Friday, April 20, 2012

rajapakshe's future:thanks to tamil webdunia


த‌மி‌ழ்‌.வெ‌ப்து‌னியா.கா‌ம்: லண்டனில் ராஜபக்ச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது ஒட்டுமொத்த தமிழர்களால் எழுந்த எதிர்ப்பால் நிகழ்ந்தது. இது அவருடைய ஜாதகத்தில் பின்னடைவு ஏற்படுவதற்கான காலம் துவங்கிவிட்டதாகச் சொல்ல முடியுமா?







ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பார்த்த வரைக்கும், அவர் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி. ஒரு பஞ்சாங்கத்தில் அனுஷம் 4ஆம் பாகம். இன்னொரு பஞ்சாங்கத்தில் அட்ச ரேகை (லாட்டிடியூட்) வைத்துப் பார்க்கும் போது கேட்டை நட்சத்திரம் வருகிறது. அவருக்கு செவ்வாய் தற்போது மிகவும் வலுவாக இருக்கிறது.






செவ்வாய் போர்க்குணம் படைத்த ஒரு கிரகம். ஆனால், இந்தச் செவ்வாய் சனியினுடைய பார்வையில் இருக்கிறது. அதனால்தான் நேரடி போர் இல்லாமல், மனிதாபிமானமற்ற செயல்களில் அவரை இறங்கத் தூண்டுகிறது. ஏனென்றால் சனி பதுங்கும் கிரகம், செவ்வாய் பாயும் கிரகம். அதனால்தான் இந்த மாதிரி என்னங்களெல்லாம் அவருக்கு வருகிறது.






அவருடைய ராசிநாதனே செவ்வாய்தான். விருச்சிகத்தினுடைய ராசிநாதன் செவ்வாய் தற்போது ராகுவுடன் இருக்கிறார். இந்த ராகுவுடன் ஜனவரி 6ஆம் தேதி வரை அவர் இருப்பார். அதனால் அதுவரை அவருக்கு இடர்பாடுகளெல்லாம் கொடுக்கும்.






அதன்பிறகு மே மாதத்திற்குப் பிறகு நிறைய அழிவுகளுக்கான காலகட்டம் தொடங்குகிறது. அந்த நேரத்தில், உலக நாடுகளினுடைய கண்டனம், நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய சூழல், அங்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம். சகோதரர்களிடையே மோதல், உட்பிரிவு போன்றவற்றை அவர் சந்திக்க நேரிடும். அவரு‌க்கு சில விபத்துகள் கூட மே மாதத்திற்குப் பிறகு ஏற்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment