Tuesday, March 19, 2013

புத்தக வாசிப்பின் மகிமை!!!




ஏதாவது ஒரு புதிய புத்தகம் வாசித்தவரின் உரையாடலில் ஒரு நறுமணம் கமழ்கிறது என்று திபத் பழமொழி கூறுகிறது.

உண்மைதான்.ஒருமுறை ஸ்ரீவினோபா பாவே எழுதிய ‘கீதைப் பேருரைகள்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன்.அவ்வாரம் சேலத்தில் பொங்கல் விழா பற்றி சிறப்புரை ஆற்றினேன்.திரு.ஏ.ஏ.ராமாராவ் என்ற பெரியவர், “அண்மையில் ஏதோ ஒரு நல்ல புத்தகம் படித்த தாக்கம் உங்கள் உரையில் இருந்தது” என்றார்.

ஆம்,நூல் வாசிப்பதால் நன்மைகள் ஏராளம்.உலகில் எந்த சக்தியும் அவர்களது வாசிப்பைத் தடுக்க முடியாது என்பது  போல் புத்தகப்பித்தர்கள் இருக்கிறார்கள்.ஒருமுறை தினமணிக்கதிரில் வந்த கட்டுரையில்,
“சதா குடித்துக் கொண்டே இருக்கும் கணவனைப் பற்றி குடும்ப நண்பரிடம் மனைவி புகார் செய்தாள்.அந்த நண்பரின் அறிவுரையால்(கவுன்சிலிங்) கணவன் மனம் திருந்தினான்.ஆனால்,காலப் போக்கில் புத்தகப்புழுவாக மாறினான்.அதே நண்பரிடம் சென்று, ‘பழைய படி அவரை குடிகாரனாகவே மாற்றிவிடுங்கள்;அந்தக் கொடுமையே பரவாயில்லை’ என்று மன்றாடினாள் மனைவி. அத்தனை போதை புத்தக வாசிப்பில் உள்ளது என இகழ்வது போல புகழ்ந்து பேசப்படுகிறது.
ஆங்கில எழுத்தாளர் பிரான்ஸின் பேக்கன்  என்பவர் Reading make a ready man என்றுகூறுகிறார்.ஆன்மீகக்கடலோ தினமும் புத்தகம்/வலைப்பூவில் சில பக்கங்களாவது வாசிக்காதவர்கள் உயிர் இருந்தும் நடைபிணம் என்கிறது.ஏனெனில்,அறிவே சக்தி;வலிமையே வாழ்க்கை என்பதை புத்தகப்புழுக்களாக இருப்பவர்களுக்குத் தான் தெரியும்.(பிரபலமான வலைப்பூ எழுத்தாளர்கள் ஒவ்வொருவருமே தனது துறைசார்ந்த புத்தகங்கள்,வலைப்பூக்களை தினமும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள்;அவ்வாறு வாசிப்பதை அவர்கள் நிறுத்திவிட்டால்,அவர்களின் வலைப்பூவில் சுவாரசியம் குறைந்து போய்விடும்)

பேரறிஞர்களும்,சிந்தனையாளர்களும் புத்தகவாசிப்பை அன்றாடக் கடமையாக கருதி அதற்கு நேரம் ஒதுக்கினார்கள்.
பெர்னாண்ட் ரஸ்ஸல் என்ற தத்துவ ஞானி, ‘ஒரு புத்தகப்புழு இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது’என்று தனது கல்லறையில் எழுத வைத்தார்;
புத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி காந்திஜி கூறுகையில், “நல்ல புத்தகங்களை வாசிக்கும்போது, நல்ல நண்பர்களுடன் இருப்பதாக உணர்கிறேன்” என்கிறார்.
தீட்சை பெற்று ஊர் திரும்பும்போது சீடனுக்கு குரு செய்யும் உபதேசம் : உண்மை பேசு,தர்மத்தைக் கடைபிடி;சுயவாசிப்பு(தினமும் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்தல்) செய்வதில் தவறாதே
தினசரி நல்ல புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் அனுபவம் ஒரு குளியல் போல ஆழ்மனதில் உள்ள மாசுக்களை துடைத்தெறிகிறது. மனச்சோர்வை நீக்குவதற்கு மனநலமருத்துவர்கள் எழுதித் தரும் ‘ப்ருஸ்கிருப்ஸனில்’ புத்தகம் வாசிப்பதையும் சேர்த்துவிடலாம்.

நூல்வாசிப்பு,சிந்தனையைத் தூண்டும் யோகாப் பயிற்சியைப் போன்றது; ஒரு தியான நிலையைப்  போன்றது;ஒரு உளவியல் தெரபியைப் போன்றது.ஒரு சுய ஹீலிங்கைப் போன்றது.
விழுப்புண் படாத நாளை ஒரு வீரன் விரும்புவதில்லை;என்று வள்ளுவர் கூறுவது போல, தினசரி வாசிப்பு இல்லாத நாள் என்று நமக்கு ஒரு நாளும் இருக்கக் கூடாது.
வாசிப்பில் மோகம்,குறையாத ஈர்ப்பு ஒரு மனிதனைச் சான்றோனாக்குகிறது.புதிய புத்தகங்களை வாங்கிப்படிக்கும் தாகம் மேலும் கூடுகிறது.
நல்ல புத்தகங்கம்,நல்ல இணையதளம்/வலைப்பூ நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் உற்ற தோழன் என்பது பலரின் அனுபவம்.கண்டதைத் தின்பவன் பயில்வான்;கண்டதைக் கற்க பண்டிதனாவான்.
சிலவருடங்களாக சென்னை,ஈரோடு,ராஜபாளையம்,மதுரை,நாகர்கோவில்,கோயம்புத்தூர்,காஞ்சிபுரம்,மயிலாடுதுறை,சிதம்பரம்,பாண்டிச்சேரி,நாகர்கோவில்,திருச்செந்தூர் போன்ற மாநகரங்களில் புத்தகப்பெருவிழா நடைபெற்றுவருகிறது.புத்தகக் கண்காட்சியில் பலர் ஏராளமான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றார்கள்.கிராம நூலகங்களில் கூட  வாசகர் கூட்டம் நிறைகிறது.ஆனால்,அவர்களின் அறிவுத்தேடலுக்கு ஈடுகொடுக்கும் புத்தகங்கள் கிடைப்பதில்லை என்பது மட்டுமே சோகமான வலி !!!
மனிதனின் அறியாமையை நீக்கி,ஞான ஒளி ஏற்றும் விழிப்புணர்வு தீபங்களே புத்தகங்களும்,வலைப்பூக்களும்,இணையதளங்களும்.சிறந்த படிப்பாளிகளே சிறந்த படைப்பாளர்களாக மிளிர முடியும்;நிறையப் படித்தால் தான் சிறந்த பேச்சாளராகவோ,எழுத்தாளராகவோ,பொறுப்பு மிக்க குடும்பத்தலைவராகவோ,தேசபக்தி நிறைந்த இந்தியனாகவோ,தான் செய்யும் தொழிலில் எக்ஸ்பர்ட்டாகவோ,தான் பார்க்கும் வேலையில் முன்மாதிரியாகவோ,இவை அனைத்தும் நிறைந்த சகலகலா வல்லவனாகவோ பரிணமிக்க முடியும்.எனவே,தனது துறையில் சாதிக்கும் ஆர்வமுள்ள எவரும் தினமும் ஏதாவது புத்தகம் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்;
வரலாறு படைக்க விரும்புவோர் முதலில் வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்;அதற்கு தினமும் புத்தக வாசிப்பு பழக்கமே முதல் தகுதி என்று ஐரோப்பாவை தனது போர்வியூகத்தினால் ஆண்ட நெப்போலியன் சொல்லியிருக்கிறார்.இவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,நமது தமிழ் மன்னர் ராஜராஜசோழன் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார்.இவர் தமது இளமைவயதில் சுமாராக பத்தாயிரம் ஓலைச்சுவடிகளை வாசித்தவர்;அதில் ஒன்றுதான் நாம் விரும்பும் சித்தரை நேரில் தரிசிக்கும் வழிமுறை என்ற ஓலைச்சுவடி! இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறையைப் பின்பற்றி வெறும் ஏழே ஏழு நாட்களில் தாம் விரும்பும் சித்தரை நேரில் தரிசித்திருக்கிறார்.பிறகு,மாதம் ஒருநாள் அந்த சித்தரை தரிசித்து தமது ஆத்மபலத்தை அதிகரித்திருக்கிறார்.தாம் சோழ மன்னராக பொறுப்பேற்றதும்,அந்த சித்தரின் அருள் ஆலோசனைப்படியே தமது ஆட்சியை நடத்தியிருக்கிறார்.அதனால் தான் இந்த உலகத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்ய முடிந்தது;அலெக்ஸாண்டருக்கும் முன்பே இந்த உலகத்தை ஆண்டது நமது தமிழ் மன்னர் ராஜராஜசோழன் ஆவார்.அவருக்கு இந்த புத்தகவாசிப்பு(அக்காலத்தில் ஓலைச்சுவடி வாசிப்பு!!!) ஆதாரமாக அமைந்திருக்கிறது.
வரலாறு படைப்பவர்கள் தனது வரலாற்றை எழுத நேரமில்லாத அளவுக்கு தினமும் திட்டமிட்டும்,சாதுர்யமாகவும் உழைக்க வேண்டும் என்பதும் சுவாமிவிவேகானந்தரின் வாக்கு.
நமது ஆத்மார்த்தமான நிரந்தர குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பரிந்துரைப்படி ஒவ்வொரு இல்லத்திலும் சிறு நூலகம் இருக்க வேண்டும்;நல்ல புத்தகங்களை படித்து குடும்பத்தார் அதைப் பற்றி விமரிசனம் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்;சினிமா,அரசியல் பேச்சு மற்றும் நமது பண்பாட்டை சிதைக்கும் கொலைக்காட்சியின் தாக்கத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
ஒரு நூலகம் திறக்கப்பட்டால்,பத்து காவல் நிலையங்களை  மூடிவிடலாம்!!!
புத்தகங்கள் வாழும் இடத்தில் நமது கடவுளும் வாழ்ந்து வருகிறார்.நமது பாரத நாட்டில் காஞ்சிப் பல்கலைக்கழகம்,நாலந்தா பல்கலைக்கழக நூலகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இருந்தன;அந்நிய நாடுகளில் இருந்து வந்த மத வெறியர்கள் அந்த நூலத்தைக் கொளுத்தியபோது,தொடர்ந்து ஆறு மாதங்கள் எரிந்துகொண்டே இருந்தன.அதில் சுமாராக இருபது லட்சம் வருடங்களாக நமது முன்னோர்கள் தமது அறிவு,ஆத்மபலத்தால் கண்டறிந்த மானுட இனத்துக்குத் தேவையான அறிவுத்தொகுப்புகள் அழிந்தே போயின.
எவ்வளவு அதிகமாக புத்தகம்,வலைப்பூ,இணையம் வாசிக்கிறோமோ அவ்வளவு விரைவாக வளாகத் தேர்விலோ,குழு விவாதத்திலோ சுலபமாக வெற்றியடைய முடியும்.
எவ்வளவு வயது வரை படிக்கிறோமோ,அவ்வளவு காலத்துக்கும் நமது வருமான அளவு உயர்ந்துகொண்டே செல்லும் என்பது இந்த அறிவு யுகத்தின் வரம் ஆகும்.
புத்தகம் வாசிப்பு என்பது ஒரே நாளில் உருவாகிவிடாது;நமது குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்து வீட்டில் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை நாம் உருவாக்கிட வேண்டும்;அது குறைந்தது நான்கு ஆண்டுகள் தொடர்ந்தால்,அதுவே புத்தக வாசிப்பாக மலர்ந்துவிடும்;நாம் வாழ்ந்து வரும் அறிவு யுகத்தில் சாதிக்கவும்,லட்சக்கணக்கான சம்பளம் ஒவ்வொரு மாதமும் வாங்கிடவும் இந்த பழக்கம் நம்  ஒவ்வொருவருக்குமே தேவை;
நமது குடும்பநூலகத்தில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகப்பட்டியல்களை இங்கே கொடுத்துள்ளோம்.இன்று முதல் நாமும் ஒரு குடும்ப நூலகத்தை ஆரம்பிக்கலாமா!!!

1.சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்

2.ஞான தீபம்  மூன்றாம் பகுதி

3.தேசப்பிரிவினையின் சோகவரலாறு=எழுதியவர் ஹெ.வே.சேஷாத்திரி

4.என்று காண்போம் எங்கள் சிந்துவை=எழுதியவர் கேப்டன் எஸ்.பி.குட்டி

5.எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள்

6.ஷிவ் கெரா எழுதிய உங்களால் வெல்ல முடியும்

7.ஜேம்ஸ் ஆலன் எழுதி எம்.எஸ்.உதய மூர்த்தி தமிழில் மொழி பெயர்த்த வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

8.டாக்டர் விஜயலக்ஷ்மி பந்தையன் எழுதிய ஆழ்மனத்தின் சக்திகள்,நர்மதா பதிப்பகம் வெளியீடு

9.நான் ஏன் நாத்திகனானேன்? தந்தைப்பெரியார்

10.வந்தார்கள்,வென்றார்கள்=மதன் எழுதியது;விகடன் பிரசுரம் வெளியீடு

11.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ

12.காமத்திலிருந்து கடவுளுக்கு=ஓஷோ(காமம் பற்றிய சிக்கல்கள் தீரவும்,சந்தேகங்கள் தெளியவும்)

13.ரொமான்ஸ் ரகசியங்கள்=விகடன் பிரசுரம் வெளியீடு(புதுமணத்தம்பதிகளுக்கு பரிசளிக்க)
14.மனசே,ரிலாக்ஸ் ப்ளீஸ்(இரண்டு பாகங்கள்) =சுவாமி சுகபோதானந்தா

15.ஓம்சக்தியும் அணுசக்தியும்(பதிப்பகம் பெயர் தெரியவில்லை;ஆனால்,பழைய புத்தகக்கடைகளில் மட்டும் கிடைக்கும்)

16.இது ராஜபாட்டை அல்ல;நடிகர் சிவக்குமார் தனது சினிமா வாழ்க்கையை எழுதியிருக்கிறார்.

17.முன் கதைச் சுருக்கம்-எழுத்தாளர் பாலகுமாரனின் ஆட்டோபயோகிராபி(தன் வரலாறு)

18.கண்சிமிட்டும் விண்மீன்கள் மராட்டிய மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்

19.எனது போர் முறை =சுவாமி விவேகானந்தர்

20.கரித்துண்டு=மு.வ.,

21.மனம் தரும் பணம்=கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சுயமுன்னேற்ற நூல்

22.அடுத்த நொடி=நாகூர் ரூமி

23.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ

24.வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்=சுமாராக நான்கு ஆண்டுகள் தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மவுனவிரதமிருந்து விட்டு பிறகு தனது கொள்கையை நவீன மதமாக வெளிப்படுத்தியவர் ஓஷோ.இவரைப் பற்றி அறிந்து கொள்ள இவரின் புத்தகங்களில் முதலில் இந்தப் புத்தகத்தைத் தான் வாசிக்க வேண்டும்.அப்போதுதான் ஓஷோவைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.நமது சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

25.ஸ்ரீரங்கன் உலா=ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் அந்நியர் படையெடுப்பால் நாற்பது ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்தது;அந்த காலத்தில் ஸ்ரீரங்கநாதரை எப்படியெல்லாம் பாதுகாத்தார்கள் என்பதை விவரிக்கும் நாவல் இது.

26.நீங்களும் முதல்வராகலாம்=நக்கீரனில் தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர்.(இன்றைய ஏமாற்று யுகத்தில் நமது துறையில் நம்மை,நமது பதவியைத் தக்கவைக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை விவரிக்கும் நூல்)

27.விவேகானந்தர் பாறை: நினைவுச்சின்னத்தின் வரலாறு=ஏக்நாத் ரானடே,வெளியீடு:விவேகானந்த கேந்திர வெளியீடு(ஒரு தனி மனிதன் தமது ஒருங்கிணைப்புப் பணியால் விவேகானந்தர் பாறையில் எப்படி விவேகானந்தர் தியானமண்டபத்தை கட்ட போராடினார்? என்பதை உணர்வு பூர்வமாக விவரிக்கும் நிஜக்கதை;இதை வாசித்தப் பின்னர்,கன்னியாக்குமரி விவேகானந்த பாறைக்கு ஒரு முறை பயணித்துப் பாருங்கள்;ஏக்னாத் ரானடேயின் தியாகம் புரியும்;நாம் படும் கஷ்டமெல்லாம் கஷ்டமே இல்லை என்பதும் தெரியும்;நமது தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரித்துவிடும்)

28.மனித மனத்தின் மகத்தான சக்திகள்=இந்து பப்ளிகேஷன்ஸ் வெளியீடு(நமது மனதின் சக்தியை பயன்படுத்த விரும்புவோர் படிக்க வேண்டிய மனோதத்துவ அரிச்சுவடி புத்தகம் இது)

29.டாலர் தேசம்=பா.ராகவன்(அமெரிக்கா எப்படி பல நாடுகளிடையே போரை மூட்டி வல்லரசானது? என்பதை விவரிக்கும் நூல்)

30.ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்=கண்ணதாசன் பதிப்பகம்

31.காவல் கோட்டம்(சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை எப்படி இருந்தது என்பதை எழுத்தால் கொண்டுவந்திருக்கும் ஆச்சரியம் இது!!!)

32.ஆரிய மாயை,திராவிட மாயை ஒரு கட்டுக்கதை

33.ஏழைபடும் பாடு=விக்டர் ஹ்யூகோ,தமிழில் கவியோகி சுத்தானந்த பாரதி(பிரஞ்சு புரட்சியின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நாவல்;ஒரு அருமையான காதல் கதையும் இதில் உண்டு)

34.உழவுக்கு வந்தனம்=கோ.நம்மாழ்வார்(சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வெளியீடு)

35.பாரத நாட்டின் விஞ்ஞானச் சாதனைகள்=பாரதிய கலாச்சார சமிதி வெளியீடு

36.சில்லறை வர்த்தகத்தைச் சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு=எஸ்.குருமூர்த்தி,சேகர் ஸ்வாமி

37.சகோதரி நிவேதிதை=ஸ்ரீஇராமக்ருஷ்ணமிஷன் வெளியீடு

38.விலைராணி=சாண்டில்யன்(சாணக்கியரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் நாவல்)

39.யவன ராணி=சாண்டில்யன்(தமிழர்களின் கடற்படையின் வலிமையை நாவலாகச் சொல்லும் புத்தகம்)

40.தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்=ரா.பி.சேதுப்பிள்ளை

41.எப்படி ஜெயித்தார்கள்? சில மார்கெட்டிங் சாகசங்கள்=ரமேஷ்  பிரபா

42.அர்த்தமுள்ள இந்து மதம்=கவியரசு கண்ணதாசன்(ஒரே புத்தகமாகவும்,பல பாகங்களாகவும் கிடைக்கின்றன)

43.தெய்வத்தின் குரல்=காஞ்சிப் பெரியவரின் பேச்சுக்களின் தொகுப்பு(இந்து மதத்தின் வேர்கள் தமிழ்ப்பண்பாடு என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கும் நூல்!!!)

44.பைரவ ரகசியம்=காகபுஜண்டர்சித்தர் தருமலிங்க சுவாமிகள் எழுதிய          பைரவ வழிபாட்டுமுறைகளின் தொகுப்பு,வெளியீடு:காகா ஆஸ்ரமம்,திருஅண்ணாமலை

45.பைரவ விஜயம்=மிஸ்டிக் செல்வம் ஐயா

46.ஆன்மீகத்திறவுகோல்=மிஸ்டிக் செல்வம் ஐயா

47.ஆன்மீகப்பயணம்=மிஸ்டிக் செல்வம் ஐயா

48.ஒரு கோப்பைத் தேனீர்=ஓஷோ

49.உலகை ஆளவரும் இந்தியன்

50.பதஞ்சலி யோக சூத்திரம்=ஸ்வாமி=இந்து பப்ளிக்கேஷன்ஸ்

51.திருக்குறள் ஞான அமுது=அகத்தியர் சன்மார்க்க சங்கம்,திருச்சி.

52.பொருளாதாரம் புதிரல்ல=சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

53.பெண்மையைப் போற்றுதும்,பெண்மையைப் போற்றுதும்

54.நம்பிக்கையை விதைக்கும் நல்லுள்ளங்கள்

55.நம்மை நாமே எப்போது உணர்வோம்

56.சீட்டுக்கட்டு மாளிகை(52 முதல் 56 வரையிலான புத்தகங்கள் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் வெளியீடுகள்)

57.சதுரகிரி தலபுராணம்=தாமரை நூலகம் வெளியீடு

58.பேசும் கலை=முனைவர் கு.ஞானசம்பந்தன்(வெளியீடு:விஜயா பதிப்பகம்,20,ராஜ வீதி,கோயம்புத்தூர்.0422-2394614,2382614)$ விஜயா பதிப்பகத்தின் பல நூல்கள் அரிய தகவல்களைத் தெரிவிக்கின்றன.ஆனால்,அவைகள் தமிழ்நாட்டின் பெரும்பாலான கடைகளில் கிடைப்பது அரிது;எனவே,இவர்களிடம் விலைப்பட்டியலையும் சேர்த்து வாங்கிக் கொள்வது நன்று.

59.நாதுராம் விநாயக் கோட்சே=தமிழில் இஜட்.ஒய்.ஹிம்சாஹர்.வெளியீடு:குமரிப்பதிப்பகம்,8,நீலா தெற்குவீதி,நாகப்பட்டிணம்.

60.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப்பதிப்பகம்
(*குமரிப்பதிப்பகத்தின் வெளியீடுகளும் மிகவும் அரிதான,அபூர்வமான நூல்கள் ஆகும்.இவர்களைத் தவிர பிறரிடம் கிடைப்பதில்லை)

61.ஹிந்து விழாக்களும்,விரதங்களும்=ஆர்.பி.வி.எஸ்.மணியன்(வெளியீடு:வர்ஷன் பிரசுரம்,தி.நகர்,சென்னை.044 24361141)

62.காக்கும் தெய்வம் ஸ்ரீமஹாபைரவர் வழிபாட்டுமுறைகள்=வேம்புச்சித்தர்(வெளியீடு:சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்,ராயப்பேட்டை,சென்னை.044 43993029)

62.சதுரகிரி யாத்திரை=குடந்தை ஸ்யாமா=விகடன்பிரசுரம் வெளியீடு

63.அகத்தியர் ஜீவநாடி=ஹனுமத்தாஸன்(இந்த புத்தகத்தின் மொத்தமும் இணைய வெளியில் வலைப்பூவாகக் கிடைக்கிறது)

64.காலப்பிரகாசிகை=ஜோதிடர்களுக்கு ஜோதிட ஆராய்ச்சிக்கு உதவும் நூல்=வெளியீடு தஞ்சை சரபோஜி மஹால் நூலகம் வெளியீடு
65.வானம் வசப்படும்=பிரபஞ்சன் எழுதிய நாவல்(ஆனந்த ரங்கப்பிள்ளை டைரிக்குறிப்பு என்ற புத்தகத்தின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் பிரஞ்சு அரசாங்கத்தில் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்,தினமணிக்கதிரில் வெளிவந்த தொடர் இது!!! சாகித்ய அகாடமி விருது பெற்றது)

இந்தப் பட்டியல் முடிவானது அல்ல;இன்னும் நீளும்;ஆனந்தவிகடன்,குமுதம்,ஜீனியர் விகடன்,தினமலர்,தினமணி,தினத்தந்தி,மாலைமுரசு,மாலை மலர்,சக்திவிகடன்,சுட்டிவிகடன் என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தினசரி,வார,மாத இதழிலும் புத்தக விமரிசனம்,பு(து)த்தகம் என்ற பெயரில் புதியதாக வெளிவந்திருக்கும் நூலைப் பற்றிய விமரிசனங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன;கூடவே,அதன் விலை,வெளியிடும் பதிப்பகம் போன்றவைகளும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.அந்தப் பக்கங்களைத் தொகுத்து வைத்துக் கொண்டால்,பிற்காலத்தில் அதிலிருந்து நமக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.


தவிர,உங்கள் ஊரில் புத்தகக்கண்காட்சி நடந்தால் குறைந்தது இரண்டு நாட்கள் சென்று ஒரு அலசு அலசினால்,நீங்கள் தேடும் புத்தகங்கள் நிச்சயமாக கிட்டும்.






ஓம்சிவசிவஓம்
   

Monday, March 18, 2013

குமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு!!!



கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி அல்லது மஞ்சள் ஆடை அணிந்து,கையில் விசிறியோடு அந்த மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி,திற்பரப்பு,திருநந்திக்கரை,பொன்மனை,பன்றிப்பாகம்,கல்குளம்,மேலாங்கோடு,திருவிடைக்கோடு,திருவிதாங்கோடு,திருப்பன்றிக்கோடு,    திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.
இங்ஙனம் பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம்’ எனப்படுகிறது.இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 87 கி.மீ!!!
ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள்.
ஹரியும் சிவனும் ஒண்ணு;என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம் என்பர்.ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது.
இதன் பின்னே ஒரு புராணக்கதை உண்டு.
இடுப்புக்கு மேலே மனித வடிவமும்,கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம்.சிவபக்தரான வ்யாக்ரபாத மஹரிஷியே புருஷாமிருகம் ஆனதாகச் செய்தி உண்டு.புருஷாமிருகம் விஷ்ணுநாமத்தைக் கேட்க விரும்பாத ஒரு விநோத ஜந்து!!!
தர்மர் ஒருமுறை ராஜஸீய யாகம் நடத்தத் திட்டமிட்டார்.யாகத்திற்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது;பீமனை இந்தப் பாலைக் கொண்டு வருமாறு பணித்தார் தர்மர்.
பீமனிடம் பனிரெண்டு ருத்ராட்சக் கொட்டைகளைத் தந்து புருஷாமிருகம் தாக்க வந்தால் அந்த ருத்ராட்சக்கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும்படி கூறினார் ஸ்ரீகிருஷ்ணர்.
வீசி எறியப்படும் ருத்ராட்சம் கீழே விழும் இடத்தில் சிவலிங்கம் ஒன்று தோன்றும்;லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்கத் தொடங்கிவிடும்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பனிரெண்டு ருத்ராட்சக்கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன்.
திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தது புருஷாமிருகம்.
பீமன், கோவிந்தா,கோபாலா என்று உரக்கக் கூறினான்.புருஷாமிருகத்தின் தவம் கலைந்தது;அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது;உடனே,பீமன் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது;
சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது;பீமன் கோவிந்தா,கோபாலா என்று மீண்டும் கத்தினான்;புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த ஆரம்பித்தது;
பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அது உடனே சிவலிங்கமாக மாறியது;இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பனிரெண்டாவது இடத்தில் (திருநட்டாலம்) ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது.
அந்த நேரத்தில் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர் பீமனுக்கும்,புருஷாமிருகத்துக்கும் “ஹரியும் சிவனும் ஒன்றே”என்ற தத்துவத்தை உணர்த்தினார்.
இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர்.தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.
பீமன் ருத்ராட்சங்களை வீசி எறிந்த இடங்களே கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு சிவாலயங்கள் ஆகும்.மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் க்ருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்;அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்;சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்;
“கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்;அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்;சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள், கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு.இதைத் தவிர,வேறு ஒரு கதையும் உண்டு;ஒரு அரக்கனுக்குப் பயந்து சிவபெருமான் இந்த பனிரெண்டு சிவாலயங்களுக்கும் ஓடிப்போய் மறைந்து நிற்பாராம்;இது சைவத்தை அவமதிக்கும் விதமாக இடையில் உண்டான இடைச்செருகல்.
ஆதாரம்:ஹிந்து விழாக்களும்,விரதங்களும் பக்கம் 178,179,180

ஓம்சிவசிவஓம்.

உலகை ஆளவரும் இந்தியா!!!

பணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவும் சீனாவும் முன்னேறி வருவதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 
மெக்சிகோவில் வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 'வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்நாடுகள் 2020-ம் ஆண்டு வாக்கில் உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும். இந்தியாவும் சீனாவும் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா கண்டமும், வட அமெரிக்கா கண்டமும் தொழில் புரட்சியின்போது அடைந்த வளர்ச்சியை விட அதிகமாகும். தொழிற் புரட்சியின்போது சில லட்சம் மக்கள் மட்டுமே முன்னேறினர். ஆனால் இந்த இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் முன்னேறியுள்ளனர். உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டு 43 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2008-ம் ஆண்டு 22 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது'.இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.                       ஆன்மீகக்கடலின் கருத்து: எங்கே ஆசிய நாடுகளான இந்தியாவும்,சீனாவும் உலக வல்லரசாகிவிட்டால்,நமது நிலை என்னாகுமோ? என்று இன்றைய வல்லரசுகள் அஞ்சுவது நிஜம்.எனவே தான் அவை சீனாவிடம் பேராசையைத் தூண்டிவிட்டு,சீனாவை இந்தியாவுக்கு எதிராக போர் செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.

Saturday, March 16, 2013

சுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்:



விழிமின், எழுமின்.வெளியீடு:விவேகானந்தா கேந்திரம்,கன்னியாகுமரி.விலை ரூ.25/-

^^இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்படி வாழ்வதற்கு முதலில் தேவை தனது முன்னோர்களைப் பற்றிய பெருமைகளை முழுமையாக அறிவதே!
(இன்றைய பாடத்திட்டம் இங்கிலாந்தையும்,அமெரிக்காவையும் புகழ்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,நமது முன்னோர்கள் எதற்கும் லாயக்கிலாதவர்கள் என்ற மாய பிம்பத்தை கி.பி.1947 முதல் உருவாக்கிவிட்டது.அதெல்லாம் பொய் என்பதை நிரூபிப்பதே ஆன்மீகக்கடலின் நோக்கம்)

^இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
‘உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வாரன்னிபோதத’ இந்த சம்ஸ்க்ருத வாசகம் கட உபநிஷத்தில் இருக்கின்றது.இந்த வாசகத்தை இந்து தேசத்தின் நவீன அல்டிமேட் ஸ்டார் சுவாமி விவேகானந்தர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

இதன் தமிழ் அர்த்தம் ‘உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை சிறிதும் அயராமல் உழை’ என்பதாகும்.

^இந்து தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தில் (கி.பி.3000 க்கும் மேல்) நடக்க இருக்கும் சம்பவங்கள் அனைத்தையும் குறித்து வைத்தனர்.அதைப் புரிந்து கொண்டு பாராட்டவே மேல்நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

நமது பாரத நாடு சீரழியக்காரணம் நமது புராதன இந்து மரபு மற்றும் சட்டதிட்டங்களை கடைசிவரைப் பின்பற்றாததுதான்.

^அன்பைப் பிரவாகமாக வெளிப்படுத்திய ஈசா எனப்படும் யேசுகிறிஸ்து’ ‘உனது எதிரியையும் ஆசிர்வாதி.உனது வலது கன்னத்தில் உன்னை ஒருவன் அடித்தால் நீ அவனிடம் உனது இடது கன்னத்தைக்காட்டு’ என போதித்தார்.

இந்துக்களின் வேதநூலான பகவத்கீதையில், கிருஷ்ணபரமாத்மா, ‘எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரி யாராக இருந்தாலும் அப்பா அம்மா சகோதரன், சகோதரி, தாத்தாவாக இருந்தாலும் நீ அவர்களை அழித்துவிடு.ஏனெனில் போர்க்களத்துக்கு வந்த பின்னர் பாசம் தேவையா?’ என நமக்கு உபதேசம் செய்தார்.

ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா பகவத்கீதையை அப்படியே பின்பற்றிவருகின்றது.
அகிம்சையின் மனித உருவமான புத்தரின் கொள்கையைப் பின்பற்றும் இலங்கை கூட பகவத்கீதையைப் பின்பற்றுகிறது.

நாம், இந்துதேசம் என இந்தியாவை அழைப்பதைக் கூட அவமானமாகக் கருதுகிறோம்.ஆனால்,ஏசு கிறிஸ்துவின் கொள்கைகளை 101% பின்பற்றுகிறோம்.

^வெள்ளைக்காரர்களின் லட்சியம்: தனி மனித சுதந்திரம் (அதனால்தான் அங்கே ஓரினசேர்க்கையாளர்களுக்கு தனி எம்.எல்.ஏ., எம்.பி. இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.)
அதன் மொழி: பணம் திரட்டும் கல்வி (அட நம்ம கல்வித் தந்தைகள் விஸ்வரூபமெடுத்தது இதனால்தான்)
அதற்கு வழி:அரசியல் (இந்தியாவை நாசக்காடாக்குவது அரசியல் என்பது புரிகின்றதா?தேசப்பாதுகாப்பு விஷயத்தில் கூட அரசியல் புகுந்து நாம் அசிங்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அதிகம்)

நமது இந்துதர்மத்தின் லட்சியம்*: முக்தி
அதற்கான மொழி : வேதம் ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்
அதற்கான வழி: துறவு
இந்த வழிமுறை* தற்போது வெளிநாட்டில் பின்பற்றத்துவங்கியுள்ளனர்.


^ஒருவன் போகங்களை அனுபவித்துத் தீர்க்காமல் போனால் அவன் கடவுளை அடையமுடியாது.இது உறுதி.நாம் இன்னும் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறோம் பல விஷயங்களில்!!!
இதற்குக்காரணம் உடல் பலவீனம்.அப்படி உடல் பலவீனமாக இருப்பதன் ஆதாரம் பலமில்லாத மூளை.

^ நம்மில் ஒருவன் எழுந்து பெரியவனாக முயன்றால் அவனை நாம் அனைவரும் இழுத்துக் கீழே ஒடுக்கிவிடுகிறோம்.ஆனால்,அன்னியன் ஒருவன் நம் அனைவரையும் அடித்து உதைத்தால் பரவாயில்லை.(ஏ! எனது சுயநலமிக்க தமிழினமே! மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும், வளைகுடாவிலும், இலங்கையிலும் நமது ரத்தங்கள் செத்துக்கொண்டிருந்தும் நமக்குச் சொரணையில்லையா? மானமும் வீரமும் நமது அடையாளம் என்பது இப்போது எங்கே?
ஏ! எனது இந்து இனமே! அமெரிக்காவிடமும் சீனாவிடமும் அவமானப்படுவதற்கா நமது முன்னோர்கள் நம்மை இவ்வளவு பெருமைமிக்க இந்துதர்மத்தில் வளர்த்தார்கள்.
அமெரிக்கா நம்மிடம் ‘நீங்கள் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சார உற்பத்திக்குத் தேவையான அணு மூலப்பொருளை உலகில் எந்த நாட்டிடமும் நான் வாங்கித் தருகிறேன்’ என நம்மிடம் பசப்புவார்த்தை சொல்லி நம்மை அடிமைப்படுத்தியது.
அணுஅயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும்,நமக்கு அணுமின்சார மூலப்பொருள் வாங்கித்தருவதிலிருந்து அமெரிக்கா எஸ்கேப்.ஆக அவனவனுக்கு அவன் காரியம் மட்டுமே முக்கியம்)
^மூன்று இந்துக்கள் ஒன்று சேர்ந்து வெறும் ஐந்து நிமிடம் வரை ஒரு காரியத்தை முடிக்கும் பொறுமை நமக்கு இல்லை.
அந்த ஐந்து நிமிடத்தில் ஒருவனை ஒருவன் தூற்றவும், முந்தவும் செய்வதால்தான் நமது இயக்கங்கள் தோற்றுவிடுகின்றன.

^ஐயமும்,பயமும் நம்மை முட்டாளாக்கும்.முதலில் நம்மிடையே இருக்கும் பொறாமையை ஒழித்துக் கட்டுவோம்.

^நாம் உண்மையில் உண்மைக்காக பணிபுரிந்தால் நமது பாரதம் வெறும் 25 ஆண்டுகளில் சர்வசக்திவாய்ந்த நாடாக மாறிவிடும்.(அப்படி மாறாமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ்,திக,கம்யூனிஸ்டுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன)

^இன்றைய கல்வி ஒரு குப்பை.அது திமிரும் அகம்பாவமும் நிறைந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது.மனதை மலரச்செய்யும் வேலை சிறிதும் இல்லை.
பிறரை மட்டம்தட்டும் போக்கு பிற வெளிநாட்டுமதங்களிடமிருந்து நம்மிடம் பரவியது.
மனிதனை மனிதனாக்கும் கல்வியே நமக்குத் தேவை.

^கிழக்கிந்தியக்கம்பெனி நமது இந்துக்கருவூலமான ரிக் வேதத்தை வெளியிடுவதற்கு கி.பி.1750களில் ஒன்பது லட்ச ரூபாய்களை (இன்று கி.பி.2009.இந்தப்பணம் எத்தனை கோடிகள்?) செலவழித்தது.

அதற்கு முகவுரை எழுதி ரிக் வேதத்தை வரிசைபடுத்துவதற்கு 20 ஆண்டுகள் ஆயின.

அதன்பிறகு அவற்றை அச்சிடுவதற்கு 25 ஆண்டுகள் ஆயின.
கி.பி.1000 துவங்கும் வரை இந்து தேசமான நம் பாரதத்தில் ஜாதிக்கொடுமைகள் கிடையாது.எல்லா ஜாதி மக்களும் சமஸ்க்ருதம் பயின்றனர்.பெண்களில் துறவிகள், மகான்கள், மன்னர்கள்,காவலர்கள், ஜோதிடர்கள்,உளவாளிகள்,ரவுடிகள் என அனைவரும் இருந்தனர்.
இஸ்லாம் மதம் நம்மிடம் 800 ஆண்டுகளாக தீராத இம்சை கொடுத்து இங்கே வளர்ந்தது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் 45 ஆண்டுகள் பூட்டிக்கிடந்தது.
300 ஆண்டுகள் கிறிஸ்தவம் இங்கிலாந்து ஆளுமை என்ற பெயரில் நம்மை செல்லரித்தது.நமது பரந்த மனப்பான்மையால் அது இப்போது செய்யும் அழிவு வேலைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
எப்போது நாம் நமது குழந்தைகளுக்கு நமது இந்துதர்மம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப்போகிறோம்?
ஒவ்வொரு இந்துவும் இந்த புத்தகத்தைப்படித்தால் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் பல மடங்கு பெருகும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
செயலாளர்,
விவேகானந்த கேந்திரம்,
விவேகானந்தபுரம்,
கன்னியாகுமரி-629702.

இணையதளம்:www.vkendra.org/

இந்துவாகப்பிறந்த ஒவ்வொரு இளைஞரும்,இளம்பெண்ணும் இந்தப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.அப்படி வாசித்தால், குடும்பப்பிரச்னை,அலுவலகப்பிரச்னை, நட்புப்பிரச்னை,காதல் பிரச்னை,கல்யாணத்தொல்லைகள்,கணவன் மனைவிபிரச்னை,அரசியல் பிரச்னை,சுகாதாரப்பிரச்னை இவை அனைத்தும் தீர்ந்துவிடும்.
அது எப்படி ஒரேபுத்தகத்தில் தீரும்? வாங்குங்கள்.வாசியுங்கள்.விடை இந்தப்புத்தகத்தில் ஒளிந்திருக்கின்றது.

மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?



ஆலோசனை தருபவர்:மனநலப் பேராசிரியர்,ஹார்வார்டு பல்கலைக்கழகம்,மனோதத்துவத்துறை.
(இந்தக்குறிப்புக்களை நான் கி.பி.1992 ஆம் வருடம் எனது கல்லூரி நாட்களில் எனது டைரியில் எழுதிவைத்தேன்.இந்த குறிப்புகள் எனது ஆளுமைத்திறனை உருவாக்கின)

அ)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.
ஆ)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.
இ)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
ஈ)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

உ)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்

ஊ)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.

எ)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.

ஏ)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.

ஐ)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

ஒ)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.

ஓ)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.

ஒள)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஃ)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

க) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.
ங)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.
ச)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவாக்குவது எப்படி?




நமது குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்?
நன்றி:உளவியலாளர்,டாக்டர் பெர்வீன் தாதாசஞ்சி

உங்கள் குழந்தையை உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள்.எதையும் திணிக்க வேண்டாம்.

குழந்தையை அணுகும்விதத்தில் ஒரே மாதிரியாக நடந்துகொள்ளுங்கள்.

குழந்தையின் செயலை விமரிசியுங்கள்.
குழந்தையை விமர்சிக்க வேண்டாம்.

ஒரு குடும்பமாக செயல்படுங்கள்.

குழந்தையை ஒப்பிட்டுப் பேசாமல் அவர்களிடையே இணக்கத்தை உருவாக்குங்கள்.

குழந்தையை மிரட்டினால் தொடர்ந்து கவனியுங்கள்.

நீங்கள் குழந்தையுடன் இருப்பதைவிட பெரியபரிசு எதுவும் கிடையாது.

நீங்கள் குழந்தையை அடிப்பது அது மற்றவர்களை அடிக்கத் தூண்டும்.

ஒரு முன்மாதிரியாக இருந்து குழந்தைகளிடம் நல்ல மதிப்பீடுகளை விதையுங்கள்.
ஒரு வேளையாவது குழந்தையோடு சேர்ந்து சாப்பிடுவது பந்தம் உருவாக உதவும்.

குழந்தை பொறுப்புள்ளவனா/ளாக மாறியதும் அவன/ளது சுதந்திரத்தை அதிகப்படுத்துங்கள்.

குழந்தையிடம் நிபந்தனையில்லாத பரிபூரண அன்பு செலுத்துங்கள்.

குழந்தையை விமரிசிப்பதைவிட புகழ்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

குழ்ந்தையுடன் பேரம் பேசுவது ஒன்றும் உங்கள் பலவீனம் அல்ல.


சில யோசனைகளைச் சொல்லுங்கள்.ஆனால் குழந்தை முடிவு செய்யட்டும்.

குழந்தை முக்கியமாக நினைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுங்கள்.

குறும்புப்பையன், கவனமில்லாதபெண் என்ற வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

வீடியோ, டி.வி.,கணினி விளையாட்டுக்களைக் குறைத்துவிடுங்கள்.
வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் குழந்தையுடன் அதிக நேரம் செலவழியுங்கள்.

வசதிகளால் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை குழந்தையிடம் சொல்லுங்கள்.

படுக்கையில் இருக்கும்போது பகலில் என்ன நடந்தது என்பதைப் பேசுங்கள்.

குழந்தை வளர்ந்ததும் இருக்கவேண்டிய பண்புகளை நினைத்துப் பாருங்கள்.

முறையான பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி அதனைக் கண்காணியுங்கள்.

புத்தகங்கள் கொடுத்து அவற்றின்மீதான ஆர்வத்தை வளர்த்தெடுங்கள்.

குழந்தை பாதுகாப்பாக உணர்வதற்கு வரம்புகளை விதியுங்கள்.

குழந்தையின் குறைகளை கேலி செய்வது அதன் சுயமதிப்பை குறையச் செய்யும்.
இந்தக்கருத்துக்கள் உங்கள் குடும்பத்தில் மிகச்சிறந்த அடுத்த தலைமுறையை நிச்சயம் உருவாக்கும்.

பாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு





பாரதம் அன்றும் இன்றும்

கடந்த 10,000 ஆண்டுகளாக எந்தநாட்டின் மீதும் பாரதம் படையெடுக்கவில்லை.

கணக்கிடுவதற்குத் தேவையான பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது பாரதம் தான்.பூஜ்ஜியத்திற்கு மதிப்பைக் கண்டறிந்தவர் தமிழ்நாட்டுக் கணிதமேதை ராமானுஜம்தான்.

உலகின் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலம் ஆகும்.இது கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
உலகம் முழுவதுமிருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.600 க்கும் மேற்பட்ட பாட வகைகள் இங்கு கற்பிக்கப்பட்டன.

ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்க்ருதம் தான்.கணிப்பொறி எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க ஏற்ற மொழி சமஸ்க்ருதம் தான் அமெரிக்கப் பத்திரிகையான
போர்ப்ஸ் 1987 ஜீலை மாத வெளியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் மனிதன் கண்டறிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம் தான்.இதை சரகர் என்ற இந்து ரிஷி கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.இன்று இங்கிலாந்தின் அரசி எலிசபெத் யோகாசனம் சார்ந்த ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றி வருகிறார்.45 வயதான பாப் பாடகி மடோனாவின் குரல் வளமும், கட்டுடலும் யோகாசனப்பயிற்சியால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

நாவிகேஷன் என்ற சொல்லப்படும் கப்பல்,படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதிக்கரையில் நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்துக்கள்.நவ்கத் என்ற சமஸ்க்ருத சொல்லே ஆங்கிலத்தில் நாவிகேஷன் ஆனது.

அதே போல தீ என்றால் நெருப்பு.ஆதிகாலத்தில் தீயை தமிழர்கள் வழிபட்டார்கள்.ஆங்கிலத்தில் கடவுள் என்ற வார்த்தைக்கு thee என்று பெயர்.எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பே இந்துயாவுடன் இங்கிலாந்து வாணிகத் தொடர்பு இருந்ததற்கு இந்த வார்த்தை ஒரு ஆதாரமாகும்.

பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்ததாக கூறுவதற்கு முன்பே கி.பி.5 ஆம் நூற்றாண்டிலேயே பாரதத்தின் பட்டாச்சாரியார் கண்டுபிடித்துவிட்டார்.மிகச்சரியாக
365.258756584 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியார் கண்டுபிடித்தார்.

கணிதத்தில் பையின் மதிப்பை கணிக்கிட்டவர் போதாயனார் என்ற பாரத ரிஷி ஆவார்.ஐரோப்பிய கணித மேதைகள் பிதோகரஸ் தேற்றத்தை விளக்குவதற்கு முன்பே அதாவது 6 ஆம் நூற்றாண்டிலேயே போதயனார் விளக்கிவிட்டார்.

கணிதத்தில் அல்ஜீப்ரா,டிரிக்னாமெட்ரி,கால்குலஸ் ஆகியவை பாரதத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.குவார்ட்ராடிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சாரியார் என்ற பாரதீயரால் 11 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

கம்பியில்லாத தகவல் தொடர்பை பாரதத்தின் ஜகதீஷ் சந்திர போஸ் முதலில் கண்டுபிடித்தார்.மார்க்கோனி அல்ல என அமெரிக்க நிறுவனமான I.E.E.E. உறுதியாக கூறுகிறது.

சுஸ்ருதர் என்ற பாரதீயர் 2600 வருடங்களுக்கு முன்பே சிசேரியன்,கேடராக்ட்,செயற்கைக்கால்,கை, கால் எலும்புமுறிவு, மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்துவ சிகிச்சையும் செய்து இருக்கிறார்.125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

அமெரிக்க டாக்டர்களில் 38%,விஞ்ஞானிகளில் 12% நாசாவில் 36%, மைக்ரோசாப்டில் 34%, இன் டெல்லில் 17%,சிராக்ஸ் ஸில் 13%, ஐ.பி.எம்மில் 28% இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.
இவ்வளவு பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது? நமக்கு இப்போதையத் தேவை; தேச பக்தி நிறைந்த சர்வாதிகாரி!!!