Sunday, July 26, 2015

ஜோதிடர்கள் செல்வச் செழிப்பை அடையவும்,தம்மிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களையும் செல்வந்தராக்கும் பைரவ அஷ்டகம்!!!


ஜோதிடம் சொல்லும் போது நவக்கிரகங்களும் ஜோதிடர்களின் வாக்கில் அமர்ந்து பலன் களாக வெளிவரும்;
ஒரு பொறுப்பான ஜோதிடர் ஒரு போதும் அசைவம் சாப்பிடக் கூடாது;மது அருந்தக் கூடாது;போதைப் பொருட்கள் பயன்படுத்திடக் கூடாது;தேவைப்படும் போது பொய் சொல்லலாம்;ஆனால், பொய் மட்டும் சொல்லக் கூடாது;தன்னை நம்பி வரும் ஜாதகர்களுக்கு நேர்மையான முறையில் வழிகாட்ட வேண்டும்;
ஜோதிடம் பார்க்கும் ஆண்கள் வராகியை தினமும் வழிபட வேண்டும்;ஜோதிடம் பார்க்கும் பெண்கள் தினமும் பைரவப் பெருமானை வழிபட வேண்டும்;அப்போதுதான்,கர்மவினைகளில் இருந்து தப்பிக்க முடியும்;
பிறரின் பிறப்பு ரகசியங்களைக் கண்டறிந்து,அவர்களை காப்பாற்றிட ஜோதிடர்கள் முயலும் போது ஜாதகர்களின் கர்மாக்கள் ஜோதிடர்களைப் பற்றும்;அதிலிருந்து மீள முதல் படியே அசைவம்,மது,போதையை நிரந்தரமாகக் கைவிடுவதுதான்;பிறகே,ஜோதிடத்தின் கடவுளான காலதேவனை வழிபடுவது!
இந்த துர்க்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணபைரவ அஷ்டகத்தை தினமும் 33 முறை வீதம் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஜபிக்க வேண்டும்;ஜப எண்ணிக்கை 7,00,000 ஐத் தொட்டுவிட்டால்,ஜபித்தவர் மகத்தான செல்வ வளம் மிக்கவராக மாறிவிடுவார்;அவரது ஜோதிட ஆலோசனையை குறைந்தது 3 ஆண்டுகள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் பின்பற்றுபவரும் பல கோடி ரூபாய்களுக்கு நேர்மையான முறையிலேயே அதிபதியாகிவிடுவார்;என்பது சித்தர் வாக்கு;

ஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்


தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

முழுநிலவதனில் முறையோடு பூசைகள்
முடித்திட அருளிடுவான்
உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தன மழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
























No comments:

Post a Comment