Sunday, March 7, 2010

மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு மறு நினைவூட்டல்:


அபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் ஆரம்பம்


கி.பி.1977க்குப் பிறகு செவ்வாய்க்கிரகமானது தொடர்ந்து 9 மாதங்கள் நீசமாகப்போகிறது. யுத்தகாரகன், ரத்த காரகன், சகோதரக்காரகன் என போற்றப்படும் செவ்வாய் கடகராசியில் 7.10.2009 முதல் 15.5.2010 வரை நீசமாக சஞ்சரிக்கப்போகிறார்.இதனால், ராணுவம், காவல்துறையிலும் கலகம் வரலாம்.சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் ராணுவம் கலகம் செய்தது ஞாபமிருக்கிறதா? அதுபோல!!!

தவிர, மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்த மனிதர்கள், நிறுவனங்கள், மாநிலங்கள், நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுகளில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கொரியாக்கள்.(அதனால்தான் அங்கே விதவிதமான யுத்தக்கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கராத்தே, குங்பூ,டோக்வாண்டே மற்றும் 100 விதமான சண்டைக்கலைகள்) நம்ம பக்கத்து நாடு இலங்கையின் ராசி விருச்சிகம்.அதன் தற்போதய அதிபர் ராஜபக்ஷேயின் பிறந்த ராசியும் விருச்சிகம். தமிழர்களின் துருவ நட்சத்திரம் பிரபாகரன் அவர்களின் பிறந்த ராசியும் விருச்சிகம்!!! ஆக இலங்கையில் என்னமோ நடக்கப்போகுது. சரி அதை பேப்பரில் பார்த்துக் கொள்ளலாம்.

இனி செவ்வாய் பெயர்ச்சி பலன்களைக்காணலாம்:

அசுபதி: தெய்வீக அருளைப் பெற்றவரும், தனவான் சாஸ்திரங்களை அறிந்தவருமாகிய அசுவினி நட்சத்திரக்காரர்களே!

நீங்கள் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவராகவும் தைரியசாலியாகவும் இருக்கும் தாங்கள் 7.10.2009 முதல் 16.11.2009 வரை இருப்பிடப்பிரச்சனை, தயாரின் உடல்நலத்தில் சீர்கேடு, நண்பர்களிடையே பகை,தொழிலில் மந்தம் அல்லது தொழில் சார்ந்த குளறுபடிகள் ஏற்படும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரையில் இந்த குளறுபடிகள் மாறி எதிர்பாராத தொழில் வளர்ச்சி லாபங்களும் ஏற்படும்.இருப்பிடப்பிரச்னை நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவருக்கோ சுபகாரியம் உண்டாகும்.வண்டி வாகன வசதிகள் உருவாகும்.

23.12.2009 முதல் 13.3.2009 வரை மன தைரியம் அதிகரிக்கும்.தங்களது வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவர். முன்கோபமும் பிடிவாதமும் இந்நேரங்களில் தங்களிடம் அதிகம் காணப்படும்.உங்களுக்கு அல்லது உங்களது ரத்த உறவுகளுக்கு ஏற்படும் காயம் அல்லது நோய்க்கு தகுந்த மருத்துவ நிபுணர்(எக்ஸ்பர்ட்)ரிடம் ஆலோசனை கேட்கும் நிலை உருவாகும்.தொழில்நிலை சுமாராகும்.நிலம் சார்ந்த விஷயங்களில் சிறு லாபம் ஏற்படும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை சுப நன்மைகள் உண்டாகும்.இளைய சகோதரத்தாலும் கடனாலும் சில தொல்லைகள் வந்து தீரும்.

இக்காலகட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகக் கடவுளை அடிக்கடி வழிபட நன்று.



அன்புள்ள மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பிறந்த ஆன்மீகக்கடல் வாசகர்களே!உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?உங்களது ராசி அதிபதியும்,உங்களுக்கு இந்தப்பிறவியில் உடலைத் தந்தவருமான செவ்வாய்பகவான் சுமார் 9 மாதமாக நீசமாகியிருக்கிறார்.15.5.2010 வரை இந்த நிலை தொடரும்.இதுவரை அதாவது 7.10.2009 முதல் இன்று 7.3.2010 வரை ஐந்துமாதங்களில் உங்களது சுய கவுரவம் பலமுறை விட்டுக்கொடுக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கும்.தினசரி வாழ்க்கையில், நீங்கள் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும்,உங்களது வேலை அல்லது தொழிலில் அல்லது படிப்பில் சிறு சிறு கவனக்குறைவுகள் வந்துகொண்டே இருக்கிறதா? பலமுறை உங்களை விட வயதில்/அந்தஸ்தில் சிறியவர்களிடம் பலமுறை மன்னிப்பு கேட்கும் நிலை வந்திருக்கிறதா? ஆம் எனில்,எப்படி ஏன் என்பதை நமக்கு மின் அஞ்சல் அனுப்பலாமா?

No comments:

Post a Comment