Friday, April 20, 2012

நவபாஷாணங்களின் சுபாவங்கள்


நவபாஷாணங்களின் சுபாவங்கள்
பாஷாணம் என்றால் விஷம் என்று பெயர்.ஒன்பது விதமான பாஷாணங்களைக் கட்டுவது சித்தர்களுக்கே சிரமமான காரியம் ஆகும்.ஏனெனில்,ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான சுபாவத்தைக் கொண்டது.ஒவ்வொரு பாஷாணமும் கட்டும்போதும் கட்டுபவருக்கு ஒவ்வொருவிதமான மனநிலையை உருவாக்கும்;தவிர,பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர்வீச்சு,கட்டுபவர்,அவரது அருகில் இருப்பவரின் உடல்களுக்குள் புகுந்து உடல் நலம்,மனநலத்தை அதிகரிக்கும்.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது;நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.ஏனெனில்,பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.இதை உணர்ந்தே போகர் பழனிமலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால்/சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
பழனிமலையில் இருக்கும் தண்டாயுதபாணியினை உருவாக்கிய நேரப்படி,அவரது முக்கியத்துவம் தற்போது குறையத்துவங்கிவிட்டது.ஆனால்,பல லட்சம் வருடங்கள் ஆயுளைக் கொண்டவர் நவபாஷாணமுருகர் பழனி தண்டாயுதபாணி.
வெகு விரைவில் பழனிமலையில் வேறொரு முருகக்கடவுள் ஸ்தாபனம் ஆகப்போகிறார்.இவர் மின்சாரக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் நவபாஷாணமுருகர் ஆவார்.இவரை ஸ்தாபித்ததும்,உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மின் சாதனங்களும் செயலிழந்துபோகும்;ஆக,இந்த வலைப்பூ உள்பட எல்லாமோ அம்போதான்.இதை இன்னும் சில வருடங்களில் நாம் உணரப்போகிறோம்.அதே சமயம்,இப்படி கதிரியக்க நவபாஷாண முருகர் பழனிமலையில் நிறுவப்பட்ட உடனே,நமது பாரதம் வல்லரசாகிவிடும்.
உலகத்தின் செல்வந்த நாடுகள் அனைத்தும் மின்சாரத்தின் துணை கொண்டுதான் நியாயமாக உழைக்கும் நாடுகளை சுரண்டி,ஏமாற்றிக் கொழுத்து வருகின்றன.இதற்கு உலக வர்த்தக அமைப்பு,உலக வங்கி,ஐ.நா.சபை,நேட்டோவெல்லாம் மறைமுக ஆதரவு!!!இந்தக் கருத்தின் அடிப்படையில் பத்துலட்சம் பக்கங்களுக்கு விரிவான விளக்கமளிக்கமுடியும்.

No comments:

Post a Comment