Wednesday, July 22, 2015

கை.வீரமுனியின் அனுபவ ஜோதிடச்சிந்தனைகள் பகுதி 2


மனிதர்களின் தினசரி வாழ்க்கைக்கு பக்கபலமாக இருக்கும் எதுவும் மனிதநேய தொழில் நுட்பமே! அதேசமயம்,மனிதர்களின் தினசரி வாழ்க்கைக்கு தீங்கு தரும் எதுவும் மனித விரோத தொழில் நுட்பமே!

ஆசியாவில் பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் பின்பற்றப்பட்டு வரும் எதுவும்(செக்கு,ஆட்டுக்கல் உரல்,விறகு அடுப்பு,ஜோதிடம்,வாஸ்து,சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,தனுர்வேதம்,பிராணயாமம்,யோகாசனம்,பஞ்சபட்சி,சரக்கலை,வாசியோகம் மற்றும் பல சூட்சுமக் கலைகள்) மனித நேயத் தொழில் நுட்பங்கள் ஆகும்;

ஆசியாவைத் தவிர,ஐரோப்பா,அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுக்கவும் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட,செய்யப்படும் ஒவ்வொன்றுமே மனித விரோதத் தொழில் நுட்பமே!(போர்க்கருவிகள்,ஏவுகணைகள்,இணையம்,அலைபேசி,குப்பை உணவுகள்,எம்.எல்.எம்,முன் பேர வர்த்தகம்,யூக வணிகம்,காகிதப் பணம்,நவீன படிப்புகள் மற்றும் பல)
12 ஆண்டுகளுக்கும் மேல் யார் தொடர்ந்து நண்பர்களாக இருக்கிறார்களோ,அவர்கள் முற்பிறவியிலும் நண்பர்களாக இருந்தவர்கள்;
12 ஆண்டுகளுக்கும் மேல் யார் தொடர்ந்து எதிரிகளாக இருக்கிறார்களோ,அவர்கள் முற்பிறப்பு எதிரிகள்! என்பது ஆன்மீக ஆராய்ச்சியில் மிஸ்டிக் ஐயாவுக்கு கிடைத்த முடிவு;
நடைமுறையில் இந்த உண்மையை உறுதிசெய்யத் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தால்,கிடைத்த ஆச்சரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கும் எப்போதும் ஒத்துப் போகாது;இந்த இரண்டு ராசியில் பிறந்தவர்கள் ஒரு போதும் நண்பர்களாக இருக்க முடியாது;ஒருவேளை அப்படி இருந்தால்,மேஷராசியில் பிறந்தவர்,கடகராசியில் பிறந்தவரிடம் ஏமாறிக் கொண்டிருப்பார் என்றே அர்த்தம்;(இது குடும்ப உறுப்பினர்களுக்குப் பொருந்தாது;அதாவது பெற்றோரில் ஒருவர் மேஷராசியாக இருந்து,குழந்தை கடகராசியாக இருந்தால் பொருந்தாது)
மேஷராசியில் பிறந்தவர்கள் நிறையப் பேசுவார்கள்;பாசம் கொஞ்சமாவது இருக்கும்;கடகராசியில் பிறந்தவர்கள் அளந்து பேசுவார்கள்;வார்த்தைகளையே பார்த்து,பார்த்து செலவழிப்பார்கள்;மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ரோஷமும்,தன்மானமும் அதிகம்;கடகராசியில் பிறந்தவர்களுக்கு காரிய வெற்றி மட்டுமே முக்கியம்;அவமானப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்கள்;
முற்பிறவியில் நண்பர்களாக இருந்தவர்கள்,இப்பிறவியில் ஒருவர் மேஷ ராசியிலும்,மற்றவர் கடகராசியிலும் பிறந்தவர்களாக இருப்பர்;ஆனால்,அவர்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை;(ஆறாம்,எட்டாம் ராசியாகவோ அல்லது ஒருவரது ராசி அதிபதி எந்தராசியில் நீசம் ஆகிறாரோ அந்த ராசிக்காரருடன் நட்பாக இருப்பார்கள்)
பின்வரும் ராசியினர் நட்பு கொள்வது ஆகாது;மீறி நட்புடன் இருந்தால் அது இருவரில் ஒருவர் ஏமாறுகிறார் என்றே அர்த்தம்;
மேஷம்=கடகம்,கன்னி
ரிஷபம்=தனுசு
மிதுனம்=விருச்சிகம்,மகரம்
கடகம்=கும்பம்,தனுசு
சிம்மம்=மகரம்,துலாம்,மீனம்
கன்னி=கும்பம்,மேஷம்
துலாம்=மீனம்,கடகம்
விருச்சிகம்=மிதுனம்,கன்னி
தனுசு=ரிஷபம்,கடகம்
மகரம்=மிதுனம்,சிம்மம்
கும்பம்=கடகம்,கன்னி
மீனம்=சிம்மம்,துலாம்
சரி! எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த ராசியினர் உதவுவார்கள்? என்பதைப் பார்ப்போமா. . .
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சிம்மம்,விருச்சிகம்,மகரம் ராசியில் பிறந்தவர்கள் உதவுவார்கள்;
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு மிதுனம்,விருச்சிகம்,மீனம் ராசியில் பிறந்தவர்கள் உதவுவார்கள்;
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சிம்மம்,கன்னி,தனுசு கும்பம் ராசியில் பிறந்தவர்கள் உதவுவார்கள்;
கடகத்தில் பிறந்தவர்களுக்கு கன்னி,விருச்சிகம்,மகரம் ராசியில் பிறந்தவர்கள் உதவுவார்கள்;
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு தனுசு,கும்பம்,மேஷம் ராசியினர் உதவுவார்கள்;
கன்னியில் பிறந்தவர்களுக்கு சிம்மம்,தனுசு,மீனம்,மிதுனம் ராசியினர் உதவுவர்;
துலாமில் பிறந்தவர்களுக்கு மேஷம்,கும்பம்,கடகம் ராசியினர் உதவுவர்;
விருச்சிகராசியில் பிறந்தவர்களுக்கு மகரம்,மீனம்,ரிஷபம்,கடகம் ராசியில் பிறந்தவர்கள் உதவி செய்வர்;
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு மீனம்,மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ராசியினர் உதவி செய்வார்கள்;
மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு மேஷம்,கடகம்,கன்னி,துலாம் ராசியினர் உதவுவார்கள்;
கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு மிதுனம்,சிம்மம்,துலாம் ராசியினர் உதவுவார்கள்;
மீனராசியில் பிறந்தவர்களுக்கு மிதுனம்,கடகம்,கன்னி,தனுசு ராசியினர் உதவி செய்வார்கள்:
இது ராசியின் அடிப்படையில் மட்டுமே அனுபவப்பட்டது;லக்னம்,திசா புக்தி அடிப்படையில் ஒருபுத்தகமே எழுதலாம்;
ஜோதிடர்கள்,ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிட எழுத்தாளர்களுக்கு இந்தப் பதிவு வரப்பிரசாதமாக இருக்கும்;
வாழ்க பைரவ அறமுடன்,வளர்க வராகி அருளுடன்!

No comments:

Post a Comment