Friday, April 20, 2012

இந்தியாவில் பரவிவரும் இயற்கை வேளாண்மை




மெல்லப்பரவும் இயற்கை வேளாண்மை

சிக்கிம் மாநிலத்தில் கி.பி.2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதன் மூலம் வேதியியல் விவசாயமான தற்போதைய நச்சு விவசாயத்திற்கு விடை கொடுப்படும்.இம்மாநிலத்தில் கி.பி.1997 ஆம் ஆண்டிலேயே பிளாஸ்டிக் மற்றும் வேதியியல் கழிவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.வேதியல் உரத்தினால் செய்யப்படும் விவசாயத்தினை ஒழித்துக்கட்டிட வேண்டும் என்று கி.பி.2003 ஆம் ஆண்டிலேயே வேதியியல் உரத்திற்கான மானியம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

படிப்படியாக இயற்கை ரசாயன விவசாயத்திற்கு மாறினாலும் ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்தின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை;ஆனால்,தொடர்முயற்சியின் விளைவாக ரசாயன உரங்களால் மலடாகியிருந்த மண்வளம் மீட்கப்பட்டு, தற்போது நற்பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

சிக்கிமின் இந்த வெற்றியினைத் தொடர்ந்து இம்முயற்சிகள் இமாச்சலப்பிரதேசத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் பரவத்தொடங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment