Friday, April 13, 2012

சமஸ்க்ருதம் பயிலும் முஸ்லீம்கள்





சமஸ்க்ருதம் பயிலும் முஸ்லீம்கள்

புதுடெல்லியின் மையப்பகுதியில் உள்ளது ஜமாலியா நகர்.இப்பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழுமிடம் ஆகும்.இங்கு இஸ்லாமிக் அகாடமி என்ற மதரசா(முஸ்லீம் மதப் பள்ளி) இருக்கிறது.

இதன் நிர்வாகிகள் பாடத்திட்டத்தில் நவீனங்களை சேர்க்க முடிவு செய்தனர்.அதன் படி அறிவியல், புவியையல், மனோதத்துவம், சமஸ்க்ருதம் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

சமஸ்க்ருதம் பயில அவர்கள் மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத்துறையைத் தொடர்பு கொண்டனர்.

இந்தத் துறையின் வழிகாட்டுதல் படி ராஷ்டீரிய ஸ்ம்ஸ்க்ருத சன்ஸ்தான் என்ற அமைப்பு சமஸ்க்ருதம் கற்றுத்தர முன்வந்துள்ளது.
இதன் படி கடந்த இரு ஆண்டுகளாக ஏராளமான முஸ்லீம் மாணவ மாணவிகள் சமஸ்க்ருதம் பயின்று வருகின்றனர்.

No comments:

Post a Comment