Saturday, April 21, 2012

கிரகங்கள் என்ன செய்யும் என்பதை ஆராய்வோமா?


மிதுனம்,கன்னி,கும்பம் ராசியில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களுக்கு ஆன்மீகக்கடலின் ஒரு வேண்டுகோள்.இன்று 25.7.2011 திங்கள் முதல் 10.9.2011 சனிக்கிழமை வரையிலும் உங்களின் தினசரி வாழ்க்கையில் பிரச்னைகள் சராசரியை விட தலைதூக்கிட வாய்ப்புகள் அதிகம்.உலக அரசியலில் மிதுனராசிக்கும்,இங்கிலாந்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து தீவிரவாதத்தினாலோ,பூகம்பத்தினாலோ பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தனி மனித ரீதியாக,கன்னிராசிக்காரர்களும்,கும்பராசிக்காரர்களும் செய்யாத தப்புக்கு பலியாடாகப்போவது இந்த காலகட்டத்தில் தான்!ஏதாவது ஒரு காரணத்துக்காக காவல் நிலையம் செல்லும் சந்தர்ப்பமோ,விபத்தில் சிக்கும் வாய்ப்போ,நெருங்கிய ரத்த உறவுகளே இவர்களை அவமானப்படுத்தும் சூழ்நிலை உருவாகும்.மேற்கூறியதில் ஏதாவது ஒன்று மட்டுமே உருவாகும் சந்தர்ப்பம் இப்போது உருவாகியிருக்கிறது.

இருப்பினும்,இந்த ராசியைச் சேர்ந்தவர்களில் யார் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்கிறார்களோ,யார் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கிறார்களோ,யார் தினமும் காலபைரவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு இராது.

எனவே,கன்னி,கும்பம்,மிதுனம் ராசிக்காரர்களே,தினமும் கோவிலுக்குச் செல்வதை ஒரு பழக்கமாக்குங்கள்.தவிர,விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் நிதானத்தைப் பின்பற்றவும்.உங்களுக்கு உங்கள் வாயே எதிரி என்பதை இப்போது உணருவீர்கள்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment