குகை நமச்சிவாயர்:திருஅண்ணாமலையில் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்துவரும் துறவி
பல புத்தகங்களில் அண்ணாமலை துறவிகள்,சித்தர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளன.அவர்களில் முக்கிய துறவிகளில் குகை நமச்சிவாயரும் ஒருவர்.இவரது கோவில் திரு அண்ணாமலையில் பேக்கோபுரத்துக்கு அருகில் மலை மீது அமைந்துள்ளது.அவரது 18 ஆம் தலைமுறை வாரிசுகள் இந்தக்கோவிலில் பூஜை செய்துவருகின்றனர்.
குகை நமச்சிவாயர் கார்த்திகை மாதம் வரக்கூடிய பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இவரது குருபூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நீங்கள் பூராடம் நட்சத்திரத்தில்(தனுசு ராசி) பிறந்தவரா? ஆம் எனில்,குகை நமச்சிவாயரின் கோவிலில் பூஜை செய்யலாம்.ஒரு முறை உங்களது குடும்பத்தோடு பூஜை செய்ய ரூ.1000/-வரை ஆகும்.நீங்கள் விரும்பும் நாளில் எந்த நாளிலும் பூஜை செய்யலாம்.அன்று தாங்கள் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து இங்கு வந்து அபிஷேகம் ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம்.இப்படி அடிக்கடி உங்களது பெயரில் அல்லது உங்களது பிறந்த தமிழ் மாதம் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்துவந்தால்,உங்களது நீண்ட காலப்பிரச்னைகள் தீரும் என இங்கு வரும்போது கேள்விப்பட்டேன்.
பூராடம் நட்சத்திரம் தவிர, பிற நட்சத்திரக்காரர்களும் இந்த பூஜையினை நடத்தலாம்.இதற்கான முன்பதிவை குகை நமச்சிவாயரின் வாரிசுகளிடம் தொலைபேசி அல்லது அலைபேசியில் பேசி உறுதிபடுத்திக்கொண்டு குடும்பத்தோடு திருஅண்ணாமலை சென்று குகை நமச்சிவாயரின் அருள் பெறுக!!!
தொலைபேசி:04175 223178
அலைபேசி:94871 19616
No comments:
Post a Comment