அகத்திய மகரிஷியின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்.ஜீவ நாடி பார்த்து பல மக்களின் வாழ்க்கையில் ஆன்மீக ஒளியேற்றிய ஹனுமத்தாசன் நேற்று(26.10.2010) சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அவருக்கு வயது 66.சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்துவந்த அவர்,பிரபல ஜோதிடராகவும் பணியாற்றினார்.
தினத்தந்தியில் அகத்தியரின் ஜீவ நாடி என்ற தொடரை சுமார் 300 வாரங்களுக்கு எழுதி அகத்தியரின் பெருமையை பரப்பினார்;தினத்தந்தி ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் என்ற தொடரின் மூலம் சதுரகிரியின் பெருமைகளை உலகம் அறியச் செய்தவர்.
அவரது இயற்பெயர் த.கி.இராமசாமி.அவரது மனைவியின் பெயர் சூடாமணி.அவருக்கு ஒரு மகனும்,ஒருமகளும் இருக்கின்றனர்.
அவரது குடும்பத்தாருக்கு நமது ஆன்மீகக்கடலின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்..
No comments:
Post a Comment