Monday, July 6, 2015

இலக்கியம் காட்டும் சிவன்


சிவன் தாழ்ந்த நீண்ட சடையுடையவன்...கொன்றை மாலையைச் சூடியவன்...பிறைச்சந்திரனை அணிந்தவன்...கங்கையைத் தாங்கியவன்...வேதத்தை விளக்கியவன்...மலுப்படைக் கொண்டவன்...எட்டுக்கைகலை உடையவன்...புலித்தோலைப் போர்த்தியவன்...உமாதேவிக்கு ஒரு பாதியைப் பகிர்ந்தளித்தவன்...ஆனேற்றைக்(ரிஷபம்)கொடியாகவும் வாகனமாகவும் பெற்றவன்... என்பன போன்ற செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன... ஆனால் அவற்றுள் "சிவன்" எனும் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... 

திருமூலரின் திருமந்திரத்தில்தான் முதன் முதலில் சிவன் எனும் சொல் இடம் பெற்றுள்ளது...இந்நூலுக்கு முந்தியவையான.. மணிமேகலையிலும்...காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியிலும் "ஈசன்" என்ற சொல்லே ஆளப்பட்டது..

No comments:

Post a Comment