Friday, April 20, 2012

பரிகாரக்கோயில்களுக்கான சுலப விளக்கம்


பூமியில் எல்லா கனிம வளங்களும் இருப்பினும் எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைக்காது.எது எது எந்த இடத்தில் உள்ளது என தக்கவர்களைக்கொண்டு ஆராய்ந்து அவர்கள் சொல்லும் அந்தந்த இடங்களில்தான் அது அது கிடைக்கும்.

உதாரணமாக தங்கம் வேண்டுமானால் கோலாரிலும்,நிலக்கரி நெய்வேலியிலும்,பெட்ரோல் வேண்டுமானால் நரிமணத்திலும் தோண்ட வேண்டும்.

அதுபோல்,அவரவர் பிரச்னைகளுக்கு ஏற்ப திருவருள் விளங்கித் தோன்றும் திருக்கோயில்களைக் கண்டு நம் மெய்ஞானிகளாகிய நால்வர் பெருமக்கள் ஆய்வு செய்து அதற்குரிய தலங்களை தேர்வு செய்து பதிகங்கள் பாடி நமக்கு வழிகாட்டியுள்ளனர்.நமது ஆஸ்தான ஜோதிடர்களும் நமக்கு வழிகாட்டிவருகின்றனர்.

No comments:

Post a Comment