Friday, April 20, 2012

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்


நேற்று சூரியக்கிரகணம் ஏற்பட்டது.இந்தியாவில் மதியம் 3.11 முதல் 3.52 வரையிலும் டெல்லியில் ஓரளவு சூரியக்கிரகணம் தெரிந்தது.இது செய்தி.






புராதன இந்துபுராண நூல்கள் தெரிவிப்பது என்னவெனில்,கிரகணகாலத்தில் எந்த மந்திரத்தையும் ஒருமுறை ஜபித்தாலும்,அந்த மந்திரத்தின் சக்தி நூறுகோடி மடங்கு ஜபித்ததற்கான பலனைத் தரும்.நமது வலைப்பூவை வாசிக்கும் ஒரு பிராமண வாசகி தெரிவித்த தகவல் இது.


இதனால்,அந்த பிராமணவாசகி ஒரு பரீட்சார்த்தமாக தான் பணிபுரியும் அலுவலகத்தில் மதியம் விடுப்பு எடுத்துவிட்டு, மாலை மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார்.


மூன்று மணி முதல் நான்கு மணி வரையிலும் நமது சிவமகா மந்திரமான ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்கிறார்.


அப்படி ஜபிக்கும்போது,இதற்கு முன்பு ஜபித்ததற்கும்,நேற்று சூரியக் கிரகணநேரத்தில் ஜபித்ததற்கும் பெரும்வேறுபாடு இருப்பதை உணர்ந்திருக்கிறார்.மற்ற நாட்களில் ஜபிப்பது மிகவும் சிரமமாகவும்,கவனம் அதிகம் சிதறும் விதமாகவும் இருக்கும்.ஆனால்,நேற்று மிகவும் எளிதாகவும்,சுலபமாகவும்,வேகமாகவும் ஓம்சிவசிவஓம் உச்சரிக்க முடிந்தது.மனதிற்குள் இனம்புரியாத ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட்டதாகவும்,அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.அவருக்கு ஆன்மீகக்கடல் வலைப்பூக்குழுமத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment