Friday, April 13, 2012

பணம் பணம் பணம் பணம்











பணம் பற்றிய பழமொழிகள்:

பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது.பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.

பாதிப் பணக்காரனாகிவிட்டால் முழுப்பணக்காரனாவது எளிது.

செல்வம் சேர்ப்பதற்கு அறிவு வேண்டும்;அப்படி சேர்க்கும் செல்வத்தை கட்டிகாக்க துணிவு வேண்டும்.அறிவு இருக்கிற அளவுக்குப் பலரிடம் துணிவு இருப்பதில்லை.(அதனால் தான் இந்தியா இன்னும் ஏழை நாடாக இருக்கிறது)

வாங்குபவனுக்கு நூறு கண்கள் தேவை.விற்பவனுக்கு ஒரு கண் போதும்.

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகம் விரும்புபவனே ஏழை.

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம், முடிவில் தேவையுள்ள பொருட்களை விற்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிடும்.

எல்லோரும் பணத்தை வெறுக்கிறார்கள்.அடுத்தவருடைய பணத்தை மட்டும்!!!
ஒரு முறை சம்பாதித்த பணம் இருமுறை சேமித்ததற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்று இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி பணப்பையை மூடிக்கொள்ளும்.

பணத்தை உங்களுக்கு அடிமையாக்குங்கள்.இல்லையேல் அது உங்களை அடிமைப்படுத்திவிடும்.இதனால் உங்களது ரத்த உறவுகள் சிதைந்துவிடும்(மொத்த தமிழ்நாட்டுக் குடும்பங்களிலும் இந்த சிதைவு தான் நடக்கிறது.)

காலத்தை வீணாக்குவதே மோசமான செலவு

செல்வச்செருக்குடையவர்கள் தங்களுடைய உடமையை மட்டுமல்ல;உள்ளத்தையும் கூட அடமானம் வைக்கத் தயங்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment