Wednesday, January 4, 2012

மூ‌ன்றா‌ம் ‌பிறை ‌சிற‌ப்பு எ‌ன்ன?

வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என்று நாயன்மார்கள் பாடுகிறார்கள். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனைப் பார்த்தாலும் அந்த மூன்றாம் பிறைதான்.

இந்த மூன்றாம் பிறைக்கு என்ன விசேஷம் என்றால், அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ, மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும். வளர்ந்த பிள்ளைகளை விட வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வருகிறதல்லவா, அந்தத் தூண்டுதலும், உற்சாகமும் மூன்றாம் பிறையில் தெரியும்.

அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது. இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, கிறித்தவம், ஜைன‌ம், இந்து மத‌ம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது. அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.

வாகனங்களுக்கு துணைநிற்கும் முப்பந்தல் இசக்கியம்மன்


வாகனங்களுக்கு துணைநிற்கும் முப்பந்தல் இசக்கியம்மன்
-

webdunia photoWD
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் வள்ளியூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலைக் கடந்து செல்லும் வாகனங்கள் கோயிலுக்கு அருகே நிறுத்தி, அம்மனை வழிபடுவதுடன் தங்களால் முடிந்த காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள்.

கோயிலுக்கு அருகிலேயே சாலையோரத்தில் மிகப்பிரமாண்டமான இசக்கியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோயில் நோக்கிச் செல்லும் அல்லது அங்கிருந்து திரும்பும் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் கண்டிப்பாக அம்மன் கோயில் அருகே நின்று, அதில் பயணிப்பவர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றால் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களில் இருந்து பாதுகாப்பதுடன், தாங்கள் செல்லக்கூடிய காரியங்களும் வெற்றியடையும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது.

அதேபோல் அரசுப் பேருந்துகள் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் பகுதியைக் கடக்கும் போது, பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் கோயிலை நோக்கி தங்களின் காணிக்கைகளை வீசுகிறார்கள்.

அந்த காணிக்கைகளை கோயில் அருகில் இருப்பவர்கள் எடுத்து உண்டியலில் சேர்ப்பிக்கிறார்கள்.

தவிர, வாகனங்களின் ஓட்டுநர்களும் தங்களின் வண்டிகளுக்கு இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்வதையும் காண முடிகிறது.

webdunia photoWD

நெடுஞ்சாலையின் வளைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், வழிபட்டுச் செல்வோருக்கு விபத்துகள் நேராது என்பதே ஐதீகம். இங்குள்ள அம்மன் வாகனங்களுக்கு வழித்துணையாக வந்து, விபத்தில் இருந்து காத்து அருள்வதாக அங்கு வரும் வாகன ஓட்டிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

ஆடியில் அமர்க்களம்

முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும்.

சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டிகள் முதல் கார், ஜீப் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து குழுமி, ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

இந்த நாளில் முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தவிர தை மாதத்தில் மலர் அபிஷேகமும் நடைபெறுகிறது. இக்கோயிலில் நடைபெறும் மலர் அபிஷேகத்தைக் காண கண் கோடி வேண்டும்.

வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?

தன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ப‌ரிகார‌ங்க‌ள் » வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட
:

பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

இவ்விடயத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

எனவே, லக்னாதிபதி பலவீனமாக இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட லக்னாதிபதிக்கு உரிய கோயில்கள், பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நிதி நிலைக்கு சிக்கல் வராத வகையில் எளிய வகையிலான தானங்களையும் மேற்கொள்ளலாம்.

இதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, மொழிப் பாடங்களை பயிற்றுவிப்பதும் பலனளிக்கும். குறிப்பாக தமிழ் சொல்லித் தருவதன் மூலம் சில தோஷங்கள் கழியும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால் தமிழுக்கு உரிய கிரகம் சந்திரன். உடல் மனதிற்கு உரியவரும் அவரே.

தமிழ் பயிற்றுவிக்கும் போது உடலும், மனதும் பலம் பெறுகிறது. இவை இரண்டும் பலமாக இருந்தால் எவ்வளவு கடனையும் அடைத்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன ?

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன ?



நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இருந்து இந்த பதிவு. ஏதாவது புத்தகத்திலிருந்து எடுத்தாளப் பட்டதா ? அவரது சொந்த கருத்தா தெரியவில்லை. நல்லதொரு தகவலாக இருப்பதால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

மனிதனாகப் பிறந்தவனுக்கு பலவித சுக, துக்கங்கள் உண்டு. இவைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இப்படி அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டதுதான் மனைவி, மக்கள், குடும்பம் எல்லாம். இவைகளெல்லாம் இல்லை என்றால், அவனவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான். அதனால் தான், மனிதனை சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறார் பகவான். ஆனால், இதில் சிக்கிக், சுற்றிச் சுற்றி எவ்வளவு காலம் தான் வருவது? இதிலிருந்து மெதுவாக கழன்று, விடுதலை பெற்று பகவானை அடைய முயற்சி செய்ய வேண்டாமா? இந்தப் பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள வேண்டாமா?

பகவானை அடைவது அவ்வளவு சுலபமல்ல. ஆசாபாசங்கள் மனிதனை, பகவான் பக்கம் போக விடாமல் இழுக்கிறது; அதையும் மீறித் தான் போக வேண்டும். ஒரு ஜென்மாவில் இல்லா விட்டாலும், அடுத்தடுத்து வரும் ஜென்மாக்களிலும், இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஒருவன் ஒரு ஊருக்குப் போகப் புறப்படுகிறான். ஒரு நாளைக்கு 10 கி.மீ., நடக்கிறான். இருட்டி விட்டது. அந்த ஊரில் இரவு தங்கி, மறுநாள் காலையில் நடக்க ஆரம்பிக்கிறான். மறுபடியும் ஒரு 10 கி.மீ., தூரம் நடந்து, இன்னொரு இடத்தை அடைகிறான். அங்கே தங்கி, மறுநாள் நடக்க ஆரம்பிக்கிறான்.
இப்படி சில நாட்கள் நடந்து, நடந்து ஒருநாள் இவன் போக வேண்டிய இடத்தை அடைந்து விடுகிறான்.

அதுபோல, பகவானை அடைய, நற்கதி பெற ஒரே ஜென்மாவில் முடியாது. அடுத்தடுத்த ஜென்மாவிலும், இடைவிடாமல் முயன்று கொண்டே இருந்தால், ஏதோ ஒரு ஜென்மாவில் இந்தப் பிறவிப் பிணி தொலைந்து, அவனை அடைந்து விடலாம்.

அப்படி இல்லாமல், முதல் நாள் 10 கி.மீ., நடந்து, மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தால், இவன் போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர மாட்டான். அதுபோல, குடும்ப பாசங்களிலிருந்து விடுபட்டு பக்தி செய்து கொண்டே ஒவ்வொரு ஜென்மாவை கடந்து, காலம் வரும்போது அவனடி சேர வேண்டும்.
வண்டியில் கட்டிய மாடு, போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேரும்; செக்கில் கட்டிய மாடு நாள் முழுவதும் நடந்தாலும், செக்கையே தான் சுற்றிச் சுற்றி வரும். அதுபோல பகவானை நோக்கி போய்க் கொண்டிருக்க வேண்டும். செக்கு மாடு மாதிரி குடும்பத்தையும், மனைவியையுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தால், விமோசனம் ஏது? அதற்காக குடும்பம், மனைவி, மக்கள் என்றால் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதல்ல!

அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துகொண்டே , இறைவனை தேடுதலையும் ஒரு கடமையாகக் கொள்ளுங்கள். அதற்க்கு முதலில் உங்கள் ஆத்மாவை அறியவேண்டும். அதன் பிறகு உங்கள் பிறவியின் நோக்கம் உங்களுக்கு புலப்படும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibm3qPEDoGYLM3u-LNNq9ImZChW38dk66a1NM3KyF5sR-8J-Lp7rIqo-VBSbAIuFn7QvEtlljWjF0CLPMa_zQdOBQtxgWX3-SJVnoJkG_ff3rsw19z6Fd8FX4-6hFG1Pfs_1mq04eoS-s/s320/mookambika-thumb1.png

குடும்ப பாரம் ஒருபக்கம் இருக்கட்டும்; அவர்களுக்காகவே பாடுபட்டு காலத்தை கழிக்க வேண்டாம். இகலோக சுகம் இங்கே கிடைக்கும்; பரலோக சுகம் என்பது அங்கே கிடைக்கும். இங்கே கிடைப்பது நிரந்தரமானதல்ல; அங்கே கிடைப்பது தான் நிரந்தரமானது; நித்யமானது ஒன்றுக்கு முயற்சி செய்யாமல், அநித்யமானதுக்கு ஆசைப்பட்டு வாழ்நாளை வீணாக்க வேண்டுமா?

பெரியோர், மகான்கள், மறுபிறவி என்றாலே நடுங்குகின்றனர். விஷயம் புரியாமலா பயப்படுகின்றனர்? ஏதோ பாதாம் அல்வாவும், பஜ்ஜியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா நித்ய சுகம்! பகவானை அடைந்து விட்டால், பசியும் கிடையாது; தாகமும் கிடையாது. அவனுக்கு கைங்கரியம் செய்து கொண்டே சுகப்படலாமே!

முயற்சி செய்யுங்கள், ஏதோ ஒரு ஜென்மாவிலாவது பலன் கிடைக்கும்!

அரை வேக்காட்டு / போலி சாமியார்களை விட்டுத்தள்ளுங்கள். பெரிய , பெரிய ரிஷிகள், சித்தர்கள் , முனிவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போலே இருப்பது ஒரு அற்புத அனுபவம் தான். நம் ஆன்மாவும் , முடிவில் அதைத்தான் நாடுமோ ? இறைவனை அடைவதுதான் இறுதி என்றால்... இன்றிலிருந்தே இறை வழிபாட்டையாவது தொடங்குவோமே..!
!



கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!


இன்றைய அவசர யுகத்தில் கிடைத்ததை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.

அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல் இதோ:

ஓட்ஸ்:
உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம்பெறுவது இது.நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.

ஓட்ஸில் 'பீட்டா-குளூகான்'என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பதுதான் இதிலுள்ள தனி சிறப்பு.

இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ்தான்.

உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட (220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை - அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு - உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு ஓட்ஸ் நமது உடலில் மேஜிக் நடத்திவிடுகிறது.

இல்லற வாழ்வு -பூண்டின் மகிமை..


பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக‌க்கூட பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, ‌சீனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்ஃபர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு‌ம், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்ஃபரே ஆகு‌ம். மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு‌ப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். பு‌ற்றுநோயா‌ல் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்க‌ள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் தா‌ம்ப‌‌த்ய‌த்‌தி‌ல் ச‌ரியாக ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்




உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது...


ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் , ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார். அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது...


அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று..


உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது ராகு தசை உங்களுக்கு நடக்கும்.

விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் - அவருக்கு உரிய தேவதை முருக கடவுள்.....
மகம் நட்சத்திரம் - அதிபதி - கேது - தேவதை : விநாயக பெருமான். ராசி : சிம்மம். ராசி நாதன் - சூரிய பகவான்.

நடக்கும் தசை - ராகு - அதி தேவதை - துர்க்கை அம்மன்.


( அதி தேவதைகள் பற்றிய - நமது முந்தைய கட்டுரைகளை refer செய்ய இங்கே கிளிக்கவும் )

நட்சத்திர திருத்தலங்கள் - கட்டுரையை வாசிக்க கிளிக் செய்யவும்

உங்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் .... உடனடி தீர்வு கிடைக்க , வாழ் நாள் முழுவதும் , செவ்வாய் கிழமைகளில் நீங்கள் முருக கடவுளுக்கு பாலாபிசேகம் , பாத யாத்திரை சென்று வர மலை போல் வரும் பிரச்னை கூட தூள் தூளாகும்.....

தினமும் காலை - சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள். சூரிய பகவானை நீங்கள் வரவேற்க வேண்டும். அவர் உங்களை வரவேற்க கூடாது..
அன்றாடம் நீங்கள் விநாயகரை வணங்கி வேலையை தொடங்குவது நல்லது..
உங்களால் விநாயகர் கருணையை மனதார உணர முடியும்...

(அஸ்வினி, மகம். மூலம் நட்சத்திரம் இவற்றில் பிறந்தவர்கள் உங்களை அறியாமல் நீங்கள் , விநாயகரை வணங்கினாலும் உங்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பதை உணர்ந்து இருப்பீர்கள்.. )


இப்போது நடக்கும் தசை ராகு தசை. .. ராகு என்ன செய்யும்? ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

ராகு அப்படி என்னதான் செய்யும்..? புலன் ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகு ஜன தொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent ) என்று அனைத்துக்கும் அதிபதி. ... உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பணவரவு இருக்கும்.. நோகாமே நோன்பு எடுக்கலாம். . நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. பணம் கொழிக்கும்..( நல்லது தானே..!)

அதே நேரத்தில் பெண்களால் சர்வ சாதாரணமாக பிரச்சினைகள் வரும்... நீங்களே ஒதுங்கி இருந்தாலும் .. உங்களையே தேடி வருவார்கள்... உங்களால் 'பலான' விசயங்களில் இருந்து ஒதுங்க முடியாது.. பெண்களிடம் செல்ல வேண்டி வரும்.. அல்லது குறைந்த பட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர் என்று படம் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி வரும்... இப்படி நீங்கள் இருக்கும் போது ... வரும் பெண்களும் உங்களுக்கு பேரழகியாக தெரிய வரும்.. விட முடியுமா...?? வரை முறை தெரியாத அளவுக்கு விளையாட்டு தொடரும்.. பிறகு என்ன... வீட்டில் தெரிய வர.. அதனால் தொல்லைகள் வர... கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை பூதாகரமாகி வழக்கு, கோர்ட், விவாக ரத்து.. ... ஈஸ்வரா...!!

கேட்ட நேரம் இருக்கும் வரை ... அந்த ஒண்ட வந்த பிடாரி தான் உங்களுக்கு அவ்வளவு உசத்தியாக தெரியும்... அவளுக்காக நீங்கள் சகலத்தையும் துறக்க தயார் ஆகி விடுவீர்கள்.. உங்களுக்கு அது ஒரு சொகுசான வாழ்வு என்று தோன்றும்.. ஆனால் மகா கேவலமான வாழ்வு என்று தோன்றாது..


இதில் கோட்சார ரீதியாக ராகு ஜென்மத்தில் வந்தாலோ ... இன்னும் நிலைமை அசிங்கமாகும்.. நீங்கள் இருக்கும் ஊரில், அல்லது தெருவில் அல்லது , உங்கள் குடும்ப வட்டாரத்தில் ... நீங்கள் ஏதாவது ஒரு பெண் விஷயத்தில் அசிங்கப்பட்டு , தலை குனிய வேண்டி வரும்...


இல்லையா... கோடிகளில் புரள வைத்து விட்டு , திடீர் என்று அதல பாதாளத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்..


இது பொதுவான பலன். ஆனால் 10 க்கு 9 பேருக்கு இது பொருந்தும்.


இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது.. அவர்கள் அமர்ந்த வீடு, (நட்பு , பகை) நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும் கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் , என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

எந்த ஒரு மனிதனுக்கும், ராகு, கேது தசை நடக்கும் போது , அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் ... அட்சர சுத்தமாக கிடைக்கும்..
சில குழந்தைகளுக்கு ராகு தசை நடந்தால், அதன் பலன் மொத்தமும் பெற்றோர்களுக்கு நடக்கும்...