Sunday, April 22, 2012

Aug10 ஜப்பான் சுனாமி தாக்கத்தினால் அண்டார்டிகாவில் புதிய பனிமலை. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.


சுனாமி மற்றும் நிலநடுக்க அதிர்வுகளால் துருவப்பகுதிகளில் ராட்சத பனிகட்டி கல் உடைந்து புதிய பனி மலை உருவாகிறது என நாசா விஞ்ஞானிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

கிரையே ஸ்பியர் எனப்படும் குறைந்த அழுத்த பகுதியில் ஏற்படும் உருவாக்கத்தை ஆராயும் நிபுணரான கெல்வி ப்ரண்ட் அந்த உண்மையை கண்டறிந்துள்ளார்.

இவர் கோடர்டு விண்வெளி பயண மையத்தின் விஞ்ஞானி ஆவார். ஜப்பானில் சுனாமி ஏற்பட்டதால் அண்டார்டிகா துருவப் பகுதியில் ஒரு ராட்சத பனி உடைந்து புதிய பனி மலை உருவாகி உள்ளது என இவரது ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி ஜப்பான் பசிபிக் கடல் பகுதியில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டதன் விளைவாக இந்த மலைக்கட்டி உருவாகி உள்ளது.

துருவ கடல் பகுதியில் பெரிய கட்டிகள் உடைவதாலும் பனிப்பொழிவு குவிவதாலும் புதிய பனிமலைகள் உருவாகின்றன. செயற்கை கோளின் பல்வேறு பிம்ப வடிவங்களை ஆய்வு செய்து நாசா விஞ்ஞானிகள் குழு இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளது.


No comments:

Post a Comment