Thursday, March 11, 2010

இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்த ஓவியர் வெளிநாட்டில் குடியேற்றம்

ஓவியர் எஃப்.எம்.ஹீசைன் வளைகுடாவில் குடியேற்றம்

நமது இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் எஃப்.எம்.ஹீசைன்.இவர் பிறப்பால் இஸ்லாமியர்.இவர் சில வருடங்களுக்கு முன் வேண்டாத வேலை செய்து பிரபலமானார்.அது என்னவென்று தினமும் பேப்பர் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

நாம் வழிபடும் இந்துதெய்வங்களை நிர்வாணமாக வரைந்தவன்.இவன் இப்படி வரைந்தது இஸ்லாமிய மதக் கோட்பாட்டின்படி கூட தவறாகத்தான் இருக்கும்.
நமது கல்வி தெய்வமான சரஸ்வதி,இராமாயணத்தில் அனுமன்,சீதை,சிம்மவாகினியாகிய ஆதிபராசக்தி இவர்களை தனது தூரிகையால் நிர்வாணமாக வரைந்து அதை கண்காட்சியாக வைத்தவன்.
இப்படிச் செய்தமைக்கு சிவசேனா கட்சி,பஜ்ரங் தளம் போன்ற இந்துசக்திகள் இவனது கண்காட்சியை துவம்சம் செய்தன.

அதே சமயம்,இப்படி ஒரு முஸ்லீம், இந்துதெய்வங்களை நிர்வாணமாக வரைவது அந்த முஸ்லீமின் படைப்புச் சுதந்திரம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வக்காலத்து வாங்கின.கடவுளே இல்லையென நம்பும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடவுளால் ஆளப்படும் நாட்டில் என்ன வேலை இருக்கிறது?போய் சீனாவிலும்,ரஷ்யாவிலும் அரசியல் செய்ய வேண்டியதுதானே?

என்னைப் பொருத்தவரையிலும்,எப்போது ஒரு ஓவியர் தனது மதத்தைத் தவிர்த்து பிற மதத்தின் தெய்வங்களை மதிக்கவில்லையோ,அப்போதே அவர் தனது மதத்தின் ஒழுங்கை கடைபிடிக்க வில்லை என்றுதான் அர்த்தம்.அதனால்,அந்த ஓவியரின் கண்காட்சியை துவம்சம் செய்தது சரியே!
ஒரு பழமொழியை இங்கு கூற விரும்புகிறேன்:போரில் நாம் எந்த மாதிரியான ஆயுதத்தை எடுக்கப்போகிறோம் என்பதை நமது எதிரிதான் முடிவு செய்கிறான்.

பிற மதங்களையோ,பிற மதத்தைச் சேர்ந்த மனிதர்களையோ அவதூறாகப்பேசுவது இந்துதர்மத்தின் கொள்கையும் கிடையாது.கோட்பாடும் கிடையாது.அப்படிப் பேசுவதே மாபெரும் பாவம் என்றுதான் எனது இந்துதர்மம் எனக்குப் போதித்திருக்கிறது.ஆனால்,அப்படி நிந்திக்குமளவிற்கு பிற மதங்களின் சில மனிதர்கள் பல சமயங்களில் சின்னத்தனமாக நடந்துகொள்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஓவியர் எஃப் எம் ஹீசைன் வளைகுடாவிற்குப் போய்த் தொலையட்டும்.

No comments:

Post a Comment