Friday, April 20, 2012

ஜோதிடர்களின் வாழ்நாள் கவனத்திற்கு


ஜோதிட சகோதரர்கள் கவனத்திற்கு

நீங்கள் ஜோதிடத்தை தொழில்முறையாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ பார்க்கிறீர்களா?

ஆம் எனில் உங்களுக்காகத்தான் இந்தக்கட்டுரை!!!

நாம் ஜோதிடத்தால் பெரும்புகழ் அடைகிறோம்.நியாயமாக ஜோதிடத்தைக் கணித்துச் சொன்னால்! நம்மிடம் தனது எதிர்காலத்தை பார்க்கும் மனித ஆத்மாக்கள் நமது ஜோதிட ஆலோசனையைப்பின்பற்றி வளமாகவும்,நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.சில பல பரிகாரங்கள் செய்கிறார்கள்.உரிய பரிகாரங்கள் செய்ததும்,சில நாட்கள் அல்லது மாதங்கள் கழிந்தபிறகு அபரிதமான நற்பலன்களை அடைகின்றனர்.நம்மை நன்றியோடு நினைத்துக்கொண்டிருப்பார்கள்;ஆனால்,நவக்கிரகங்கள் கோபத்தோடும் சாபத்தோடும் நம்மை நோக்கும்;அதனால்,நமது வாழ்வில் ஏதாவது ஒரு மாபெரும் குறை இருக்கத்தான் செய்யும்.

இந்த நவக்கிரகங்களின் கோபமும் சாபமும் நீங்கிட ஜோதிடர்களாகிய நமக்கு இரண்டுவிதமான சாப நிவர்த்தி இருக்கின்றன.
ஒன்று மாதம் ஒரு நாள்,அதுவும் ஜோதிடரின் பிறந்த நட்சத்திரத்தன்று திருச்செந்தூரில் இருக்க வேண்டும்.முதலில் நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டும்;இரண்டாவதாக கடலில் குளிக்க வேண்டும்;மூன்றாவதாக முருகக்கடவுள் கோவிலை உருவாக்கிய மூன்று துறவிகளின் கோவில் கடற்கரையிலிருக்கின்றது.அவர்களை வழிபட வேண்டும்.நான்காவதாக திருச்செந்தூர் முருகக்கடவுளை தரிசிக்க வேண்டும்.இப்படி ஜோதிடத்தொழில் பார்க்கும் காலம் வரை செய்ய வேண்டும்.இதை எனக்கு உபதேசித்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் நேரடி சீடர் மிஸ்டிக் மாரியப்பன்.

இரண்டாவதான பரிகாரம் என்னவெனில்,மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது மாத சிவராத்திரியன்று திருஅண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் பரிகாரத்தை நானே செய்து தருகிறேன் என ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் பரிகாரக்கட்டணம் வாங்குகின்றனர்.வாங்கும் கட்டணம் ஆயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில் இருக்கின்றது.ஆனால்,வாங்கும் பணத்தினை முறையாகவும் முழுமையாகவும் பரிகாரத்துக்குச் செலவழிப்பதில்லை;ஏன் பெரும்பாலான ஜோதிடர்கள் 1% கூட பரிகாரத்துக்குச் செலவழிப்பதில்லை;(பல தமிழ்நாட்டு ஜோதிடர்கள் இந்த பரிகாரப்பணத்தினால்தான் திருமண மண்டபம் கட்டியிருக்கின்றனர்)
விளைவு அப்படிப்பட்ட ஜோதிடரின் வாழ்க்கையில் மாபெரும் சாபம் பலித்துவிடுகிறது.உரிய ஜோதிடரின் குடும்பப்பெண்கள் திசைமாறிப்போய்விடுகின்றனர்;அல்லது அந்த ஜோதிடரின் பாசத்துக்குரிய ரத்த உறவு திடீரென மறைந்துவிடுகிறது.எனவே,பரிகாரத்துக்கு பணம் வாங்குவது மகா பாவம்.

மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் 40 ஆண்டுகால ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் பல துறவிகள்,சித்தர்களை சந்தித்து ஆலோசித்துமுடிவாக சொன்னபடி, சித்தர்கள்,துறவிகளாலேயே அவர்களின் கர்மவினையை அழிக்க முடியவில்லை;அவர்கள் நம்மை ஆசிர்வாதித்தாலும் நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது;எனவே,மேலும் மேலும் பரிகாரத்தை நான் செய்கிறேன் என கூறி அடுத்தடுத்தபிறவிகளில் மிக இழிவானமனிதனாக பிறக்க வழிதேட வேண்டாம்.(மந்திரவாதிகளே உங்களுக்கும் சேர்த்துத்தான்!)

No comments:

Post a Comment