Friday, April 13, 2012

சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருக்கும் இடங்கள்


சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.சித்தர்களுக்கு ஒருபோதும் மரணம் கிடையாது.ஆனாலும் கலியுகத்தில் அவர்கள் சூட்சுமமாக வந்து நம்மைக்காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.யார் தொடர்ந்து அதாவது தினமும் சித்தர்களில் எவரையாவது ஒருத்தரை வழிபட்டுக்கொண்டு வருகிறாரோ அவரை ஆபத்துக்காலத்தில் அந்த சித்தர் காப்பாற்றிவருவது அனுபவ உண்மை.

எவருக்கு ஜன்மச்சனி, அஷ்டமச்சனி, ஜன்ம ராகு அல்லது ஜன்ம கேது நடக்கிறதோ அவரே வாழ்க்கையில் மிகப்பெரும் அவமானம் அல்லது ஏமாற்றத்தை சந்திக்கிறார்.அவரைத்தவிர மற்ற அனைவருமே ஆன்மீகம்,ஜோதிடம்,பரிகாரம் பற்றி இழிவாகவே நினைக்கிறார்கள்.

உதாரணமாக செப்டம்பர் 2009 முதல் 30 மாதங்கள்(இரண்டரை வருடங்களுக்கு)சனிபகவான் கன்னி ராசியில் இருக்கப்போகிறார்.இதனால்,கன்னி ராசிக்கு ஜன்மச்சனியும், கும்பராசிக்கு அஷ்டமச்சனியும் ஏற்படுகிறது.இந்த ராசியினருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடமாக நீளும்.நாம் எல்லாம் ஏன் உயிர்வாழ வேண்டும் என்ற அளவுக்கு மனவுறுதி குலையும்.
அதே சமயம் விருச்சிகம்,மேஷம்,மகரம்,கடகம் ராசியினருக்கு அசுர வளர்ச்சி உண்டாகும்.
கஷ்டப்படுபவர்கள் சித்தரை வழிபட்டால் பெரும் துன்பத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

நல்ல நிலையிலிருப்பவர்கள் சித்தரை வழிபட்டால் அவர்களின் வளர்ச்சி வேகம் இருமடங்காகும்.
என்னைப் பொருத்தவரையில் கடன்,நோய்,எதிரி,முன்வினை இல்லாமல் ஒருவன் அல்லது ஒருத்தி வாழ்ந்தாலே அவரே கோடீஸ்வரர்.அப்படி வாழ்வதை அவரவர் பிறந்த ஜாதகம் மூலமாக வே உறுதி செய்ய முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகள் தமிழ்நாடு முழுக்க உள்ளன.உங்களது ஊருக்கு அருகில் அல்லது ஊரில் உள்ள சித்தரை வழிபடுங்கள்.சந்தோஷமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment