Thursday, February 4, 2021

வழிகாட்டும் குருமார்கள் பட்டியல் பாகம் 10

 வழிகாட்டும் குருமார்கள் பட்டியல் பாகம் 10

நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு,வழிகாட்டும் குரு என்று இரண்டு குருவின் அருள் தேவை;
வழிகாட்டும் குரு என்பவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
பின்வரும் பட்டியலைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்;
உங்களின் குரு யார்? என்பதை கண்டுபிடித்த பிறகு,தினமும் காலையில் 15 நிமிடங்கள்,இரவில் தூங்க ஆரம்பிக்கும் முன் 15 நிமிடங்கள் வரை உங்கள் குருவின் பெயரை ஜெபிக்க வேண்டும்.
அசுபதியில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வீட்டில் போட்டோ வைத்து சில நிமிடங்களாவது வழிபட வேண்டும்;
சுவாதியில் ஐக்கியமானவர்கள்:சுந்தரமூர்த்தி (சைவ சமய அடியார்களில் ஒருவர்!)
அல்லது
ஒடுக்கத்தூர் சுவாமிகள் ஜீவசமாதி,அல்சூர் ஏரி அருகில்,பெங்களூர் அவர்களை வழிபடலாம்;இவர் 1915 ஆம் ஆண்டு,தை மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று ஐக்கியமானார்;
மனதில் அடிக்கடி தோன்றும் விகாரமான காம எண்ணங்களை நீக்கும் ஆற்றல் உள்ள மஹான் இவர்;
விகாரமான காம எண்ணங்கள் அடியோடு நீங்க வேண்டும் என்று எண்ணும் மனிதர்கள் யார் வேண்டுமானாலும்,சுவாதி நட்சத்திர தினத்தன்று இந்த மஹானின் ஜீவசமாதிக்கு வர வேண்டும்.
ஒரு மணி நேரம் வரை மனப்பூர்வமாக தியானிக்க வேண்டும்;அவர்கள் அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை;
பல துறவிகளுக்கு ஞானத்தையும்,முக்தியையும் வழங்கிய அற்புதமான சுவாமிகள் இவர்!!!
அல்லது
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் மாநகரில்(தமிழ்நாட்டில் பல ராஜபாளையம் ஊர்கள் இருக்கின்றன) சஞ்சீவிமலை அடிவாரத்தில் சாந்தானந்தா சுவாமிகள் ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;
கோதை மங்கலத்தில் (பழனி அருகில்) மானூர் சுவாமிகள் ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
சத்குரு ஶ்ரீ சண்முகம் சுவாமிகள் சுவாதி நட்ச்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார். செங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கொல்லம் சாலையில் Indian oil bulk எதிரே ஐக்கியம் ஆகியுள்ளார்.
பரணியில் பிறந்தவர்கள் விசாகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை வழிபட வேண்டும்;
ஸ்ரீதர் சுவாமிகள்,மம்சாபுரம் பேரூராட்சி,
,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ;(சித்திரை மாதத்தில் வரும் விசாகம்)
திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் தாலுகா,மன்னார்கோவில் பகுதியில் ஶ்ரீ குழந்தை முத்தானந்த சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
ராமநாதபுரம் பகுதியில் உள்ள பெரிய பட்டனம் ஏரியாவில் இருக்கும் லட்சுமிபுரம் கிராமத்தில் ஶ்ரீ தாயுமான சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
காரைக்குடி கோட்டையூர் பகுதியில் ஶ்ரீ எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
திசயன்விளை யில் ஶ்ரீலஶ்ரீ தம்பான் சுவாமிகள் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
திண்டுக்கல் அருகே வடமதுரை ஊரின் அருகில் உள்ள கே. புதுப்பட்டியில் ஶ்ரீ கள்ளியாடி பிரம்மம் விசாகம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் அடிபணிய வேண்டும்;
காஞ்சிப் பெரியவா,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இவரது ஜீவசமாதி இருக்கின்றது;(மார்கழி மாதத்தில் வரும் அனுஷம் அன்று ஜீவசமாதி ஆனார்)
அல்லது
நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுகா,விஜயாபதி என்ற கடலோர கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் தவம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷியை அடிக்கடி வந்து(அனுஷம் நாளன்று) ஜபிக்க வேண்டும்;
அல்லது
பூண்டி மகான் ஐயா அவர்களின் ஜீவசமாதி சென்னை கலசப்பாக்கம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது;இவர் அனுஷம் அன்று ஐக்கியமானவர்! இவரது வரலாறு மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது;
அல்லது
ஆவுடையப்பர் ஐயா அவர்கள் மார்கழி மாத அனுஷம் அன்று திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்.இன்றைய திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய மூவர் ஜீவசமாதிக்கும் பின்புறம்(தெற்கு பக்கம்) இவரது ஜீவசமாதி இருக்கிறது;
ரோகிணியில் பிறந்தவர்கள்,கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்,திருப்பரங்குன்றம்;(புரட்டாசி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்)
வியாசர் ஆடி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்;
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவர்களில் ஒருவரை தினமும் வழிபட வேண்டும்;
ஆனி மாதத்தின் மூலம் அன்று அருணகிரிநாதர் அண்ணாமலையில் ஐக்கியமானார்;
ஐப்பசி மாத மூலம் அன்று கசவனம்பட்டி சுவாமிகளும்
அதே ஐப்பசி மாத மூலம் அன்று மணவாளமாமுனிகளும்
மார்கழி மாத மூலம் அன்று மூக்குப்பொடி சுவாமிகள் அண்ணாமலையிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூராடம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும்,யாகோபு சித்தர் மெக்காவிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
உத்திராடம் நட்சத்திரத்தில் கொங்கண சித்தர் திருப்பதியில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
சென்னை திருவொற்றியூர் நகரில் பட்டினத்தார் சுவாமிகள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார்;
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஒரு திருவோண நாளன்று மாயம்மாள்,சேலத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
சித்திரை மாத ஓணம் அன்று அம்மணி அம்மாள் சித்தர் பழனி கிரிவலப் பாதையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;விஜய பைரவர் கோவிலுக்கு அருகில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;
வைகாசி மாத ஓணம் அன்று சாக்கடை சித்தர் பழனியில் ஐக்கியமாகி இருக்கின்றார்;
நடுவப்பட்டி சுவாமிகள் என்ற ஶ்ரீ சற்குரு நாதர் சுவாமிகள் திருவோணம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.சிவகாசி அருகே அமைந்துள்ளது.
மாசி மாதத்தில் வரும் ஓணம் அன்று சத்குரு ஶ்ரீ மலையாள சுவாமிகள் ஜீவசமாதி செங்கோட்டை டூ கொல்லம் செல்லும் வழியில் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அவிட்டம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அவிட்டம் அன்று மாதவானந்த சுவாமிகள்,பாம்புக் கோவில் சந்தையிலும் (சங்கரன் கோவில் அருகில்) ஐக்கியமாகி உள்ளார்கள்;ராஜபாளையம் டூ தென்காசி ரயில் மார்க்கத்தில் இருக்கின்றது;ரயில் நிலையம்:பாம்புக்கோவில் சந்தை
அல்லது
கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஊர் பசுவந்தனை;இங்கே ஒரு ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் அன்று சங்கு சுவாமிகள் ஜீவ ஐக்கியமாகி இருக்கிறார்;
அல்லது
தகரம் தட்டி சுவாமிகள் என்ற மெட்டுக்குண்டு சுவாமிகள் அவிட்டம் நட்சத்திரத்தில் ஐக்கியமாகி உள்ளார். விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை இடையே மெட்டுக்குண்டு கிராமம் அமைந்து உள்ளது.
அல்லது
லட்சுமி அம்மாள் அவிட்டம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.இடம்:-senkottai பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் கொல்லம் செல்லும் சாலையில் Indian oil petrol station எதிரே அமைந்துள்ளது.
திருச்சி பகுதியில் கீழ தேவ தானம் கிராமத்தில் குருசாமி நகரில் ஶ்ரீ மலையாள மெளனகுரு சுவாமிகள் அவிட்டம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சதயம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன கெளபாலரை தினமும் வழிபட வேண்டும்;
அல்லது
மதுரை அழகர்கோவிலில் இருந்து சத்திரப்பட்டி(ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பெயரில் ஊர்/கிராமம் இருக்கிறது) செல்லும் வழியில் இருக்கும் ஏரியா சிங்கப்பூர் நகர்;இங்கே சதயம் நட்சத்திரத்தன்று முனீஸ்வர சுவாமிகள் ஐக்கியமாகி இருக்கிறார்.
அல்லது
சிவ பழனி ஞானிகள் விருத்தாச்சலம் என்ற ஊரில் உள்ள பழனிநாதன் சிவன்கோயில் வடமேற்கே1954 ஆம் ஆண்டு வந்த ஒரு சதய நட்சத்திர நாளன்று ஜீவ சமாதி ஆகி உள்ளார்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூரட்டாதி அன்று ஜீவசமாதி ஆனவர் சிவப் பிரபாகர்;கேரளா மாநிலம் ஓமலூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இவர் 723 ஆண்டுகள் வாழ்ந்தவர்;பாம்பாட்டி சித்தரின் முதல் சீடர்!!!
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன டமருகரை தினமும் வழிபட வேண்டும்;
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் பின்புறம் இருக்கும் மூவர் சமாதியில் ஒரு மகான் ரேவதியில் ஜீவசமாதி ஆகியுள்ளார்;
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அசுபதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அசுபதியில் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் அருகில் இருக்கும் மூவர் சமாதியில் ஒருவர் ஐக்கியமாகி இருக்கின்றார்;
ஐப்பசி மாதம் வரும் அசுபதி அன்று திருமூலர் சிதம்பரம் கோவிலுக்குள் ஐக்கியமாகி இருக்கின்றார்;
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பரணியில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாதம் வரும் பரணி அன்று போகர் பழனியிலும்,
பங்குனி மாதம் வரும் பரணி அன்று சங்கரானந்தர் சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்(ஸ்ரீவி.சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிர்ப்புறம் இருக்கும் சாலியர் சமுதாய இடுகாட்டுக்கு அருகில் ஐக்கியமாகி இருக்கின்றார்.)
புரட்டாசி மாதத்தின் பரணி அன்று சத்ரு சம்ஹாரமூர்த்தி அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்;
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத கார்த்திகை அன்று குருசாமி,ராஜபாளையத்திலும்(அம்பலபுளி பஜார் என்ற பகுதியில் இருக்கும் ப்ரம்மாண்டமான ஆலயம்)
ஆவணி மாத கார்த்திகை அன்று ரோமரிஷி எறும்பீஸ்வரர் கோவில் வளாகத்திலும்
சித்திரை மாத கார்த்திகை அன்று சித்த ராஜசுவாமிகளும் ஐக்கியமாகி உள்ளார்கள்;
ஆடி மாத கார்த்திகை அன்று இலஞ்சி அருகில் அமைந்திருக்கும் ஜீவநல்லூர் என்ற ஊரில் திரு.கண்ணப்பசுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
இங்கே சென்று சிவசிவ மந்திரம் 1 மணி நேரம் வரை ஜபித்து வந்தால்,வீண் பழியில் இருந்தும்,நாக தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்;இது அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்;
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணியில் ஜிவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத ரோகிணி அன்று மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;
ஶ்ரீ சங்கரய்யா தேவர் சுவாமிகள் ரோகிணி நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.இடம்:- செங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் Indian oil petrol station எதிரில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
ஆடி மாதம் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் வாராகி சித்தர் ஶ்ரீ முத்து வடுக நாதர் சிங்கம்புணரி ஊரில் ஜீவசமாதி ஆகி உள்ளார்.
சங்கரன்கோவில் ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் பீடத்தில் ஶ்ரீ சித்த ராஜசுவாமிகள் சித்திரை மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மிருகசீரிட நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத மிருகசீரிடத்தில் பாம்பாட்டி சித்தர் சங்கரன் கோவிலில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
குட்லாம்பட்டி டில் இருக்கும் ஶ்ரீ ரமணகிரி சுவாமிகள் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவாதிரையில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
புரட்டாசி மாத திருவாதிரை அன்று இடைக்காடர் அண்ணாமலையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
பகவான் பாட்டி புரட்டாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் அமைந்திருக்கும் ஒரு சுடுகாட்டில் ஜீவ சமாதி ஆனார்கள்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
மாசி மாத புனர்பூசம் அன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
புரட்டாசி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று வள்ளியம்மை திருச்செந்தூர் கடற்கரையில் தனது குருவாகிய ஆவுடையப்பர் ஜீவசமாதிக்கு அருகிலேயே ஐக்கியமாகி இருக்கிறார்.
அல்லது
மார்கழி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று சேஷாத்திரி சுவாமிகள் அண்ணாமலையில் ஐக்கியமாகி இருக்கிறார்;
அல்லது
ஸ்ரீமத் லிங்குசுவாமிகள்,சின்னாளப்பட்டி,திண்டுக்கல் அருகில் ஒரு புனர்பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமாகி இருக்கின்றார்;
அல்லது
தாத்தா சுவாமிகள் விருத்தாச்சலம் என்ற ஊரில் உள்ள பழனி நாதன் சிவன்கோயில் வடமேற்கே( ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் ) புனர்பூச நட்சத்திரத்தன்று ஜீவ சமாதி ஆனார்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாத பூசம் அன்று வல்லநாட்டு சுவாமிகளும்
ஆவணி மாத பூசம் அன்று யூகிமுனியும்
தைப்பூசம் அன்று ராமலிங்க அடிகளாரும் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்கள்;
அல்லது
சேர்மன் அருணாச்சல சுவாமிகள் ஜீவசமாதிக்குச் சென்று வரலாம்;இவர் 27.7.1908 அன்று காலை 11 மணி க்கு ஆடி அமாவாசை அன்று பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமானார்;
இவரது ஜீவசமாதி திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் தென் திருப்பேரை செல்ல வேண்டும்;அங்கிருந்து விசாரித்து சென்றால்,ஏரல் நகரில் தாமிரபரணி நதிக்கரையில் இவரது ஜீவசமாதியைச் சென்றடையலாம்; அல்லது
அருள்மிகு காளிமுத்து சுவாமிகள் சுமார் 60 ஆண்டுகளாக சதுரகிரி மலையில் அன்னதானம் செய்து வந்தார்கள். அவர்கள் ஒரு பூச நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆனார்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ராமச்சந்திராபுரம் கிராமம் எல்லைக்கு உட்பட்ட காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தில் காளிமுத்து சுவாமிகள் அவர்களின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
நற்பவி
1.யாழ்ப்பாணம்
*ஸ்ரீ கதிர்வேல் சித்தர்*
(ஜீவசமாதி)
ஜீவன் முக்தி:01.02.1904,பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியம்.
முகவரி:
ஸ்ரீ கதிர்வேல் சித்தர் பீடம்,
நெ.36,3வது குறுக்கு தெரு,
பிருந்தாவனம்,
சித்தன் குடி(சித்தர்கள் குடியிருந்த இடம்)
புதுச்சேரி.
2.யோகி
*ஸ்ரீ ராமகிருஷ்ண சுவாமிகள்* (எ)
*மண்ணுருட்டி சித்தர்*,(ஜீவசமாதி)
பூசம் நட்ச்திரத்தில் ஐக்கியம்.
ஜீவன் முக்தி:16.01.1965,
முகவரி:
ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் சித்தர் பீடம்,
தென்னஞ்சாலை,
சுப்ராயபிள்ளை
தோட்டம், புதுச்சேரி
3.அருட்குரு
*ஸ்ரீ தேங்காய் சித்தர்*,(ஜீவசமாதி)
பூசம் நட்ச்திரத்தில் ஐக்கியம்.
ஜீவன் முக்தி:
சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்,
முகவரி:ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் சித்தர் பீடம்,G.N.பாளையம்,
அரும்பார்த்தபுரம்
ரெயில்வே கேட் அருகில், புதுச்சேரி.
*சிவ சடைசுவாமிகள்*
ஸ்ரீ பொதிகை மலையான் சித்தர் குடும்பத்தினர்,
குயவர்பாளையம்,
புதுச்சேரி-13
செல்:9500332291
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத ஆயில்யம் அன்று கோரக்கர்,வடக்குப் பொய்கை நல்லூரிலும்
மாசி மாத ஆயில்யம் அன்று இன்னொரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்திலும்
இன்னொரு ஆயில்யம் அன்று மிஸ்டிக் செல்வம் அவர்கள் தூத்துக்குடி அருகிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்கள்;
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
முனியாண்டி சுவாமிகள்,மூவர் சமாதி,சாலியர் சமுதாய இடுகாடு அருகில்,ஸ்ரீவில்லிபுத்தூரிலில் சித்திரை மாத மகம் அன்று ஜீவசமாதி ஆனார்;இவர் ஜீவசமாதி ஆன இடத்தில் ஒரு ஆலமரம் வளர்ந்து வருகின்றது;
அல்லது
திருச்செந்தூர் கடற்கரையில் பங்குனி மாதத்தின் மகம் அன்று ஐயம்பட்டி சங்கரசுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று அவரது தம்பியான யாழ்ப்பாணம் சுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று சூழைவா சுவாமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள்:திருச்செந்தூரில் இருக்கும் ஐயா வைகுண்டர் கோவிலுக்கு அருகில் இந்த மூவர் சமாதி அமைந்திருக்கிறது;
அல்லது
சிவராஜயோகி சுவாமிகளை வழிபடலாம்;இவரது ஜீவசமாதி கரிவலம் வந்த நல்லூர் அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது;இவர் 1945 ஆம் ஆண்டு மாசி மாதம் வரும் மகம் அன்று ஐக்கியமாகி இருக்கிறார்;இங்கே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரம் நட்சத்திரத்தில்ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி பூரம் அன்று சண்டிகேஸ்வரரும்;
ஸ்ரீஜெயராம சுவாமிகள் ஆவணி மாத பூரம் அன்று திருத்தணி வட்டம்,ஆற்காடுகுப்பம் என்ற கிராமத்தில் ஐக்கியம் ஆனார்;
மாசி பூரம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும் ஐக்கியமாகி உள்ளார்கள்;
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
காகபுஜண்டர் உத்திரம் நாளன்றும்;
ஒரு புரட்டாசி மாத உத்திரம் நட்சத்திர தினத்தன்று,அருள்மிகு குமராண்டி சுவாமிகள் ராஜபாளையம் நகரில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;இவரது ஜீவசமாதி பார்க் ஸ்டாப் அருகில் ஒரு தெருவின் முனையில் அமைந்திருக்கின்றது;
புரட்டாசி மாத உத்திரம் அன்று சிவப்பிரகாசம் சுவாமிகள்,முதலியார் பட்டித் தெரு,சிவகாசி சாலை,ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அஸ்தம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை மாத மாத அஸ்தம் அன்று கரூவூர் சித்தர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஜீவசமாதி ஆனார்;
சத்குரு சுவாமிகள் பழனிமலை அடிவாரத்தில் ஒரு அஸ்தம் நட்சத்திரத்தன்று ஐக்கியமாகி இருக்கின்றார்;
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சித்திரை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை நட்சத்திரத்தில் புண்ணாக்கீஸர்,திருவாரூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
விருதுநகர் மாவட்டம்,ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் ஊரனிப்பட்டி தெருவில் அருள்மிகு பொன்னாயிரம் சுவாமிகள் சித்திரை நட்ச்திரத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
இது முதன்மைப் பட்டியல் தான்;இதில் சில தவறுகள் இருக்கலாம்;சரியான தகவல்கள் உங்களிடம் இருந்தால் தெரிவியுங்கள்.
உங்கள் ஊரில் ஐக்கியமான மகானின் பெயர்;முகவரி,ஜீவசமாதி ஆன நட்சத்திரத்தை ஆதாரத்தோடு தெரிவித்தால்,அடுத்த பட்டியலில் இணைத்துவிடுவோம்;
உங்கள் வழிகாட்டும் குருவின் படத்தை அல்லது பிறந்த ஜாதகத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள்;
ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,உங்கள் வழிகாட்டும் குருவின் ஜீவசமாதி ஆன நட்சத்திர தினத்தன்று ஜீவசமாதி ஆன இடத்திற்குச் சென்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்துவாருங்கள்;அப்போது அவருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்;
இதில்
சண்டிகேஸ்வரர்,
டமருகர்,
கெள்பாலர்,
வியாசர்,
சுந்தரர் =இவர்களுடைய ஜீவசமாதி பூமியில் கிடையாது;
உங்கள் ஊர் சிவாலயம் அல்லது வசிக்கும் ஊரின் சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகமும் அன்னதானமும் செய்ய வேண்டும்;
வளமோடும் நலமோடும் வாழ்க!!!
எல்லாப் புகழும் அருணாச்சலேஸ்வரருக்கே அர்ப்பணம்!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள்!!!

 புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள்

எந்த ஒரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றாலும் அதற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்ய வேண்டும்.பூஜை அபிஷேகம் ஆராதனையின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்.
விநாயகரில் ஆரம்பித்து ஆஞ்சநேயர் வரை இருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் தினசரி புனுகு சாத்தும் பழக்கம் போன நூற்றாண்டு வரை இருந்து வந்தது. அதனால் நமது நாடு முழுவதும் மக்கள் ஆழ்ந்த மன நிம்மதியோடு தினசரி வாழ்க்கையை நடத்தினார்கள்.
ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தி திதி வரும்போதும் ராகு காலம் அல்லது குளிகைகாலத்தில் விநாயகருக்கு புனுகு சாத்தி வழிபட வேண்டும். குறைந்தது மாதம் ஒரு முறை வீதம் ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் யார் விநாயகருக்கு புனுகு சாத்தி வழிபடுகிறார்களோ அவருக்கு விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைத்து அவர் ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு முன்னேறி விடுவார். தேய்பிறை சதுர்த்தி தவிர தேய்பிறை சதுர்த்தசி திதியில் விநாயகருக்கு அபிஷேகமும் புனுகு சார்த்தும் பூஜையும் செய்யலாம்.(பெரும்பாலான சதுர்த்தசி திதி தேய்பிறை சிவராத்திரி அன்று அல்லது அதற்கு முன்பு வரும்)
செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையான முருகக் கடவுளுக்கு தேய்பிறை சஷ்டி திதி வரும் நாளில் செவ்வாய் ஓரை அல்லது ராகு காலம் அல்லது குளிகை காலத்தில் புனுகு அணிவிக்க வேண்டும். அது தவிர செவ்வாய்க் கிழமைகளில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் புனுகு சாத்தும் பரிகாரம் பல நூற்றாண்டுகளாக நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து வந்தது.
மாநிலத்தின் காவல் தெய்வம் மகா வராகி என்று புறநானூறு தெரிவிக்கின்றது.புறநானூறு காலத்தில் மாநிலம் என்பது நமது பாரத நாடு முழுவதையும் குறிக்கும்.
தினமும் வராகிமாலை ஜெபித்து வருவதன் மூலமாக மாந்திரீக பிரச்சினைகள் நம்மையும் நமது குடும்பத்தையும் நமது வேலை அல்லது தொழிலையும் சிறிதும் பாதிக்காது.
அசைவ உணவு உண்ணும் பழக்கத்தையும் மது அருந்தும் பழக்கத்தையும் கைவிட்டு இருக்கவேண்டும்.
ஒவ்வொரு தேய்பிறை பஞ்சமி திதி அன்றும் சப்தகன்னியர் சன்னதியில் இருக்கும் வராகி தாய்க்கு புனுகு அணிவிக்க வேண்டும். புனுகு அணிவித்த பிறகு கூட்டாக பலபேர் சேர்ந்து வராகி மாலை பாராயணம் செய்ய வேண்டும்.
மிகவும் கொடூரமான ஜின் மாந்திரீகத்தால் தமிழ்நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தினமும் வராகிமாலை ஜெபித்து வருவதன் மூலமாக ஜின் மாந்திரீக பாதிப்பு முழுமையாக விலகிவிடும்.
முருகக் கடவுளுக்கு புனுகு சாத்துவது மூலமாக வீடு மனை சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக விலகி விடும். ரத்தம் சார்ந்த நோய்கள் வராது. உடன் பிறந்த சகோதர சகோதரர்களுடன் எப்போதும் நல்லுறவு இருக்கும். எதற்கெடுத்தாலும் பயப்படும் குணம் படிப்படியாக விலகிச் சென்றுவிடும்.
ராகு மகா திசை நடப்பவர்கள் மற்றும் ராகு நட்சத்திரங்களான திருவாதிரை சுவாதி சதயம் ஒன்றிலிருந்து வாழ்ந்து வருபவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் துர்க்கை அல்லது வராகியை தினமும் ஜெபித்து வருவது அவசியம். விஷ்ணு துர்க்கை , வனதுர்க்கை, மகா துர்க்கை என்று பல்வேறு விதமான துர்க்கை அவதாரங்கள் உண்டு.
துர்க்கையின் அவதாரங்கள் எதுவாக இருந்தாலும் துர்க்கையின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள் தேய்பிறை சப்தமி திதி அன்று துர்க்கைக்கு அணிவித்து அபிஷேகம் செய்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து அன்னதானம் செய்ய வேண்டும். மாதம் ஒரு தேய்பிறை சப்தமி என்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை இடைவிடாமல் இவ்வாறு துர்க்கை வழிபாடு செய்து வருவதன் மூலமாக வளமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை துர்க்கையின் அருளால் கிடைக்கும்.
ஒன்பது கிரகங்களும் கால தேவன் என்ற காலபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. காலபைரவர் தேய்பிறை அஷ்டமி அன்று ஈசனின் அருளால் உதயமானார். தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நாளில் வரும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும்போது பைரவருக்கு புனுகு அணிவித்து அபிஷேகம் அர்ச்சனை செய்ய வேண்டும். நம்முடைய கர்மவினைகளை வெகுவேகமாக குறைந்து நிம்மதியோடும் ,வளமோடும், ஆரோக்கியத்தோடும் வாழ விரும்பினால் பைரவர் ஜெபம் அல்லது வராகி ஜெபம் தினமும் செய்துவர வேண்டியது அவசியம்.
தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் இருக்கும் நேரத்தில் கால பைரவருக்கு புனுகு அணிவித்தால் கர்ம வினைகள் குறையும் ;நிம்மதியான தினசரி வாழ்க்கை கிடைக்கும்;
தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும் நேரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு புனுகு அணிவிப்பதன் மூலமாக வருமானம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும் ;எவ்வளவு பெரிய அளவில் கடன் இருந்தாலும் அது படிப்படியாக குறைந்து கடன் இல்லாத நிலை நமக்கு வந்து விடும்.
தேய்பிறை நவமி திதி வரும் நாளில் அமைந்திருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும் நேரத்தில் துர்க்கை அல்லது வராகி அல்லது மகேஸ்வரி அல்லது முத்துமாரி அல்லது செல்லியம்மன் அல்லது மாரியம்மாள் போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களை புனுகு அணிவித்து அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வழிபாட்டின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். இதன் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் எது நீண்டகால ஏக்கங்கள் இருக்கின்றதோ அவை அனைத்தும் படிப்படியாக தீர்ந்து விடும்.
சிலருக்கு தனது குழந்தைக்கு திருமணம் முடியவில்லையே என்ற ஏக்கம்
சிலருக்கு சொந்த வீடு அமையவில்லையே என்ற ஏக்கம்
சிலருக்கு பூர்விகச் சொத்து கிடைக்காமல் வழக்கு மற்றும் சண்டை சச்சரவு போன்றவைகளால் நிம்மதி இல்லாத வாழ்க்கை.
சிலருக்கு திருமணம் ஆகியும் சில வருடங்களுக்குள் குழந்தையின்மை ஒரு மிகப் பெரிய ஏக்கமாக இருக்கிறது.
சிலருக்கு போதுமான அளவு வருமானம் இல்லை போதுமான அளவு வருமானம் அதிகரிக்கவில்லை என்ற ஏக்கம்.
பலருக்கு எதற்கெடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் பயம் பயம் பயம்
இவை அனைத்தும் தீர தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் காலபைரவ பெருமானுக்கு தேய்பிறை பஞ்சமி மற்றும் தேய்பிறை நவமி வரும் நாட்களில் உங்கள் ஊரிலுள்ள உக்கிரமான பெண் தெய்வத்திற்கு புனுகு அணிவிக்க வேண்டும்.
தேய்பிறை ஏகாதசி திதிகள் வரும் நாட்களில் ராகு காலம் அல்லது குளிகை கால நேரத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களான பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அல்லது ஸ்ரீ ஹயக்ரீவ பெருமான் அல்லது ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு அணிவித்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.
தேய்பிறை பிரதோஷம் வரும் நாளில் நந்தி பகவானுக்கு புனுகு அணிவித்து அபிஷேகத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கித் தரலாம். இதன் மூலமாக சிவ கடாட்சம் பெருகும். குலதெய்வத்தின் அருளாசியும் நமக்கு வெகு விரைவில் கிடைக்கும்.
அம்மாவாசை அன்று சிவலிங்கம் மற்றும் நடராஜப்பெருமானுக்கு புனுகு அணிவித்து அபிஷேகம் செய்து வர நம்முடைய கர்மவினைகள் வெகுவிரைவில் குறையும் மனம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.தெளிவான மனநிலை இருந்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய மனிதராக நம்மால் செயல்பட முடியும்.
பௌர்ணமி அன்று நள்ளிரவு 11 30 முதல் 12 30 க்குள் சாந்தமான பெண் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து அதன் முடிவாக புனுகு சாத்தி வர அம்பாள் கனவில் காட்சி தருவாள். ஸ்ரீ பார்வதி தேவி, ஸ்ரீ மகாலட்சுமி தேவி, ஸ்ரீ பத்திரகாளி தேவி, ஸ்ரீ சாந்த அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி,ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி போன்ற பல்வேறு பெயர்களில் உள்ள சாந்தமான பெண் தெய்வங்களின் அனுகிரகம் பெற பௌர்ணமி பூஜை அன்று புனுகு சாத்தி அன்னையின் அருள் பெறலாம்.
சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கால பைரவர் அல்லது ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புனுகு அணிவித்து அர்ச்சனை செய்து அன்னதானம் செய்துவர ஆழ்ந்த நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
உங்களுக்கு பாதகம் உள்ள கிரகத்தின் திசை நடைபெற்று கொண்டு இருந்தால் அந்த கிரகத்தின் கிழமை அன்று அந்த கிரகத்தின் ஓரை வரும் நேரத்தில் நவகிரகம் இருக்கும் பழமையான ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த கிரகத்திற்கு புனுகு அணிவித்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சூரிய மகாதிசை நடைபெற்றுக் கொண்டு இருந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சூரியபகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூபாய் 11 கண்டிப்பாகத் தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சந்திர மகா திசை நடைபெற்றுக்கொண்டு இருந்தால் திங்கட்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 20 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் குரு மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால், வியாழக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியிலுள்ள குருபகவானுக்கு புனுகு அறிவிக்க வேண்டும் .உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலமாக குரு பகவானால் ஏற்படும் பாதகங்கள் பெருமளவு குறையும்.பூசாரிக்கு ரூபாய் 30 கண்டிப்பாகத் தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் ராகு மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால் , ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் (ராகு காலத்தில்) நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் ராகு பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊரில் எனது கிராமத்தில் பழமையான ஆலயம் இல்லாதபட்சத்தில் துர்க்கை அல்லது உக்கிரமான பெண் தெய்வத்திற்கு இதே நேரத்தில் புனுகு அணிவித்து அர்ச்சனை செய்யலாம்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் புதன் மகாதசை நடைபெற்று கொண்டு இருந்தால் புதன்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் புதன் பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சுக்கிர மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் சுக்கிர பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்களது பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சனை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் கேது மகாதிசை நடைபெற்றுக் கொண்டு இருந்தாள் ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் குளிகை காலத்தில் (மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை) நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் கேது பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும் உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் பழமையான சிவாலயம் இல்லாதபட்சத்தில் விநாயகர் ஆலயம் சென்று இதே நேரத்தில் விநாயகருக்கு பூணுல் அணிவித்து அர்ச்சனை செய்யலாம்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 30 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சனி மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால் சனிக்கிழமை வரும் ராகு காலத்தில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் சனிபகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 26 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் செவ்வாய் மகாதிசை நடைபெற்றுக் கொண்டு இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும் .உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 30 தட்சிணை தர வேண்டும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டிலேயே கலப்படம் இல்லாத தரமான புனுகு கிடைத்து வந்தது.தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஒரு புனுகு சிறிது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
தரமான புனுகு வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

தீராத இருமலை தீர்க்கும் திருப்புகழ் பாடல்

 தீராத இருமலால் அவதிப் படுவோருக்கு திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடுவார்கள்.

தற்போதய புதிய வைரஸ் தாக்கம் இருமலில்தான் ஆரம்பம். தொண்டை வரட்சியும் ,இருமலும், சளியும் உண்டு.
ஒரு தம்ளர் ஆறிய நீரில் சிட்டிகை விபூதியை இட்டு, வலது கையால் மூடிக் கொண்டு இந்தப் பாடலை ஆறு முறை ஓதி, அந்த நீரை அருந்தினால் மேற்கண்ட அவதிகள் தீரும். எந்த வைரஸும் நெருங்காது. அருணகிரிநாதரின் திருப்புகழ், திருத்தணித் தலத்தில் பாடப்பட்டது.
சகல ரோக நிவாரணி. அந்தப் பாடல் நமது நட்புக்களுக்காக இதோ:-
"இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுள தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப
தாதி மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!"
மேலேயுள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
தற்போதுள்ள கால நிலைக்கு தினமும் இருவேளை ஓதி நீர் அருந்த நலமாம்.

Varahi Sadayapar, Karthikeyan and 2 others

ஒரு மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நாள் வழிபாடு!!!

 ஒரு மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நாள் வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா
(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)
சார்வரி வருடம், தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-
4 2.2021 வியாழக்கிழமை மதியம் 1.22 முதல் 5.2.2021 வெள்ளிக்கிழமை காலை 11.02 வரை
ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை அல்லது ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் ஜெபம் ஜபிக்கலாம்;
இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானை அல்லது ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் ஜெபம் துதிக்கலாம்;
வியாழக்கிழமை ராகுகாலம் மதியம் 1:30 முதல் 3 வரை
வெள்ளிக்கிழமை ராகுகாலம் 10:30 முதல் மதியம் 12 மணி வரை
வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை7.30 முதல் 9 வரை அமைந்தி ருக்கிறது
இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;படிப்படியாக வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது அனுபவ உண்மை!!!
(தனுசு,மகரம், கும்பம் ,மிதுனம்,கடகம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும் பொற்றளி பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;
37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.
38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;
39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை
40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை
41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை
42.அருள்மிகு நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.
43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.
44. ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்
(வத்ராப் டூ அழகாபுரி மார்க்கம்)
சதுரகிரி மலை அடிவாரம்
செல் எண்:7639154787 & 8270772008
45. அருள்மிகு செந்திலண்டவர் திருக்கோயில், சதுரகிரி செல்லும் சாலை (கிருஷ்ணன் கோயில்--- வத்திராயிருப்பு செல்லும் சாலை) எஸ். ராமச்சந்திராபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
46. ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில், மணிமூர்த்தீஸ்வரம், திருநெல்வேலி.
47. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதி,சொர்ணபுரி, திருவிசநல்லூர், கும்பகோணம் வட்டம்.
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;
அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஹ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரம்;
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் க்ராம் க்லீம் க்லூம் ஹ்ராம்
ஹ்ரீம் ஹ்ரூம் குரு குரு ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷிணேஸானந்தாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
அல்லது
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.
அடுத்த தேய்பிறை அஷ்டமி:
சார்வரி வருடம், மாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-
6.3.2021 சனிக்கிழமை