Thursday, July 30, 2015

அஷ்டமியன்று ஏன் சுபகாரியங்கள் துவங்கக் கூடாது தெரியுமா?


மனிதர்களுக்கு சம்பளம்,லாபம்,கமிஷனாக செல்வ வளத்தை தருபவர்கள் அஷ்ட லட்சுமிகள்! இவர்கள் இப்படி 24 மணி நேரமும் பூமியில் உள்ள மனிதர்களுக்கு செல்வத்தை தந்து கொண்டே இருப்பதால்,இவர்களுடைய தெய்வீக சக்தி குறைகிறது;எனவே,இவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இவர்களுடைய கடவுளான ஸ்ரீஸ்ரீஸ்ரீசுவர்ணா ஆகர்ஷண பைரவரை வழிபடுகின்றனர்;
தேய்பிறை அஷ்டமி திதி முழுவதும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் அனைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்சன்னதிக்கு சூட்சுமமாக வருகை தருகின்றனர்;இதனால்,இந்த திதியில் (திதி என்பதே தேதியாக உருமாறியது) அஷ்ட லட்சுமிகளால் எந்த சுபகாரியத்திலும் கலந்து கொள்ள இயலாது;
இதே தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால்,ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் பைரவப் பெருமானால் தீரும்;அதே சமயம் அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிட்டும்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment