Wednesday, March 3, 2010

சேதுசமுத்திரத்திட்டமும்,இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இருக்கும் அமெரிக்க பயமும்


சேது சமுத்திரத்திட்டமும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இருக்கும் அமெரிக்க பயமும்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு இந்தியாவாகிய நாம் மட்டுமே! உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடும் நாம்தான்.இன்று நமது பரந்த மனப்பான்மை நமக்கு நமது சுயமரியாதையை நாசமாக்கும் விதமாக அமைந்துவிட்டது.எனவே,இந்தியாவின் சுதந்திர ஜாதகப்படி,விரைவில் 31.12.2011க்குள் எந்த நிமிடமும் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி ஏற்படவுள்ளது.

நம்மை ஏமாற்றிவரும் அமெரிக்கா மற்றும் சில நாடுகளுக்கும்,நம்மை அடிமைப்படுத்தத்துடிக்கும் சீனா,பாகிஸ்தான் போன்ற ‘பங்காளிகளுக்கும்’ செம ஆப்பு ரெடியாகிக் கொண்டிருக்கிறது.இந்த ஆப்பு ரெடியாகாவிட்டால்,இந்துதர்மமே அழிந்துவிடும் என்ற நிலை;இந்து தர்மம் அழிந்துவிட்டால்,இந்த பூமியில் தர்மம் என எதுவுமே மிஞ்சாது.இது எனது ஆசை மட்டுமல்ல;இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி நிர்வாகிக்கும் இறைவனின் ஆசை.

இந்த இறைவனின் ஆசையை சித்தர்கள் நிறைவேற்றப்போகிறார்கள்.ஆம்! சித்தர்களின் ஆசி பெற்ற ஒரு வடபாரதத்து மாவீரன் விரைவில் சகல விதமான பிராடுத்தனமும் செய்து இந்தியாவின் தலைமை பீடத்தைக் கைப்பற்றுவான்.(அந்தளவுக்கு ஆளும் வர்க்கம்,தொழிற்சங்கம்,மத்திய அரசு நிர்வாக எந்திரம் இவற்றில் நமது எதிரிநாடுகளின் உளவுக்கூட்டம் ஊடுருவிவிட்டனர்.)தற்கு முன், அமெரிக்காவின் நயவஞ்சகத்தைப் பார்ப்போம்.

உலக அரசியலில் தாம் அசைக்கமுடியாத இடமாக இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா எப்போதும் மிகக் கவனமாக இருக்கிறது.(ஏனெனில் அதன் சுதந்திர ஜாதகப்படி அமெரிக்காவின் ராசி கும்பம்.தான் என்ன நினனக்கிறது என்பதை யாராலும் கணிக்கவும் முடியாது.ஆனால்,உலகின் எந்த நாட்டின் பிரதமரின் அலுவலகத்திலும் அமெரிக்க உளவாளி இருப்பது,இருந்துவருவது சர்வ நிச்சயம்)

உலகம் முழுவதும் யுரேனியம்,புளூட்டோனியத்திலிருந்து மட்டுமே அணுமின்சாரம் தயாரிக்கப்பட்டுவருகிறது.இதன்மூலம் உலகின் பெரும்பாலான நாடுகள் தத்தம் மின்சாரத்தேவைகளை நிறைவேற்றிவருகிறது.ஆனால்,அமெரிக்காவில் கி.பி.1974க்குப்பிறகு, அணுமின் உலை எதுவும் கட்டப்படவில்லை.

.அதேசமயம்,யுரேனியம்,புளூட்டோனியம் கிடைக்கும் நாடுகளையும் தனது அடிமையாக அமெரிக்க வைத்திருக்கிறது.யுரேனியம் அதிகமாகக் கிடைக்கும் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

.இந்நிலையில் தோரியத்திலிருந்து அணுமின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை இந்தியாவின் கல்பாக்கம் அணுமின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.இந்தத் தொழில்நுட்பம் மிகவும் சுலபமாகவும்,அதிகப்பாதுகாப்புடனும் உள்ளதை நிரூபித்ததும் அமெரிக்காவிற்கு உதறல் எடுக்கத் தொடங்கியது.

ஒரு கிலோ யுரோனியத்திலிருந்து எடுக்கப்படும் மின்சாரத்தால் ஒரு மாதத்திற்கு நமது தமிழ்நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என வைத்துக்கொள்வோம்.அந்த ஒரு கிலோ யுரோனியக்கழிவினை சுமார் 500 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்.அதுவரை அந்த யுரேனியக்கழிவிலிருந்து கதிர்வீச்சுக்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.அந்த 500 ஆண்டுகளுக்கு அதைப் பாதுகாக்க ஆகும் செலவு ரூ.1000 கோடிகள்.(இது சும்மா ஒரு உதாரணத்திற்கு.இந்த உதாரணமும் டெக்னிக்கலான விளக்கமின்றி சுலபமாக உங்களுக்குப் புரியும்விதமான விளக்கம்)

ஒரு கிலோ தோரியத்திலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தொகுப்பை ஆறுமாதத்திற்கு மொத்த இந்தியாவிற்கும் பகிர்ந்தளிக்கலாம்.

அந்த ஒரு கிலோ தோரியக்கழிவானது வெறும் 100 ஆண்டுகள் வரையில்தான் அணுக்கதிர்வீச்சை வெளியிடும்.தவிர,உற்பத்திச் செலவும் மிகவும் குறைவு.இந்த அணுக்கதிர்வீச்சைப் பராமரிக்க சில நூறு கோடி ரூபாய்களே தேவை.

உலகில் கிடைக்கும் மொத்த தோரியத்தின் 85% அளவுக்கு தென் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.தெற்கே திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி வரை உள்ள சுமார் 5000 சதுர கிலோ மீட்டர்களில் இந்த தோரியப்படிமங்கள் படிந்துகிடக்கிறது.கடந்த 17,50,000 ஆண்டுகளாக (இராமாயணம் நிகழ்ந்த காலத்திலிருந்து தற்போதைய காலம் வரை) சேது பாலம் எனப்படும் ராமர் பாலத்தால் கடலில் இருந்து வடிகட்டப்பட்டு,இந்தளவிற்குச் சேகரமாகியிருக்கிறது.ஆக,இந்த தோரியம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தால் கி.பி.2810 வரை அதாவது அடுத்த 800 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குத் தேவையான மின்சாரத்தேவையை நிறைவு செய்துவிடலாம்.ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 15 முதல் 20 % வரை மின்சார உபயோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இப்படி அடுத்த 800 ஆண்டுகளுக்கு எவ்வளவு மின்சாரத்தேவை அதிகரிக்கும்?அவ்வளவு மின்சாரத்தேவைகளையும் இந்த தோரியத்தால் நிறைவு செய்ய முடியும் என்னும் போது அமெரிக்காவால் சும்மா இருக்க முடியுமா?(அதானே ,அமெரிக்காவாகிய நானே 300 வருடமாக உலகம் முழுக்க போர்களை உருவாக்கி,கஷ்டப்பட்டு வல்லரசாகியிருக்கிறேன்.இளிச்சா வாய் இந்தியா ஒரே ஒரு கண்டுபிடிப்பால் வல்லராயிடுமாம்.உட்ருவேனா?)

இதுவரை இந்தியாவில் 14 அணுமின் உலைகள் இருக்கின்றன.இதில் 8 அணுமின் உலைகளை மட்டும் அணு சக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.இந்த 8 அணு மின் உலைகளின் பட்டியலில் கல்பாக்கமும் இருக்கிறது.மீதி,6 அணு மின் உலைகளில்தான் இந்தியாவாகிய நாம் அணுகுண்டு தயாரிக்கிறதாம்.அவற்றை இந்த அமெரிக்கா பரிசோதனை செய்யாதாம். 8 இந்திய அணு மின் உலைகளில் எப்போது வேண்டுமானாலும் புகுந்து சோதனை போடுமாம்.வேறென்ன? நாம் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்த தோரியம் மின்சாரம் தயாரிப்பு முறையைத் திருடிச்செல்வதுதான் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் நோக்கம்.திருடிய தயாரிப்பு முறையை மேலும் மெருகுபடுத்தி (அப்டேட்),நம்மிடமே பல மடங்குக்கு விற்பனைசெய்யும் கருணாநிதித்தனம் தான்.

சரி. எப்படி தோரியத்தை திருடுவது? அதுதான் சேது சமுத்திரத்திட்டம்.

அது என்ன? எப்படி?

ராமர் பாலம் 30 கிலோமீட்டர்கள் நீளமும்,3 கிலோ மீட்டர்கள் அகலமும் கொண்டு,இந்தியாவில் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியிலிருந்து இலங்கை வரை ராமாயணகாலத்தில் அமைந்திருக்கிறது.இந்த ராமர்பாலம் இப்போது கடலில் லேசாக மூழ்கியிருக்கிறது.இந்தப்பாலம் தான்,தென் தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டிருக்கிறது.

சேது சமுத்திரத்திட்டம் என்ற பெயரில் முதலில் பாக் ஜலசந்தி எனப்படும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்டப் பகுதியை இந்தியாவும் இலங்கையும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.மறைமுக நிர்ப்பந்தம் மூலமாக இந்திய அரசை சேது சமுத்திரத்திட்டத்திற்கு சம்மதிக்க வைக்க பல கோடிகளை வாரி இறைத்தது.இதன் படி,பாக் ஜலசந்தி எனப்படும் ராமர்ப்பாலப்பகுதியை சர்வதேச கடல்பகுதி என அறிவிக்க வைத்தனர்.(இந்திய பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே).

சேது பாலம் எனப்படும் ராமர் பாலத்தை உடைத்துவிட்டால்,ராமர் பாலம் தகர்ந்துவிடும்.அதன் மூலமாக,இனிமேல் தோரியம் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியில் தோரியம் சேகரமாகாமல் தடுத்துவிடலாம்.தவிர, அமெரிக்காவின் பிரம்மாண்டமான கப்பல்களை சேதுசமுத்திரப் பகுதிக்கு அனுப்பி சில வாரங்களில் தோரியத்தை ராட்சத குழாய்களைப் போட்டு கப்பல்களில் நிரப்பிவிடலாம்.இதன் மூலமாக, தோரியத்தையும் மொத்தமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம்.

சில நாட்களுக்கு முன்பு கூட, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் தமிழக விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டது செய்தியாக வெளிவந்ததன் பின்னணியில் நிச்சயம் அமெரிக்காவின் வெளிநாட்டு உளவுத்துறையான சி.ஐ.ஏ.,வின் பங்கு இருக்கும்.என்ன கி.பி.2031 ஆம் ஆண்டில் அதன் ரகசியம் வெளிவரும்.

சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்ற இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை.கொஞ்சம் வித்தியாசமாக சோனியா ஆண்டனி மீமொய்னோ, கருணாநிதி,டி.ஆர்.பாலு இந்த மூவரும் சம்மதித்தால் மட்டுமே சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் சட்ட ஒப்புதலுடன் சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இன்று இறையருளால் அது நடைபெற வில்லை.

கடவுளே! எனது தாய் மண்ணுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நீ எனது தேசத்தைக் காக்க ஒரு வழி செய்ய மாட்டாயா?

1 comment:

  1. உங்களின் மன குமுறல்காக சொல்கிறேன்
    அமெரிக்க மக்களும் சரி இந்த உலகத்தில் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அனைவரும் அவனின் பிள்ளைகளே

    பாரதத்தில் இருக்கும் நாம் மட்டுமே அவனின் செல்ல பிள்ளைகள்

    அதனால் நம்மை யாராலையும் ஒன்றும் செய்திட முடியாது.
    நரி தனத்தால் ஒரு முறை மட்டுமே வெல்ல முடியும்.
    ஒவ்வொரு முறையும் வெல்ல முடியாது.

    அதனால் கவலை அடையாமல் கருத்துகளை வெளியிடவும்.

    NK.PALANIMANI
    TIRUCHY-15

    ReplyDelete