Friday, April 20, 2012

கொஞ்சம் சிரிப்போமா?


சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் போய் கொண்டிருந்தார் ஒரு தமிழர். அவர் பலருக்கு பல நன்மைகளை செய்திருந்ததால் கடவுள் அவர் முன் தோன்றி " நீ நல்ல காரியங்கள் பல செய்திருக்கிறாய். உனக்கு நான் ஒரு வரம் தரலாமென்றிருக்கிறேன். கேள்" என்றார்.

சற்று யோசித்த பின் அந்த தமிழர் கடவுளிடம் " இந்த வங்க கடலின் நடுவில் சென்னைக்கும் இலங்கைக்கும் ஒரு பெரிய பாலம் அமையுங்கள். நாங்கள் கடலைத் தாண்டி சென்று அங்கு தவிக்கும் எங்களது உறவுகளுக்கு உதவ வேண்டும். எங்களைத் தாக்க வரும் இலங்கை ராணுவத்தை தவிடு பொடியாக்க வேண்டும்".

இதைக் கேட்ட கடவுள் " இது ஒரு பெரிய வேலை. பல லட்சக் கணக்கான மூட்டைகள் சிமெண்ட் வேண்டியிருக்கும். நிறைய இரும்பும் தேவையாயிருக்கும். கொடிய இலங்கை ராணுவத்தையும் அதன் அரக்கர்களான மகிந்த ராஜபக்ஷேயையும் நான் விரைவில் கவனித்துக் கொள்ளவிருக்கிறேன். நான் பிரியப்பட்டு பிறப்பித்த ஆயிரக்கணக்கான சிசுக்களை மிருகத்தனமாக கொன்று என்னிடமே அனுப்பியிருக்கிறார்கள் அந்த கொடியவர்கள். பாலத்தை தவிர வேறுஏதாவது இருநதால் கேள்".

தமிழர் சொன்னார் " சரி. அப்ப நான் எனது மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். எனது மனைவி எனக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். நான் சென்ன படியெல்லாம் அவள் நடக்க வேண்டும்".

கடவுள் அவரை இடை மறித்து ' நீ கேட்டாயே பாலம் அது எவ்வளவு பெரிதாக வேண்டும்?"
இதுபோன்ற ஏராளமான,ஜாலியான ஜோக்குகள்,தகவல்களுக்கு www.livingextra.com

No comments:

Post a Comment