன? இந்துப் பண்பாடுதான் தமிழ்ப் பண்பாடு;தமிழ்ப் பண்பாடுதான் இந்துப்பண்பாடு;

இதை நிர்மூலமாக்கும் வேலையைத்தான் இன்றைய இணைய தொழில் நுட்பமும்,செல் போன் தொழில் நுட்பமும் செய்து வருகின்றன;மேற்கு நாடுகளில் இருந்து நமது நாட்டில் பிரபலமாகும் எல்லா புதுமைகளும் பண லாபத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டவை;மனித நேயத்தின் அடிப்படையில் ஒருபோதும் உருவாக்கப்படவில்லை;

உதாரணமாக ஃபேஸ்புக்கும்,வாட்ஸ் அப்பும் நேரில் சந்திக்காமலேயே இருவரிடம் பகையையும்,வெறுப்பையும் உருவாக்கி வருகின்றன;ஒற்றுமையை உருவாக்கவில்லை என்பதை உணருங்கள்; எனவே,ஓரளவுக்கு மேல் இவைகளுக்கு முக்கியத்துவம் தருவது பேராபத்தினைத் தரும்;

23.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவத்திலும் மருத்துவம்+மனோதத்துவம்+ சமுதாய ஒற்றுமை போன்றவைகளை உள்ளடக்கிய ஆரோக்கியம் ஒளிந்திருக்கின்றது;இதை தகர்த்தால் மட்டுமே நமது பாரத நாட்டை மதமாற்றிடமுடியும்;இதற்கு மாற்று நாம் நமது குடும்பத்தோடு வாரம்/மாதம் ஒரு முறை கோவிலுக்குச் சென்று வழிபடுவதும்,பண்புப் பயிற்சி முகாம்களுக்கு நமது குழந்தைகளை (15 வயது முதல் 25 வயதிற்குள்) அனுப்பி வைப்பது மட்டுமே!!!

24.புரிந்து கொள்வதும்,விட்டுக் கொடுப்பதும் தான் கணவன்,மனைவி தத்துவம்;தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு ஒரளவாவது விட்டுக்கொடுக்கும் சுபாவம் இருக்கின்றது;இங்கிலீஷ் மீடியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 வரை படித்தவர்கள் பெரும்பாலும் தமது சிறு சிறு தவறுகளைக் கூட ஒப்புக்கொள்வதில்லை;

25.ஒரு போதும் வடக்கு நோக்கி தூங்குவது கூடாது;அது மூளையில் பலவிதமான பிரச்சினைகளை உருவாக்கி,மன நிலையை பாதிக்கின்றது;
தூங்கும் போது,தூங்குபவரின் மூன்று முழம் தூரத்தில் செல் போனை ஆன் செய்து வைப்பது நன்று;அதன் கதிர்வீச்சு பலருக்கு ஞாபக மறதியை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது;

ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 5 மணி நேரம் வரை தூங்க வேண்டும்;

26.ஆடையில்லாமல் தூங்குவதும் மாபெரும் தவறு;ஆடையில்லாமல் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதும் தவறு; காரணம் நமது குலதெய்வமும்,நாம் தினமும் ஜபிக்கும் தெய்வமும் நள்ளிரவில் நம்மை பார்ப்பதற்கு சூட்சுமமாக வரும்;தினமும் வராது;வாரம் ஒரு நாள் வரும்;அது எந்த நாள் என்பது எவருக்கும் தெரியாது;

அப்படி வரும் போது ஆடையில்லாமல் தூங்கும் போது அந்த தெய்வீக சக்திக்கு வரம் தரும் எண்ணம் இல்லாமல் போய்விடுகின்றது;சித்தர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து சொன்ன தெய்வீக ரகசியம் இது;

27. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது ஒரு பழமொழி;நாம் இன்று தினமும் அவமானப்படுகின்றோம் என்றால் அதற்கு யாரும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ காரணம் அல்ல;நமது முற்பிறவிகளில் 4 இல் நாம் செய்த திமிர்த்தனம் மட்டுமே காரணம்;

28.எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்வது தவறு;தற்கொலைக்கு பிறரை தூண்டுவதும் மாபெரும் தவறு;தற்கொலை செய்பவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் மறுபிறவி அமைவது கிடையாது;பல தற்கொலை செய்த ஆவிகள் 6,000 ஆண்டுகள் வரையும் கூட பசியோடும்,பட்டினியோடும் அலைந்து வருகின்றன;

29.யாரையும் எப்போதும் எதற்காகவும் ஏங்க வைக்க வேண்டாம்;அதுவும் பிறவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடும்;

கிண்டில்,முகனூல்,வலைப்பூ வாசிப்பு அவசியம் தான்;புத்தகங்களில் தான் உண்மைத் தன்மை இருக்கின்றது;புத்தக வாசிப்புக்கு வாரம் ஒரு முறை நூலகம் செல்லவும்;அங்கே செல் போனை அணைத்துவைத்துவிட்டு வாசிப்புப் பழக்கத்தை தொடரவும்;

30.யாரிடமும்,எப்போதும்,எதற்காகவும் இலவசமாக எதையும் வாங்கக் கூடாது;அப்படி வாங்கினால் பெருமளவு புண்ணியம் உங்களை விட்டுப் போய்விடும்;