Saturday, March 13, 2010

ரமண மகரிஷியின் ஆசையை நிறைவேற்றிய அயனாவரம்சதீஷ்



ரமண மகரிஷியின் ஆசையை நிறைவேற்றிய சதீஷ்

ரமண மகரிஷிக்கு வெகுநாட்களாக ஒரு ஆசை இருந்தது.அது கடைசி வரை நிறைவேறவில்லை.
இந்நிலையில் சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களின் தலைமையில் ஒரு குழு திருக்கையிலாயம் மானசரோவர் புனிதப்பயணம் மேற்கொண்டனர்.அந்தப் பயண அனுபவத்தை ப்ரியா கல்யாணராமன் என்பவர் குமுதம் வார இதழில் தொடராக எழுதிவருகிறார்.அதில்,10.3.2010 ஆம் குமுதம் வெளியீட்டில்,118,119 ஆம் பக்கத்தில் ஒரு அதிசய சம்பவத்தை எழுதியுள்ளார்.

ரமண மகரிஷி அவர்களின் புகைப்படத்தை ஞாபகமாக தமிழ்நாட்டிலிருந்து மானசரோவர் யாத்திரைக்குக் கொண்டுவந்திருந்தார் அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர்.அவர் ரமண மகரிஷி அவர்களின் புகைப்படத்தை எடுத்து மானசரோவர் நீரில் நனைத்து எடுத்து,தனது பைக்குள் வைத்துவிட்டார்.
“இந்தக் காட்சியை பகவான் ரமணமகரிஷியும் நெகிழ்ச்சியாக இங்கே இருந்தபடி பார்த்துக்கொண்டிருப்பார்.”என ப்ரியா கல்யாணராமன் கூறினார்.

No comments:

Post a Comment